திங்கள், 24 செப்டம்பர், 2012

"கடைகளில் வடிசாறு குடிக்காதீர்கள்!'

சொல்கிறார்கள் - தினமலர்


"கடைகளில்  வடிசாறு   குடிக்காதீர்கள்!'
 பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் சைனி சந்திரன்: "சூப்' பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான், சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.தினமும் சூப் பருகலாம் தவறில்லை. ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி, வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று, பலர், ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, "ரூல்ஸ்' இருக்கிறது. ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், "மோனோ சோடியம் குளுடோமிட்' கலந்திருக்கலாம். எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது. சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம். சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன், அதேபோல், இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, "பெஸ்ட்!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக