காங்.முடிவு தெரியாமல், இவராக எப்படிக் கூட்டணி வைப்போம் என்று சொல்ல முடியும்? கூட்டணிப் பிச்சை கேட்டார். தரவில்லை அவ்வளவுதான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 19 Jan 2011 07:36:47 PM IST

சென்னை, ஜன.19- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று தான் எப்போதும் கூறவில்லை என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பிரச்னை வெடித்தபோது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அதிமுக ஆதரவு தரும் என்று தெரிவித்தது கூட்டணிக்காக அல்ல.பொது நலத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கத் தவறியது இல்லை.வரும் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி அறிவிப்புகளை வெளியிடுவோம்.திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு காரணமாக மக்கள் மிகவும் வெறுத்துப் போயுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறச் செய்வோம்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கருத்துகள்


By sekar
1/19/2011 9:06:00 PM
1/19/2011 9:06:00 PM


By ragu
1/19/2011 9:05:00 PM
1/19/2011 9:05:00 PM


By jasrian
1/19/2011 8:55:00 PM
1/19/2011 8:55:00 PM


By swathi
1/19/2011 8:32:00 PM
1/19/2011 8:32:00 PM


By அறிவு
1/19/2011 7:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/19/2011 7:53:00 PM