வெள்ளி, 2 டிசம்பர், 2011

thamizh in cinema: திரைப்படங்களில் தமிழ் – நேரலையில் கலந்துரையாடலாம்


திரைப்படங்களில் தமிழ்  நேரலையில் கலந்துரையாடலாம்

பார்வையாளர்களுக்கு வணக்கம்,
வரும் சனிக்கிழமை (03.12.2013) மாலை 3.00 மணி முதல் 4.00மணி வரை
நமது நட்பு இணைய த் தொலைக்காட்சியில் தமிழ் காப்புக் கழகத்தின் தலைவர் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்,
திரைப்படங்களில் தமிழ் என்பது குறித்துப் பேச இருக்கிறார்.
தமிழ்ப் படங்களின் பெயர்கள், பாடல்கள், கதைப்பாத்திரப் பெயர்கள் போன்றவற்றில் நடக்கும் தமிழ்க் கொலை குறித்தும் பேச உள்ளார். மேலும், தற்போது வெளியாக இருக்கும் “ஒஸ்தி” படத்தின் பெயரை மாற்றகோரியும்  கொலை வெ றிப் பாடலின் தமிழ்க் கொலை குறித்தும் மாலை மலர், மாலை முரசு, , டெக்கான் கிரானிக்கல், நக்கீரன் போன்ற வார இதழ்களிலும் செய்தித் தாள்களிலும் விடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கமும் அளிக்கயிருக்கிறார். நம் நட்பு நேயர்களான தாங்கள் இந்த நேரலை நிகழ்ச்சியில் ஆவலோடு தொடர்பு கொண்டு பேசி உங்கள் கருத்தையும், தமிழ் உணர்வையும் வெளிப்படுத்த  வேண்டுகின்றோம்.

தவறாமல் பாருங்கள்! பங்க‌ேற்றுத் தமிழைக் காக்க உரிய கருத்துகளைத் தெரிவியுங்கள்.
நேரலையில் பேச: 044- 65497744

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக