ஞாயிறு, 1 நவம்பர், 2009

கிழக்கு மாகாணத் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்: இலங்கை ராணுவம்



கொழும்பு, அக். 29: இலங்கையில் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும்இடையே நடந்த கடும் போரை அடுத்து வீடுகளை விட்டு வெளியேறிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் கடும் துயரப்படுவதாக இலங்கை அரசுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து உலக நாடுகளைத் திருப்திப்படுத்த முகாம்களில் உள்ள தமிழர்களில் ஒரு பகுதியினரை அவர்களது சொந்த இடங்களுக்கு இலங்கை ராணுவம் அனுப்பி வருகிறது. இதுவரை 90 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தமிழ் அமைப்புகள் அதை மறுக்கின்றன. இந்த நிலையில், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக ராணுவம் கூறியுள்ளது. கடைசியாக 3217 குடும்பங்களைச் சேர்ந்த 9524 பேர் வவுனியா முகாமிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். திரிகோணமலை, அம்பாரை, மட்டகளப்பு மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் மாற்று வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்வாதாரங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை ராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஸ்ரீநாத் ராஜபட்ச கூறினார். அவர்கள் விவசாயம், மீன்பிடித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவதற்கு உரிய உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துக்கள்

கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் எட்டு நாளைக்கு! இவர்களின் பொய் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்! கிருட்டிணமூர்த்தி அம்மையாரே! நீங்கள் வதை முகாம் ஒன்றில் அடைபட விரும்புகிறீர்களா?

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2009 3:26:00 AM

ஹலோ கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம், இப்படித்தான் உண்மையை போட்டு உடைப்பதா

By Raj
10/31/2009 7:00:00 PM

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் ...

By abdul.com - dubai
10/31/2009 1:19:00 PM

Telling more & more lies to get promotion.Dirty budhist country

By stephen
10/31/2009 12:08:00 PM

naye adi

By kumar
10/31/2009 11:32:00 AM

சிறீ ரஙத்தில் உள்ள கிருஷ்ணமூத்தி . கருணா நிதியின் வால். சிங்கள ராஜபக்ஸ்ஹவின் வால். இதுகளை திட்டி பலனில்லை.

By zoyza
10/31/2009 9:17:00 AM

கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீரங்கம் தமிழன் இல்லை சிங்களவன் நாயய்

By usanthan
10/31/2009 4:21:00 AM

Dai NAYI கிருஷ்ணமூர்த்தி.

By sandiyar
10/30/2009 5:09:00 PM

mr. krishnamoorty sri rangam. ltte tamilarkaluku unmayana paathukaapuu. purinjuuuuutho illayooooooooo

By nellai kali
10/30/2009 2:34:00 PM

தமிழர்களின் முகாம்களில் பெண்கள் பின்னால் ஒளிந்திருக்கும் விடுதலை புலிகளை முற்றிலும் அளிக்காமல் இந்தியாவின் கட்டளைக்கு பயந்து தமிழர்களை அங்கிருந்து குடியமர்த்துவது இலங்கை ராணுவம் பல்வேறு இழப்புகளுக்கு பிறகு பெற்ற வெற்றியை இழப்பதற்கு சமமாகும். இது அவர்களுக்கு மட்டும் இலபில்லை இந்தியாவின் அமைதியையும் இது கெடுக்கும்.

By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
10/30/2009 1:20:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/30/2009 11:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக