வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஆலோசனை கூற தகுதியில்லை: இலங்கை அமைச்சர்


கொழும்பு, ஆக.6- ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், ஐ.நா. அமைப்பில் அமெரி்க்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அணியை உருவாக்குவதற்கான ராஜதந்திர நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியின் எம்.பி. அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இந்த உண்மையைக் கூறுவதன் மூலமாகவாவது அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு விரைவில் தமிழ் ஈழத்திற்கு அறிந்தேற்பு கிடைப்பின் நனறு. வெல்க தமிழ் ஈழம்! முன்னதான வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 8:30:00 PM
WHY SRILANKA MINISTER HAS SPEAKE LIKE THAT BECAUSE ON THEIR BACK CHINA HAS GIVING SUPPORT TO SRILANKA USELESS CONGRESS GOVERNEMNT ALSO SUPPORT TO SRILANKA IN FUTURE SRILANKA WILL ATTACK ONEDAY INDIA LIKE NOW PAKISTAN ATTACK DONT HELP SRILANKA OTHERWISE INDIAN GOVERNMENT ORDERED TO SRILANKA TO SOLVE THE TAMILANS FACING THE PROBLEMS IN SRILANKA CHINA, SRILANKA BASICALLY BUDDHIST RELIGION COUNTRY SO SRILANKA EXPOSE HIS OBJECTION AGAINST AMERICAAND BRITAIN
By v.ramesh
8/6/2010 5:51:00 PM
what he said is 100% true.
By Mohamed N Ismail
8/6/2010 5:07:00 PM
இன்றைய ஒரு செய்தி- சீரி லங்கா மந்திரி ஒரு அராசாங்க ஊழியரை மரத்தில் காட்டிவைத்து தண்டனை கொடுத்தார் ஏனென்றால் அரசாங்க ஊழியர் சொன்ன வெலையை செய்யவிலை. இதுதான் சீரீ லங்கா. இந்த இடத்தில் நீதி, ஞாயம், தர்மம் .. எல்லாம் எடுபடாது. காட்டு மிராண்டிகள் போல் நடக்கிரார்கள். இந்திரா கந்தி காலத்தில் இந்தியா அமெரிக்காவை இந்த சீரீ லங்க காட்டுமிராண்டிகள் போல் எதிர்த்து. பயன் என்ன தெரியுமா -இந்தியாவின் பொருளாதாரம் சரிந்தது. உலகளவில் இந்தியா ஒதுக்கப்பட்டது. எந்த ஒரு தலைவரும் நாடு குறித்து சிந்தித்து செயல் பட வேண்டும். அதை மன்மோஹன் சிங் செய்கிரார். அவருக்கு வாழ்த்துக்கள். ஆனால் இவரின் ஈழ செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
By அப்பாவி தமிழன்
8/6/2010 4:37:00 PM
இந்த இலங்கைக்காரனும், பாகிஸ்தான்காரனும் எவ்வளவு தைரியமாக அமெரிக்காவை எதிர்த்து பேசுகிறார்கள். ஆனால் மன்மோகன்சிங் அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறான். தைரியமற்ற காங்கிரஸ் கோழை. அமெரிக்காவுக்கு சலாம் போட்டு நாட்டை கேவலப்படுத்துகிறான். வெளிநாட்டு வெள்ளைக்காரி சோனியாவும் இதற்கு உடந்தை. இந்த இரு கேவலமான பிறவிகளையும் நாடு கடத்தணும். அப்போதான் நாடு உருப்படும்.
By பிறவி
8/6/2010 4:12:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக