செவ்வாய், 20 மார்ச், 2012

Ilakkuvanar Illa thirumanam - Eezhamalar with Bala


தமிழ்ப்போராளி இலக்குவனார் குடும்பத் திருமணம்

தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் மக்களுள் ஒருவரான திரு இலக்குவனார் திருவள்ளுவன் - திருவாட்டி தி.அன்புச் செல்வி ஆகியோர் மகள் பொறியாளர் தி.ஈழமலர் பொறியாளர் மு.வாசுதேவன் - திருவாட்டி வா.அனந்தலட்சுமி ஆகியோர் மகன் பொறியாளர் வா.பாலாசி ஆகியோர் திருமணம் சென்னை மயிலாப்பூரில் வித்யா பாரதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்நாள் மாசி 6 ஆம் நாள் (18.02.12) வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலைமாமணி கு.கல்யாணசுந்தரம் குழுவினர் மங்கல இசை முழங்கத். திருவள்ளுவர் சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பெற்றார். இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் குழுவினரின் தமிழ் மணம் நிறைந்த சிறப்பான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மணமக்களை மேனாள் தேர்தல் ஆணையர் மலைச்சாமி இ.ஆ.ப., மேனாள் தகவல் உரிமைத் தலைமை ஆணையர் இராமகிருட்டிணன் இ.ஆ.ப., முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அரசு செயலர் திருமதி பா.நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலர் திரு மு.ஆ.இராமநாதன் இ.ஆ.ப., பேராசிரியர் மு.பி.பா., மரு.பா.செயப்பிரகாசம், மலர்மாமணி இளஞ்செழியன், கவிஞர் செம்பை சேவியர், புலவர் உ.தேவதாசு, பொறி.பக்தவத்சலம், பொறி.கிருட்டிணமூர்த்தி, முனைவர் சேது, அறிஞர் கண்ணன் மணிமேகலை, அரு.கோ., சா.கணேசன், கவிஞர் மறைமலையான், கவிஞர் மு.மேத்தா, கவிஞர் பொன்.செல்வகணபதி, முதலான அறிஞர் பெருமக்களும் உயர்அலுவலர்களும் தமிழ் அமைப்பினரும் வாழ்த்தினர்.

மறுநாள் காலை 9.30 மணிக்குப் பேராசிரியர் முனைவர் இ.மறைமலை அவர்கள் தலைமையில் முதுமுனைவர் புலவர் மணி இரா.இளங்குமரன் அவர்கள் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தார். திருமணத்தை முன்னிட்டுக் கோவை ஞானி பதி்ப்பித்த தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் என்னும் நூலைப் பொறியாளர் இ.திருவேலன் வெளியிட முதுமுனைவர் இரா.இளங்குமரன் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் முனைவர் பா.வளனரசு, சிந்தனைச் சித்தர் லேனா தமிழ்வாணன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாண்டியன் இ.ஆ.ப., இரா.கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப., இரா.காசிநாதன் இ.ஆ.ப., கூடுதல் தலைமைச்செயலர் திரு கிறித்துதாசுகாந்தி இ.ஆ.ப., திருமதி குத்சியா காந்தி இ.ஆ.ப., திரு வீரசண்முகமணி இ.ஆ.ப., தமிழர் சேனைத்தலைவர் பொறி க.நகைமுகன், அன்றில் பா.இறைஎழிலன், புலவர் கி.த.பச்சையப்பன், தமிழ்ப்பணி வா.மு.சே.திருவள்ளுவர், கவிஞர் கண்மதியன், புதுகைத் தென்றல் தருமராசு, தமிழர் சமயத் தலைவர் முனைவர் தெய்வநாயகம், கலச.இராமலிங்கம், தொண்டர் வ.வேம்பையன், மேனாள் மகளிர் திட்ட இயக்குநர்  விசாகப்பட்டினம் முனைவர் சுகுணா கிருட்டிணமூர்த்தி,திருவாட்டி விசயா வெங்கடேசன், திருவாட்டி மல்லிகா நல்லபெருமாள் முதலிய ஆன்றோர் பெருமக்கள் வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக