திங்கள், 7 டிசம்பர், 2009

நாடா​ளு​மன்​றத்​தில் நாவாட உத​வாத செம்​மொழி!



"தே ம​து​ரத் தமி​ழோசை உல​க​மெ​லாம் பர​வும்​வகை செய்​தல் வேண்​டும்' என்று ஆர்ப்​ப​ரித்​தார் மகா​கவி பார​தி​யார். ஆனால் எந்த நாட்​டின் சுதந்​தி​ரத்​துக்​கா​கத் தம் வாழ்​நாளை அர்ப்​ப​ணித்​துக் கொண்​டாரோ,​ அந்த நாட்​டின் நாடா​ளு​மன்​றத்​தி​லேயே அவர்​தம் தாய்​மொ​ழி​யான தமிழ்​மொழி ஓங்கி ஒலிக்​கப்​போ​வ​தில்லை என்​பதை அவர் எண்​ணி​யி​ருக்க மாட்​டார்.÷த​மிழ் உயர்​த​னிச் செம்​மொழி என்​பதை மொழி​யி​யல் அறி​ஞர் ​ ராபர்ட் கால்​டு​வெல்,​ ​ "திரா​விட மொழி​க​ளின் ஒப்​பி​லக்​க​ணம்' என்​னும் நூல்​வ​ழியே 1856-ம் ஆண்டு உல​குக்​குத் தெரி​வித்து சுமார் 150 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு,​ மத்​திய அரசு தமி​ழைச் செம்​மொழி என்று அறி​வித்​தது. தமி​ழைச் செம்​மொ​ழி​யாக அறி​வித்​ததே,​ செம்​மொ​ழிக்​கான தகு​தி​க​ளைத் தளர்த்தி வேறு​சில மொழி​க​ளை​யும் செம்​மொ​ழி​யாக அறி​விப்​ப​தன் பொருட்டே என்​ப​தும் பிற​கு​தான் விளங்​கி​யது. ​ ​ ​ ​ ​÷இது ஒரு​பு​றம் இருக்க,​ தகுதி மிகு​தி​யால் செம்​மொழி என்​னும் பெருமை பெற்ற தமிழ்​மொ​ழி​யில்,​ நாடா​ளு​மன்​றக் கூட்​டத்​தொ​டர்​க​ளில் தமிழ்​நாட்​டைச் சார்ந்த ஒரு மத்​திய அமைச்​சர் நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில் பேச அனு​மதி மறுக்​கப்​பட்டு வரு​கின்ற செய்தி ஊட​கங்​க​ளில் அவ்​வப்​போது வந்​து​கொண்​டி​ருக்​கி​றது.​ நாடா​ளு​மன்​றத்​தில் மத்​திய அமைச்​சர்​கள் தமி​ழில் பேசு​வ​தற்​குத் தடை​யாக இருப்​பது என்ன அல்​லது யார் என்​பது பல​ருக்​கும் பெரும் புதி​ரா​கவே உள்​ளது. மத்​திய அமைச்​சர்​கள் பேசு​வ​தற்கு அனு​மதி மறுக்​கப்​ப​டு​கி​ற​தென்​றால்,​ அமைச்​சர்​கள் அல்​லாத மற்ற நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள்,​ இந்​தி​யி​லும் ஆங்​கி​லத்​தி​லும் பிறர் பேசு​வ​தைப்​போல் எப்​போ​தும் எதி​லும் தமி​ழில் பேச அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றார்​களா என்​றால்,​ இல்லை என்​பதை நம்​பு​வ​தற்கே பலர் தயங்​கு​வார்​கள். ​ ​÷அ​வை​யில் ஒரு​வர் இந்​தி​யில் பேசி​னால் அது ஆங்​கி​லத்​தி​லும்,​ ஆங்​கி​லத்​தில் பேசி​னால் அது இந்​தி​யி​லும் ​ உட​னுக்​கு​டன் மொழி​பெ​யர்ப்பு செய்​யப்​ப​டு​கி​றது. இந்த மொழி​பெ​யர்ப்பு வசதி மாநி​லங்​க​ளவை உறுப்​பி​ன​ராக இருந்த பேர​றி​ஞர் அண்ணா அவர்​க​ளின் கோரிக்​கை​யால் 1964-ம் ஆண்டு முதல் செய்​து​த​ரப்​பட்டு வரு​கி​றது. தமி​ழில் பேசு​வ​தற்கு மத்​திய அமைச்​ச​ருக்கு அனு​மதி ஏன் மறுக்​கப்​ப​டு​கி​றது என்​ப​தற்​கான கார​ணத்​தைத் தெரிந்​து​கொள்​வ​தற்​கு​முன்,​ நாடா​ளு​மன்​றத்​தில் எந்​தெந்த மொழி​க​ளில் பேச​லாம் என்​பது குறித்து அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் என்ன சொல்​கி​றது என்​ப​தைப் பார்ப்​பது அவ​சி​ய​மா​கி​றது.÷அ​ர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தின் 120-வது பிரிவு இவ்​வாறு குறிப்​பி​டு​கி​றது:​ ""நாடா​ளு​மன்ற நட​வ​டிக்​கை​கள் இந்தி அல்​லது ஆங்​கி​லத்​தில் மேற்​கொள்​ளப்​ப​டும். ஒரு உறுப்​பி​ன​ரால் தம் கருத்தை இந்தி அல்​லது ஆங்​கி​லத்​தில் வெளிப்​ப​டுத்த இய​லாது என்​றால்,​ மாநி​லங்​க​ள​வைத் தலை​வர் அல்​லது மக்​க​ள​வைத் தலை​வர் அல்​லது அந்​தந்த அவையை நடத்​து​ப​வர் அந்த உறுப்​பி​ன​ரைத் தம்​மு​டைய தாய்​மொ​ழி​யில் பேச அனு​ம​திக்​க​லாம்.'' ​ ​ ​ ​÷ஆ​னால் நாடா​ளு​மன்​றத்​தில் நடப்​பது என்ன?​ இந்தி,​ ஆங்​கி​லம்,​ சம்ஸ்​கி​ரு​தம் மற்​றும் உருது ஆகிய மொழி​க​ளில் யாரும் எப்​போது வேண்​டு​மா​னா​லும் பேச​லாம். தமி​ழிலோ அல்​லது பிராந்​திய மொழி​கள் என்று அழைக்​கப்​ப​டும் வேறு மாநில மொழி​க​ளிலோ ஓர் உறுப்​பி​னர் பேச வேண்​டும் என்​றால்,​ அவர் பேசு​வ​தற்​குக் கொடுக்​கப்​ப​டும் வாய்ப்​பை​விட,​ அவ​ருக்கு விதிக்​கப்​ப​டும் கட்​டுப்​பா​டு​கள் அவர் தமி​ழில் பேசா​மல் இருப்​பதே மேல் என்று எண்ணி ஒதுங்​கி​வி​டச் செய்​கி​றது.​ ஒரு​வர் நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரா​வ​தற்​கான தகு​தி​க​ளைப் பட்​டிய​லி​டு​கின்ற அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டப் பிரிவு 84 அல்​லது நாடா​ளு​மன்​றத்​தில் எந்​தெந்த மொழி​க​ளில் பேச​லாம் என்​ப​தைக் குறிப்​பி​டும் அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டப் பிரிவு 120 அல்​லது நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டும் முறை மற்​றும் அவர்​க​ளின் தகு​தி​கள் பற்றி விலா​வா​ரி​யா​கக் குறிப்​பி​டும் மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம்,​ 1951 ஆகி​ய​வற்​றில் எது​வும்,​ ஒரு நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தமிழ் உள்​ளிட்ட தம் தாய்​மொ​ழி​யில் பேசு​வ​தைத் தடை செய்​ய​வில்லை. அவர்​க​ளுக்கு ஆங்​கி​லம் அல்​லது இந்தி கட்​டா​யம் தெரிந்​தி​ருக்க வேண்​டும் என்​றும் கூற​வில்லை.​ இவ்​வா​றி​ருக்க,​ அடிப்​ப​டை​யில் நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளான மத்​திய அமைச்​சர்​கள் தமி​ழில் பேச​மு​டி​யாது என்று கூறு​கிற,​ அர​சி​யல் சட்​டத்தை விஞ்​சு​கிற அதி​கா​ரம் யாருக்கு இருக்​கி​றது?​ நிச்​ச​ய​மாக எவ​ருக்​கும் இல்லை. இந்த ஜன​நா​யக ரீதி​யான மொழி உரிமை மறுக்​கப்​ப​டு​வ​தற்​கான முக்​கி​ய​மான கார​ணம்,​ இந்​திக்​குத் தரப்​ப​டும் அதே உரி​மையை பிராந்​திய மொழி​க​ளுக்​கும் தரு​வதா என்​னும் மனப்​பாங்​கைத் தவிர வேறு எது​வாக இருக்​க​மு​டி​யும்?​​ ஒரு மத்​திய அமைச்​சர் தாம் தமி​ழில் பேச​வி​ரும்​பு​வ​தாக நாடா​ளு​மன்​றச் செய​ல​கத்​துக்​குத் தெரி​வித்​தது பாராட்​டத்​தக்க ஒரு முன்​னோ​டி​யான செயல்.​ த மி​ழ​கத்​தைச் சேர்ந்த பிற அமைச்​சர்​கள் மற்​றும் நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் அனை​வ​ருமே தங்​கள் கருத்தை முன் ஆயத்​த​மின்றி ஆங்​கி​லத்​தில் வெளிப்​ப​டுத்​தும் அள​வுக்கு ஆங்​கி​லப் புலமை பெற்​ற​வர்​களா என்ற கேள்வி எழு​வ​தும் இயற்​கை​தான். ​ ​ ​÷த ​மி​ழர்​கள் சம உரி​மை​யின்றி வாழ்ந்​து​வ​ரும் இலங்கை மற்​றும் சிங்​கப்​பூர் நாடா​ளு​மன்​றங்​க​ளில்​கூட தமி​ழில் தடை​யின்​றிப் பேச வாய்ப்​ப​ளிக்​கப்​ப​டு​கி​றது. தமி​ழில் பேச​வும் பிற மொழி​க​ளில் பேசப்​ப​டு​வதை மொழி​பெ​யர்ப்​பு​மூ​லம் தமி​ழில் கேட்​க​வும் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.​ தற்​போது இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் முன்​ன​றி​விப்பு செய்​து​விட்டு ஒரு எம்.பி. தமி​ழில் பேச​லாமே தவிர,​ இந்தி மற்​றும் ஆங்​கி​லத்​தில் ​ பேசும்​போது அதைத் தமி​ழில் மொழி​பெ​யர்ப்பு மூலம் அவ​ரால் கேட்​க​மு​டி​யாது,​ அந்த வசதி இங்கு செய்​து​த​ரப்​ப​ட​வில்லை. ஆங் ​கி​லப் புலமை இல்​லா​த​தால் தமி​ழில் பேசும் ஒரு​வர்,​ ஆங்​கி​லம் அல்​லது இந்​தி​யில் நடை​பெ​றும் அவை நட​வ​டிக்​கை​களை தமிழ் மொழி​பெ​யர்ப்பு இல்​லா​மல் எவ்​வாறு புரிந்​து​கொள்​வார்?​ இரண்​டாந்​த​ரக் குடி​மக்​க​ளா​கத் தமி​ழர்​கள் நடத்​தப்​ப​டு​வ​தா​கக் கூறப்​ப​டும் நாடு​க​ளின் நாடா​ளு​மன்​றங்​க​ளில் தமி​ழில் பேசு​வ​தற்​கும் பிறர் பேசு​வ​தைத் தமி​ழில் கேட்​ப​தற்​கும் கொடுக்​கப்​ப​டும் உரிமை,​ இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் கொடுக்​கப்​ப​ட​வில்லை என்​பதை எண்​ணும்​போது யார் இரண்​டாந்​த​ரக் குடி​மக்​கள் என்ற கேள்வி ஈட்​டி​யாய் நெஞ்​சில் குத்​து​கி​றது.​ 27 நாடு​கள் அங்​கம் வகிக்​கின்ற,​ 736 எம்.பி.க்க​ளைக்​கொண்ட ஐரோப்​பிய கூட்​ட​மைப்​பின் நாடா​ளு​மன்​றத்​தில் 23 மொழி​க​ளில் உட​னடி மொழி​பெ​யர்ப்பு செய்​யப்​ப​டு​கி​றது. இதற்​காக 800-க்கும் அதி​க​மான மொழி​பெ​யர்ப்​பா​ளர்​கள் பணி​ய​மர்த்​தப்​பட்​டுள்​ள​னர் என்​பது வியப்​பு​மே​லி​டும் உண்மை.​ ஆனால் காஷ்​மீ​ரம் முதல் கன்​னி​யா​கு​மரி வரை இந்​தியா ஒரே நாடு என்று உரக்​கச் சொல்​லிக் கொண்​டி​ருக்​கும் இத்​தி​ரு​நாட்​டில் சொந்​த​மொ​ழியே அன்​னி​யப்​பட்​டுக் கிடக்​கும் அவ​லத்​தி​லும் சல​ன​மில்​லா​மல் இருப்​ப​து​தான் தமி​ழ​னின் தனிப்​பண்​பு​போ​லும். ​ ​÷சொந்த நாட்​டின் நாடா​ளு​மன்​றத்​தி​லேயே மதிக்​கப்​ப​டாத ஒரு மொழி செம்​மொ​ழி​யாய் இருந்து யாருக்கு என்ன பயன்?​ யாரு​டைய தய​வும் இன்றி நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில் பேசும் சூழல் உரு​வாக வேண்​டு​மெ​னில்,​ அர​சி​ய​மைப்​புச் சட்​டத்​தின் 120-வது பிரி​வைத் திருத்​து​வது அவ​ச​ர​மா​ன​தும் அவ​சி​ய​மா​ன​தும்​கூட. நாடா​ளு​மன்ற நட​வ​டிக்​கை​கள் இந்தி அல்​லது ஆங்​கி​லத்​தில் மேற்​கொள்​ளப்​ப​டும் என்ற வாச​கத்தை நாடா​ளு​மன்ற நட​வ​டிக்​கை​கள் இந்தி அல்​லது ஆங்​கி​லம் அல்​லது தமிழ் உள்​ளிட்ட மாநில மொழி​க​ளில் மேற்​கொள்​ளப்​ப​டும் என்று மாற்​றி​ய​மைக்​கின்ற அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தி​ருத்​தம் கொண்​டு​வ​ரப்​பட வேண்​டும். அப்​போ​து​தான் இந்​திக்​கும் ஆங்​கி​லத்​துக்​கும் கொடுக்​கப்​ப​டும் நாடா​ளு​மன்ற கெüர​வம் செம்​மொழி தமி​ழுக்​கும் கிடைக்​கும்.​ தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சே​ரி​யைச் சார்ந்த இரு அவை​க​ளின் எம்.பி.க்கள் 59 பேரும்,​ அர​சி​யல் கட்​சித் தலை​வர்​க​ளும் இந்த அர​சி​ய​ல​மைப்பு சட்​டத்​தி​ருத்​தத்​தைக் கொண்​டு​வர முயற்​சிப்​பார்​களா?​ அண்​ணா​வின் நூற்​றாண்டு விழா கொண்​டா​டப்​பட்ட இந்த ஆண்​டில்,​ அவ​ரு​டைய முய ற்​சி​யால் கொண்​டு​வ​ரப்​பட்ட நாடா​ளு​மன்ற மொழி​பெ​யர்ப்பு சேவை முழு​வீச்​சில் செம்​மொழி தமி​ழுக்​குக் கிடைக்​கச் செய்​வதே அவ​ருக்​குச் செலுத்​தும் உண்​மை​யான அஞ்ச​லி​யாக அமை​யும்.​(கட்​டு​ரை​யா​ளர்:​ மாநி​லங்​க​ள​வை​யில் முது​நிலை மொழி​பெ​யர்ப்​பா​ள​ராக 20 ஆண்​டு​கள் பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​ற​வர்)​. ​​
கருத்துக்கள்

கட்டுரையாளர் சிறப்பாக எழுதியுள்ளார். எனினும் மத்திய அரசு என்பது மாநிலங்களின் கூட்டரசு என்ற நிலையும் மாநிலங்கள் அவை என்பது ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சம அளவிலான உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டது என்றும் அமைந்தாலன்றி இதற்குத் தீர்வு கிடைக்காது. காங்கிரசு இருக்கும் வரை இந்த இழிவு நிலையும் மாறாது. பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள் காங்.கின் அடிமையாக இருக்கும் வரை இதற்கான குரல் கொடுப்போரும் இருக்க மாட்டார்கள். தமிழில் பேச வாய்ப்பில்லாத நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்போம் எனத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முடிவெடுப்பின் நன்மை விளையலாம். ஆனால் பதவிவளம் அதற்கு இடம் கொடுக்காது. அடிமை நாட்டில் வாழ்ந்து கொண்டு அதிகம் கனவு காணக் கூடாது.

- இந்தியக் கூட்டரசில மட்டுமல்லாமல்

பன்னாட்டு அவைகளிலும்

தமிழுக்கு இடம் வேண்டும்

என வலியுறுத்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/7/2009 6:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக