நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.
எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது.
தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் குறித்த https://tgteelection.org/tamil/ இணையத்தளத்தின் வழியே பெற்றுக் கொள்ளலாம்.
நாடுவாரியான தேர்தல் ஆணையங்களின் தொடர்பு விவரங்கள்:
இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் ! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கொழும்பு, மார்ச்சு 23 இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட இறுதிப் போரில் 1,40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவை அனைத்துக்கும் அப் போதைய இலங்கை அதிபர் இராசபக்சேவும் முதன்மைக் காரணமாக இருந்தார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இலங்கை அரசுத் தரப்பு தகவலின்படி இறுதிப் போரின் போது 20,000 தமிழர்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை நாடாளு மன்றத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கை இனப்படுகொலைக் குற்றம் குறித்து முழுவதும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். இலங்கை அரசமைப்புச் சட்டம், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என்று கூறுவது தவறானது என்றார்.
வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு 24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது.
தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
கருத்துரை:
முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),
முனைவர் ம.இராசேந்திரன்(மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம் (துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம்),
முனைவர் ச.சு.இராமர் இளங்கோ (மேனாள் இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்),