செவ்வாய், 19 ஜனவரி, 2010

வார்த்தை ஜாலங்களாய் கலப்புத் திருமணங்கள்: முதல்வர் கருணாநிதி வேதனை



சென்னை, ஜன.18: ""தமிழகத்தில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன'' என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்தார். சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் திங்கள்கிழமை அவர் பேசியது:""துணை முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "ஸ்டுப்பிட்' என்பதிலேதான் காதல் ஆரம்பமாயிற்று என்று சொன்னார். பொதுவாக காதலிப்பதே முட்டாள்தனம்தான் என்கிற ஒரு தத்துவம் நாட்டில் இருக்கிறது. ஆனால், அது முட்டாள்தனம் அல்ல; முழுமையான அறிவின் எல்லை.வரிவடிவங்களாக: கலப்புத் திருமணத்தை வானளாவப் பேசுகின்றவர்கள், தங்களுடைய சாதியிலே, சொந்தத்திலே பெண் கிடைக்கிறதா, தங்கள் சொந்தத்திலே மணமகன் கிடைக்கிறானா என்றுதான் இன்றைக்குக் கணக்கிடுகின்ற காலமாக உள்ளது.பெரியார் சமத்துவத்தைப் பற்றிப் பேசினாலும், அண்ணா சமத்துவத்தைப் பற்றிப் பேசினாலும், சமத்துவபுரங்கள் தோன்றினாலும் இன்னும் நாட்டிலே காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வரிவடிவங்களாக வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன.உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது நாட்டில், சமுதாயத்தில் நடைபெற வேண்டும். அதற்கான ஊக்கத்தையும், உறுதியையும் பெற வேண்டும்.சமத்துவபுரங்களில்: சமத்துவபுரங்களை உருவாக்கியிருக்கிறோம் என்றால், அது ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தருகிறோம் என்றல்ல. அந்தச் சமத்துவபுரங்களில்தான் கலப்புத் திருமணம் இன்றைக்கு உருவாகின்றது.உயர்சாதிக்காரர்கள் முதல் ஆதிதிராவிடர் வரை அங்கு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அங்கே உருவாகின்ற காதல் கலப்புத் திருணங்களாக மாறி, அவற்றின் மூலமாக இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற புதல்வர்கள் அல்லது புதல்விகள் எதிர்காலத்தில் இந்த தமிழகத்தை சமத்துவ பாதையில் நடத்திச் செல்லக் கூடிய வகையில் வளரக் கூடும், வளர வேண்டும்.ஒரே சமுதாயமாக: விழாவில் தமிழர்களாக கூடும் நாம், அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் சாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்கு தமிழகத்தில் சாதி மாறுபாடுகள்}சாதி வேறுபாடுகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக, தமிழ்ச் சமுதாயமாக திராவிட இனமாக நாம் மாற வேண்டும்.திமுகவின் வெற்றி: சாதி மறுப்பு என்ற வகையில் கொஞ்சம் முரட்டுத்தனமாகச் சொல்லை போட்டுத்தான் சுயமரியாதை இயக்கம், சாதி மறுப்பு திருமணம், தாலி மறுப்பு திருமணம் என்றெல்லாம் சீர்திருத்த திருணங்களை நடத்தினோம்.இன்றைக்கு அதனுடைய விளைவாக ஏராளமான திருமணங்கள் தமிழகத்தில் கலப்புத் திருமணங்களாக, சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது, சமுதாயத் துறையிலே திமுகவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி'' என்றார் கருணாநிதி.இந்த திருமண நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார். அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தம் குடும்பத்தில் கலப்புத் திருமணங்களை ஊக்குவித்துள்ள கலைஞர் இது குறித்துப் பேச முழுத் தகுதி உள்ளவர். இல்லாத திராவிட இனம் பற்றிய கருத்தை விடப் பிறவற்றை அனவனைவரும் பின்பற்ற வேண்டும். அதே நேரம் முதல் நாள் மற்றொரு திருமணத்தில் தாத்தாக்களின் தமிழ்ப்பற்று பேரன்களுக்கு இல்லாமல் போனது பற்றி அருமையாகப் பேசியுள்ளாரே! அதனை ஏன் வெளியிடவில்லை? ஒரு வேளை அவரது பேரன்களும் வழிமுறையினரும் தமிழ்ப் பெயரைத் தம் பிள்ளைகளுக்கும் நிறுவனங்களுக்கும் சூட்டிக் கொள்ளாமல் ஊடகங்கள் வாயிலாகவும் தமிழ்ப் பண்பாட்டுப் படுகொலைகள் புரிவதால் மனம நொந்துதான் கூறியுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டு விடும் எனத தினமணி கருதுகிறதா? அவரது குடும்பத்திலேயே தமிழ்ப் பெயர்களைத் தொலைத்தவர் உலகிற்கு எவ்வாறு அறிவுரை கூற முடியும் என்று தினமணி கருதுகிறதா? தமிழ்ப் பெயர் இல்லாதவர்களுக்கும் தமிழ்ப் பெயர் இல்லாத அமைப்புகளுக்கும் தமிழ்ப் பெயர் இல்லாத நிகழ்ச்சிகளுக்கும் தமிழ்ப் பேச்சு. தமிழ்ப்பாடல் தமிழ்ப்பாடலுக்கான ஆடல் இல்லாத நிகழ்ச்சிகளுக்கும் முதன்மை அளிப்பதை நிறுத்து‌வோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
-------------------------------------------------

கருத்துக்கள்

Ganessin தவறான கருத்துகளை பதிவு செய்ய வேண்டாம். நான் கலப்பு திருமணம் புரிந்தவன் தான் coming 25th jan.2010 will be my 27th (26 yrs over) marriage day.

By salvi, poland
1/20/2010 2:26:00 AM

கலப்பு திருமணம் என்பதும் காதல் திருமணம் என்பதும் தோற்றுப்போன ஒன்று. அமெரிக்க ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இந்த மாதிரி திருமணங்கள் நீதிமன்ற வாசலில் விவாகரத்து வேண்டி நிற்கிறது. உலக நாடுகள் நமது குடும்ப அமைப்பை பார்த்து ஆச்சரிய படுகிறார்கள். சொந்த ஜாதிகளில் திருமணம் புரிந்தவர்கள் இன்று காலம் காலமாக நிமதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த குடும்ப அமைப்பை சீரழிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். கலப்பு மற்றும் காதல் திருமணம் தோல்வியே கொடுக்கும். எப்போதும் போல் பெற்றோர்கள் சொல்லும் வரனையே மணந்து வாழ்வாங்கு வாழ்வோம்.

By Ganessin
1/19/2010 11:51:00 PM

நல்லவேளை !.தலைவர் கலைஞர் இப்போதாவது ஒத்து கொண்டாரே. ..... இத்தனை வருடங்களாக தங்களது சீர்திருத்த திருமணம், கலப்பு திருமணம் போன்ற ஒன்றுக்கும் உதவாத விஷயங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை என்று. ..... THIS IS REASON YOU DO LIP SERVICE FOX KARUNANIDHI. HAVE EVER GIVEN ANY JOB OR FREEBIES FOR INTERCAST COUPLE OR THEIR CHILDREN STOP CHEAT PEOPLE, GIVE JOB, OPPORTUNITIES

By JL
1/19/2010 7:38:00 PM

தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்களே சிரிலங்காவை சேர்ந்த சில நன்றியுள்ள (உஷாந்தன் கோப்பு நவீன் சென்னை அப்துல்.காம்.துபாய்) வர்கள் இந்தியாவைப்பார்த்தும் தமிழகத்தைப் பார்த்தும் குரைத்துக்கொன்டும் இருக்கிரார்கள் யாராவது மேரி கிளாஸ்கோ ரொட்டி அல்லது இறைச்சிதுன்டு எலும்பு போட்டு சத்தத்தை நிருத்தவும் இல்லாவிட்டால் தொப்புளை சுற்றி 16 ஊசி போடவேன்டும் இந்தியாவைபற்றி பேச அடுத்த நாட்டுக்காரனுக்குஅனுமதி இல்லை சிரிலங்காவில் நடக்கும் கொலையைப் பற்றி கருத்து கேட்டால் பாக்கிஸ்தானில் நடக்கவில்லையா என்கிறான் அப்துல் .காம் துபாய் என்பவர் மக்களுக்கு புரிகிர மாதிரி சொல்லவும் அன்புடன் மு-பெரியவன் தமிழகம்

By mu-peariyavan
1/19/2010 7:14:00 PM

நல்லவேளை !.தலைவர் கலைஞர் இப்போதாவது ஒத்து கொண்டாரே. ..... இத்தனை வருடங்களாக தங்களது சீர்திருத்த திருமணம், கலப்பு திருமணம் போன்ற ஒன்றுக்கும் உதவாத விஷயங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை என்று. .....

By Adimuttal
1/19/2010 5:43:00 PM

Hypocrite.. Can Kalaignar ensure that every person in Kalaignar TV speaks pure tamil?. Or as a matter of fact, atleast chennai tamil?. The way in which our Manada Mayilada - Kushboo (Madam), Namitha (Madam), Isai Aruvi female comperors talk, it's direct killing of tamil. Will Kalignar question this?. Inter-caste marriage or same caste marriage, is left to the individual. In no way, caste system can be thrown out. It's strongly embedded in the society... Aryan-Dravidan story - 100% fraud work. Just search in Google, we can easily find out.. As such, there is no archeological proof that such a Aryan invasion really happened.. Why dont he stop his own grandsons, with Cloud Nine, White Elephant titles?. As Vadivelu said in Winner, Innumada intha ooru nammala nambuthu?. Sudharsan

By Sudharsan
1/19/2010 4:59:00 PM

The first enemey of tamil and tamilian is Karunanidhi.He has no any moral right to advise others in this regard.People never beleive his words because he is taking first place as top most FRAUD OF ASIA.

By kavimahan
1/19/2010 2:54:00 PM

இலக்குவனார் அவர்கள் கருணாவை தமிழ் மொழியை காக்க வந்த அவதார புருசர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். விசயம் தெரிந்த ஒருவரே இப்படி இருக்கும் போது மக்களை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. தனது சொந்த நலனுக்காகவே அவர் தமிழ் மொழியை பயன்படுத்துகிறார். தமிழ், தமிழ் என்று சொல்லியே தமிழனின் அழிவுக்கு வழி வகுத்தான். தமிழ் மொழியை ஏலம் விட்டு தன் குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்றினாரே அன்றி அவரால் தமிழுக்கு ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. தனது சுய நலனுக்காக தமிழ் செம்மறி மாநாட்டை நடத்துவதிலிருந்தே அவருடைய எண்ணத்தை புரிந்து கொள்ளலாம்.

By நவீன் சென்னை
1/19/2010 2:38:00 PM

கருணா தமிழினத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்பு, தமிழினத் துரோகி, இந்திக்காரனிடம் தமிழனை அடகு வைத்தவன், துக்கத்தில் இருக்கும் தமிழன்னைக்கு பாராட்டு விழா நடத்தத் துணிந்தவன். அவனை எப்போதும் எங்கள் மனம் வாழ்த்தாது. இனத்தைக் காட்டிக் கொடுத்தவனை தூற்றவே செய்யும். மக்களை முட்டாளாக்குவதில் கருணாவை விட ஒரு நபர் இந்த உலகத்தில் இல்லை. அவர் சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்களை செய்வதில்லை. எல்லாமே பாதாள உலக குழுவைப் போல நேர்த்தியாக ஊழலும், பொய்யும், புரட்டும் செய்வதால் அவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். பதவிக்கு வந்ததிலிருந்து தினமும் செய்யும் ஒவ்வொரு செயலுமே இதற்கு உதாரணம்.

By நவீன் சென்னை
1/19/2010 2:33:00 PM

மக்களை முட்டாளாக்குவதில் கருணாவை விட ஒரு நபர் இந்த உலகத்தில் இல்லை. அவர் சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்களை செய்வதில்லை. எல்லாமே பாதாள உலக குழுவைப் போல நேர்த்தியாக ஊழலும், பொய்யும், புரட்டும் செய்வதால் அவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். பதவிக்கு வந்ததிலிருந்து தினமும் செய்யும் ஒவ்வொரு செயலுமே இதற்கு உதாரணம்.

By நவீன் சென்னை
1/19/2010 2:30:00 PM

திருமணத்தினால் சமத்துவம் ஏற்படும் என்று நினைப்பது பகல் கனவு. இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் பெருவாரியாக திருமண பந்தத்தில் சேர்ந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிடுமா? அ.தி.மு.க வினரும் , தி.மு.க. வினரும் பெருவாரியாக திருமண பந்தத்தில் சேர்ந்தால் தமிழக அரசியல் தெளிந்துவிடுமா? இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் / சீனர்களும் திருமணம் செய்துகொண்டால் எல்லை பிரச்சினை தீர்ந்து போய்விடுமா ? உள்ளன்பும் விட்டுக்கொடுக்கும் மனமும் இறைநெறிசெல்லும் மரபுமே சமத்துவத்திற்கு வழி. பண்டைக்காலத்து நாயன்மார் ஆழ்வார் வழி மட்டுமல்லாது இன்று உள்ள அய்யப்ப பக்தியுமே இதற்கு சான்று. ம.இராமகிருஷ்ணன்

By M.Ramakrishnan
1/19/2010 2:04:00 PM

Why unnecessarily bother about love, marriage, life, etc. Hire and fire like Muka, where you can demand and get refund also for non-satisfaction (as per Kannadasan's book). Anybody and everybody cannot advise. SAATHAN VEDAM ODHUGIRATHU.

By Kalai
1/19/2010 2:01:00 PM

அய்யா இலக்குவனாரே ஏன் இப்படி மு.க விற்கு வக்காலத்து வாங்குகிறீர் என்று தெரியவில்லை .அழகிரியின் திருமணம் காதல் திருமணம் - மனைவி ஒ .பி ராமனின் மைத்துனி - (தாழ்த்த பட்டவர் ). இவர் உங்கள் மு.க வை பற்றி என்ன சொன்னார் என்று தெரிந்தால் மு.க வின் சுயரூபம் தெரியும் இந்த திருமனத்தை குடும்பத்தார் (மு.க உட்பட ) எதிர்த்தல் காரணமாக , அண்ணன் மதுரை என்ற சேரிக்கு செல்ல்வேண்டியயிற்று அழகரசன்

By alagarasan
1/19/2010 1:49:00 PM

ஊரார் பெயரனுக்குப் பெயரை மாற்றும் அளவிற்கு உணர்வும் உரிமையும் உள்ள கலைஞர் அவர்கள் தம் இல்லத்தி்ல் இப்பணியைத் தொடங்கி முன்மாதிரியாக இருந்து மீண்டும் தமிழ் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். நினைத்தால் அவரால் இதனை ஆற்றவும் இயலும். தாக்குவதையே நோக்கமாகக் கொண்டு எந்தச் செய்தியையும் அல்லது கருத்தையும் பார்க்கக் கூடாது. முன்பொருமுறை வலம்புரியார் குறிப்பிட்டது போன்று கலைஞரின் காலத்திலேயே தமிழுக்கு வீழ்ச்சி என்பது அவருக்குத்தான் தகுதிக் குறைவு. தமிழ்ப்பயிற்று மொழி, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் வழிபாட்டு மொழி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, ஈழத் தமிழர் நலன் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர் அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பு இருக்கும் பொழுது கடமை தவறுகையில், தமிழர் படுகொலைகளுக்குத் துணை நிற்கையில், தமிழர் தாயகம் உருவாகத் தடையாக இருக்கையில் அதைச் சுட்டிக் காட்டும் உரிமை உள்ளதால் அவற்றையும் சுட்டிக் காட்டுகின்றேன். அதே நேரம் பாராட்டும் இயல்பு வெளிப்படின் அதனையும் பாராட்டுவதில் தவறில்லை என்பதைத் தெரிவிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 1:40:00 PM

நவீன் அவர்களே! திரு மு.க.அழகிரி அவர்களின் மனைவி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்தான். உயர்த்திக்கொண்ட வகுப்பில் இருந்தும் மருமக்களைத் தேடிக் கொண்டார் என்பது உண்மைதான். அதற்காகப் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவது தவறல்ல எனினும் பின்னூட்டக் கருத்தின் நோக்கம் அதுவன்று. நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள கலைஞர் குடும்பத்தில் இருந்து எங்கும் தமிழ்! என்றும் தமி்ழ்! என்பது தொடங்கப்பட வேண்டும் என்பதுதான். அவரது குடும்பத்தினர் அவரது படைப்புகளைப் படிப்பதில்லை போலும்! நிறுவனங்களின் பெயர்களில் தமிழ் இல்லை. படங்களின் பெயர்களில் பிழைகள் உள்ளன. சன் தொலைக்காட்சியின் பெயரை மாற்ற வேண்டும் என அவரது தொண்டர்களே குரல் கொடுத்த பொழுது அறிவாலயத்தில் வாடகைக்கு இருக்கும் நிறுவனம்; வேறு கட்டுப்பாடு இல்லை என்றார். பின்னர் அந்த நிறுவனப் பங்கீடு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதையும் அவரே கூறினார். ஊரார் பெயரனுக்குப் பெயரை மாற்றும் அளவிற்கு உணர்வும் உரிமையும் உள்ள கலைஞர் அவர்கள் தம் இல்லத்தி்ல் இப்பணியைத் தொடங்கி முன்மாதிரியாக இருந்து மீண்டும் தமிழ் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். நினைத்தால் அவரால் இதனை ஆற்றவும் இ

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 1:21:00 PM

THE STATE GOVT SHOULD TAKE INITIATIVE TO GET THE FULL DETAILS OF INTER CASTE MARRIAGES THROUGH VILLAGE ADMINISTRATIVE OFFICERS. THEY ALL SHOULD CONSIDERED A SEPARETE CATEGORY FOR RESERVATION POLICIES. BECAUSE LOT OF INTERCASTE MARRIAGES AND INTERSTATE MARRIAGES ARE NOT KNOWN TO THE GOVERNMENT BECAUSE THE ASKED FILL UP THE CASTE COLOUMN IN THE SCHOOL CERTIFICATE IN ANY ONE OF THE CASTE. SO THE GOVERNMENT SHOULD TAKE STEPS TO ENCOURAGE THEM. FOR INFORMATON, THIS JANUARY 2010, I HAVE ATTENDED 2 INTERCASTE MARRIAGES AND ONE INTERSTATE MARRIAGE. LOVE IS GOD

By L.G.Balathandayutham
1/19/2010 12:55:00 PM

..INDIAN DEMOCRA-ZY IS SELECTING CANDIDATES ON CASTE BASISIS BUY VOTES BY FREE LIQUOR..FREE DRESS..FREE MEAL..FREE TELEVISION...AND FREE WIFE...BUT THEY CALL THIS BIGGEST DEMOCRA-ZY IN THE WORLD....YOU CAN CORRECT ILLITERATE PEOPLE..SORRY SHEEPS..WHO WILL DO ANY THING FOR MONEY.....INDIAN CONSTITUTION SAYS CASTE RELATED INCIDENTS ARE PUNISHABLE...AND HAVING TWO WIVES IS ILLEGAL...BUT THALIVER LEAD AND THONDON LIVE IN THE ROADS FOLLOW...ALL HAVE TWO WIVES...HE..HE..HE DEMOCRA-ZY WITH DRAVIDAN CULTURE....

By KOOPU
1/19/2010 12:30:00 PM

...CASTE WHAT IS THIS?NO TAMILS OUTSIDE INDIA PRACTICED THIS..BECAUSE ALL ARE WELL EDUCATED....HE..HE..HE 60 YRS DRAVIDAN CULTURE...ANT-CASTE MOVEMENTS ALL GONE TO DUSTBIN...AS LONG AS INDIAN POPULATION REMAINS ILLITERATE THALIVERS WILL TAKE PEOPLE FOR RIDE AND ACCUMULATE WEALTH...PEOPLE HAVE NOTHING TO EAT....BUT CAST..EXISTS..WHY INDIANS WHEN THEY ARE IN THE WEST FORGET ABOUT THIS...INDIANS CLEAN TOILET...CALLING COBBLERS AND TOILET CLEANERS AS "FAMILY FRIENDS" AND GO AND EAT EVEN MANY BRAHMINS MARRIED WHITE COBBLERS ...IN THE WEST....HOW INDIA ACCEPT A COBBLER ITALIAN WOMAN TO RULE THE BIGGEST DEMOCRA-ZY IN THE WORLD???? EVEN TOUCH AND WORSHIP HER FEET HE HE HE..........

By KOOPU
1/19/2010 12:24:00 PM

அய்யர், அய்யங்கார், முதலியார் போன்ற உயர் ஜாதியில் திருமணங்கள் செய்த் விட்டு கலப்புத் திருமணம் என்று ரீல் விடுகிறான். அதையும் சிலர் நம்புகிறார்கள். தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து எந்த பெண்ணாவது எடுத்திருக்கிறான இந்த பிராடுகாரன்.

By நவீன் சென்னை
1/19/2010 11:54:00 AM

இலக்குவனார் அவர்களே! கொலைஞர் வீட்டில் கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த கொலைஞர் விவரமாக உயர் ஜாதி பெண்களைத் தான் எடுத்திருக்கிறார். முரசொலி மாறனின் மனைவி மல்லிகா ஒரு உயர் ஜாதி பெண். அவர் வீட்டில் எந்த தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணாவது எடுத்திருக்கிறாரா என்று சொல்லுங்கள். தவறான தகவல்களை இங்கே சொல்லாதீர்கள்.

By நவீன் சென்னை
1/19/2010 11:17:00 AM

Love marriage should come on its own. Most of the love marriage fail because the couple fail to understand each other fully before marriage. Ego and intolerence are the factors for their misunderstanding which led to divorce. One must begin to understand his/her partner fully before love. Once fallen to love, they should respect each other , shed ego and keep tolerence. Then only love marriages would attain success. If such a love develops ,caste or creed would not be a barrier.

By MuthuRajendran
1/19/2010 10:06:00 AM

காதல் திருமணம் கத்திரிக்காய் எல்லாம் மக்கள் பார்த்துகொல்வார்கள். நீங்கள் ஒன்றும் மக்களுக்கு அறிவுரை கூறவேண்டாம். அதற்க்கு உங்களுக்கு தகுதி இருக்கா என்று எண்ணி பார்க்கவேண்டும். இளைஞர்களுக்கு வழி விடாமல் இன்னும் பதவி கட்டிலில் படுத்துகொண்டிருந்தால் அப்பறம் எப்படி சமுதாயம் முன்னேறும் நாடு முன்னேறும். எல்லாரும் காதல் செய்துகொண்டும் டாஸ்மாக் கடையில் குடித்துக்கொண்டும் இருந்தால் போதுமா. ஊழல் லஞ்சம் இல்லாத நேர்மையான ஆரசாங்கம் நடத்தியா என்றால் மாமா வேல பார்த்துகிட்டு இருக்காரு. போய்யா போயி வேலையா பாரு. எப்படி கலியாணம் பண்றதுன்னு அவனவன் பாத்துக்குவான்.

By Balraja
1/19/2010 9:35:00 AM

விவேகம் என்னும் வெள்ளி முளைத்து, கருணாநிதி-ஜெயலலிதா என்னும் சனி தொலைந்தால்தான் தமிழகத்துக்கு விமோசனம் என்னும் ஞாயிறு பிறக்கும்.

By குஷ்புபிரியன்
1/19/2010 9:20:00 AM

Karunanidhi, Stalin, & co. are the reason for the caste basis. When they select the candidates for MLA, and MP candidates, they first give priority to caste in their selection among their "JALARAS'. They pay attention to caste. They really don't mean casteless society. Scholarships, and reservations are based on castes, and religion. They are the ones that create rift between religions, and among various cates. Karunanidhi is a liar when he says casteism gives him sadness. He is really happy in his selection of candidates based on caste, and religion.

By AnNRI
1/19/2010 8:24:00 AM

When you enter the school the first question is " You belong to which community". CAste is present in even in education and employment. You cancel it legally. Automatically everything will be ok.

By SELVAN
1/19/2010 7:13:00 AM

It's time to self-introspect those who preach, speak, attend....finally the social/cultural imbalance. We don't have ANNA or Periyar or TRUE self-respect movement cadres now to lead, there are few even these people like changed from "long back pure coovam river to its present poisen coovam river".

By reader
1/19/2010 6:36:00 AM

ஒரு உயர் ஜாதி பிராமண பெண் தாழ்த்தப்பட்ட இன ஆனை மணக்கிறாள். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குண்டான் சலுகைகள் மறுக்கப்பட்டது. இது நடந்தது கோயம்புத்தூரில். கருணாநிதி ஆட்சியில்தான். எங்கே இருக்கிறது சமத்துவம் ?. யாரிடம் இருக்கிறது ஜாதி வெறி ? பஸ்களில் "சாதி என்னும் சனி தொலைந்தால்தான்............சமத்துவம் என்னும் வெள்ளி முளைக்கும்"-கலைஞ்சர்- என்று விளம்பரத்திற்காக எழுதிவிட்டால் சமத்துவம் தோன்றிடுமா? வார்த்தை ஜாலங்களை மக்கள் கற்றுக்கொள்வதே கருணாநிதியிடமிருந்துதானே. முதலில் ஜாதி வெறியிலிருந்து மாறவேண்டியது கருணாநிதி தான்.

By mugilan
1/19/2010 6:13:00 AM

[ஒருவேளை அப்பெயர்களையெல்லாம் நாங்கள் எங்கள் பத்திரிக்கைகளுக்கும், கம்பெனிகளுக்கும் வைத்து விட்டோம் என்று சொல்வாரோ என்ன்னவோ?] சீர்திருத்த / சுயமரியாதைத் திருமணம் சட்டபடி செல்லாது என்றாகித்தானே,பிரிவு-7ஆ இந்து திருமணச் சட்டத்திற்குள் புகுந்து கொண்டு "மரியாதை" பெற்றது! அகத்தில் பிரச்சினை இருந்ததால் தான் புறத்தில் மாங்குடி கிழார், "துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை", இப்படி சொன்னாரா? அதானால் தான் "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்" கரணம் யாத்தனரா? அப்பொழுது, இந்த ஐயர் ஏன் கரணங்களை மறுக்கிறார்? வரிவடிவங்களில் இன்னமும் எத்தனையோ உள்ளன [சொன்னால் கோபம் வரும்], முதலில் அதை நீக்க எவருக்கும் துணிவில்லை. இப்படி பேசிக்கொண்டேயிருந்தால், பேசிக்கொண்டே இருக்கலாம்!

By Vedaprakash
1/19/2010 5:28:00 AM

முன்பு இவர் சாவியிடம் (எஸ். விஸ்வநாதன்) சொன்னதுதான் ஞாபகம் வருகிறது, "ஒரு நல்ல பிராமண பொண்ணா இருந்தா பார்த்து சொல்லுங்க" என்றதும், அவ்வாறே முடித்து வைக்கப்பட்டது (உபயம்: குமுதம்)! அப்பொழுது, காதல் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை! சரித்திர ஆதாரமில்லாத "ஆரிய-திராவிட" இனவெறியைப் பிடித்துக் கொண்டு சாதி/ஜாதிகளை ஒழிப்போம் என்று பேசுவது "ஏழ்மையை ஒழிப்போம்" என்பது போலத்தான்! சமத்துவம் பேசி உள்-ஒதுக்கீடு செய்யும் அரசியலும் அதுப்போலத்தான்!! காதல்-ஜிஹாத் மாதிரி, காதல்-திராவிடம் பேசினால் சமத்துவம் வந்துவிடாது. தாலி மறுப்பு இயக்கம் என்று போலியாக பேசுவது என்ன பகுத்தறிவு? கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்கள் தாலியை மறுத்துவிட்டார்களா? இல்லை, இவர் நடத்திவைக்கும் அல்லது பங்கு கொள்ளும் திருமணங்களில் தாலி கட்டாமல் இருக்கிறார்களா? வெளியிடும் புகைப்படங்களே சாட்சியாக உள்ளனவே? மற்றவர்கள் நெற்றியில் போட்டு / குங்குமம் வைத்தால் "என்ன ரத்தம் வருகிறதே.....", என்ற கிண்டலடிப்பு, ஆனால் இவருடைய மனைவி, துணைவி, மகள்கள், இத்யாதி...........முதலியோர் வைத்துக் கொண்டால் சுமங்கலமா? [ஒருவேளை அப்பெயர்களையெல்லாம் நாங்கள்

By Vedaprakash
1/19/2010 5:26:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக