ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அமைதியான உறக்கமும் நிமிர வைத்த தன்னம்பிக்கையும்



நிம்மதியா தூங்கலாம்!


"நித்ரா' தூக்க அறிவியல் மையத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன்: தூக்க மருந்தியல் என்ற துறை, நம் நாட்டிற்கு புதிது. வெளிநாடுகள் சிலவற்றில், மருத்துவத்தில், இதுவும் ஒரு தனியான சிறப்புத் துறை. ஆரோக்கியமாக உள்ள ஒருவர், தினமும், ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்."எட்டு மணி நேரம் தூங்க முடியவில்லை' என, என்னிடம் வருபவர்கள் முதல் வகை. "நன்றாகத் தூங்குகிறோம்; ஆனால், காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கத் தோன்றுகிறது. தூங்கிய நிறைவே இல்லை' என்பவர்கள், இன்னொரு வகை. தூக்கத்தின் நடுவில், நிறைய முறை எழுந்து கொள்பவர்கள் மூன்றாவது வகை.இதற்கு அடுத்த வகையினர், அசாதாரணமானவர்கள்; தூக்கத்தில் நடப்பது, சாப்பிடுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள். "ஷிப்ட்' முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள், குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவர்.தூக்கமின்மைக்கு முக்கிய காரணம், "ஸ்லீப் ஆப்னியா' எனும் சுவாசப் பகுதியிலுள்ள தசைகள், கூடுதலாக விரிவதால், குறட்டை மட்டுமல்லாது, சீராக சுவாசிக்க முடியாமலும், சிலர் அவதிப்படுவர். தூங்கும் போது, குறட்டை விடுபவர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்குப் போகாது. இதனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு, பக்கவாதம் வரலாம்."ஒபிசிட்டி' எனும் அதிக உடல் எடை, வேலையில் ஏற்படும் மன அழுத்தம், வாழ்க் கை முறை மாற்றம் ஆகியவை, தூக்கமின்மைக்கு ஒரு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான், இந்தப் பிரச்னை ஆரம்பிக்கிறது.எல்லா வகையான தூக்கமின்மையையும், மருந்தால் சரி செய்ய இயலாது. பல ஆண்டுகள் பிரச்னைகளுடனே, இருந்து விட்டு, தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த, நீண்ட நாட்கள் ஆகலாம்.குறிப்பாக, "ஆப்னியா'வை மாத்திரைகளால், குணப்படுத்த இயலாது. சீராக சுவாசிப்பதற்கு வசதியாக, பிரத்தியேக கருவி உள்ளது. இரவில் இதைப் பயன்படுத்தும் போது, குறட்டையால் ஏற்படும் சுவாசப் பிரச்னை இருக்காது.

நிமிர வைத்த தன்னம்பிக்கை!


நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வள்ளி: பிறந்த வீட்டு ஏழ்மைச் சூழலால், இரண்டாம் தாரமாகத்தான் வாக்கப்பட்டேன். சம்பாதித்துப் போடாத கணவனால், பல கஷ்டங்களை அனுபவித்தேன். தற்கொலை முடிவெடுத்து, தப்பின நான் ஒரு கட்டத்தில் தெளிந்தாலும், விவசாயக் கூலி வேலை, வீட்டு வேலை என, யாரிடமும் அடிமையாக இருக்க விரும்பவில்லை; சுய தொழில் துவங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.அப்போது தான், திருச்சியைச் சேர்ந்த பேராசிரியை மணிமேகலை மூலமாக, மூன்று ஆண்டிற்கு முன், நாப்கின் தயாரிக்கும் பயிற்சி எடுத்து, வீட்டிலேயே கைத் தொழிலாக செய்து, விற்க ஆரம்பித்தேன்.மாதவிடாய் காலங்களில், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின், கிராமப் பகுதி பெண்கள் அறியாத விஷயம். இந்த பெண்களை நாப்கின் உபயோகிக்க வைத்தால், சில ஆண்டுகளுக்கு போட்டியில்லாமல் தொழில் செய்யலாம்.புதிய வாடிக்கையாளர்கள், தயக்கமில்லாமல் வாங்கிக் கொள்வர் என்ற நம்பிக்கையில், கிராமப் பெண்களைத் தேடிச் சென்றேன். ஒரு தோழியைப் போல், அவர்களிடம் இந்த தயாரிப்பு பற்றி விளக்கிக் கூறியதால், வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்தது.உறிஞ்சும் தன்மையும், மிருதுவான அம்சமும் தான், நாப்கினை பெண்கள் நாடும் விஷயம். என் தயாரிப்பில் இது இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், என் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினேன். தற்போது, மிஷின் மூலம் நாப்கின் தயாரிக்க துவங்கியுள்ளேன். தமிழக தொழில் முதலீட்டுக் கழகத்தில், இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்று, இதை துவங்கியுள்ளேன். உற்பத்தி அதிகரிக்கவே, பள்ளி, கல்லூரி, மகளிர் விடுதிகளை தேடிப் போய், விற்பனை செய்கிறேன். தமிழக அரசு வழங்கும் இலவச நாப்கின் திட்டத்திற்கு, எங்களைப் போல சிறு தொழில் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், மிகவும் பலமாக இருக்கும்.

2 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.. இவர்களைப் போன்றவர்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக அலைபேசி எண்களோ அல்லது முகவரியோ இணைத்துக் கொடுத்தால் பயனாக இருக்கும்...

    நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம். வாய்ப்புள்ள நேர்வுகளில் தெ ரிவிக்கலாம். ஆனால், உரிய பிற இதழ்கள் தெரிவிக்காமையால் தெ ரிவிக்க இயல விலலை.

    பதிலளிநீக்கு