புதன், 22 ஜூன், 2011

இலங்கைத் தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: விக்கிரமபாகு

இக்குரல் மேலும்  ஓங்கி வளர்ந்து தமிழ் ஈழம் தனி நாடு என்பதை ஏற்கும் வகையில் குரலெழுப்பி வெற்றி காண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
இலங்கை தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: விக்கிரமபாகு
First Published : 22 Jun 2011 01:28:28 PM IST

Last Updated : 22 Jun 2011 01:29:47 PM IST
கொழும்பு, ஜூன் 22- இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.நவசம சமாஜக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அவர் கூறியிருப்பதாவது:வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. தமிழர்களின் குரல் ஒடுக்கப்படும் நிலையே தற்போது உள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கிய போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ராணுவத்தினர் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்கத் தூதரிடம் ஏன் புகார் அளிக்கின்றனர் என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கேள்வி எழுப்புகிறார். ஈராக்கில் அமெரிக்காவின் செயல்பாட்டை இவர் ஆதரித்தார். ஆனால், பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட விதத்தை கண்டிக்கிறார். கோத்தபய ராஜபட்ச தான், இனவாத முகாமின் தலைவராக விளங்குகிறார்.இவ்வாறு விக்கிரமபாகு கருணாரத்ன கூறியதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 4 கருத்துகள்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே!, உங்களைப் போன்று நிறைய தமிழர்கள் இப்படி எண்ணினால் தமிழ் இனம் ஏற்றம் பெரும். உங்கள் கருத்துக்கள் அனைத்துமே அருமை!
By ராஜா செழியன்
6/23/2011 12:28:00 AM
கலி கதை எல்லாம் சிக்கி தோயப்டு தமிழ் மக்கள் இனி என்ன? மீண்டும் பேசுவார்த்யல்கு தயாரா இருக்கணும் அங்கே.
By TS
6/23/2011 12:13:00 AM
முதலில் தமிழர்களும் மண்ணின் மைந்தர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் . இதுவே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.
By gb
6/22/2011 3:35:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக