வியாழன், 20 செப்டம்பர், 2012

வைகோவிடம் மத்தியப்பிரதேச முதலமைச்சர் பேச்சு

வைகோவிடம் மத்தியப்பிரதேச முதலமைச்சர் பேச்சு



சிந்துலாரா, செப்., 20 : மத்தியப்பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னையில் இருந்து கிளம்பிய வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுகவினர் சென்ற வாகனத்தை சிந்துலாரா மாவட்டம் பந்துர்ணா என்ற இடத்தில் அம்மாநில போலிஸார் தடுத்து நிறுத்தினர்.கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு வாகனங்களில் புறப்பட்ட மதிமுகவினர், நேற்று இரவு பந்துர்ணா என்ற இடத்தை அடைந்தனர்.  அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர்.இதனை ஏற்காத வைகோ, அங்கேயே உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இரவு அங்கேயே சமைத்து சாப்பிட்டு, சாலையோரத்தில் படுத்துறங்கினர். இன்று காலையும் உயர் அதிகாரிகள் வந்து வைகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைகோ திரும்பிச் செல்வதில்லை என்று தெளிவாக கூறிவிட்டார்.இதற்கிடையே மத்தியப்பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைத்தார். மேலும், இது முழுக்க முழுக்க அரசியல் விவகாரமாகும், ஆசிய நாடுகளுடன் இந்தியா நட்புணர்வை மேம்படுத்தவே விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.தற்போது சாஞ்சிக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சுமார் 11 ரயில்கள் நாளைக்கு போபாலில் இருந்து விதிஷா வரை எங்கும் நிற்காமல் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்

வைகோ முதல்வரானால் ஈழம் விடியும்
By SARAVANAN
9/20/2012 7:21:00 PM
திரு சேஷாயி அவர்களுக்கு, வைகோ விளம்பரத்திற்காக செய்வதாக இருந்தால், எதற்கு மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் போராட வேண்டும்? இதே போராட்டத்தை சென்னையிலோ இல்லை மதுரையிலோ நடத்தி இருக்கலாமே. கூட்டமும் சேர்ந்து இருக்கும்... செய்திகளும் பரபரப்பாகி இருக்கும். பாவம் அவருக்கு மற்றவர்களைப் போல வோட்டு அரசியல் நடத்தி பிழைக்க தெரியவில்லை.
By ஸ்ரீதர்
9/20/2012 7:20:00 PM
dinamaniku mekka nandri unmai news poddatuku
By rajeshkanna
9/20/2012 6:59:00 PM
குட் வைகோ
By BALA
9/20/2012 6:41:00 PM
வை. கோ . நல்ல ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுத்தால் அவருக்கும் ,நாட்டுக்கும் நல்லது. சிந்திப்பாரா ?
By முஹைதீன் ,shenkai
9/20/2012 6:11:00 PM
வாய்ச்சொல்லில் வீரர் தான் பெரும்பாலான அரசியல் தலைவர்கள்! ஒப்புக்கு எதையாவது செய்வார்கள்! ஆனால் வைகோ அப்படிப்படவர் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்துள்ளார்கள். 1000 வைகோக்கள் வந்தாலும், இதனை நம்மக்கள் உணரவே மாட்டர்கள் என்று ஒரு சகோதரர் சரியாக சொல்லியுள்ளார். மனிதாபிமானம், மனித நேயம் இல்லாதவர்களால் இது போன்ற செயல்களை உணரமுடியாது!
By Thevan
9/20/2012 6:09:00 PM
தமிழர்களுக்கு முதலில் இன உணர்வு வேண்டும்.அது இல்லாமல் நாம் இருக்கும் வரை இது போன்ற போராடன்களுக்கு மதிப்பு இருக்காது.ராஜபக்சே லண்டன் வந்த போது எதற்காக அதனை தமிழர்களும் எதற்காக கூடினார்கள்?அந்த இன உணர்வு தமிழக தமிழர்குளுக்கு வர வேண்டும்.வெளம்பரத்துக்கு போராட அவர் எதுக்கு ம.பி செல்ல வேண்டும்?
By MADURA
9/20/2012 6:08:00 PM
வைகோ தாங்கள் ஒருவர் தான் உண்மையாக தமிழர்களுக்காக உழைக்கிறீர். இலங்கை பிரச்சனை என்று சிலர் கருத்து கூறுகிறார்கள்..அங்கு உள்ள தமிழர்கள் நம் இனம் என்பதை ஏன் மறந்துபோகிரீர்கள்..முதலில் மொழியால் இனத்தால் ஒன்று படுங்கள்...பிறகு நம்மை யாராலும் அசைக்க முடியாது...மறவன்.
By மறவன்
9/20/2012 6:02:00 PM
நன்றி வைகோ அவர்களே! இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் , கங்கை கொண்டான், கடாரம வென்றான் பரமபரையிலே வந்த நாம் இன்று வரலாற்று போக்கில் இந்தியார்களாகி விட்டதால்அப்படி சில நன்மைகளையும் பெற்றுள்ளதால் , நம் இனத்தவர்களை கொன்றவர்களை கூட எதிர்த்து அடக்கி நமது இன உடன்பிறப்புகளுக்கு உரிமைகளையும் சிங்களனுக்கு இழந்த மண்ணையும் பெற்றுத்தர இயலவில்லை. உங்களின் உண்மை முயற்ச்சிகளையும் கூசாமல் இகழுகிறார்கள்! வேதனைதான் .பதவிகளையும் பணத்தையும் அனுபவித்துவிட்ட இரு பெரும் கழகங்களும் ஈழ தமிழனுக்கு தேவையான விடுதலையை பெற்றுதர மாட்டார்கள். கூட்டணி சேர்ந்து ராஜபக்சே தீவில் கிழக்கு தமிழ் பகுதியில் தனது கட்சிகாரரை பதவியில் அமர்த்திவிட்டார். நடப்பவைகளை வேதனையுடன் பார்த்துகொண்டிருக்கிறோம்.
By P .Padmanaabhan
9/20/2012 5:51:00 PM
ராஜபக்ஷே டெல்லியில் மன்மோகன் சிங்கையும் குடியரசு தலைவரையும் சந்திக்க் போகிறாராம் . அவரிடம் தீவில் தமிழர்களின் உரிமைகள் பற்று இந்திய முதன்மை அமைச்சர் பேசுவாராம்! உங்களது முயற்ச்சிகளை நன்றியுடன் பாராட்டுகிறோம். இது போன்ற எதிர்ப்புகளும் இல்லாவிட்டால் டெல்லியும் கொழும்புவும் ஈழ தமிழர்களை மேலும் மோசமாக நடத்திவிடும். இரு கழங்களின் தமிழ் செய்தி தொலை காட்சி ஒளிபரப்பில் கிட்ட தட்ட முற்றிலும் உங்களின் செய்திகள் இருட்டடிப்பு செய்து விட, இரண்டு வெளி இடஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மட்டும் உங்களின் செய்திகளை காட்டியது. நீங்கள் செய்த அளவிற்கு மிகவும் பாராட்டுக்கள். நன்றி திரு.வைகோ அவர்களே.
By P .Padmanaabhan
9/20/2012 5:51:00 PM
Glad atleast one leader had the courage... rajapaksa killed thousands of civilians.. India govt reject visa to tamil civilians.. but wont do to a war criminal.. shame.. Those who support rajapasha - you first go and meet the family of fishermen killed by SL.
By KM
9/20/2012 5:32:00 PM
idu niyamana porattam. avar oru thanmanam mikka thalaivar. avar vottirka seyyavillai. londan nagaril rajabagashe pesa midiyamal thirumbinar. ingeyum avar vara kudathu.
By siva
9/20/2012 5:31:00 PM
தன்​னை நி​லைநிறுத்திக்​கொள் ​பெரும்பாடுபடுகிறார் ​வை​கோ. ஒவ்​வொரு ​தேர்தல் சமயத்திலும் இவர் எடுத்தமுடிவு இவ​ரை பின்னுக்க தள்ளி இன்று மக்க​ளை பாதிக்கும் பிரச்ச​னைகளுக்கு ​போராடாமல் இலங்​கை விஷயத்​தை ​கையில் எடுத்து​கொண்டுள்ளார். இதனர்ல யாரும் அவ​ரைபற்றி கவ​​லைபட​போவதில்​லை
By ஸ்ரீனிவாசன்
9/20/2012 5:09:00 PM
மாநிலம் விட்டு மாநிலம் செல்வது அவ்வளவு நல்லதல்ல...நம் தமிழ் நாட்டில் நடந்தால் நாம் எதிர்காலம்.. அனால் நடப்பது மதிய பிரதேசத்தில்.. ஆக வை கோ கம்பெனி நடப்பது சரியில்லை... தான் என்கிற அகங்காரம் விளைவாக தி.மு.கவிலிருந்து விலகினார்.. பின்னர் கூட்டு என்றார்...என்ன இது சிறுபிள்ளைதனமாக அல்லவே இருக்கிறது...
By tamilarsu
9/20/2012 5:06:00 PM
வைகோ சரியாக செய்து உள்ளார்.
By Paris EJILAN
9/20/2012 4:45:00 PM
வைகோ ஒருவர் மட்டும்தான் தமிழர்களின் உணர்வை மத்திய அரக்கனுக்கு ( சோனியா அரசுக்கு) வெளிபடுத்துகிறார் . இந்திய ராணுவத்திலிருந்து தமிழர்கள் வெளியேறவேண்டும் . தமிழர்களை காப்பாற்றாத இந்தியாவிற்கு , வட இந்தியனை நாம் ஏன் பாகிஸ்தானிடம் எல்லையில் காப்பாற்ற போராடவேண்டும்.
By prema
9/20/2012 4:22:00 PM
திரு வைகோ விற்கு ஒரு MLA கூட கிடையாது. கட்சிக்கு அங்கீகாரம் கூட ரத்துஆகிவிட்டது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதாக நாபகம் . ஏலேக்டயொனில் கூட நிற்கவில்லை . இவர் ஏன் தமிழக மக்களுக்கு இந்த அளவு போராடவேண்டும் . மக்கள் தனக்கு குடுத்துள்ள ஒட்டு உரிமையை சாதிக்கவும் ,பணத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறது.இல்லையெனில் இவ்வளவு கொள்ளை அடித்தவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தேர்தலில் நின்று ஜெயித்த நபர்கள் ஆளுக்கு ஒரு டிவி வைத்துக்கொண்டு மெத்தையில் படுத்த்கொண்டே அறிக்கை விட்டு அரசியல் செய்துகொண்டிரிக்கிரார்கள். ஆனால் இவர் மிகவும் கஷ்டப்பட்டுகொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு சத்தியமாக் உணரவே மாட்டார்கள்.இவர்களை 1000 வைகோ வந்தாலும் திருத்தவே முடியாது.
By murugesan
9/20/2012 4:20:00 PM
நமக்கு மிக நல்ல ...நெஞ்சுரம் வாய்ந்த தலைவர் கிடைத்திருக்கிறார் ....தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .........
By மீனாக்ஷி சுந்தரம்
9/20/2012 4:15:00 PM
தமிழகத்து மக்களுக்கு,காவிரி நீரை பெற்றுத்தர பெங்களூர் சென்று போராட்டம் நடத்தினால் பயன் உண்டு. தேவை அல்லாத விஷயங்களுக்கு, போராட்டம் நடத்தி,விளம்பரம் தேடுகிறார் வை கோ.
By SESHASAYEE
9/20/2012 3:35:00 PM
excellent VAIKO..
By bala
9/20/2012 3:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து: