சனி, 22 ஜனவரி, 2011

Chenaai lawyer arrested in Ilangai: சென்னை வழக்கறிஞர் இலங்கையில் கைது: தலைமையமைச்சர் தலையிட வைகோ கோரிக்கை

தமிழரல்லாத வேறு யாரும் கைது செய்யப்பட்டால் உடனே  இந்தியத்தூதரகம் தலையிட்டுத் தளையிட்டமையை (கைது செய்தமையை)    விலக்கி விடுதலைக்கு வழி வகுக்கும். ஆனால் தமிழர் என்பதால் எப்படிப் போனால் என்ன ன்று உயி்ர்  காக்கும் நடவடிக்கையைப் புறக்கணிக்கிறது. சிங்களக் கொடுமை பாரறிந்தது. மறித்து மறைத்து வைக்கப்பட்டவரோ பெண்.  எனவே, அவருக்கு   எவ்வகையிலும் ஊறு நேராமல் காக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அவர்களே நேரடியாகத் தலையிடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 


சென்னை வழக்கறிஞர் இலங்கையில் கைது: பிரதமர் தலையிட வைகோ கோரிக்கை

First Published : 21 Jan 2011 03:28:52 PM IST

Last Updated : 21 Jan 2011 07:16:36 PM IST

சென்னை, ஜன.21- பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. அவரை விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது. தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.கயல்விழியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சுகிறோம். எனவே, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, கயல்விழியைப் பாதுகாப்பாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

பால் விலை மட்டுமா ? இப்போது ஜெராக்ஸ் விலையையும் சென்னையில் கூட்டிவிட்டார்கள் . ஒரு காப்பி ரூபாய் 2 க்கு போடுகிறார்கள். கேட்டால் விலைவாசி ஏறிவிட்டது என்று கூறுகிறார்கள்
By thakshinamoorthi
1/21/2011 10:00:00 PM
இந்தியாவிற்கு உள்ளேயே அவர் சொல்லுக்கு மரியாதை இல்லை பாவம் அவரைப்போய் ராஜபக்சேயுடன் மோதச்சொல்கிறார்
By குசும்பன்
1/21/2011 9:55:00 PM
The Lankan Tamils are not like Punjab, Gujarat and UP migrants to other countries. The Tamils were the original people of Sri Lanka since the land was a part of Tamil Nadu in pre historic days. In the later part when Buddhism expanded the people from Eastern India moved to Sri Lanka. In the history we can see, always the native people are marginalised some times there are hunted like what happened in USA, Australia. The later emigrants Buddhist Sinhala is trying to annihilate the original people and they are opposing it. Sri Lanka can do anything but unfortunately there are neighbour to Tamils and hence to answer the neighbours’ question. Let me first tell you guys that we, the Tamil are first Tamil then only Indians. We can not keep quit when your race is getting annihilated. If you support Tamils struggle, we think we are part of India if not we also need to think about India.
By Tamilan
1/21/2011 5:01:00 PM
அங்கு புகைப்படம் எடுக்ககூடாது என்று தெரிந்தும் ஏன் எடுத்தார்கள். பிரச்சினை உண்டு பண்ணவே இவர்கள் இருக்கிறார்கள். செய்வதை செய்துவிட்டு இப்போது பிரதமர் தலை இட வேண்டுமா.
By மனோகரன்
1/21/2011 4:46:00 PM
ஐயா வைகோ அவர்களே, தமிழர்களைப்பற்றி காங்கிரசும் அதன் பிரதமரும் ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள், உங்களின் ஆதங்கம் புரிகிறது. எங்களைபோன்ற சாமான்யர்கள் என்ன செய்யமுடியும்? தேர்தல் வரட்டும்... தஞ்சை ராஜு
By தஞ்சை ராஜு
1/21/2011 4:41:00 PM
இந்தியாவே! உன் உயிர் நண்பன் சிக்கலில் மாட்டி விடாமல் உடனே காப்பாற்று. இந்தியா இருக்கும் வரை ராஜபக்ஷே தமிழக முதல்வரை கூட கைது செய்வான்.
By kannan
1/21/2011 4:07:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக