ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
சென்னை, ஜூலை. 21– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் நெருங்கிய மாணவர்களில் ஒருவரும், தமிழரசு பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வரும், தம்பி பழனி பாரதியின் அருமைத் தந்தையுமான கவிஞர் சாமி பழனியப்பன் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
திராவிட இயக்க லட்சியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பாவேந்தர் பாணியில் கவிதைகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டு சாமி பழனியப்பன் எழுதிய கவிதைகள் ஏராளம்.
கழக ஆட்சிக் காலத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதே, முதல்– அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவி நிதி அளித்தது என் ஞாபகத்தில் உள்ளது. அவரது மறைவு தமிழ்க் கவிதை உலகிற்கு ஓர் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக