வெள்ளி, 24 ஜூன், 2011

Singhala behaves like pirates: கடற்கொள்ளையர்களைப் போலச் செயல்படுகிறது இலங்கை கடற்படை: காங்கிரசு நா.உ.

திருவாளர்கள் இளமுருகு, கார்த்தி, இலட்சுமி நாராயணன் ஆகியோர் கருத்துகளை வழி மொழிகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கடற்கொள்ளையர்களை போல செயல்படுகிறது இலங்கை கடற்படை: காங்கிரஸ் எம்.பி.
First Published : 23 Jun 2011 05:40:05 PM IST

Last Updated : 23 Jun 2011 06:03:31 PM IST
ராமேஸ்வரம், ஜூன் 23- இந்திய மீனவர்கள் விவகாரத்தில் கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆருண் கூறியுள்ளார்.ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜே.எம். ஆருண் கூறியதாவது:சர்வதேச கடல் விதிமுறைகளின்படி, மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிக்கலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. இதனிடையே, கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்ளக் கூடாது.இலங்கை படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.1974-ல் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உள்ளது.இவ்வாறு ஜே.எம். ஆருண் தெரிவித்தார்.
கருத்துகள்

இவர்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்றபொழுது, இராசபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்நதவர். இந்திய அரசாங்கத்தின் ஆதரவு தனக்கு எப்பொழுதும் உண்டு. அதுவும் காங்கிரசு அரசாங்கத்தின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்பதாலயே இலங்கை இனவெறி அரசு இதுபோன்ற செயல்களில் தைரியமாக செயல்படுகிறது. இவருடைய இப்பேட்டி, சாத்தான் வேதம் ஓதுகிறது.
By lakshminarayanan
6/23/2011 9:15:00 PM
J.M .Harron is lottery Business man, made money in all illegal business,done nothing for his Theni, dear Editor please dont publish the idiotic statements of any Congress Party People.only for the sake of simple publicity he has Spoken,done nothing against the war crime of Ceylon, Regards, Karthi
By karthi
6/23/2011 8:33:00 PM
சாதாரண குடிமகன் சொல்லலாம். ஆனா இதை சொல்ல ஒரு M .P கு வெட்கமில்லை?
By radhakrishnan
6/23/2011 7:18:00 PM
உங்க கட்சி தானே நாட்ட ஆளுது. முடிஞ்சா உங்க 'அன்னை'கிட்ட சொல்லுங்க. இல்ல பிரதமர்னு ஒருத்தர வச்சிருகிங்களே அவர்கிட்ட சொல்லுங்க. புள்ளையையும் கிள்ளி தட்டிளையும் ஆட்ட வேண்டாம். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி தமிழர ஏமாத்திகிட்டே இருப்பீங்க.
By இளமுருகு
6/23/2011 6:56:00 PM

இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவில் ஜெயலலிதா தலையிட முடியாது: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்- ஜூலை 24 , 2011 ] இந்திய மத்திய அரசாங்கத்துடனான இலங்கையின் இராஜதந்திர உறவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எந்தவிதத் தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார். தமிழ் நாட்டு மக்களும் , முதல்வருமான செல்வி ஜெயலிதா அவர்கள் இந்தியர்கள் இல்லையா ? மன்மோகன் சிங் என்ன செய்கின்றாரோ ?
By ராமசாமி -மலாயா
6/23/2011 6:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக