ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உடல் நலம் தரும் உடற்பயிற்சி

உடல் நலம் தரும் உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரே வழி உடற்பயிற்சி. இன்றைய நவீன உலகில், உடல் உழைப்பு இல்லாத வேலையைத் தான், பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, இயந்திரங்கள் வந்து விட்டதால், குடும்ப தலைவிகளுக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.

எனவே, தற்போது தனியாக உடற்பயிற்சி என்பது அவசியம் ஒன்றாகி விட்டது. உடற்பயிற்சி, உடலை கட்டுக் கோப்பாக வைப்பதோடு, மன அழுத்தம், பதட்டத்தை போக்கும் மருந்தாக பயன்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், பதட்டம், மன அழுத்தம் போன்றவை, மீண்டும் தோன்றாத வண்ணம் சரி செய்ய முடிகிறது. உடல், மூளை செயல்பாடுகளை உடற்பயிற்சி சிறப்பாக்குகிறது. சோம்பல் நீக்கி, சுறுசுறுப்பு உண்டாக்குகிறது. தோற்றப் பொழிவு, நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் மேம்படுகிறது. இருதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகள் மேம்பட்டு, ஆயுள் கூடுகிறது. உடற்பயிற்சி செய்வதால், மனதை கட்டுக்குள் வைக்க முடிகிறது. ரத்த ஒட்டம் சீராகி, புத்துணர்வு கிடைக்கிறது.

அமெரிக்கா பல்கலைக்கழக உடல்நல ஆலோசகர் "ஸ்மித்' கூறும்போது, ஒருவர் பதட்டப்படும்போது, அவர்களது உண்ர்ச்சித் தன்மை அதிகரிக்கிறது. இவர்கள் உடற்பயிற்சி செய்வால், மனம் அமைதிப்பட்டு, பதட்டத்தின் அளவை குறைக்க முடிகிறது என்றார். உடற்பயிற்சி செய்வதால், கவலைகள், மன அழுத்தத்தை குறைத்து செழுமையான வாழ்வு வாழலாம் என்பதே நிதர்சனமான <உண்மை.
என்ன தேவை?

* தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும்.
* எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து விட்டு, காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நேர்மறையான எண்ணத்துடன் எழுந்திருங்கள்.
* உணவுப் பழக்க வழக்கத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம். சத்தான காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள் ஆகியவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* "பாஸ்ட் புட்' எனப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில்லை.
* உடல் எடையை சீராக வைத்திருங்கள், அதிக எடையும் இல்லாமல், குறைந்த எடையும் இல்லாமல் உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம்.
* வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம்.
* உடற்பயிற்சி செய்வது பாதி நோய்களிலிருந்து மனிதனுக்கு விடுதலை அளிக்கும். எனவே தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள்.
* கோபத்தை குறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக