சனி, 25 டிசம்பர், 2010

3,00,000 voters removed from voter list of Yaazhppaanam: யாழ்ப்பாணம் வாக்காளர் பட்டியல்: 3 லட்சம் பெயர்கள் நீக்கம்

மக்களின் உயிர்களை நீக்கியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்குவது எல்லாம்  இயலாச் செயலா? அல்லது எத்தனை உயிர்களைப் பறித்தோம் என அறிந்துள்ளமையால் அதற்கேற்பவும் பெயர்களை நீக்கியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் தமிழ்ஈழ அரசு உண்மையான பட்டியலை வெளியிட்டு முறையான தேர்தலை நடத்தும் காலம் விரைவில் வரும். வெல்லட்டும் மனித நேயம்! மலரட்டும் தமிழ் ஈழம்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


யாழ்ப்பாணம் வாக்காளர் பட்டியல்: 
3 லட்சம் பெயர்கள் நீக்கம்

First Published : 25 Dec 2010 03:17:14 PM IST


கொழும்பு, டிச.25- இலங்கை யாழ்ப்பாணத்தில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2009-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,16,000 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்ததாகவும், தற்போது அவற்றில் 3 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.2010-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் ஆணையர் குகநாதன் தெரிவித்துள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக