செவ்வாய், 18 ஜூன், 2013

விருதுநகர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இலவசமாக மூன்று ஆண்டு பட்டய படிப்பு மற்றும் 3 மாத தொழில் நுட்ப பயிற்சி பெறுவதற்கு அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இருபாலரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
மத்திய அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் கை, கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கல்லூரியில் கட்டட பிரிவு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம், அச்சுக்கலை, இயந்திரவியல், எலக்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறியியல் பட்டயம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து படிக்கிறவர்களுக்கு படிப்புக் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணப்படியும் வழங்கப்படும்.
அதேபோல், பிரின்டிங், தையல், மின்சாதன வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கம் பயிற்சி, ஸ்கிரின் பிரிண்டிங் உள்ளிட்ட 3 மாத பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சிகளை பெறுவதற்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் ஊனத்தின் தன்மை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்கவும் வேண்டும். இதில், சேர்வதற்கு மாற்றுத்திறனாளிகள் 10-வது அல்லது 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ள அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்களை நேரில் இலவசமாக பெற்று வருகிற 26-ம் தேதிக்குள் பெற்று விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக