சனி, 11 ஜூன், 2011

Singalam support moon: பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு


வேறு யாரேனும் வந்தால் கொலைகாரச் சிங்களத்திற்கும் ஆபத்து. கொலையை மறைத்த பான்கீமூனுக்கும் ஆபத்து.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு

First Published : 11 Jun 2011 01:28:21 PM IST

Last Updated : 11 Jun 2011 02:04:28 PM IST

கொழும்பு, ஜூன்.11: பான் கி மூன் இரண்டாவது முறையாக ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை மையமாக வைத்து இலங்கை அரசுக்கும் ஐநா சபைக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் பான் கி மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது முறையாக அவர் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பான் கி மூன் ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

1 கருத்து: