செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நல்ல தமிழில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்: முதல்வர் வேண்டுகோள்


கோவை, பீளமேடு தகவல் தொழில்நுட்ப பூங்காவை திங்கள்கிழமை துவக்கிவைக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) கோவை ஆட்சியர் பி.உமாநாத், தமிழ்நாடு தொழி
கோவை, ஆக.2: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசவும், கருத்துகளை மக்களுக்கு தமிழில் தெரிவிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று  முதல்வர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டார்.÷கோவை டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறப்பு விழாவில் தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழில் பேசியதைப் பாராட்டியும், தொடர்ந்து பேசுவதற்கு அவர் தடுமாறியதையும் சுட்டிக்காட்டிய முதல்வர் இவ்வாறு கூறினார்.÷ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கோவை டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திங்கள்கிழமை திறந்து வைத்து அவர் பேசியதாவது:÷தமிழில் பேச வேண்டும் என்ற ஊக்கத்தை அரசு அதிகாரிகளுக்கு செம்மொழி மாநாடு கொடுத்துள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழில் பேச வேண்டும் என எண்ணித் தவித்தார். நான்தான், ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றேன்.÷தொழில் துறைச் செயலருக்கு ஆக்கத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இது இருக்க வேண்டுமெனில், அவர் துவண்டு விடாமல் நல்ல தமிழில் பேசப் பழகிக் கொள்வதை முயற்சி செய்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.÷இன்று நடந்த நிகழ்வு ஓரிரு நிகழ்ச்சிகளில் நடைபெற்றால் தவறில்லை; எல்லா நிகழ்ச்சிகளிலும் நடைபெற்றால் அங்கெல்லாம் மாற்றி, மாற்றி உரையாற்ற முடியாது. இவர் மட்டுமல்ல அனைத்து அதிகாரிகளும் நல்ல தமிழில் பேசவும், மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தமிழில் கூறவும் பழகிக் கொள்ள வேண்டும். ÷பல்வேறு துறைகளிடம் இருந்து வரக்கூடிய கோப்புகளில் சில ஆங்கிலத்தில் இருக்கின்றன. இது அதிகாரிகளின் குற்றமோ, தலைமைச் செயலரின் குற்றமோ அல்ல. செம்மொழி மாநாடு நடத்திய பிறகாவது நமது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து கோப்புகளையும் தமிழில் தயாரிக்க வேண்டும்.÷எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது என்பதற்காக இதைக் கூறவில்லை; என்னைப் போல பலரும் இருப்பார்கள் அல்லவா, அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.  எண்ணத்தை வெளிப்படுத்தும் மொழியாக தமிழ் இல்லாமல் போனால் எத்தனை மாநாடுகள் நடத்தியும் பயன் இல்லை. ÷அகில இந்திய ஆட்சிப் பணியில் தமிழகத்துக்கு வருவோர் ஆங்கிலத்தில் பேசுவார்களேயானால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. மொழிக்கு மதிப்பும், வளமும் சேர்க்க முடியாது. எதிர்காலத்தில் நல்ல தமிழில் பேச தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.÷பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது சென்னையில் டைடல் பூங்கா திறக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்தியாவில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான இடங்களில் திறக்கப்பட உள்ளன. இவையெல்லாம் தொழில் வளம் பெருகவும், ஏற்றுமதி அதிகரிக்கவும், பல நாடுகளுடன் தொழில் உறவுகள் மேம்படவும் வழிவகுக்கும்.÷1988-89 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தபோது தில்லியில் இருந்த காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில் பற்றி கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.÷தகவல் தொழில்நுட்பத்தில் தற்போது தமிழகம் வளர்ந்து, விரிவடைந்து இந்தியாவில் ஏற்றமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது என நினைக்கும்போது மறைந்த அமைச்சர் முரசொலி மாறனுக்குத்தான் நன்றி கூற வேண்டும் என்று தோன்றுகிறது.÷அந்த அளவுக்கு இந்த திட்டத்தை, இத்தனை தகவல் தொழில் பூங்காக்களை அமைக்க ஆதாரகர்த்தாவாக இருந்தவர். தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் இருக்கும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்திருக்கிறது என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

ஆதலின் மேடைப்பேச்சுக்கு எங்கும் தமிழ் இருக்க வேண்டும் என்னும் முழக்கத்தைப் பயன்படுத்தாமல் விரைவில் செயலாற்றி வெற்றி காண வேண்டுகின்றேன்.தமிழாய்ந்த தமிழன் முதலமைச்சாய இருக்கும் பொழுது அவரது கட்டுப்பாட்டிலேயே தமிழ் வளர்ச்சித் துறை இருக்கும் பொழுது, தமிழ்ப்பயன்பாடு தளர்ச்சி நிலையில் இருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய அவமானமான குற்றச் செயல் என உணர்ந்தால் வளர்ச்சி காண்பது எளிது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 4:33:00 AM
நல்ல அறிவுரை. ஆனால், தட்டுத்தடுமாறியாவது தமிழிலேயே பேச விட்டிருக்கலாம். அப்பொழுதுதான் இடர்ப்படுவதற்கு வெட்கப்பட்டும் பாராட்டப் படுவதற்கு மகிழ்ந்தும் விரைவிலேயே நல்ல தமிழில் தங்கு தடையின்றிப் பேசும் அளவிற்கு முன்னேறியிருக்கலாம்.அதே நேரம் தமிழ் ஆட்சிமொழியாக உள்ள- தமிழ்த் தேர்வு எழுதி ஊக்கத் தொகை வாங்குவதற்குரிய - தமிழ் நாட்டிலுள்ள இ.ஆ.ப. அலுவலர் ஒருவர் , தமிழில் முதல்வர் முன்னிலையில் தட்டுத்தடுமாறியேனும் தமிழில் பேசப் பலநூறு கோடிச் செலவில் மாநாடு நடத்த வேண்டும் என்பது சரியாக இல்லை. நற்செயல் வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பது பழமொழி. தம் குடும்ப உறுப்பினர்களின் நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றியும் குடும்பத்தினரின் ஊடகங்களில் தமிழை வாழ வைத்தும் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் தொண்டர்கள் அனைவரும் சொல்லாமலே தமிழ்ப்பாதையில் நடைபோடத் தொடங்குவார்கள். எங்கும் தமிழ் இல்லை! எதிலும் தமிழ் இல்லை! என்பதை இங்கு நான் பட்டியலிடத் தேவையில்லை. முதல்வரே நன்கு அறிவார். ஆதலின் மேடைப்பேச்சுக்கு எங்கும் தமிழ் இருக்க வேண்டும் என்னும் முழக்கத்தைப் பயன்படுத்தாமல் விரைவில் செயலாற்றி வெற்றி காண வே
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 4:29:00 AM
யோவ் வெங்காயம், முதல் உன் டிவியில தமிழை த்மில்னு சொல்லும்(கொல்லும்) அறிவிப்பாளருக்கு தமிழ சொல்லிகொடு. ஐஏஸ் அதிகரிங்க வேளை நிர்வாகம் தானே தவிர இலக்கியமில்லை
By kkk
8/3/2010 3:16:00 AM
இதுதான் ரகசியம் ! (சோணகிரி)..அழகிரியால் ஆங்கிலத்தில் பேசவும் முடியாது ... அதனை கற்றுக் கொள்ளவும் முடியாது ! எனவே அனைத்து I A S அதிகாரிகளும் தமிழ் மொழியினை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப் படுகிறது ! மத்திய அரசில் குறைந்த பட்சம் ரசாயனத்துறை சம்பந்தப் பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தமிழ் மொழியினை பேசக் கற்றுக்கொள்ளவும் ! இனி வரும் காலங்களில் தமிழ் ஆய்ந்த ஒருவரைத்தான் பாராளுமன்ற சபாநாயகராக ஆக்கவேண்டும் என்று டெல்லிக்குச் செல்லும்போது சோனியா அம்மையாரிடம் கெஞ்சி கேட்டுப் பார்த்துவிட்டு காவிரி தண்ணீரை விட்டுக் கொடுத்துவிட்டு வரவும் !!! @ rajasji
By rajasji
8/3/2010 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக