வியாழன், 10 டிசம்பர், 2009

எளி​யோர் வதைக்​கப்​ப​டு​வ​தை​த​டுப்​போம்:​ கரு​ணா​நிதி



சென்னை, ​​ டிச.9: ""ஆதிக்க உணர்​வு​டன் எளி​யோர் வதைக்​கப்​ப​டு​வ​தைத் தடுத்து மனித உரி​மை​க​ளைக் காப்​போம்'' என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறி​யுள்​ளார்.​
​ உலக மனித உரிமை தினம் வியா​ழக்​கி​ழமை ​(டிச.10)கொண்​டா​டப்​பட்​டது.​ அத​னை​யொட்டி முதல்​வர் கரு​ணா​நிதி புதன்​கி​ழமை வெளி​யிட்ட செய்தி:​
மண்​ணின் மைந்​தர்​கள் அனை​வ​ரும் அற​வ​ழி​யில் மகிழ்ச்​சி​யு​ட​னும்,​​ மன​நி​றை​வு​ட​னும் வாழ உரிமை உண்டு.​ அத​னைத் தடுப்​பது தண்​ட​னைக்​கு​ரிய குற்​றம் என்​பதை உணர்த்​தி​டும் நோக்​கில் ஆண்​டு​தோ​றும் டிசம்​பர் 10}ம் தேதி உலக மனித உரிமை நாள் கடை​பி​டிக்​கப்​ப​டு​கி​றது.​
கை ரிக்ஷா ஒழிப்பு,​​ மனித மலத்தை மனி​தனே சுமக்​கும் கொடு​மையி​லி​ருந்து அருந்​த​தி​யர் சமு​தா​யம் விடு​தலை பெற அவர்​க​ளுக்கு தனி இட ஒதுக்​கீடு உள்​ளிட்ட மாற்று திட்​டங்​களை அளித்​தது என்று மனித உரி​மை​களை நிலை​நாட்​டிட பல்​வேறு திட்​டங்​களை செயல்​ப​டுத்தி வரு​கி​றோம்.​
அதன் அடிப்​ப​டை​யில்​தான் 1996}ல் மாநில மனித உரி​மை​கள் ஆணை​யத்தை அமைத்​தோம்.​ இந்த ஆணை​யம் ஊன​முற்​றோர்,​​ மலை​வாழ் மக்​கள்,​​ குழந்​தைத் தொழி​லா​ளர்​கள்,​​ கொத்​த​டி​மை​கள் போன்ற நலிந்த பிரி​வி​ன​ரின் வாழ்​வு​ரி​மையை நிலை​நாட்​டு​வ​தில் தனிக்​க​வ​னம் செலுத்தி வரு​கி​றது.​ அர​சி​யல் சட்​டம் நமக்கு வழங்​கி​யுள்ள உரி​மை​க​ளைப் பெற்று சுதந்​தி​ரம்,​​ சமத்​து​வம்,​​ கண்​ணி​யத்​து​டன் ஒவ்​வொ​ரு​வ​ரும் வாழ உத​வி​டு​வோம்.​ ஆதிக்க உணர்​வோடு எளி​யோரை வதைப்​ப​தைத் தடுப்​போம்,​​ மனித உரி​மை​க​ளைக் காப்​போம் என்று கரு​ணா​நிதி கேட்​டுக் கொண்​டுள்​ளார்.​

கருத்துக்கள்

''மண்​ணின் மைந்​தர்​கள் அனை​வ​ரும் அற​வ​ழி​யில் மகிழ்ச்​சி​யு​ட​னும்,​​ மன​நி​றை​வு​ட​னும் வாழ உரிமை உண்டு.​ அத​னைத் தடுப்​பது தண்​ட​னைக்​கு​ரிய குற்​றம.'' ஆனால் தமிழ் மண்ணின் மைந்தர்கள் வாழ்வதுதான் குற்றம். எனவே. அவர்களுக்கு வாழும் உரிமை பிடுங்கப்படும்.''ஆதிக்க உணர்​வோடு எளி​யோரை வதைப்​ப​தைத் தடுப்​போம்,​​ மனித உரி​மை​க​ளைக் காப்​போம்''ஆனால் ஈழத் தமிழர்கள் வதைபடுவதற்குச் சிங்கள அரசிற்கும் காங்கிரசு அரசிற்கும் உதவுவோம்.அம்மனிதர்களின் உரிமைகளைக் காப்பவர்களை அழிப்போம். காங்கிரசின் தமிழின அழிப்புக் கொளகையே எம் கொள்கை. எனவே, மொட்டைத் தலைக்கும முழங்காலிற்கும் முடிச்சுப் போடாமல் அரசியல் கொடுங்கோலர்கள் '' சுதந்திரம், சமத்துவம்,கண்ணியத்துடன் வாழ'' உதவிடுங்கள்.

வேதனையுடன் இலக்குவனார திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/10/2009 2:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக