ஞாயிறு, 27 நவம்பர், 2011

Great heroes day: Sri Lankan forces surrounded the Yaazh university :மாவீரர் நாள்: யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைத்த இலங்கைப் படை


மாவீரர் தினம்: யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்த இலங்கை ராணுவம்

First Published : 27 Nov 2011 01:28:27 PM IST


கொழும்பு, நவ.27: தமிழீழ தேசிய மாவீரர் தினம் மற்றும் பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்பதால், அந்த பல்கலைக்கழக வளாகத்தை கடந்த இரண்டு நாட்களாக இலங்கை ராணுவத்தினரும், படைப் புலனாய்வாளர்களும் சுற்றி வளைத்துள்ளனர். மாவீரர் தின நினைவு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், கடந்த 24ஆம் தேதி மாவீரர்களை நினைவுகூர்ந்தும், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் இலங்கை காவல்துறையினரும், வெளியே ராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.நேற்று பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ராணுவத்தினர், பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி தொடர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இருந்த போதிலும், இவர்கள் அனைவரையும் மீறி யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு துணிச்சலுடன் பட்டாசு கொளுத்தி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக