செவ்வாய், 19 ஜனவரி, 2010

இலங்கை அதிபர் தேர்தல்: திரி​கோ​ண​ம​லைத் தமி​ழர்​கள் விரக்தி



திரி ​கோ​ண​மலை,​ஜன.18: ஜன​வரி 26-ம் தேதி நடை​பெ​ற​வுள்ள இலங்கை அதி​பர் தேர்த​லில் வாக்​க​ளிக்க வேண்​டும் என்ற ஆர்​வமே திரி​கோ​ண​ம​லைப் பகுதி தமி​ழர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​க​ளுக்கு இல்லை.​அதி​பர் பத​விக்கு மீண்​டும் போட்​டி​யி​டும் மகிந்த ராபட்ச தமி​ழர்​களை வாழ​வைப்​ப​தற்​காக எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை;​ விடு​த​லைப் புலி​க​ளுக்கு எதி​ரான போரின்​போ​து​கூட அப்​பா​வித் தமி​ழர்​கள் பட்ட வேத​னை​கள் குறித்து அவர் கவ​லை​யே​ப​ட​வில்லை.​ எனவே அவ​ருக்கு வாக்​க​ளிப்​ப​தால் தங்​க​ளு​டைய நிலைமை மேம்​ப​டப் போவ​தில்லை என்​ப​தில் தமி​ழர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​கள் நிச்​ச​ய​மாக இருக்​கின்​ற​னர்.​அவரை எதிர்த்து எதிர்க் கட்​சி​க​ளால் பொது வேட்​பா​ள​ராக நிறுத்​தப்​பட்​டி​ருக்​கும் ஓய்வு பெற்ற ராணு​வத் தலைமை தள​பதி ஜென​ரல் பொன் சேகா​வும் தமி​ழர்​க​ளுக்கு சம உரி​மை​க​ளைத் தந்து வாழ்​வில் ஒளி​யேற்​றி​வைப்​பார் என்ற நம்​பிக்கை அவர்​க​ளுக்கு இல்லை.​ எல்​லா​வற்​றை​யும் விட,​​ தமி​ழர்​க​ளின் வாக்​கு​களை நம்பி இரு வேட்​பா​ளர்​க​ளுமே இல்லை என்ற போது இந்​தத் தேர்த​லில் தங்​க​ளு​டைய வாக்​க​ளிப்பு எதைச் சாதித்​து​வி​டப் போகி​றது என்ற விரக்​தியே தமி​ழர்​க​ளி​டம் மேலோங்கி நிற்​கி​றது.​இலங்​கை​யின் வடக்​கும் கிழக்​கும் தமி​ழர்​க​ளின் பாரம்​ப​ரி​ய​மான பகு​தி​கள்,​​ தமி​ழர்​க​ளுக்​குத் தாய​கம் என்று காலம்​கா​ல​மாக தமி​ழர்​கள் வலி​யு​றுத்தி வரு​கின்​ற​னர்.​ இத​னா​லேயே சிங்​க​ளப் பேரி​ன​வாத அர​சு​கள் அடுத்​த​டுத்து ஆட்​சிக்கு வந்த போதெல்​லாம் தமி​ழர் பகு​தி​க​ளில் சிங்​க​ளர்​களை திட்​ட​மிட்டு குடி​யேற்றி வந்​தது.​ மகாவலி கங்கை என்று அழைக்​கப்​ப​டும் வெலி ஓயா ஆற்​றுப்​ப​குதி மேம்​பாட்​டுத் திட்​டமே அதற்​கா​கத்​தான் கொண்​டு​வ​ரப்​பட்​டது என்​பது உல​க​றிந்த ரக​சி​யம்.​இப்​போது விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்தை முற்​றாக அழித்​து​விட்​ட​தால் தமி​ழர்​க​ளுக்கு என்று தனிப்​பட்ட முறை​யில் எலி வளை​கூட இல்​லா​த​ப​டிக்கு எல்லா இட​மும் சிங்​க​ளர்​க​ளின் ஆதிக்​கத்​தி​லும் கண்​கா​ணிப்​பி​லும் கொண்டு வரப்​பட்​டு​விட்​டது.​ இதற்​காக புதிய புதிய தொழில் திட்​டங்​க​ளுக்கு இலங்கை அரசு கொழும்பி​லி​ருந்தே அனு​மதி அளிக்​கி​றது.​ அதற்​குத் தேவைப்​ப​டும் நிலங்​களை அளிப்​பது,​​ திட்​டங்​க​ளுக்கு ஒப்​பு​தல் தரு​வது போன்​ற​வற்றை உள்​ளாட்சி அமைப்​பு​கள் உட​னுக்​கு​டன் செய்து முடிக்​கின்​றன.​உள்​ளாட்சி அமைப்​பு​க​ளில் தமி​ழர்​கள் பிர​தி​நி​தி​க​ளாக இருந்​தா​லும்,​​ மத்​திய அரசு கூறும் திட்​டங்​களை அனு​ம​திக்க மறுத்​தால் கடு​மை​யான பின் விளை​வு​கள் ஏற்​ப​டும் என்று உணர்ந்​தி​ருப்​ப​தால் ரப்​பர் ஸ்டாம்​பு​க​ளா​கவே செயல்​ப​டு​கின்​ற​னர்.​ திரி​கோ​ண​மலை மாவட்​டத்​தில் தமி​ழர்​கள்,​​ சிங்​க​ளர்​கள்,​​ முஸ்​லிம்​கள் சேர்ந்து வசிக்​கின்​ற​னர்.​ இந்த 3 இனங்​க​ளில் இப்​போது தமி​ழர்​கள் எண்​ணிக்கை குறைந்​தும் சிங்​க​ளர் எண்​ணிக்கை அதி​க​ரித்​தும் வரு​கி​றது.​​ சிங்​க​ளர்​கள் தொழில் முனை​வர்​க​ளாக,​​ தொழி​லா​ளி​க​ளாக,​​ அதி​கா​ரி​க​ளாக,​​ அரசு ஊழி​யர்​க​ளாக,​​ வியா​பா​ரி​க​ளாக,​​ புது​வாழ்வு பெறக் குடி​யே​று​ப​வர்​க​ளாக குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்​ற​னர்.​ இவர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​க​ளுக்கு ஏதா​வது ஒரு வழி​யில் அரசு மூலமே பணம் விநி​யோ​கிக்​கப்​ப​டு​கி​றது.​ எனவே புதிய இட​மா​யிற்றே என்று அவர்​கள் குடி​யே​றத் தயக்​கமே காட்​டு​வ​தில்லை.​ தமி​ழர்​கள் நிலைமை அப்​ப​டி​யில்லை.​போருக்​குப் பிறகு பொரு​ளா​தார வளர்ச்​சிக்​கான திட்​டங்​களை மேற்​கொள்​ளும் சாக்​கில் புதிய தொழில் முக​வர்​க​ளும் தொழி​லா​ளர்​க​ளும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வ​தாக தமிழ் தேசிய கூட்​ட​ணி​யைச் சேர்ந்த நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் துரை​ரத்ன சிங்​கம் தெரி​விக்​கி​றார்.​கிழக்கு மாகா​ணத்​தைச் சேராத சிங்​க​ளர்​களே தொழிற்​சா​லை​க​ளில் தொழி​லா​ளர்​க​ளா​க​வும் சுற்​று​லாத் தலங்​க​ளில் ஊழி​யர்​க​ளா​க​வும் பணி​யில் சேர்க்​கப்​ப​டு​கின்​ற​னர் என்று கிழக்கு மாகாண நிர்​வா​கத்​தில் உள்ள,​​ பெயர் குறிப்​பிட விரும்​பாத அரசு அதி​காரி தெரி​விக்​கி​றார்.​புதிய தொழிற்​சா​லை​க​ளுக்கு மத்​திய அரசு கொழும்பி​லி​ருந்​த​ப​டியே அனு​மதி தரு​கி​றது,​​ இதர நிர்​வாக நடை​மு​றை​க​ளுக்கு உள்​ளாட்சி மன்​றங்​கள் அச்​சம் கார​ண​மா​கவே ஒப்​பு​தல் தந்​து​வி​டு​கின்​றன என்​கி​றார் துரை ரத்​ன​சிங்​கம்.​அதி ​பர் தேர்​தலை தமிழ் தேசிய கூட்​டணி புறக்​க​ணிக்​க​வில்லை.​ கிழக்​குப் பகு​தியி​லி​ருந்து தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட அனைத்து நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளுமே இந்​தக் கூட்​ட​ணி​யைச் சேர்ந்​த​வர்​கள்​தான் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​இப்​போ​துள்ள அர​சி​யல் கட்​ட​மைப்​புக்​குள்​தான் செயல்​பட வேண்​டி​யி​ருக்​கி​றது.​ தேர்​த​லைப் புறக்​க​ணிப்​ப​தால் எந்​தப் பல​னும் ஏற்​ப​டப்​போ​வ​தில்லை.​ இரு வேட்​பா​ளர்​க​ளில் பொன்​சே​காவை ஆத​ரிக்​கி​றோம்;​ ""தமி​ழர்​க​ளின் கோரிக்​கை​க​ளைக் கவ​னிக்​கி​றேன்'' என்​றா​வது அவர் வாக்​கு​றுதி அளித்​தி​ருக்​கி​றார் என்​கி​றார் துரை ரத்​ன​சிங்​கம்.​​தேர்த​ லில் பங்​கேற்​க​லாம்,​​ பொன் சேகாவை ஆத​ரிக்​க​லாம் என்ற தமி​ழர் விடு​தலை கூட்​டணி முடிவை வாக்​கா​ளர்​க​ளில் பெரும்​பா​லா​ன​வர்​கள் ஏற்​க​வில்லை.​தமி​ழர்​கள் யாருக்கு வாக்​க​ளிக்க வேண்​டும் என்று கூறும் உரி​மையே இந்​தக் கூட்​ட​ணிக்​குக் கிடை​யாது;​ போரி​னால் பாதிக்​கப்​பட்ட தமி​ழர்​கள் துய​ரில் ஆழ்ந்​து​கி​டந்​த​போது அவர்​க​ளு​டைய மறு​வாழ்​வுக்​கென கூட்​டணி எம்.பி.க்கள் எதை​யும் செய்​ய​வில்லை,​​ அக​தி​க​ளாக நாங்​கள் அடைக்​கப்​பட்​டி​ருந்த முகாம்​க​ளுக்​குக் கூட வர​வில்லை என்​கி​றார் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றில் மேலா​ள​ரா​கப் பணி புரி​யும் கோணேஸ்​வ​ரன்.​கோணேஸ்​வ​ர​ னின் உற​வி​னர்​கள் முத்​தூர் என்ற ஊரைச் சேர்ந்​த​வர்​கள்.​ போருக்​குப்​பி​றகு இலங்கை அரசு அவர்​களை அந்த ஊரில் மீண்​டும் குடி​யேற அனு​ம​திக்​க​வில்லை.​ அதே நிலை​மை​தான் சம்​பூ​ரைச் சேர்ந்​த​வர்​க​ளுக்​கும்.​ அவர்​கள் தங்​க​ளு​டைய ஊருக்கு இனி திரும்ப முடி​யாது என்ற முடி​வுக்கு வந்​து​விட்​ட​னர்.​ அந்​தப் பகுதி மிகுந்த உயர் பாது​காப்பு தேவைப்​ப​டும் ராணு​வப் பகு​தி​யாக 2007-ல் அறி​விக்​கப்​பட்​டு​விட்​டது.​எங்​க​ளு​டைய தொகு​தி​க​ளில் உள்ள தமிழ் அக​தி​கள் முகாம்​க​ளுக்​குக்​கூட நாங்​கள் செல்​லக்​கூ​டாது என்று அதி​பர் மகிந்த ராபட்ச தடுத்​து​விட்​டார்,​​ இந்த நிலை​யில் தமி​ழர்​கள் எங்​க​ளைக் குறை கூறு​வ​தில் அர்த்​தமே இல்லை என்று வருத்​தப்​பட்​டார் துரை ரத்​ன​சிங்​கம்.​திரி​கோ​ண​ம​லை​யில் அற்​பு​த​மான துறை​மு​கம் இருக்​கி​றது,​​ கடற்​படை தளம் இருக்​கி​றது.​ இந்​திய எண்​ணெய் நிறு​வ​னத்​தின் மிகப்​பெ​ரிய சேமிப்பு கிடங்கு இருக்​கி​றது.​ கிழக்​குப் பகுதி முழு​வ​தற்​குமே ரொட்டி சப்ளை செய்​யும் ஆலை இருக்​கி​றது.​ ஆனால் உள்​ளூர் இளை​ஞர்​க​ளுக்கு அதி​லும் குறிப்​பா​கத் தமிழ் இளை​ஞர்​க​ளுக்கு வேலையே இல்லை.​ அத்​தி​யா​வ​சி​யப் பண்​டங்​க​ளின் விலையோ பணக்​கா​ரர்​கள்​கூட எண்​ணிச் செல​வ​ழிக்​கும் நிலை​யில் இருக்​கி​றது.​திரி​கோ​ண​ம​லை​யில் உள்ள பெரும்​பா​லா​ன​வர்​கள் அரசு ஊழி​யர்​க​ளாக இருந்​தும் அரசு தரும் சம்​ப​ளத்​தில் குடித்​த​னம் நடத்த முடி​யா​மல் திண​று​கின்​ற​னர்.​ எனவே பொன்​சே​காவை ஆத​ரிக்க அவர்​கள் ஆர்​வ​மாக இருக்​கின்​ற​னர்.​ ​கிரா​மப்​பு​றங்​க​ளில் சிங்​க​ளர்​க​ளின் ஆத​ரவு ராபட்​ச​வுக்​குத்​தான்.​ தம​யந்தி என்ற சிங்​க​ளப் பெண்​ணின் குடும்​பத்​தார் திரி​கோ​ண​ம​லையை விட்டு உயி​ரைக் காத்​துக்​கொள்ள 25 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் ஓடி​னர்.​ அவர்​கள் இப்​போது போருக்​குப் பிறகு மீண்​டும் ஊர் திரும்​பி​யுள்​ள​னர்.​ அவர்​கள் தங்​க​ளு​டைய வாக்​கு​கள் ராபட்​ச​வுக்​குத்​தான் என்​கின்​ற​னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக