சரியான கருத்து. அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தமிழைக் கட்டாயப் பாடமாகக் கொண்ட கல்வி முறைக்கு மட்டுமே இசைவுஅளிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: ராமதாஸ்
First Published : 10 May 2011 01:52:40 PM IST
சென்னை, மே 10- தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் அதேபோன்றுதான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழை ஒரு பாடமாக படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் படித்தவர்களுக்கு, பாடவாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேர்வுத்துறை அதிகாரிகளின் இந்த நடைமுறை தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக உள்ளது.இத்தகையப் போக்கு தொடர்ந்தால், தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளி மற்றும் கல்லூரி முடித்து பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.இதுபோன்ற சிக்கல்களை தடுப்பதற்கு ஒரே தீர்வு தமிழை கட்டாயப் பாடமாக்குவதுதான். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By Chandru
5/10/2011 6:30:00 PM
5/10/2011 6:30:00 PM


By krishnasamy
5/10/2011 5:11:00 PM
5/10/2011 5:11:00 PM


By farook
5/10/2011 3:17:00 PM
5/10/2011 3:17:00 PM


By senthamil
5/10/2011 2:33:00 PM
5/10/2011 2:33:00 PM


By fajrudeen
5/10/2011 2:19:00 PM
5/10/2011 2:19:00 PM


By சுவாமி
5/10/2011 2:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/10/2011 2:04:00 PM