சனி, 30 ஏப்ரல், 2011

sharing power or which is the real solution of the crisis in ilangai?அதிகாரப் பரவல்: தமிழ் தேசியக் கட்சியுடன் இலங்கை அரசு பேச்சு

இந்த நாடகம் சிங்கள மேடையில் எத்தனை நாளம்மா? அம்மா! எத்தனை நாளம்மா? ௧௯௦௦ ஆ் ஆண்டில் இரு்நத தமிழ்நிலப்பரப்பு தமிழ்  ஈழமாக ஏற்கப்பட வேண்டும். இதுவே சரியான தீர்வு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அதிகாரப் பரவல்: தமிழ் தேசியக் கட்சியுடன் இலங்கை அரசு பேச்சு

First Published : 30 Apr 2011 02:14:31 AM IST


கொழும்பு, ஏப்.29: அதிகாரப்பரவல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.  இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் சட்டப்பிரிவு ஆலோசகர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியது: தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வு காண இலங்கை அரசு பிரதிநிதிகள் குழுவுடன் தமிழர் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்போதுதான் முதன் முதலாக இலங்கையில் அதிகாரப் பரவல் குறித்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது. 4,600 தமிழர்களை ராணுவம் பிடித்தது வைத்திருப்பது குறித்தும், 850 தமிழர்கள் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்தும் இலங்கை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.  அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது என்றார்.  போராட்டத்தை ஏற்க முடியாது: இதற்கிடையே இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அளித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 1-ம் தேதி இலங்கையில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இதற்கு ஐ.நா. சபை பேச்சாளர் ஃபார்ஹன் ஹக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கோ, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு இலங்கை அரசே பொறுப்பாகும். இந்த போராட்டத்தை ஏற்க முடியாது என்றார். 

1 கருத்து: