புதன், 8 ஜூன், 2011

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி
வாஷிங்டன், ஜூன்.7-
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூன் இருக்கிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக பான் கீ மூன் அறிவித்து இருக்கிறார்.


கருத்து :

Wednesday, June 08,2011 01:50 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணைபுரிந்த பேசத்தெரிந்த ஊமையான, பார்க்கத் தெரிந்த குருடரான கேட்கத் தெரிந்த செவிடரான இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. மனித நேயம் மிக்க ஒருவர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Wednesday, June 08,2011 11:11 AM, சால்னா said:
இவரும் நம்ம பிரதமர் மாதிரிதான் அமெரிக்கா என்ன சொல்லுதோ அதை அப்படியே செய்வார்...
Tuesday, June 07,2011 09:53 PM, செழி said:
இவர் சாதனைகள் நான்கு ஆண்டுகளில்தான் என்னவாம்? பெஞ்ச் தேச்சது போதாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக