கொலைகாரக் காங்.உடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்காவிட்டால் மாபெரும் தோல்வியைத்தவிர்த்திருக்கும். வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.காங். உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்னும் உண்மையைக் கூறக்கூடத் துணிவு இல்லாமல் தி.மு.க. மீது பழி போட்டு விட்டு நடுநிலையாளர் போல் நன்றாகவே நடிக்கிறார் அன்புமணி. ஒரு புறம் ஈழஆதரவு. மறுபுறம் கொலைகாரக் காங்.உடன் களியாட்டம் என்னும் இரட்டை வேடத்தால் தோற்ற உண்மையைக்கூட வெளிப்படுத்தா நிலை தொடர் தோல்வியையே அளிக்கும். இரட்டை நிலைக்கான மன்னிப்பைக் கேளுங்கள். வளருவீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்
First Published : 26 Jun 2011 02:18:04 AM IST

சென்னை, ஜூன் 25: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினால்தான் தோற்றோம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் காட்டமாகக் கூறியுள்ளார். பாமகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அதன் விவரம்: தோல்விக்குக் காரணம்? பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக மாறிமாறிதான் அரசுகள் வந்து கொண்டிருக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக பல காரணங்கள் உள்ளன. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. 2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். திமுகவுக்கு எதிரான வாக்குகள்: 2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான். தோல்வி அல்ல சரிவு: இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 90 லட்சம். தோற்ற திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சம். வெறும் 45 லட்சம் வாக்குகள்தான் அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. இதனால் இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். இது எங்களுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். அந்த அலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். பாமக வாக்கு வங்கியில் சரிவா? 2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தோம். இப்போது 19 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். 80 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளோம். 2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடிந்தது. 2011 - தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நடுநிலையாளர்கள் அதிக அளவில் வாக்களித்ததுதான். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிமுக வெற்றிக்கு தேமுதிக காரணமா? 2006 தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியாததற்கு தேமுதிக தனியாக நின்றதுதான் காரணம் என்கிறார்கள். இந்தத் தேர்தலில் தொகுதி வாரியாக பார்த்தால் அதிமுக 54 சதவீதமும், அதில் அங்கம் வகித்த புதிய தமிழகம் 54 சதவீதமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 50, 51 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில் தேமுதிகதான் குறைவாக 44 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுகவைவிட தேமுதிக 10 சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்றிருப்பதன் மூலமே அதிமுக வெற்றிக்கு தேமுதிக காரணம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். தேர்தலில் கிடைத்த பாடம்: மக்களின் எண்ணத்தைக் குறைவாக எடைபோடக் கூடாது. ஏதோ பேசி, காசு கொடுத்து, சினிமாவில் நடித்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கக்கூடாது. உண்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனினும் மக்கள் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்


By venky
6/26/2011 5:45:00 PM
6/26/2011 5:45:00 PM


By சித்ரா lekha
6/26/2011 3:35:00 PM
6/26/2011 3:35:00 PM


By முத்துக்குமார்
6/26/2011 2:18:00 PM
6/26/2011 2:18:00 PM


By jamal
6/26/2011 2:17:00 PM
6/26/2011 2:17:00 PM


By உண்மை
6/26/2011 2:10:00 PM
6/26/2011 2:10:00 PM


By adithyan
6/26/2011 1:41:00 PM
6/26/2011 1:41:00 PM


By haja kamal
6/26/2011 1:41:00 PM
6/26/2011 1:41:00 PM


By rama gopalan
6/26/2011 1:30:00 PM
6/26/2011 1:30:00 PM


By krs
6/26/2011 1:26:00 PM
6/26/2011 1:26:00 PM


By k.நாகேந்திரன்
6/26/2011 12:55:00 PM
6/26/2011 12:55:00 PM


By Rahul
6/26/2011 12:32:00 PM
6/26/2011 12:32:00 PM


By m.sathyanarayanan
6/26/2011 11:54:00 AM
6/26/2011 11:54:00 AM


By Varun Ramesh
6/26/2011 11:28:00 AM
6/26/2011 11:28:00 AM


By Paris EJILAN
6/26/2011 11:17:00 AM
6/26/2011 11:17:00 AM


By Abdul Rahman - Dubai
6/26/2011 11:13:00 AM
6/26/2011 11:13:00 AM


By keerai பைசுறான்
6/26/2011 10:39:00 AM
6/26/2011 10:39:00 AM


By நம்பி
6/26/2011 9:44:00 AM
6/26/2011 9:44:00 AM


By இராமசாமி சேகர்
6/26/2011 9:12:00 AM
6/26/2011 9:12:00 AM


By Deepa
6/26/2011 9:04:00 AM
6/26/2011 9:04:00 AM


By ஆர்த்தி.நா
6/26/2011 8:13:00 AM
6/26/2011 8:13:00 AM


By annakan
6/26/2011 7:13:00 AM
6/26/2011 7:13:00 AM


By shanmugam
6/26/2011 6:51:00 AM
6/26/2011 6:51:00 AM


By மூர்த்தி
6/26/2011 6:49:00 AM
6/26/2011 6:49:00 AM


By iraiyanban
6/26/2011 6:41:00 AM
6/26/2011 6:41:00 AM


By Ravi
6/26/2011 6:17:00 AM
6/26/2011 6:17:00 AM


By vinoth
6/26/2011 6:06:00 AM
6/26/2011 6:06:00 AM


By ரட்சகன்
6/26/2011 2:51:00 AM
6/26/2011 2:51:00 AM


By ரட்சகன்
6/26/2011 2:44:00 AM
6/26/2011 2:44:00 AM


By ரட்சகன்
6/26/2011 2:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *6/26/2011 2:32:00 AM