செவ்வாய், 20 மார்ச், 2012

breast feeding is best for child's health

சொல்கிறார்கள்                                                                                                                       
தாய்ப்பாலே குழந்தையின் ஆரோக்கியம் குழந்தைகள் நல மருத்துவர் ஆனந்தி:



சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள்ளாகவும், சிசேரியன் எனில், நான்கு மணி நேரத்திற்குள்ளாகவும், தாய்ப்பால் புகட்ட வேண்டும். பிரசவித்த தாய்மார்களுக்கு, முதலில் சுரக்கும் சீம்பால், 10 முதல், 40 மில்லியே இருக்கும். ஆனால், அதில் அடங்கியுள்ள சத்துக்களும், அது தரவல்ல நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இணை எதுவும் இல்லை. எனவே, தாயின் உடல் சோர்வு, குழந்தையின் அழுகை என எக்காரணம் கொண்டு, தவறவிட்டு விடாமல், சீம்பாலை கட்டாயமாக குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.பொதுவாக குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். அதற்குத் தேவையான பால், இயற்கையாகவே தாயின் உடலில் சுரக்கும். "எனக்குப் பால் பத்தல' என்ற கவலை மூடத்தனம். சீம்பாலுக்கு, அடுத்து சுரக்கும் பால், "போர் மில்க்...' அதையடுத்து, "ஹைண்ட் மில்க்' - இவையிரண்டும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. "போர் மில்க்' தண்ணீராகவும், அடுத்து சற்று அடர்த்தியான கொழுப்பு, புரதம் என அனைத்து சத்துக்களும் அடங்கிய, "ஹைண்ட் மில்க்! இது, குழந்தைக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும்.தாயின் ஆரோக்கியம் தான் சேய்க்குப் பால் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால், தாய்ப்பால் புகட்டுவதற்கு முன், தாய் ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது பால் அருந்துவது நல்லது. சரியான முறையில் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டாவிட்டால், அதன் சுரப்பு குறைந்துவிடும். அமைதியான, காற்றோட்டமான அறையில் பால் புகட்ட வேண்டும். சிசேரியன் ஆன, தாய்மார்கள் ஆனாலும், படுத்த நிலையில் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.குழந்தையின் தலையை கையில் தாங்கிக் கொண்டு, தலை முடியை கோதி விடுவது, காதை மென்மையாக வருடுவது, உடலை வருடுவது போன்ற, அன்பான அரவணைப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அதிக பருமன், தாய்ப்பால் புகட்டும் போது, குறைந்து விடும். இதனால், கொழுப்புச் சத்து குறைவதுடன், கருமுட்டை புற்றுநோய், மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக