செவ்வாய், 30 மார்ச், 2010

சட்ட ஒழுங்கு கெடும் ; படித்தவர் என்பது ஏற்புடையதல்ல ; நளினியை விடுவித்தால் விபரீதம் என்கிறது தமிழக அரசு

Top world news stories and headlines detail

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி முக்கிய குற்றம் புரிந்துள்ளார் என்றும் இவரை விடுவித்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் எனவே விடுதலை செய்ய இயலாது என்றும் , இது தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை அப்படியே ஏற்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நளினி விடுதலை கனவு இத்துடன் முடிகிறது.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன்கூட்டியே தன்‌னை விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் நளினி கோரினார். இந்த மனுவை அரசு நிராகரித்து விட்டது.


இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், முன் கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினியும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கூடி நளினி விடுதலை தொடர்பாக விசாரணை நடத்தியது.


கடந்த வாரம் கோர்ட்டில் நடந்த வாய்தாவில் நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு வந்திருப்பதாகவும், சீலிட்ட கவரில் அதை தாக்கல் செய்வதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அறிக்கையின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கோர்ட்டில் கூறியதாவது:


ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறிக்கை, அரசை கட்டுப்படுத்தாது. ஆலோசனைக் குழுவிடம் மேலும் சில விவரங்களை உள்துறை கோரியிருப்பதாக அறிகிறேன். அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்கும். அதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும். அதற்கு முன், அரசு முடிவெடுத்தால், கோர்ட்டுக்கு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறினார்.பின், சீலிடப்பட்ட கவரை கோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் சமர்ப்பித்தார். இதன்படி நீதிபதிகளும் விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


இந்த வழக்கு விசாரணை இன்று ( திங்கட்கிழமை ) நடந்தது. நளினி விடுதலை செய்யப்படுவாரா என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கில் இன்று ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமன் ஆலோசனைக்குழுவின் பரிந்துரையை பரிசீலித்து ஆராய்ந்தோம் . இதனை நாங்களும் அப்படியே ஏற்று நளினியை விடுதலை செய்ய இயலாது என்றார். தொடர்ந்து விசாரணை நடந்தது.



ஆலோசனை குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன ? :


கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆலோசனைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு :


1. நளினி ராஜிவை கொலை செய்ய உதவியாக இருந்திருக்கிறார்.


2. இந்த கொலை வழக்கில் இவரது முக்கிய தன்மை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


3 . குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்


4. சதித்திட்டத்தில் முக்கிய பங்கு உண்டு.


5. கொலை நடந்த விஷயத்தில் விவரம் அனைத்தும் நளினிக்கு தெரியும்.


6. கணவர் இல்லை என ஏற்க முடியாது . இவர் மரணத்தண்டனை பெற்று சிறையில் தண்டனை அநுபவித்து வருகிறார்.


7. அதிக கல்வி தகுதி உள்ளவர் என்பதற்காக அவர் ஒழுக்கத்துடன் நடப்பார் என்பது ஏற்க முடியாது.


8. இது வரை நளினி வருத்தமோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை.


9. இவர் விடுதலை செய்யப்பட்டால் தாயாருடன் சென்னை ராயப்பேட்டையில் தங்கி இருப்பேன் என்பதும் நம்பும்படியாக இல்லை . அதே நேரத்தில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடம். அத்தோடு சென்னையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.


10. இவர் 18 வருடம் சிறையில் இருந்தார் என்பதை எற்று விடுதலை செய்ய முடியாது.


இந்த அறிக்கையை பரிசீலித்து இதன்படி தமிழக அரசும் இந்த அறிக்கையை அப்படியே ஏற்று கொள்கிறது என தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
just now read in this dinamalar edition that 17 Indians were to be hanged for guilty of killing a Pakistani citizen in a brawl at dubai. All the people involved are not very literate people and they have done in a fury of anger & fight. What we are talking here is a henious act of a highly educated person abetting it and being part of it. They have done a gastly nurder of a key, famous & respectable person of the Country and we are all discussiing about it even after 16 years. In my opinion, she should have been hanged long back. KBMS< src="http://stat.dinamalar.com/images/comment_leftqoute.png" border="0">
by KBM Swamy,Mumbai,India 29-03-2010 23:02:53 IST
முதன் முதலாய் தமிழ் நாட்டு அரசு நல்ல முடிவு எடுத்து இருக்கிறது .மனித உயிருக்கு மதிப்பில்லாமல் கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை தான் கொடுக்கவேண்டும்,ராஜீவ் கொலை நாட்டு பற்று உள்ள எவராலும் மறக்கவோ ,மன்னிக்கவோ முடியாது .இந்திய அரசே! நளினியை மன்னித்தால் இந்தியாவில் எந்த உயிருக்கும் பாதுக்கப்பில்லை.
by v praba,nagore,India 29-03-2010 23:02:25 IST
ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னால் இந்திய பிரதமர் கொலைக்கு உதவிய ஒரு குற்றவாளியய் ரிலீஸ் பண்ணலாம் என்று யோசிப்பதே ஒரு கொலை குற்றமாகும்.
by M மகேஷ்,UnitedStates,India 29-03-2010 23:01:47 IST
சரியான முடிவு. சந்தர்ப்ப வசத்தால் கொலை , குற்றம் செய்தவர்க்கு தான் மன்னிப்பு திட்டமிட்ட சதியில் கொலை செய்தால் அல்ல. சிறையினில் படிப்பு, குழந்தையை தன்னோடு வைத்திருந்து வளர்த்தது, அவ்வப்போது கணவன் மற்றும் தாயை சந்தித்தது, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றிய அரசாங்கத்தின் இறக்கம் என்று பல சலுகை பெற்றுள்ளார். இவரை சிறையிலிருந்து விட்டு விடலாம் தான். ஆனால் தந்தையை காணாமல் வளந்த அந்த குழந்தைகள், கணவனை இழந்து இருபது வருடங்களாக வாடும் அந்த மனைவிக்கும் எப்படி இழந்து போன நாட்களை திருப்பி தருவது ? . ஒரு நாட்டின் முன்னால் பிரதமரை கொன்றால் இருபது வருடங்கள் மட்டும் சிறை என்றால் உலகில் எவனாவது இந்தியாவையும் நம்மையும் மதிப்பானா ? நளினி சம்பந்தப்பட்டது சாதாரண விடயமில்லை. திரும்ப கிடைக்காத , மீட்க முடியாத , சரி செய்ய முடியா பிழை . அதற்கான தண்டனையும் கூட அதே தன்மையில் தான் இருக்க வேண்டும். பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்கிறாரே இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகாவது ராஜீவை உயிரோடு கொண்டு வர முடியுமா?? i agree with Surya comments
by மணி,chennai,India 29-03-2010 22:52:56 IST
ஒரு நல்ல தலைவனை கொல்ல துணை போன இவளுக்கு இன்னும் தண்டனையை அதிகமாக கொடுக்கணும் இன்னும் நம் நினைவில் மே மாதம் 21 தேதி
by M.L. முஹம்மத் பாரூக் .. திருவாவடுதுறை ,JEDDAH,India 29-03-2010 22:52:42 IST
பிரதமராய் இருந்த ஒருவரை பாரம்பரியம் மிக்க தமிழ் மண்ணிலே கொடூரமாக கொலை செய்த கூட்டத்திற்கு மன்னிப்பே கிடையாது .சதி திட்டம் தீட்டியர்வர்களுக்கு உடந்தையாக இருந்தவர் இந்த நளினி -.ஆலோசனை குழுவின் முடிவு போற்ற தக்கது .தமிழ் மண் என்றுமே ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கும் மண் .
by a vetrivendan,chennai,India 29-03-2010 22:49:16 IST
நாம் முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் the lady nallni kills our prime minister not ordinary person IPC says that if your knowing any criminal actives give your support its will be a crime
by mr mani,chennai,India 29-03-2010 22:49:12 IST
நளினி பாவம் மைனாரிட்டி சமூகத்தவர் அல்ல, எளிதாக விடுதலை பெற.. கோவை குண்டுவெடிப்பில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களை நளினிக்குப் பயன்படுத்திய அதே அளவுகோல் கொண்டு அளந்து தான் விடுதலை செய்தார்களா? ராஜீவ் தமிழர்களுக்கு, ஏன் போபோர்ஸ் மூலமாக இந்தியாவுக்கே கெடுதலும் ஆபத்தும் விளைவித்தவர்.IPKF மூலம் பல்லாயிரம் தமிழர்கள் உயிருடன் விளையாடிய குற்றத்தை செய்தவர். ஆனால் கோவை குண்டு வெடிப்பில் இறந்ததெல்லாம் 100% அப்பாவிப் பொதுமக்கள்!இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் நளினி பாவம் மைனாரிட்டி சமூகத்தவர் அல்ல, எளிதாக விடுதலை பெற.அஃப்சல் குரு அல்ல. சஜ்ஜன்குமார் அல்ல.ஏன் கசாப் போல் பாகிஸ்தானியர்கூட அல்ல!.
by V மணி,Chennai,India 29-03-2010 22:36:22 IST
ஆலோசனை குழுவில் கோர்க்கபட்டவை எல்லாமே சரியாக தான் தெரிகிறது. படித்தவருக்கு ஒரு நீதி..படிகாதவருக்கு ஒரு நீதியா/படித்தவர்கள் தவறே செய்வதில்லையா/ மன்னிப்பு கேட்கும் நாகரிகம் தெரியாதவருக்கு மன்னிப்பு தேவையா?தமிழச்சி என்ற காரணத்தால் தமிழர் கட்சி தலைவர்கள் கட்சி சுயலாபம் கருதி அவள் சுதந்திரமாக இருக்க நியாயம் கோரலாம்.ஒரு வேளை அந்த தலைவர்கள் அடங்கி விட்டார்களோ!
by R.S. Mathusoothan,Nashville,UnitedStates 29-03-2010 22:34:35 IST
சரியான முடிவு. சந்தர்ப்ப வசத்தால் கொலை , குற்றம் செய்தவர்க்கு தான் மன்னிப்பு திட்டமிட்ட சதியில் கொலை செய்தால் அல்ல. சிறையினில் படிப்பு, குழந்தையை தன்னோடு வைத்திருந்து வளர்த்தது, அவ்வப்போது கணவன் மற்றும் தாயை சந்தித்தது, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றிய அரசாங்கத்தின் இறக்கம் என்று பல சலுகை பெற்றுள்ளார். இவரை சிறையிலிருந்து விட்டு விடலாம் தான். ஆனால் தந்தையை காணாமல் வளந்த அந்த குழந்தைகள், கணவனை இழந்து இருபது வருடங்களாக வாடும் அந்த மனைவிக்கும் எப்படி இழந்து போன நாட்களை திருப்பி தருவது ? . ஒரு நாட்டின் முன்னால் பிரதமரை கொன்றால் இருபது வருடங்கள் மட்டும் சிறை என்றால் உலகில் எவனாவது இந்தியாவையும் நம்மையும் மதிப்பானா ? நளினி சம்பந்தப்பட்டது சாதாரண விடயமில்லை. திரும்ப கிடைக்காத , மீட்க முடியாத , சரி செய்ய முடியா பிழை . அதற்கான தண்டனையும் கூட அதே தன்மையில் தான் இருக்க வேண்டும். பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்கிறாரே இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகாவது ராஜீவை உயிரோடு கொண்டு வர முடியுமா?? அரசியல் இதில் எதற்கு ?? நளினிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரியே, ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்ய தூண்டிய இந்திய சக்தி எது என்று வெளிபடையாக கூற வேண்டும். அதன் உண்மைத்தன்மையை பொருத்து நீதி வழங்க வேண்டும். i
by AS guru,tirupur,India 29-03-2010 22:25:03 IST
everybody is bothering abt the deth of rajiv and declaring themsself as planned murder,fine why dont u think about the reason behind that? why dont u least bother abt thousands of tamilians faced sexual harrasments and millions died. we r not ready to intervene third party to resolve the dispute with pakistan and why we did with srilanka? we had prouded histry that release of lots of terrorists,gangstars caused for great losses and still trying to find some culprits behind the mumbai attacks and all!! As a humanitarian mesures it would be better to release, atleast for her child. the statement from gvt side is so funny reg her stay in chennai if released like us embassy is here so and so.
by n jeyakuamr,abudhabi,uae,India 29-03-2010 22:17:14 IST
She is not a kid to claim innocence in the murder of mr.Rajivgandhi. I welcome the decision.
by g கல்யாணி,chennai,India 29-03-2010 22:12:10 IST
she should have been released. Understand the feeling of a mother.
by ss,chennai,India 29-03-2010 22:09:59 IST
Your people thinging always only one man got killed. ok, then what about our thousand of people dead with knowing anything!
by k nasser,delhi,India 29-03-2010 22:08:39 IST
It is nice to see the TN Govt. Decission. Many people look into the issue as SL Tamil Issue. But it is not. She helped the assasin. If she killed your relatives and will you accept to forgive her? Did you accpet if she is part of killing of your own Child/Mother/wife/husband? No, your reaction will be different. If we forgive her then we forgive terrorism and we accept terrorism. That is not good. Actually she is not punished,this will not convey the strong message to any kind of culprits. All LTTE Supporters....Say for example, if she is a Non-Tamil and helped killing Prabhakaran and punished for the killing will you Forgive her? No, You will not. So, she should be punished for Our Beloved Rajiv's assasination. Jai Hind.
by B Prakash Balakrishnan,Chennai,India 29-03-2010 22:07:54 IST
R. Siva your very correct!!! thanks for your comments.
by suba r,india,India 29-03-2010 22:04:52 IST
She has to cook her own food & eat with her money not by Govt.money. Jailer has to supervise her daily activities by providing raw rice, soap powder & etc. not by this way...This is the greatest punishment than hanging. Because she has money to contest in the court & high court so let her spend. If the person dont have money at that time govt. has to provide the raw materials not by this way...shame on our system.
by v christopher,sanaa,Yemen 29-03-2010 22:00:41 IST
Everybody thinging about rajeev morder it's good. but what about rajjeev have done murder so many people in srilanks?
by mk malick,uae,India 29-03-2010 21:57:49 IST
Enna kaliengar ayya! enna sonaiya ganthi passama! pls give yoour passam something for our tamil people also
by me sagnme,uae,India 29-03-2010 21:55:02 IST
இதில் யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம். நளினி ஒரு தேச துரோகி. அவரை மன்னித்தால் அது நம் தாய் நாட்டிற்க்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். அவரை சாகும் வரையில் சிறையில் வைப்பது தான் தர்மம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறைக்கு நான் தலை வணங்குகிறேன்.
by M Amanullah,Dubai,UnitedArabEmirates 29-03-2010 21:54:31 IST
Rajeev ganthi done so many m‌urder in srilanka! and as per his instruction we loss so may tamil people. who going give me him furnishment.
by me sagnme,uae,India 29-03-2010 21:53:20 IST
ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நடந்த அன்று ஒரு சிங்கள ராணுவ வீரன் தன துப்பாக்கியால் ராஜீவை தாக்கினானே அப்போதே ராஜீவுக்கு மரணம் நேர்ந்திருந்தால் பழிக்கு பழியாக சிங்களர் அனைவரையும் கொன்றுபோட்டு இருக்குமா காங்கிரஸ் அரசாங்கம்.
by KM சிவகுமார்,Bangalore,India 29-03-2010 21:46:13 IST
HI EDITOR, WHAT A JUDEMNET IT'S RELASE , LAW & ORDER WILL BE UNCONTOLLED WHAT A SHAME ..... RIGHT NOW LAW & ORDER IN INDIA WILL BE VERY GOOD AND ALSO TAMILNADU WHY SUBRAMNIAYA SWAMY APPEAL AGAINST PLEA TO NALINI BECAUSE INDAIN RAW OFFICER WEEL NONE BELONGS TO THIS MURDER CASE THANKS A LOT
by M Mசுப்ரமணியன்,RIYADH,SaudiArabia 29-03-2010 21:45:35 IST
போதும் போதும் விடுதலை பண்ணுங்கய்யா “பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்”
by செ செல்வகுமார்,கத்தார்,Qatar 29-03-2010 21:40:25 IST
யோவ் ....புத்தர் அவதரித்த மண் அய்யா !.....மகாத்மா காந்தியின் தேசமையா !!....பாவம் பொம்பளை அய்யா !!! உலகம் நம்மை அசிங்கமா எடை போடும் !!!....என்னய்யா சட்டம் ..என்னய்யா நீதி.....பூமியில மனிதாபிமானம் தழைக்கட்டும் அய்யா !!!....யோவ் கருணாநிதி, சட்ட மன்றத்துல உன் போட்டோவுக்கும் கீழ ..'மற்றாரும் மனம் மகிழ மனித நேயம் வளர்த்திடுவோம் '....என்ற வாசகத்தை கழட்டி எடுத் தெரிய்யா !!! இனி அந்த வாசகத்துக்கு அருகில் உன் போட்டோ இருப்பதற்கு தகுதி இல்லை !!!!
by rajasji,münchen,Germany 29-03-2010 21:31:14 IST
ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவருக்கு கொடுத்த தண்டனை போதாது. இவருக்கு இதை விட கொடிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும். தமிழக அரசு செய்ததே சரி
by i indian,chennai,India 29-03-2010 21:30:14 IST
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டத்தை மதிப்பவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது....
by m முத்து,erode,India 29-03-2010 21:15:59 IST
நளினி ராஜீவ் காந்தி கொலைக்கு மட்டும் காரணம் அல்ல. கடந்த ஆண்டு உயிர் இழந்த பல அப்பாவி இலங்கை தமிழர்களின் மரணத்துக்கும் காரணம்.சாகும்வரை ஜெயில்தான் நளினிக்கு, படித்தவள் என்றால் என்ன உத்தமியா, கொலைகாரபாவி.
by M சுப்பு,Tripoli,Libya 29-03-2010 21:09:52 IST
சபாஷ் V Mic Singapore
by K விஜயன்,Chennai,India 29-03-2010 21:01:33 IST
ராஜீவ் கொலை செய்யப்படுவது அவரை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும் என்பது தான் வெளியில் உலாவும் பேச்சு. இல்லை என்றால், சில காங்கிரஸ் பெருந்தலைகளும் அல்லவா அன்று உருண்டு இருக்க வேண்டும். இதெல்லாமே பணத்தின் காரணமாகவே நடக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா? இன்று இலங்கை பிரச்னை முடிந்ததும் எல்லா கம்பனிகளும் அங்கு கடை விரிக்க ஓடுவதை கண்டால் இந்திய அரசாங்கம் சீன அரசாங்கம் மட்டுமல்லாது பல முன்னணி நிறுவனங்களும் (இந்திய + அமெரிக்க) இலங்கை அரசுக்கு விடுதலை புலிகளை கொல்ல பணம் கொடுத்திருக்கின்றன என்று தெரிகிறது.
by K விஜயன்,Chennai,India 29-03-2010 20:51:28 IST
enna sir
by N prakash,abudhabi,India 29-03-2010 20:46:44 IST
THAMIZHAKA ARASIN ENNAM MUTTRILUM UNMAI. VIPAREETHAM MATTUM ILLAAMAL ITHU PERIYA VINAYAAKAVUM MUDIYUM. ENTRAIKKO THOOKKILE POTTU MUDIKKA VENDIYA SAMPAVAM ITHU. INTHAMAATHIRI KUTTRA VAALIKALAI VELIYILE VARA ANUMATHITHAAL NAMNAATTIL VANMURAIYUM KOLAYUM ATHIKARIKKATHTHAAN CHEYUUM ENPATHU EN KARUTHTHU.
by R SAHASRANAMAYYAR,Kanpur,UttarPradesh,ofNorthParavur,Kerala,India 29-03-2010 20:43:20 IST
ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு சாகும் வரை ஜெயிலில் போடவேண்டும் என்றால் இலங்கையில் பல லட்சம் மக்களை கொல்ல ஆயுதம் கொடுத்து சதித்திட்டம் செய்தவர்களுக்கு எத்தனை வருடம் ஜெயில் தண்டனை?காலம்(கடவுள்) தான் பதில் சொல்ல வேண்டும்
by s raja,chennai,India 29-03-2010 20:42:01 IST
High education is not an excuse to defend from any law. What high education she had? She is a main cause of the conspiracy & made a bomb blast to kill an ordinary citizen/leader/PM/President. Life is same for every one. Beside Rajiv, so many other people also died. Reducing the sentence from Hanging to Life imprisionment itself is unfair. She is not a weeker section at all who killed a PM.
by S srinivasan,Kilkattalai,India 29-03-2010 20:35:09 IST
இங்கு நளினிக்கு எதிராக வாய்கிழிய பேசும் அன்பு நெஞ்சங்களே, மும்பை குண்டு வெடிப்பில் இறந்த உயிர்களுக்காக இதை போல் பேசி தண்டனை வாங்கித்தர இயலுமா அல்லது காங்கிரஸ் சால் தான் முடியுமா ? ஏனென்றால் முஸ்லீம் ஒட்டு வாங்க முடியாது. வக்கற்ற அரசாங்கம். நளினிக்கு வக்காலத்து வாங்க வில்லை,தமிழன் தன்னை தன் வரலாற்றை உணரவில்லை. தயவு செய்து அசிங்கமாக பேசாதீர்கள் நளினியை. நெஞ்சம் வலிக்கிறது .
by a பாண்டியன் ,klanglama,Malaysia 29-03-2010 20:33:09 IST
ராஜீவ் ஒன்றும் தியாகி இல்லை, ரொம்ப உணர்ச்சிவசப்பட அவசியம் இல்லை , நீதி மன்ற தண்டனை முடிந்தால் வெளியே அனுப்புவது நீதியை மதிப்பவர் செய்கை. நேரு-கான் ( காந்தியல்ல ) குடும்ப அரசியல். ஒரு குடும்பத்துக்காக நாட்டை விற்காதீர்கள்.
by N R I,DC,UnitedStates 29-03-2010 20:27:46 IST
சரியான முடிவு. இவ்வளவு வருடங்கள் சிறைசாலையில் இருந்தார் என்பதற்காக விடுதலை செய்வது பிறருக்கும் முன்னுதாரணம் ஆகிவிடும். இத்தனை நாள் உயிருடன் இருப்பதற்கு அந்த பெண் சந்தோஷபடலாம்
by N விநோத்கண்ணன்,madurai,India 29-03-2010 20:26:42 IST
எது எப்படியோ நம் நீதிமான்கள் முன்பே ஒரு சரியான ஓர் தண்டனை வழங்கி இருக்க வேண்டும் , ஆனால் இப்போழுது பதினெட்டு ஆண்டுகள் கழித்து இப்போழுது இந்த வாதம் தேவை இல்லை.
by r ramesh,singapore,Singapore 29-03-2010 20:22:50 IST
எதர்கெடுத்தாலும் இஸ்ரேலை உதாரணம் காட்டுவது இந்த வாசகர் கருத்தில் அதிகம் காண முடிகிறது. இஸ்ரேலின் சரித்திரம் தெரியாததால். நம் தாத்தாமார்களை வெள்ளையர்கள் வியாபாரம் செய்வதாக வந்து நம் நாட்டை அடிமையாக்கியது போல இஸ்ரேல்கரர்கள் அங்கு குடியேறி அநியாயம் செய்கிறார்கள்.இது சரித்திரம்.
by S.S ஜகுபர் சாதிக்,JEDDAH,SaudiArabia 29-03-2010 20:18:22 IST
This lady should be killed..... kill her Not even worried about our country, Idiot. No one talks about the life of our IPF died in srilanka, Many were killed. Let her go to Srilanka, or to hell. Idiot. sold our country!
by Mr Prasad,madurai,India 29-03-2010 20:17:39 IST
who ever write comments here, why nalini came to kill this rajiv, This guy sent all the troops to sri lanka to kill tamil people and rape those tamil girls, If it is happend to your family, did you accept that, If it is yes, you can support rajiv, Go and read the History properly, Don't simply support Rajiv...... very soon tamil nadu tamil people will lose their own lands to neibour states and all our minerals will gone by power but no waterwill be given for drinking also, kerela through all the rubish to our place????? Sri lanka army killing our tamil fisher men,
by p kulandai,Singapore,India 29-03-2010 20:09:48 IST
தமிழக அரசு முடிவு என்று செய்தி தலைப்பு கொடுத்து தமிழ் ஆர்வலர் களை அரசுக்கு எதிராக திருப்ப அருமையான முயற்சி செய்கிறது தினமலர். நீங்கள் எப்போதும் ஜெயா விசுவாசி என்பதை காட்டி கொண்டே இருங்கள்.
by tamil தமிழன்,bangalore,India 29-03-2010 20:07:09 IST
ஆலோசனை குழு வின் அறிக்கைப்படி நளினி குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் அதற்காக வருந்தவும் இல்லை. ஆகவே அவரை விடுதலை செய்ய மறுத்தது சரி .
by RPR raman,AUSTINTX,India 29-03-2010 19:56:34 IST
What is the reaction of Tirumavalavan who is a strong LTTE sympathizer for this govt decision. Will he accept / endorse it for his personal gain because of ties with DMK-CONG.
by Tanmana Tamilan,Namakkal,India 29-03-2010 19:53:58 IST
சோனியாவின் செல்ல புள்ள கருணாநிதி. அந்த சோனியாவின் பின்னாடி வால் பிடிக்கும் அய்யா கருணாநிதி அவர்களே... உங்களின் தமிழருக்கான சேவை தொடரட்டும்.. என்ன தவம் செய்ததோ இந்த தமிழர் பூமி உன்னை பெற்றதால்....உனக்கு தமிழினத்தலைவன் என்கிறார்கள் .ஆனால் உன்னை தமிழினத்துரோகி என்று நாடே சொல்கிறது
by தன் மானதமிழன் ,kalpakkam,India 29-03-2010 19:51:04 IST
AFTER INDRA'S KILLINGS, 3000 SIKHS WERE KILLED AT DELHI. UP TODAY NO CRIMINALS HAS BEEN PUNISHED. WHY? IN THE BORFOS GUN SCANDAL THE CRIMINALS WHO LOOTED INDIAN PEOPLE'S MONEY WERE NOT PUNISHED YET. WHY?
by Paris EJILAN,Paris,France 29-03-2010 19:47:50 IST
Nobody discussed here, what is purpose of killing Mr.Rajiv.Then you discuss all which will be shown very clear picture.
by M Muthukumaran,sohar,Oman 29-03-2010 19:44:41 IST
இது வரை நளினி வருத்தமோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை... அதனால் சாகும்வரை ஜெயிலில் இருக்கடும்.
by s செந்தில்,chennai,India 29-03-2010 19:44:05 IST
கொல்லப்பட்டது ஒரு இந்திய பிரதமர். மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை அவளை (நளினியை) தூக்கிலிடுங்கள் - ராஜீவ் காந்தி தொண்டன்
by c குமரேசன் ,salem,India 29-03-2010 19:39:38 IST
விடுங்கப்பா .. நமது தானை தலைவர் தனக்கு நஷ்டம் ஏற்படாமல் கூட்டணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.. முன்பு காவேரி தியாகம் செய்தார்.. பின்பு பிரபாவை தியாகம் செய்தார் .. காங்கிரஸ்காரன் சொன்னான் தலைவர் செய்யறார்.. நளினி தலைவருக்கு சும்மா ஜுஜுபி ..
by monnaiyan,tamilnadu,India 29-03-2010 19:38:58 IST
தற்போது மட்டும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதோ?
by K JEEVITHAN,VILLUPURAM,India 29-03-2010 19:35:32 IST
இதுல வேற எதோ விசயம் இருக்கறா மாதிரி தெரியுதே? பொதுவா இந்த நாட்டுக்கு எதிரா இருக்கறவங்களை கண்டா நம்ம முதல்வர் முழு ஆதரவு தந்து ஊக்கம் கொடுப்பாரே? என்ன, வை.கோ நெடுமாறன் திருமா வீரமணி இவங்களுக்கு தெரு முனை கூட்டம் போட்டு பேச ஒரு நல்ல வாய்ப்பு
by பாலா ஸ்ரீனிவாசன் ,chennai,India 29-03-2010 19:30:11 IST
HAND OVER NALINI TO SRILANKA. LET HER FACE THE LAW THERE ALSO FOR COLLOBORATING WITH PIRABAKARAN.
by R Raja,Chennai,India 29-03-2010 19:21:05 IST
governmnet statement given, american embassy is there in chennai, so we cant relise her, why every one afraid with america, you people dont have self image, still you all wanted to afraid with american,
by K gopal,muscat,India 29-03-2010 19:17:44 IST
அருமையான முடிவு. தமிழ் நாட்டிற்கும் தேசப்பற்று உண்டு என்பதை காட்ட அருமையான முடிவு எடுத்திருக்கிறது தமிழக அரசு. உணர்வுகளை விட சட்டமே முக்கியம்.
by K Kasilingam,Vellore,India 29-03-2010 19:10:03 IST
Still lot of question needs to be answered. Their is no proper evidence submitted against Nalini, she may no know about Rajiv's murder before. In the final report it is mentioned that the main accused Prabhakaran and Pottu Amman not sharing any information with anyone else regarding the plan that means she may not knows about the plan
by Mr Priyan,kuwait,India 29-03-2010 19:07:47 IST
Good comment. நளினி ஒரு பிரச்சினை அல்ல. சில விசயங்களை ரகசியமாக வைத்து செயல் படவேண்டும். ஏன் இந்த அணுகுமுறை. நீங்கள் எல்லாம் இஸ்ரேலிடம் கற்று கொள்ளவேண்டும். அரசாங்க ரகசியம், செயல்பாடுகள் பொதுவாக வெளியில் விமர்சனம் செய்யபடுவது, ஜனநாயகம் என்ற போர்வையில் எல்லாம் கேலி கூத்தாகிறது. கவனமும் பொறுமையும் எல்லோருக்கும் வேண்டும்.
by p nanbhan,chennai,India 29-03-2010 19:06:36 IST
'காங்கிரஸ் காரனை சந்தோசப்படுத்த கலைஞரின் விசுவாசம்.' 'விடுதலை பண்ணுங்கையா. ரொம்பத்தான் நீதியை நிலை நாட்ட வந்துட்டாங்க.' மிகவும் முட்டாள் தனமான கருத்துகள்.
by Mu செல்வராஜ் பிரபு ,Gaborone,Botswana 29-03-2010 19:01:09 IST
Good Decision.
by S பிரகாஷ் ,Jayankondam,India 29-03-2010 18:56:25 IST
தண்டனை போதும், விடுதலை செய்து விடுங்கள். அவள் குழந்தைக்காக,நளினி தவறை வுணர்ந்து விட்டார். அதனால் நாம் மன்னிப்பதே மனித தர்மம்.
by m muthuvel,tirupur,India 29-03-2010 18:56:14 IST
She is a killer... 19 years of imprisionment is wrong judgement. it has to be 190 years... arise no such issue like realsing her.
by S ராம்,Chennai,India 29-03-2010 18:52:50 IST
மும்பை குற்றவாளி அப்சால் மட்டும் ஏன் கோடி கணக்குல செலவு பண்ணி பாது காக்கணும் ?...ஒரு கொலை (Rajiv) = 165 ???( murder by apsaal...one family is not equal to 165 families????? so??? decide and let her go....anywhere she wants to spent rest of the life
by mr bala,madurai..625016,India 29-03-2010 18:48:21 IST
கவர்மென்ட் கேன் ரிலீஸ் பிரோம் தி ஜெயில்
by B Purushothaman,Kinshasa,Zaire 29-03-2010 18:47:01 IST
நாளைக்கு மும்பை தீவிரவாதி இதை முன் உதாரணம் காட்டி எதிர் காலத்தில் விடுதலைக்கு முயற்சிப்பான் அதற்கு நமது அரசியல் வாதிகள் உடன் இருப்பார்கள் ..ஆனால் நளினிய விட்டுடலாம்
by mr bala,madurai,India 29-03-2010 18:43:52 IST
ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு சாகும் வரை ஜெயிலில் போடவேண்டும் என்றால் இலங்கையில் பல லட்சம் மக்களை கொல்ல ஆயுதம் கொடுத்து சதித்திட்டம் செய்தவர்களுக்கு எத்தனை வருடம் ஜெயில் தண்டனை?காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
by V Mic,Singapore,India 29-03-2010 18:43:05 IST
Law ever fails
by P.S Venkatanarasimhan,Karur,India 29-03-2010 18:41:46 IST
இவரை விடுதலை செய்தால் மீண்டும் பல அரசியல் தலைவர்களை கொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
by K Rajasekaran,chennai,India 29-03-2010 18:35:44 IST
இது சிறந்த முடிவு
by N பழனிசாமி ,Pondicherry8,India 29-03-2010 18:35:38 IST
First of all Rajiv is not a prime minister. He is a prime minister candidate. If anyone clearly know abt the history, they def. understand her request. The brains behind the incident are free (including cong men). Though Rajiv was a prime minister who punishes him for his decision to send army to sri langa. You people worry abt Gujarat incident and the girls who were affected in Gujarat. The tamil girls in sri langa are animals for you people and we can send army and gave army support to kill them.
by V Suresh,Chennai,India 29-03-2010 18:32:19 IST
தூக்கிலிடாமல் எதற்கு இந்த வெட்டிப் pachchu
by a ravi,Doha,India 29-03-2010 18:31:15 IST
Hope law has done its duty. But why law left her live even these many number of reasons for not to live outside JAIL.
by K Rajasekar,RasAlKhaimah,UAE,India 29-03-2010 18:24:18 IST
ayil thandanayae sariyana theerpu kidaiyathu. maranathandanai than sariyana theerpu. appo than yarum thappu saiya payapaduvanka.
by R vasan,dubai,UnitedArabEmirates 29-03-2010 18:23:46 IST
நளினி ஒரு பிரச்சினை அல்ல. சில விசயங்களை ரகசியமாக வைத்து செயல் படவேண்டும். ஏன் இந்த அணுகுமுறை. நீங்கள் எல்லாம் இஸ்ரேலிடம் கற்று கொள்ளவேண்டும். அரசாங்க ரகசியம், செயல்பாடுகள் பொதுவாக வெளியில் விமர்சனம் செய்யபடுவது, ஜனநாயகம் என்ற போர்வையில் எல்லாம் கேலி கூத்தாகிறது. கவனமும் பொறுமையும் எல்லோருக்கும் வேண்டும்.
by T.N. Subramaniyan,TIRUNELVELI,India 29-03-2010 18:21:52 IST
A wise decision by the comittee and the Tamil Nadu government. Death penalty has already been reduced to Life imprisonement.Let she serve the penalty for murdering a great countries great leader.
by T Thannappa Narayanan,CantonMI,UnitedStates 29-03-2010 18:21:23 IST
பெண் என்பதற்காக சோனியா மன்னித்ததே தவறு... அவருக்கு கணவன் ஆவதற்கு முன்பே ராஜீவ் இந்தியர்களின் சொத்து... நளினியை மன்னிக்க வேண்டியது மக்கள் தான்.... இவளை தூக்கில் இடுங்கள்... இதையே முன்னுதாரணம் காட்டி பெண்களை வைத்தே கொலை செய்வார்கள் பிற்காலத்தில்.... படித்தவள் எதற்கு கொலைகாரர்களுக்கு இடம் தந்தாள்... கொலைகாரர்களுக்கு, சதிகாரர்களுக்கும் சிக்கன் பிரியாணியும் சொகுசு சிறையும் தந்தால் இப்படி தான்.....
by S Sadasivam,Nilai,Malaysia 29-03-2010 18:19:25 IST
இது ஆலோசனை குழுவின் அறிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள்க்கு பயந்து தமிழக அரசு தயாரித்த அவசர அறிக்கையாகதான் இருக்க வேண்டும்
by m மாணிக்கம்,manikkampalaym,India 29-03-2010 18:14:24 IST
எல்லாம் அய்யா, காங்கிரஸ்க்கு வக்கிர ஐஸ். முழுக்க முழுக்க ஜால்ரா. இங்கே நளினிக்கு எதிரா கமெண்ட்ஸ் பண்ணின நிறைய பேர் தமிழ் அறிந்த சிங்களவனே.
by R சிவா,Hyderabad,India 29-03-2010 18:13:02 IST
what is this ? இந்த ஒரே வழக்கில் எவ்வளவு செய்தியா ? எத்தனை ஆண்டுகள் படிப்பது. சட்டம் சரில்லை.
by P சித்தார்த்தன்,Doha,Qatar 29-03-2010 18:11:45 IST
We are not aware why we have to very kindful to the convict that too helping the murder of country's premier. In no other county this type of topic is debatable. It is not the question that the convicted is educated or illiterate rich or poor but nobody is above law.
by s Aswiniyer,peelameducoimbatore4,India 29-03-2010 18:06:05 IST
IT WAS NOT AN ORDINARY CRIME. WE LOST OUR POWERFUL AND HARMLESS LEADER WHICH IS HIGHLY IRREPAIRABLE AND ALSO UNBEARABLE.. I DON'T KNOW HOW SOME PEOPLE SUPPORT MS. NALINI FOR HER CRIME. FIRST OF ALL THEY SHOULD BE PUNISHED WITH CAPITAL PUNISHMENT. IN NO COUNTRY SUCH A PEOPLE WILL LIVE EXCEPT IN INDIA ESPECIALLY IN TAMIL NADU. I DON'T KNOW WHETHER THEY ARE HUMAN BEINGS. THRY ARE BARKING FOR THE COMPLIMENTS THEY RECEIVED. THAT IS ALL I CAN SAY.
by G SUNDARARAMAN,T,India 29-03-2010 18:02:23 IST
காங்கிரஸ் காரனை சந்தோசப்படுத்த கலைஞரின் விசுவாசம்.
by P. jagadish,pondicherry,India 29-03-2010 18:02:20 IST
நாட்டின் இளம் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் நேரடி தொடர்புடைய நளினியை விடுதலை செய்ய முடியாது என்ற கருணாநிதி அரசின் வாதம் ஏற்புடையதுதான். நளினியை தியாகி போல மீடியாக்கள் சித்தரிப்பது தவறு.
by N பாலகிருஷ்ணன்,Ramnad,India 29-03-2010 18:01:07 IST
arugil america thoodharagam iruppadharkum nalini-kum enna ayya sambandham?indians-i yar vendumanalum nottalam...aana amrica-vai yarum notta koodahu.adey....paavigala..indivila indians-ku munnurimai kudungappa.kodumai da sami.. subramaniyasami-nnu oray oru sumariyadhaikarar irundhar.avarum ippadiya?
by d david,india,India 29-03-2010 17:58:40 IST
அய்யா கருணாநிதி அவர்களே... உங்களின் தமிழருக்கான சேவை தொடரட்டும்.. என்ன தவம் செய்ததோ இந்த தமிழர் பூமி உன்னை பெற்றதால்......
by ta வஞ்சபுகல்சி அணி ,trichy,India 29-03-2010 17:57:19 IST
I AGREE WITH THE COMMENTS OF MR.G.PANDIYAN OF DOHA.
by G SUNDARARAMAN,TRICHY,India 29-03-2010 17:54:15 IST
கொலை செய்ய உடந்தையாக இருந்த பொழுது, ராஜீவுக்கும் பொண்டாட்டி, குழந்தைகள் இருந்தார்கள், அவர்கள் தந்தையை இழக்க நேரிடும் என்று உரைக்கவில்லையா? தவறு செய்தவன் திருந்தி ஆகணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.
by jay kay,indian,India 29-03-2010 17:50:32 IST
விடுதலை பண்ணுங்கையா. ரொம்பத்தான் நீதியை நிலை நாட்ட வந்துட்டாங்க.
by nandan,woodlands,Singapore 29-03-2010 17:48:04 IST
நளினிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரியே, ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்ய தூண்டிய இந்திய சக்தி எது என்று வெளிபடையாக கூற வேண்டும். அதன் உண்மைத்தன்மையை பொருத்து நீதி வழங்க வேண்டும். i
by Mr Ashiq,Madurai,India 29-03-2010 17:42:15 IST
ராஜீவ் அவர்கள் நமது ஒப்பற்ற தலைவர். அவரின் உயிர் இழப்பு தாங்க முடியாத ஒன்று. இன்று துபாயில் ஒரு பாகிஸ்தானி கொலைக்கு 27 இந்தியர்க்கு மரண தண்டனை. ஆனால் ராஜீவ் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை. என்ன கொடுமை. அன்பர்களே நளினிக்கு ஆதரவாக நிலி கண்ணீர் வடிக்காதீர்கள்...
by k மொக்கசாமி,indonesia,Indonesia 29-03-2010 17:40:25 IST
தமிழக அரசின் மிகச் சரியான முடிவு. ராஜீவ் கொலை சம்பந்தமாக, தலைமை புலனாய்வு அதிகாரி மதிப்பிற்குரிய ரகோத்தமன் அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தில் நளினி செய்த சதி பற்றி விரிவாக விளக்கியுள்ளார். நாட்டின் முன்னாள் பிரதமரை, துளியும் இரக்கமில்லாமல் சதி செய்து கொன்ற இவருக்கு, இரக்கம் காட்டுவது கொடூரம். தற்போது உலகெங்கும் தீவிரவாதிக்கான போர் நடந்து வருகிறது. தீவிரவாததிற்கு மிகப் பெரிய விலை கொடுத்துவரும் நாடு இந்தியா. நளினியை விடுதலை செய்தால், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு, தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று பாகிஸ்தானிடம் இந்தியா கேட்க முடியும்? ஏற்கனவே, பார்லிமெண்டுக்கு குண்டு வெய்த அப்சல் குருவை தூக்கில் போடாமல் அரசியல் செய்து வருகிறோம். இந்த அழகில் நளினியை வெளியே விட்டால், உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வாயால் சிரிக்க மாட்டார்கள்.
by V Bala,Chennai,India 29-03-2010 17:35:34 IST
Killing a animal itself it is too bad, She killed a human being. She need to be hanged in front of everybody. So that nobody should not think about killing a human. We indians are not here to kill by you lady. You could have think about these things before you think about killing a human. You suffer and You let your Family suffer.
by j pre,,Bangalore,India 29-03-2010 17:34:56 IST
அன்று இவர்கள் செய்த தவறு இன்று பல உயிர்கள் போக காரணம் ஆனது. இவரை தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும். ஏன் தாமதம் என்பது தான் தெரியவில்லை.
by S senthil,Madhurai,India 29-03-2010 17:34:22 IST
It is inhuman to keep a person in prison, after s/he completed the sentence. I don't know why those so called 'educated' judges and lawers can not understand another educated person. It iher right to be freed and so may Nalini be freed from prison.
by HS Lazar,Ja-ela,SriLanka 29-03-2010 17:30:21 IST
RELEASING NALINI WILL NOT ONLY PRESENT A LAW & ORDER PROBLEM FOR TAMILNADU BUT WILL GIVE OPPORTUNITY FOR SEPARATIST ELEMENTS IN INDIA. IT WILL LEAD TO TERRORIST ACTIVITIES TO ONCE AGAIN FLURISH HERE AND WILL BE A HEAD ACHE FOR THE WHOLE COUNTRY.
by S raj,spring,UnitedStates 29-03-2010 17:28:32 IST
There is a important judgement from sharjah court to-day,it says all the accused (27)should be hanged in public for a murder. what they did last yearthe case was related to bootleggers,dividing their area to sell illegal baned liquors.in Nalini case even after 19 years the justice is still hanging,infront of human violation.reasons from advocate general are unacceptable.
by S SYED K H,DUBAI,India 29-03-2010 17:28:15 IST
சரியான முடிவு.
by G. JEROLD,k.k.dist,India 29-03-2010 17:11:23 IST
இந்திய நாட்டினுடைய ஒரு பிரதமரை கொன்றவருக்கு மன்னிப்பா? அதுவும் தமிழ்நாட்டில் வைத்து கொலை செய்ததன் மூலம் தமிழ் நாட்டுக்கே மானக்கேடு ...இதை பக்கத்துக்கு நாட்டினர் கேள்விபட்டால் என்ன ஆகும்....நாம் இன்னும் நிறைய பாரத பிரதமர்களை இழக்க நேரிடும், இந்த விசயத்திலே ஈவு,இரக்கம் வேண்டாம்..சட்டங்களை மிக கடுமையாகுங்கள் கண்டிப்பாக தவறுகள் குறையும்.
by M நிவாஸ் கான் ,jeddah,SaudiArabia 29-03-2010 17:09:23 IST
கலைஞர் எடுத்த மிக சரியான முடிவு. புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வைகோ நெடுமாறன் போன்ற காசுக்கு கூச்சல் போடுபவர்களுக்கு இது சரியான பதில். நம் ஊரில் இறந்து போன ராஜீவுக்கு இது மிக சரியான அஞ்சலி. எந்த தவறும் நடக்காதது போல் பேசும் விடுதலைபுலி ஆதரவாளர்களுக்கு இது சரியான பாடம்.
by R RAM,POLLACHI,India 29-03-2010 17:08:41 IST
பயங்கரவாத குற்றங்கள் செய்த எல்லோரையுமே உடனே தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனைகளே வராது. பயங்கரவாத குற்றங்களும் குறையும். சும்மா வழவழான்னு ஏனய்யா இழுத்துக்கிட்டு இருக்கிறீங்க? இதுவரை தூக்குத்தண்டனைக் கொடுக்கப்பட்ட பயன்கரவாதிகளை எல்லாம் ஒரே இடத்தில் வைத்து ஒரே நேரத்தில் தூக்கிலிட்டால் அதை மீடியா மூலம் பப்ளிசிட்டி கொடுத்தால் நிச்சயம் பயங்கரவாத செயல்கள் குறையும்.
by N Mohamed Ismail,Madurai,India 29-03-2010 17:07:25 IST
மிஸ்டர் மோகன் அவர்களுக்கு...... எதையாவது எழுதவேண்டும் என்பதுக்காக எழுத வேண்டாம் ! நடந்ததை (ராஜீவ் கொலை) உங்களுக்கு மிகவும் நெருக்கமானவருக்கு நடந்ததாக நினைத்து பாருங்கள்
by S Magesh,Chennai,India 29-03-2010 17:03:57 IST
விடுதலை என்ற பேசுகே எடம் இல்லை , தயவு செய்து விடுதலை என்ற கருத்தை இங்கு பதிவு செயதீர்கள். செத்தவர் ஒரு இந்தியர் , ப்ளீஸ்.
by r இந்தியர்,chennai,India 29-03-2010 17:02:20 IST
உள்ளே இருப்பதால் அவளை வெளியே விட முடியாதுன்னு சொல்லும் நண்பர்களே.. வெளியே திரியும் சதிகாரர்களை உள்ளே அடைக்க முடியுமா? அவர்கள் பணபலம் உள்ளவர்கள் என்பது தடுக்கும் அல்லவா!!!மகளை பிரிந்து வாழும் கொடுமைக்கு.. பதில் அவளுக்கு மரண தண்டனையே கொடுத்து இருக்கலாம்... :)
by unmai தமிழன் ,dubai,India 29-03-2010 16:56:49 IST
Pls release her from jail, already spend 19 yrs is too much, If india is a peace country,then release it. Past is past.....can't deny Rajiv's IPKF guilty in 1987 to tamilians in Eelam. Life once,its all live in peace.
by s selva,newdelhi,India 29-03-2010 16:47:32 IST
சட்டம் ஒழுங்காக செயல் படுகிறது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.
by S கணேசன்,Hosur,India 29-03-2010 16:44:53 IST
this is the voice of Tamils traitor Karunanidhi. he is trying to be satisfy Congress.
by mr Mohan,Chennai,India 29-03-2010 16:30:05 IST
ஒரு நாட்டின் பிரதமரையே படுகொலை செய்த பெண்ணை விட்டு வைத்து பார்த்து கொண்டிருப்பது நம் நாட்டில்தான். ஒரு பிரதமருக்கே இந்த நிலைமை என்றல் நம்மை போன்ற சாதாரணமான மக்களுக்கு நீதியே இந்த நாட்டில் கிடையாது!!!
by A பாலன்,வனவாசிசேலம்,India 29-03-2010 16:23:05 IST
pona poguthu viduthala pannungaiya pavam 18 varusam jaillukullayea kedanthurukku
by m sathiaventhan,chennai,India 29-03-2010 16:21:59 IST
வேணும்னா சென்னையை விட்டு வேறு எங்காவது தங்கட்டும். பாவம். இத்தனை தண்டனை போதும். மனித நேயமுடன் விடுதலை செய்யுங்கள்.
by dhaamu,muscat,India 29-03-2010 16:17:39 IST
நளினியை விடுதலை செய்ய கூடாது .இவரை சாகும் வரை ஜெயிலில் போடவேண்டும் . இவரை விடுதலைசெய்தால் அதுவே முன் உதாரணம் ஆகிவிடும் .
by G Pandian,DOHA,Qatar 29-03-2010 16:14:17 IST
i think this punishment is enough.give a chance to change her lifestyle
by s sripiya,chennai,India 29-03-2010 16:12:44 IST
சரியான முடிவு. சந்தர்ப்ப வசத்தால் கொலை , குற்றம் செய்தவர்க்கு தான் மன்னிப்பு திட்டமிட்ட சதியில் கொலை செய்தால் அல்ல. சிறையினில் படிப்பு, குழந்தையை தன்னோடு வைத்திருந்து வளர்த்தது, அவ்வப்போது கணவன் மற்றும் தாயை சந்தித்தது, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றிய அரசாங்கத்தின் இறக்கம் என்று பல சலுகை பெற்றுள்ளார். இவரை சிறையிலிருந்து விட்டு விடலாம் தான். ஆனால் தந்தையை காணாமல் வளந்த அந்த குழந்தைகள், கணவனை இழந்து இருபது வருடங்களாக வாடும் அந்த மனைவிக்கும் எப்படி இழந்து போன நாட்களை திருப்பி தருவது ? . ஒரு நாட்டின் முன்னால் பிரதமரை கொன்றால் இருபது வருடங்கள் மட்டும் சிறை என்றால் உலகில் எவனாவது இந்தியாவையும் நம்மையும் மதிப்பானா ? நளினி சம்பந்தப்பட்டது சாதாரண விடயமில்லை. திரும்ப கிடைக்காத , மீட்க முடியாத , சரி செய்ய முடியா பிழை . அதற்கான தண்டனையும் கூட அதே தன்மையில் தான் இருக்க வேண்டும். பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்கிறாரே இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகாவது ராஜீவை உயிரோடு கொண்டு வர முடியுமா??
by D சூர்யா ,Chennai,India 29-03-2010 16:12:23 IST
இந்த பெண்மணியை உயிரோடு விட்டு வைத்ததற்கு முதலில் அவள் சந்தோசப்பட வேண்டும்.
by S Gunaseelan,Dammam,SaudiArabia 29-03-2010 16:09:22 IST
the person who was told to kill rajiv is dead and it is annouced by SL govt but still keeping nalini in jail is no point. incase the govt is saying tht it will become problem, she is also human being and being separated from her daughter for so many years its not good.
by H குணசேகரன்,sheffield,India 29-03-2010 16:08:39 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக