ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியல்ல



கொழும்பு, ஏப்.10: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (யு.பி.எஃப்.ஏ.) பெரும்பான்மை கிடைத்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.தேர்தலில் வெற்றி பெற உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி கூறினார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றது. 225 தொகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தேர்தலில் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி 46 இடங்களை கைப்பற்றியது. இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆட்சியைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கண்டி, திரிகோணமலை மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் இதுவரை அறிவிக்கப்பட்டவில்லை. தேர்தல் வெற்றி குறித்து ராஜபட்ச கூறியது: ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் வெற்றியை அளித்துள்ள இலங்கை மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தலைமையிலான ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள முழுமையான நம்பிக்கை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அமைதி நிலவவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் முதலீடுகள் அதிகரிப்பதோடு பல்வேறு பகுதிகளிலும் விரைவான வளர்ச்சி ஏற்படும். பொருளாதார மற்றும் சமூகநலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தவும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அவர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணிக் கட்சியினர் பல இடங்களில் கட்சிக் கொடிகளை ஏற்றி வெற்றியைக் கொண்டாடினர்.
கருத்துக்கள்

மொத்த வாக்காளர்களில் பாதியளவுகூட வாக்களிக்காத தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற்ற இனப்படுகொலை கொடுங்கோலன் மக்கள்நாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கூசாமல் சொல்லுகின்றான். ஒருவன் அவனை வானளாவப் புகழ்ந்து பதிகின்றான். இத்தகையோர் மக்கள் மன்றத்தில் இருந்து தொலையும் நாள்தான் உண்மையில்மக்களாட்சிக்கு வெற்றி கிட்டும் நாள். மனித நேயம் மலரும் நாள். உயிர்களைக் குடிக்கும் ஒருவனை உண்மையான பௌத்தன் என எழுதவும் ஆள்இருக்கின்றான் எனில் ஐயோ புத்தரே! இதுதான் உம் அன்பு வழியா? அற வழியா? அமைதி வழியா? யுத்தம் சரணம் கச்சாமி என்பவர்கள் வாழ மக்கள் வீழ உம் கொள்கையும் அல்லவா மறைகின்றது! உமக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றவனையும் கருத்து பதிகின்றவனையும் என்ன செய்யப் போகிறாய்? எப்பொழுது தண்டிக்கப் போகிறாய்?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/11/2010 2:40:00 AM

Srilankavin varalatriley ithu varaikkum vantha arsiyal vathikaliley unmaiyana nattu patru ulla oru thalavan than ipothaiya ilankai janathipathi. Avar kastapatta sinhala makali porutha varaikkum oru anpana thalaivan.Ella makalaiyum mathikkum oru unmaiayana pouthan. Evar enna sonnalum ilanakai varalatriley ivarin moolam than ilanakai thamilarkalukku oru mudivai kodukka mudiyum.Innimelavathu thamil thalaivarkal ina verupattai kaivittu vittu janathipathiyudan pesithan innapiratchanaikku oru theervu kana mudiyum.Viduthalaipulikalai azithavar entru kopappaduvathil entha vithamana pirayosanamum illai.Nadanthu mudintha sandaiyil enthani ayiram appvi thamil makkal kollappattarkal.Avarkalin ilappukku irandu pakuthiyinarumey karanam.Unmayil matchatchi ullavan nala thoru mudivu varum entru kanavu kondu irukiran. ilankaiyan

By N.ilankaiyan
4/11/2010 1:37:00 AM

சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன. நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான [ஐ.நாவின் முன்னால் பேச்சாளரின் கருத்துப்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம்] மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக ஆரம்பித்தன. இதன் ஒரு கட்டமாக, இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் [UN Human Rights Council] விசேட அமர்வொன்று இடம்பெற்றது. இதனை மேற்கத்தேய நாடுகளே முன்மொழிந்ததுடன் அதில் அக்கறையும் செலுத்தியிருந்தன. ஆனால், அன்றைய காலப் பகுதியில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஜெனிவாவில் பணியாற்றிய திரு.டயான் ஜயதிலக்க தனது இராஜதந்திர சாணக்கியத்தின் மூலம் அதனை முறியடித்திருந்தார். திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவினுடைய இராஜதந்திரிகளில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர். அதேவேளை முன்னால் ஜெனரல் சரத்பொன்சேக கள முனையில் வழங்கிய பங்களிப்புக்கு நிகரான பங்களிப்பை சர்வதேச

By Tamil RAVI
4/11/2010 1:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக