சனி, 17 ஏப்ரல், 2010

Latest indian and world political news information

சென்னை:'பல்வேறு பொறுப்புகளில் உள்ள தி.மு.க.,வினர், தாம் வகிக்கும் பொறுப் புகள் பற்றி தான் செய்தியாளர்களிடம் விளக்கமளிக்க வேண்டும். கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி, எவரும் தன்னிலை விளக்கம் தருவது ஏற்கக் கூடியதல்ல. கட்சி தொடர்புடைய செய்திகளை தலைமை தான் வெளியிட வேண்டும்' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:அரசியல் சம்பந்தமான பேட்டிகள் அல்லது அவரவர் சொந்தக் கருத்துகள் பற்றிய சர்ச்சைகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னவை, சொல்லாதவை என்று, தங்களது எண்ணங்களுக்கு ஏற்ப செய்திகளை வெளியிடுவதும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் தூண்டிவிடப்படுவதும், கடந்த காலங்களில் மட்டுமின்றி நிகழ் காலத்திலும் நடப்பவைகளாக இருப்பது அனைவரும் அறிந்தது. தி.மு.க., வளர்ச்சியில் ஊக்க நிலையைத் தடுத்து, ஒரு தேக்க நிலையை உருவாக்க பல முனைகளிலிருந்து முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள், போர்க்களத்தில் ஒரு வீரன் மீது பொழியப்படும் கணைகள் போல் என்னையும், இந்த இயக்கத்தையும் நிலை குலையச் செய்துவிடும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களேயானால், அவர்கள் இக்கட்சி நடந்து வந்த பாதையை அறியாதவர்களாகவும், அறிந்திருந்தும் அதை மறந்தவர்களாகவும் தான் கருதப்படுவர்.


தி.மு.க.,வினர் யாரும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி என்று பதவிப் பொறுப்பில் இருப்பாராயின், அப்பொறுப்பு பற்றிய ஐய வினாக்களுக்கும், அறிவிப்புகளுக்கும் மட்டுமே செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்.தி.மு.க., எடுக்க வேண் டிய முடிவுகள், ஈடுபட வேண்டிய செயல்கள், மற்ற கட்சிகளுடனான உறவு பற்றியெல்லாம் பொதுக் குழு, செயற்குழு எடுக்கும் முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பை நானும், பொதுச் செயலரும் பெற்றிருக்கிறோம்.கட்சிக் கட்டுப்பாட்டுக்கு மீறிய நிலையில், தி.மு.க.,வினர் எவரும் தன்னிலை விளக்கங்கள் தர, கட்சி அமைப்புகள் இருக்கும் போது, அதை விடுத்து செய்தியாளர்கள் சந்திப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் ஏற்புடையதல்ல.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
Nobody interfear in D.M.K. RISE AND FALL Leaders are responsible as they know the real strength.( Congress to be catious) .There is no real warrior in d.m.k. All are 'kozigal' that is the reason to buy other parties leaders by spending money,power & illegal attempts.Original D.M.K. DIED.C.M. AWARE THE FACT from his statement.kks.
by k.k shanmugam,chennai,India 16-04-2010 19:30:31 IST
If he married single wife he can control this situation. But he married 3. Now he feel about this. This is the lesson for every one. Dont married more then 1 wife.
by A Karthikeyan,bahrain,India 16-04-2010 17:57:39 IST
சொந்த பிரச்னை கூட அறிக்கை விடுராருப்ப இந்த தாத்தா, நேராக கூப்பிட்டு அண்ணன் அழகிரி கிட்டவே சொல்ல வேண்டியதுதானே? அதெப்படி முடியும், எல்லாத்துக்கும் அறிகையும், கடிதம் எழுதயுமே பழக்கம் ஆச்சே..
by a ஜெயப்ரகாஷ்,pune,India 16-04-2010 15:05:15 IST
நல்ல அரசியல் தி.மு.க வாழ்க நல்ல அரசியல் தி.மு.க வாழ்க நல்ல அரசியல் தி.மு.க வாழ்க நல்ல அரசியல் தி.மு.க வாழ்க நல்ல அரசியல் தி.மு.க வாழ்க நல்ல அரசியல் தி.மு.க வாழ்க இன்னும் ஒரு EM.G.R back again. otherwise tamilnadu go to slum அரசியல் வாழ்க தி.மு.க FAMILY அரசியல்
by v prakash,chennai,India 16-04-2010 13:50:56 IST
டூஸ் அண்ட் டோனட்ஸ் என்று பல முறை வெளி இட்டாலும் ஒரு கட்சியில் இப்படித்தான் இருக்கும். வாழ்க கலைஞர் அவர் சொல்படி யாவரும் (கட்சிக்காரர்கள்) கேளுங்கள்.
by pn balasubramanian,chennai,India 16-04-2010 12:36:40 IST
வாரிசுகளை நியமிப்பதிற்கு தி. மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று பாடின பல்லவியை‌யே திரும்ப திரும்ப பாடுவார் கருணாநிதி. கருணாநிதி-இன் இதனை பிள்ளைகளும் பேரன்களும் பதவிக்கு வந்து இருக்கிறார்களே, அன்பழகன் குடும்பத்தில் இருந்து யாரும் ஏன் வரவில்லை? தி. மு. க இன்னும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பீகார்-ஐ விட பின்தங்கிய மாநிலமாகி விடும். அப்புறம் தமிழ்நாட்டையே backward என்று சொல்லி மொத்தமாகக இட ஒதுக்கீடு வாங்கி விடலாம்.
by உண்மை விளம்பி ,Ahmedabad,India 16-04-2010 12:36:33 IST
தலைவரு வச்சாறுபாரு உளி, நடு மண்டைல நச்சுனு.... - தலைமை கட்டுபாட்டை விரும்பும் தொண்டன்
by Muthu Jayaram,AbuDhabi,UnitedArabEmirates 16-04-2010 12:12:14 IST
இதற்குபிறகும் தி மு க ஜனநாயக கட்சி என்று கருதுவார்களேயானால் அவர்கள் மூடர்கள் l என்று தான் கருத வேண்டும். தான் செயற்குழு பேராசிரியர் செயற்குழு ,இப்படிதானே 40 ஆண்டுகளாக கட்சியின் செயல்பாடுகள் உள்ளது.உள்கட்சி ஜனநாயகம் இல்லாததின் காரணமாகவே குடும்பத்தினரும்,தலையாட்டி பொம்மைகளும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் .ஏன் ஒருவரே ஐந்து முறை முதல்வராக இருக்கவேண்டும் .
by k anjanenjan,dubai,UnitedArabEmirates 16-04-2010 11:47:47 IST
சினிமா விழாக்களில் எனக்கு போட்டியாக அழகிரி, கனிமொழி என எல்லோரும் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியலில் பதவியை பிடிக்கத்தான் போட்டி என்றால்... சினிமா நிகழ்ச்சிகளுக்கு சென்று குஜாலாக இருப்பதிலும் போட்டி வலுத்து வருகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோதுதான் அறிக்கை ஐடியாவை பேராசிரியர் என்னிடம் தெரிவித்தார். பேட்டி கொடுக்கும் அதிகாரம், முடிவெடுக்கு அதிகாரம் எனக்கு மட்டுமே என அறிக்கை தயாரித்தேன். ''ஐடியா கொடுத்தவன் நான். உங்களுக்கு மட்டும் அதிகாரமா'' என பேராசிரியர் ஆட்சேபனை தெரிவித்ததால் இந்த கடிதத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டேன். உடன்பிறப்பே.... அழகிரி பெயரை குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. அதனை நீங்களாவது உங்கள் கருத்து மூலம் அழகிரிக்கு தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் கடிதம் எழுதினேன். நான் நினைத்தபடி ஒருசிலரே எழுதியிருக்கிறீர்கள். எல்லாரும் என் பிள்ளையை திருத்துங்கள். நன்றி. அன்புடன் மு.க.
by மு.க.,CHENNAI,India 16-04-2010 11:16:46 IST
உடன் பிறப்பே... நீ ஏன் சினிமா செய்திக்கு மட்டும் கருத்து சொல்கிறாய்? பொதுவான செய்திகளுக்கு கருத்து சொல்ல வேண்டியதுதானே என்று இன்று காலை என் இனிய நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் கனவில் வந்து கேட்டார். நட்புக்கு மரியாதை கொடுக்கும் நாகரீகம் தெரிந்தவன் என்கிற முறையிலே கருத்து சொல்ல பொது செய்திகளை திறந்தேன். ஐய‌கோ... எத்தனை கருத்துக்கள்... அதில்தான் எத்தனை பிழைகள். ஒவ்வொருத்தருடைய பிழைகளை திருத்திக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்பதால் படித்து கண்ணீர் வடித்து விட்டு எழுதுகிறேன். (என்னை பாராட்டி ஒரு வாசகர் கூட கருத்து கூறவில்லையென நினைக்கும்போது கண்ணீர்தான் வருகிறது). வெளியில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரிலாக்ஸாக கோடை வெயிலுக்கு கொடைக்கானல் போகலாம் என நினைத்தாலும் போக மனமில்லை. நான் கொடைக்கானல் போனால் எங்கே ஜீவஜோதி கணவரின் நிலைமை எனக்கு வந்து விடுமோ என பயந்து அல்ல. கோடநாடு எஸ்டேட்டில் அந்த அம்மையார் ஓய்வெடுப்பதை நானும், நமது இயக்கத்தினரும் வாழ்கிழிய பேசிவிட்டு, இப்போ‌து நானே ஓய்வெடுக்கச் சென்றால் என்ன ஆகும் என்றும் நினைக்கவில்லை. (தொடரும்.....)
by மு.க.,CHENNAI,India 16-04-2010 11:16:26 IST
நல்லா வேன்னும்டா உனக்கு. என்ன ஆட்டம் போட்ட. உன் பிள்ளைகளே உன் அரசியல் வாழ்கைக்கு எமன் டா. நல்லா அனுபவி டா.
by S விஜயகுமார்,AKASAMPET,India 16-04-2010 10:15:57 IST
அழகிரிக்கு ஆப்பு !
by thalaivan,Loc,India 16-04-2010 10:09:23 IST
R Karuppiah சத்தியசீலன்...nice comment
by AR Arvindh,Chennai,India 16-04-2010 10:08:50 IST
தன்னிலை விளக்கம் தான் கொடுக்கக்கூடாது. கேள்வியும் நானே பதிலும் நானே என்று விளக்கம் அளிக்கலாம் அல்லவா?
by K JEEVITHAN,VILLUPURAM,India 16-04-2010 09:21:20 IST
வயசான காலத்துல ஏன் இப்படி கூவுறீங்கோ? அக்கா கனிமொழி கிட்ட சொல்லி கூவ சொல்லுங்கோ.. கனிமொழி கவிதையாக சொல்லுங்கள்!! வைரமுத்து admk பக்கம் போகட்டும்!!
by பிரசாத்,Chicago,UnitedStates 16-04-2010 09:20:42 IST
திரு கருப்பையா... இந்த அறிக்கை தொண்டர்களுக்கோ மற்ற தலைவர்களுக்கோ என்றால் நேரடியாக சம்மட்டி அடியை விழுந்திருக்கும் (நெற்றியில் உள்ள குங்குமம் ரத்தம் போல இருக்கு என்று விழுப்புரம் எம் எல் ஏ வைப் பார்த்து சொன்னாரே - ஆனால் தயாநிதியும் ஸ்டாலினும் அதே போல கோவிலுக்கு சென்று வந்த புகைப்படம் பத்திரிகையில் வந்து இருந்த போது இதே பகுத்தறிவு வாதி வாயை திறக்கவில்லை). ஆனால் இந்த அறிக்கை அழகிரிக்கு... அதை எப்படி நேரடியாக சொல்ல முடியும்? என்ன ஆனாலும், தனது மகனாயிற்றே.. நேரடியாக அறிக்கை விட்டால் பகுத்தறிவு கொள்கைக்கு எதிரானதாயிடுமே...
by H நாராயணன்,Hyderabad,India 16-04-2010 08:46:21 IST
viraivil udayamaga pogirathu maduraidmk
by k sathish,madurai,India 16-04-2010 08:41:04 IST
உடன் பிறப்புக்களுக்கு இன்று ஒரு கருப்பு தினம் !....சரியத் தொடங்கி இருக்கிறது இந்த மணல்கோட்டை !!!...விழுதுகளை நம்பாத ஆலமரம்...எந்தநேரத்திலும் கீழே விழலாம் !!..அருகில் யாரும் நிற்காதீர்கள் !!!...தூர ஓடிப் போய் விடுங்கள்!!!...அபாயகரமான ஒரு மரம் வேர்களின் துணையின்றி நின்று கொண்டிருப்பதைவிட நேரத்தோடு வெட்டிச் சாய்ப்பதே நாட்டுக்கு நல்லது !!! எடுத்து வாருங்கள் அந்தக் கோடாரியை ......
by rajasji,münchen,Germany 16-04-2010 08:29:43 IST
பெற்ற மகனிடம் நேரிடையாக சொல்ல தைரியம் இல்லாத தந்தை அறிக்கை மூலமாக சொல்கிறார்.மகனே அழகிரி புரிந்ததா? நீரும் ஒரு அறிக்கை விடும் ...நாடகம் ஆரம்பம்,,,
by GB ரிஸ்வான்,jeddah,SaudiArabia 16-04-2010 07:11:27 IST
நாடகமன்றோ நடக்குது .........
by k சஞ்சீவ்,bangalore,India 16-04-2010 07:05:54 IST
கட்சி கட்டுபாடு இப்போ யாரிடம் இருக்கு? கட்சி தலைமை இப்போ யார்வசம்? அழகிரியிடமா? ஸ்டாலின் வசமா? அல்லது திமுக அன்னை கனிமொழி வசமா? கலைஞர் இதை விளக்கமாக தன் உடன்பிறப்புகளுக்கு சொல்லணும். பொதுகுழு,செயற்குழு எலாம் கலைஞர் குடும்பம்தான்,குழப்பம் என்னவெனில் திமுக உடன்பிறப்புகள் யார் தலைமையை ஏற்பது என தான்.
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia 16-04-2010 06:09:58 IST
அழகிரிக்கு தான் இந்த எச்சரிக்கை ... போகிற போக்கை பார்த்தால், நிச்சயம் கருணாநிதிக்கு பிறகு அழகிரி யாரையும் திமுக தலைவராக ஏற்கமாட்டார் ...ஆனால் அதிமுகவில் சேர்ந்து அமைச்சர் ஆகிவிடுவார் ..இதுதான் நடக்க போகிறது ...என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அரசியல இதெல்லாம் சகஜம்மப்பா....
by M ரமேஷ்,NY,UnitedStates 16-04-2010 05:28:29 IST
நானும், அன்பழகனும் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் எனக்குப்பின் கழகத்தை வழி நடத்தும் தகுதியோ ஆற்றலோ திறமையோ கிஞ்சித்தும் அன்பழகனிடம் இல்லாக் காரணத்தால் வேறு வழியின்றி என்னுடைய பிள்ளைகள் தியாகங்கள் செய்து வழி நடத்தும் பொறுப்பை ஏற்பர். எனவே,இது குறித்து யாரும் அறிக்கை விடக் கூடாது. அழகிரியும் தாலினும் அறிக்கைகள் விடுவதன் காரணம் அவர்களை விட்டால் யாரும் இல்லை என்பதற்காகததானே அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஆளாளுக்கு அவ்விருவர் சார்பாக அறிக்கைகள் விடக்கூடாது என்பதற்கே இக்கட்டுப்பாடு . இப்படி இருந்திருக்கும முழு அறிக்கை . (இலக்குவனார் திருவள்ளுவன்)
by I. Thiruvalluvan,chennai,India 16-04-2010 04:58:56 IST
மு க,நேராக அழகிரி இடம் கூறி விடலாமே? அறிக்கை எதற்கு?
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 16-04-2010 04:04:03 IST



nitial : Name :

Your Email Id :
Your city (or) location :
Your country :
Your Comment:
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக