சனி, 29 செப்டம்பர், 2012

அன்பை வளர்க்கும் வழி-பாரதியார்

அன்பை வளர்க்கும் வழி

* ஏழைகளுக்கு வயிறு நிறைய அன்னம் இடுவது தான் மேலான தர்மம். அதை விடச் சிறந்தது ஏழை ஒருவன் கல்விகற்க வழிசெய்வது தான்.
* பிறர் சொத்தை அபகரிக்க மனதால் நினைப்பது கூட, திருடுவதற்குச் சமமானதாகும். அதற்குரிய தண்டனை மனிதன் மூலம் கிடைக்காவிட்டாலும், இயற்கை மூலம் கிடைத்தே தீரும்.
* தனக்கும், குடும்பத்திற்கும், நாட்டுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் வாழ்வதையே வாழ்வின் நோக்கமாக கொள்ளுங்கள்.
* மாற்றம் என்பது உலகநியதி. அதற்காக, அனைத்தையும் மாற்றிக் கொள்வதும் இயலாது. பொருள் பொதிந்த அம்சங்களை வைத்துக் கொண்டு. பயனில்லாத அம்சங்களை விட்டுவிடுங்கள்.
* மண்ணும், காற்றும், நீரும், நிலாவும், நம்மைச் சுற்றி வாழும் அனைத்து உயிர்களும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இயற்கையைத் தவிர வேறு தெய்வமில்லை.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அன்பு காட்ட வேண்டும். அன்பை வளர்க்கும் வழி இதுவே.
-பாரதியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக