செவ்வாய், 21 டிசம்பர், 2010

Ilakkuvanar awards to 100 scholars

செந்தமிழ் அரிமா சி. இலக்குவனார் விருதினை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன், தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி மற்றும் ஏராளமான அறிஞர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார். உடன் இலக்கிய வீதி இனியவன் உள்ளார். விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அண்ணா நகர் தமிழ்ச்சங்கம் சார்பில் இராமலிங்கம் நினைவுப் பரிசினை வழங்கினார். பேராசிரியர் க. திருமாறன் அவர்களுக்கு சுந்தர்ராசு நினைவுப் பரிசினை வழங்கினார் (சென்னை, 19.12.2010).
++++++++++++++++++++++

லட்சுமிகாந்தன் பாரதி, வா.மு.சேதுராமன், பொன்னவைக்கோ, சிலம்பொலி செல்லப்பன், பாவலர் வீரமணி, மணிமேகலை, திருக்குறள் பாஸ்கர், பாவலர் மறைமலையான் ஆகியோர்க்கு தமிழர் தலைவர் விருது வழங்குகினார்.
சென்னை, டிச. 20- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இலக்குவனார் பெயரில் அறக்கட்டளை அமைக் கப்படும் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.
சென்னை அண்ணா நகரிலுள்ள வள்ளியம் மாள் மேனிலைப் பள்ளி யில் செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் நூற் றாண்டு நிறைவு விழா மற்றும் இலக்குவனார் விருது வழங்கும் விழா வும் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
அனைவரையும் வரவேற்று இலக்கிய வீதி இனியவன் உரை யாற்றினார். பின்னர் அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த இரா மலிங்கம் முன்னுரை வழங்கினார். துரை. சுந் தரராசன் உரைக்குப் பின் னர் தமிழறிஞர் சி.இலக் குவனார் பெயரில் உரு வாக்கப்பட்ட விருதினை 100 தமிழறிஞர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி வழங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், தமி ழறிஞர் வா.செ.குழந்தை சாமி, லட்சுமிகாந்தன் பாரதி (முன்னாள் அய். ஏ.எஸ்.), சிலம்பொலி செல்லப்பன் மற்றும் ஏராளமானோருக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழறிஞர்கள்
தோழர் இரா.நல்ல கண்ணு, நீதியரசர் அரு. இலக்குமணன், பாவலர் குலோத்துங்கன் (வா. செ. கு.), இலட்சுமிகாந்தன் பாரதி, வழக்கறிஞர் காந்தி, பேராசிரியர் அவ்வை நடராசன், சிலம் பொலி சு.செல்லப்பன், பேராசிரியர் பொற்கோ, பாவலர் மறைமலை யான், தொல்.திருமா வளவன்,
போராசிரியர் கண.சிற்சபேசன், ஈரோடு தமிழன்பன், பாவலர் பொன்னடியான், பொன் னவைக்கோ, பாவலர் பேகன், பாவலர் சுப்பு ஆறுமுகம், பாவலர் புரட்சிதாசன், முகம் மாமணி, பாவலர் வேள் நம்பி, கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் தமிழழகன், பாவலர் ம.இலெ.தங் கப்பா, பெருங்கவிக்கோ வா.மு.சே., பாவலர் சாமி. பழனியப்பன், பாவலர் இரா.மணியன், பாவலர் தென்மொழி ஞானபண் டிதன், பேராசிரியர் கா. அரங்கசாமி, பேராசிரி யர் பா.வளன்அரசு, ஆய் வுக் களஞ்சியம் பதும நாபன், பாவலர் முத்து லிங்கம்,
பாவலர் மின்னூர் சீனிவாசன், ப.கி. பொன் னுசாமி, தெ.பொ. இளங் கோவன், பேராசிரியர் பி.யோகீசுவரன், பேரா சிரியர் ஞானபுட்பம், பேராசிரியர் தாயம்மாள் அறவாணன், மணி மேகலை கண்ணன், புலவர் கோ.தேவராசன், பேராசிரியர் மு.பி.பா., பாவலர் அமுதபாரதி,
பேராசிரியர் ச.சு.இரா மர் இளங்கோ, மலைய மான், வ.வேம்பையன், சுப.வீ., செங்கைப் பொது வன், பாவலர் இரா. குமாரவேலன் மு.ச.சிவம், பேராசிரியர் ந.தெய்வ சுந்தரம், நெல்லை ந. சொக்கலிங்கம், பாவலர் பூவை அமுதன், பாவலர் வான்முகில்,
புலவர் ப.வீரமணி, ச.சாம்பசிவனார், பேரா சிரியர் மீனாட்சி முருக ரத்தினம், செம்பை சேவி யர், பாவலர் மு.மணி, பாவலர் இளஞ்சேரல், பாவலர் பல்லவன், பாவ லர் மலர்மகன், பேரா சிரியர் இரா.மோகன், சுந்தரராசுலு,
பாவலர் ஞானச்செல் வன், பாவலர் உ.தேவ தாசு, வேலூர் செந் தமிழ்க்கோ, பாவலர் பெரு.முல்லையரசு, பேராசிரியர் சாகுல் அமீது, பாவலர் மு.இளங் கண்ணன், பாவலர் இளஞ்செழியன், வாய் மைநாதன், பாவலர் கருமலைத் தமிழாழன், பாவலர் கந்தையா,
பாவலர் கடவூர் மணி மாறன், இராமதாசு, பாவலர் ஓடைப்பட்டி சுப்பையா, பேராசிரியர் ப.அர.அரங்கசாமி, கண் ணியம் குலோத்துங்கன், பாவலர் பிச்சினிக்காடு இளங்கோ, பாவலர் பொன்.செல்வகணபதி, திருக்குறள் பாஸ்கரன், தமிழ்க்கூத்தன், பேரா சிரியர் மா.ரா.அரசு,
மருத்துவர் தெய்வநா யகம், இல.மா.தமிழ்நா வன், த.சுந்தரராசன், ஏர்வாடி சு.இராதா கிருட்டினன், கோ.பார்த் தசாரதி, மு.தருமராசன், எழுகதிர் அரு.கோ., பூங் குன்றன், மூவேந்தர் முத்து, புலவர் த.இராம லிங்கம்,
நாக.சுந்தரம், நெடுஞ்சேரலாதன், வா.மு.சே.திருவள்ளுவர், ஒய்.எம்.சி.ஏ.கெ.பக்தவத்சலம், சத்தியநாராயணன், கலசம் இராமலிங்கம், பாவலர் வேணு குண சேகரன், தவமணி வெற் றியழகன், பாவலர் மறை தி.தாயுமானவன், மலேசியத் தமிழ்வள்ளல் ஓம் தியாகராசன் ஆகி யோர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். விருது பெற்றோர்களின் சார்பாக நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன், ஈரோடு தமிழன்பன், இலட்சுமி காந்தன் பாரதி ஆகி யோர் உரையாற்றினார்.
பேராசிரியர் க.திருமாறன்
பேராசிரியர் க.திருமா றன் அவர்கள் சிறப்பு ரையாற்றினார். தமது உரையில் தமிழறிஞர் இலக்குவனார் பெயரில் விருது வழங்கி, அவரைப் பற்றி பேச வாய்ப்பளித் தமைக்கு நன்றி. இவ் வளவு தமிழறிஞர்களை அழைத்து ஒன்று சேர்த்து விருது வழங்கி இருப்பது பாராட்டுக் குரியது. இவ்வளவு அறி ஞர்கள் கிடைத்தால் நான் விருதுநகரில் பல மாநாடுகளை நடத்தி இருப்பேன் என பல் வேறு சிந்தனைகளை எடுத்து கூறினார்.
ஏ.ஆர்.லட்சுமணன்
உயர்நீதிமன்ற முன் னாள் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் தமது உரையில், தமிழறிஞர் இலக்குவனார் பெயரில் உள்ள விருதினை மதிப் பிற்குரிய வீரமணி அவர் களது கையால் பெறு வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய அவர் இலக்கு வனாரிடம் பயின்ற பழைய கால சிந்தனை களை நினைவு கூர்ந்து எடுத்து கூறினார்.
தமிழர் தலைவர் உரை
இறுதியாக தலைமை உரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரையில், 28 ஆண்டு களாக அண்ணா நகர் தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடைபெறுவது மிகுந்த பாராட்டுக்குரியது. 100 தமிழறிஞர்களை ஒன்று திரட்டுவது மிகுந்த சிரமம் - இலக்குவனார். நூற்றாண்டு நிறைவு விழாவிலே ஒன்று திரட்டி அவர்களுக்கு விருது வழங்குவது மிகுந்த பாராட்டுக்குரியது 100 பேரும் ஒரே கருத் தினைக் கொண்டவர் கள் அல்லர். பல்வேறு கருத்துகளை கொண்ட வர்களை தமிழ் உணர்வு, மொழி உணர்வு கொண் டவர்களை ஒன்றிணைத் தது இலக்குவனார் விழா ஆகும். இலக்குவனார் தந்தை பெரியாருட னேயே பல்வேறு சுற்றுப் பயணங்களில் சென்று பங்கேற்றவர். தந்தை பெரியார் கொள்கையை ஏற்ற இலக்குவனார் பல் வேறு பிரச்சினைகளை யெல்லாம் துணிச்சலா கச் சந்தித்தவர்.
அவருடைய துரத் தப்பட்டேன் என்ற நூல் மிகுந்த உணர்வு பூர்வமான நூலாகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இலக்குவனார் பெயரில் அறக்கட்டளை உருவாக் கப்படும். அந்த அறக்கட் டளை சார்பாக ஆண்டு தோறும் சொற்பொழிவு, விருதுகள் வழங்கப் படும். அடுத்த ஆண்டு முதல் இவ்வறக்கட்டளை செயல்படும். அந்தக் துறையின் சார்பிலேயே இலக்குவனார் நூல்கள் வெளியிடப்படும்.
திராவிடர் கழகம் ரூ. 10 ஆயிரம்
அந்த அறக்கட்டளைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்க விரும்புவோர் அனைவரும் வழங்கலாம் எனக் கூறி, இலக்குவனா ரின் தொண்டினை எடுத்து கூறினார். மறைமலை இலக்குவனார் விருது பெறும் அறிஞர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். இலக்குவனார் நூற்றாண்டு நிறைவு விழாவினை இலக்கிய வீதி அமைப்பும், அண்ணா நகர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தின. தமிழறிஞர்களின் எழுச்சி விழாவாக ஏராளமான அறிஞர்கள் பங்கேற்றது சிறப்புக்குரியது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக