சனி, 17 செப்டம்பர், 2011

Periyar by Annaa: பெரியார் எப்படிப்பட்டவர்?

Blog post image #1
கல்லூரி காணாத கிழவர்!
அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாது கிளர்ச்சிக்காரர்!
பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!
யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!
கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லாதவர்!
தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!
ஆரிய மதம், கடவுள் எனும் மடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!
ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது! இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.
சாமான்ய மக்களின் - இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!
தேர்தலா . . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? தூ… அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுபவர்!
சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!
கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!
இவ்வளவு வயதாயிற்று - இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் - ஒரு சர் பட்டம் பெற்றாரா?
ஜெனீவா போனாரா அரசு செலவில்?
அமெரிக்கா போனாரா அரசாங்கத்தின் செலவில்?
எதைக் கண்டார்?
எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!
இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!
இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்? தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்! எப்படி?
எப்படி எனில், அவர் ஒரு மாயாவி! ஜால வேடிக்கைக்காரர்!
வேடிக்கை பேசாதே என்று கூறுவீர்! வேடிக்கையல்ல நாம் கூறுவது!
தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?
மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா, எப்படி? என்று கேட்பான்.
பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!
அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் - விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.
மனி மேலே மாசு! மடு மேலே பாசி! வயலிடையே களை!
தமிழர் - அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!
மாசு துடைத்திடுக - பாசி போக்கிடுக - களை நீக்குக - கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!
இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் - இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.
அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.
துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு சர் ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.
அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.
அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!
அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!
தமிழன் ஒரு நாட்டுச் சொந்தக்காரன்! தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!
இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!
ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.
இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.
எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!
எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!
அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!
அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!
-அறிஞர் அண்ணா( திராவிடநாடு - 03.06.1945)

வீட்டில் விளக்கேற்றாமல் வங்கதேசிகள் போராட்டம்

வீட்டில் விளக்கேற்றாமல் வங்கதேசிகள் போராட்டம்

தினமணி நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 12, 2011


டாக்கா,செப்.11: வங்கதேசத்தில் இந்திய நிலப்பகுதிகள் என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை வசித்து வந்த தங்களுக்கு வங்கதேசக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கானோர் சனிக்கிழமை இரவு வீட்டில் விளக்கேற்றாமல் இருட்டிலேயே வசித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவும் இந்த எதிர்ப்பு தொடரும் என்று அறிவித்தனர்.  நாடு சுதந்திரம் அடைந்தபோது (1947) இந்தியாவுக்கும் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலத்தைப் பிரிப்பதில் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேண்டும் என்றே சில குளறுபடிகளைச் செய்துவிட்டனர்.  அதன்படி இந்திய நிலப்பகுதி தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளைப் போல நிலப்பகுதியிலேயே பிரிக்கப்பட்டன. இதனால் வங்கதேசிகளும் இந்தியர்களும் மற்றவர் நிலப்பகுதியைக் கட்டாயம் கடந்தாக வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான சமயங்களில் மக்கள் தங்களுக்குள் அனுசரித்துப் போனாலும் ஏதேனும் முரண்பாடுகள் அரசுகளுக்குள் ஏற்படும்போது இந்த மக்களின்பாடு திண்டாட்டமாகிவருகிறது.  எல்லை காப்புப் படையினர் இவர்களைத் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யும் அவலம் அரங்கேறியது. இதைத் தீர்க்கத்தான் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றபோது இருவருக்கும் நிலப்பரப்பு இழப்பு இல்லாமல் எல்லைகளைப் பிரிக்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அப்படி வங்கதேசத்தில் சேர்க்கப்பட்ட தங்களுக்கு வங்கதேசக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி, வங்கதேசிகள் விளக்கை ஏற்று மறுத்து கிளர்ச்சி செய்தனர். இவர்கள் இதுவரை நாடற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தை சரியாகப் பதிவு செய்தும் பயனில்லை!

நிலநடுக்கத்தை சரியாக பதிவு செய்தும் பயனில்லை!

தினமணி நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 12, 2011


டோக்கியோ, செப்.11: ஜப்பானை மார்ச் 11-ம் தேதி உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கத்தை அரசின் வானிலை மையத்தைவிட தனியார் அமைப்பு சரியாக அளவிட்டது. ஆனால் அது தகவல் தெரிவிக்கத் தாமதம் செய்ததால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுவிட்டது.  நகாணோ என்ற இடத்தில் மட்சுஷிரோ நிலநடுக்க கண்காணிப்பு மையம் இருக்கிறது. மார்ச் 11-ல் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நிமிஷங்களுக்குப் பிறகு அங்கே அது 9.1 அலகாக ரிக்டர் அளவுமானியில் காட்டியது.  அந்த மையம் வெளிநாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பதிவு செய்வதற்கானது.  ஆனால் ஜப்பானிலேயே ஏற்பட்ட நிலநடுக்கம் அதில் பதிவான நிலையில்கூட அதை ஜப்பானிய அரசு நிறுவனங்களுக்கு சொல்லவில்லை.  அதற்கு 2 காரணங்கள். வெளிநாடுகளில் நடைபெறும் நிலநடுக்கங்களைத்தான் தங்கள் அமைப்பு பதிவு செய்ய வேண்டும் என்பதால் இதை ஜப்பானிய நிலநடுக்கத்தைப் பதிவு செய்வதற்கான அலுவலகத்தார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தது.  9.1 அலகு என்றால் மிகப்பெரிய நில நடுக்கம் என்பதால் தங்கள் கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நிலைய அதிகாரி தவறாக நினைத்துவிட்டார். மிகச் சரியாகப் பதிவு செய்திருந்தும் அவருக்கு தன்னம்பிக்கை இல்லாததால் முக்கியமான இந்தத் தகவல் அரசை எட்டவில்லை.  அதே வேளையில் அரசு நியமித்துள்ள மற்றொரு மையத்தில் இந்த நிலநடுக்கம் சரியாகப் பதிவாகவில்லை. எனவே அவர்கள் அதன் தன்மையை முதலில் குறைத்து மதிப்பிட்டு 7.9 அலகுதான் என்று அறிவித்தனர். கடலில் அலைகள் 3 மீட்டர் முதல் 6 மீட்டர் வரையில் அதாவது சுமார் 10 அடி முதல் 18 அடி வரை மட்டுமே எழும்பும் என்று எச்சரித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் சரியாக மீண்டும் கணக்கிட்டு கடலில் அலைகள் 30 அடி உயரத்துக்கு மேல் எழும்பும் என்று எச்சரித்தனர். அதற்குள் விபரீதம் நேர்ந்துவிட்டது.  ஜப்பானில் உள்ள நிலநடுக்கப் பதிவு கருவிகளின் தரம், மிகக்குறைந்த நடுக்கங்களைப் பதிவு செய்யத்தான் ஏற்றவை என்றும் மிகப்பெரிய நில நடுக்கங்கள் என்றால் கணக்கிட்டுத்தான் சொல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  வாரம் ஒரு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் நாட்டிலேயே இந்தக் குறை என்றால் நம்மைப்போன்ற நாட்டில் என்ன நடக்குமோ?  இனி தலையணை இல்லாமல் வெறும் தரையில் காதை வைத்துத் தூங்க வேண்டியதுதான்!

Bridges of China: பின்னல் பாலம்

பின்னல் பாலம்

பதிவு செய்த நாள் : September 16, 2011


சீனா என்றதும் நம் நினைவிற்கு வருவது சீனப் பெருஞ்சுவரும் மக்கள் தொகையும் தான். வளர்ந்துவரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டடக் கலையிலும் சிறந்து வருகின்றனர்.
பின்னிப் பிணைந்திருக்கும் நடைமேம்பாலம் ஒன்றின் கணிணிப் புகைபடங்கள் கீழே…







கனேடியப் பிரதமரின் எச்சரிக்கையால் சிறிலங்கா ஏமாற்றம்


கனேடியப் பிரதமரின் எச்சரிக்கையால் சிறிலங்கா ஏமாற்றம்

சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
ஒட்டாவாவில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட்டை, கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ரினிட்டாட் டுபாக்கோவில் நடைபெற்ற கொமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாட்டில், 2013இல் கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் கனேடியப் பிரதமர் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏமாற்றமளிப்பதாக சிறிலங்கா தூதுவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டான்; சுப்பிரமணிய சாமிக்கு கொழுப்பு எதனால் வந்தது :

திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டான்; சுப்பிரமணிய சாமிக்கு கொழுப்பு எதனால் வந்தது :

கள்ளத்தோணியில் போனவன் என்று உன்னை ஏளனம் செய்தார்கள்.  நல்ல தோணியில் போனவன் எல்லாம் காட்டிக்கொடுக்க போனான்.   கள்ளத்தோணியில் போன நீதான்(வைகோ) அந்த நாட்டை கட்டிக்கொடுக்க போகிறாய்.
சும்மா வரமாட்டான் பெரியார்தாசன்.  பெரியாரின் பிரதிபலிப்பு நீ( வைகோ).  என்னை கேட்டார்கள்…என்ன பெறுவதற்கு மதிமுகவிற்கு போகிறீர்கள் என்று கேட்டார்கள்.    தமிழினத்திற்கு மானம் தேடித்தர போகிறேன் என்று சொன்னேன்.  
அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன்.  எனக்கு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது.   உலக இலக்கியம் எல்லாம் படித்தவன்.  எனக்கு எதுக்கு அரசியல் என்று திமிராக இருந்தேன்.    திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டதால் எனக்கு கொஞ்சம் உரைத்தது.    அதனால் அரசியலுக்கு வர முடிவு செய்தேன்.  
விமானத்தில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு தலைவரிடம் பேச்சு கொடுத்தேன்.   அவர் எதுவும் பேசத்தெரியாததால் ஊமை போல் உட்கார்ந்திருந்தார்.   இவரெல்லாம் எங்கே மக்களுக்காக பேசப்போகிறார்.
 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்து வாதாட ராம்ஜெத்மலானி வந்தார்.   நான் அந்த நிகழ்வை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தேன்.   
மூவரின் தூக்கு ரத்து  ஒத்திவைக்கப்பட்டது.   ராம்ஜெத்மலானி வந்தார்.  இவர் வந்தால் வெற்றி என்று எதிர்பார்த்ததுதான்.  ஆனால் இவரை யார் அழைத்து வந்திருப்பார்.   ரொம்ப பெரிய ஆளாச்சே.   இவரை யார் அழைத்து வந்திருப்பார் என்று எனக்குள் கேள்விகள்.   அப்போது ராம்ஜெத்மலானியிடம் எல்லோரும் நன்றி சொல்ல,  அதற்கு அவர்,  உங்கள் நன்றியை வைகோவுக்கு சொல்லுங்கள்.  அவர்தான் இதற்கு காரணம் என்றார். 
அப்போதே நான் முடிவெடுத்துவிட்டேன்.  இனியும் தாமதிக்கக்கூடாது.   தமிழினத்திற்கு இப்படி போராடிக்கொண்டிருக்கும் தமிழனிடம் சென்றுவிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.
அவர் மேலும்,   ‘’ஒரு தமிழன்…சுப்பிரமணிய சாமி….. தமிழ் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் ஆங்கிலத்தில் பேசுகிறார்.   சுப்பிரமணிய சாமிக்கு இந்த கொழுப்பு எதனால் வந்தது.   அதனால்….வந்தது.   அந்த கொழுப்பை இதனால்தான் அடக்க முடியும்’’ என்று பேசினார்.

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் ! சிறிலங்காவுக்கு தொடர் நெருக்கடி

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் ! சிறிலங்காவுக்கு தொடர் நெருக்கடி

சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் ‘இலங்கையின் கொலைக்களம்’ சனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சிபீடத்தில் (State House) திரையிடப்பட்டது.
Amnesty International (அனைத்துலக மன்னிப்புச்சபை) ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளான சுபா சுந்தரலிங்கம் மற்றும் வைத்திய கலாநிதி ஜெராட் ஃபிரான்சிஸ் ஆகியோரது பங்களிப்புடன் இவ்வணப்பட திரையிடல் இடம்பெற்றுள்ளது.
Massachusetts மாநில ஆட்சிபீட உறுப்பினர்கள், உயர்கல்விச் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆவணப்பட திரையிடல் தொடர்பிலான முன்னறிவுப்புகள் ஏற்கனவே மாநில ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்ட நிலையில் இதன்வழி பொதுமக்களும் இத்திரையிடலை காணவந்திருந்தனர். Massachusetts ஆட்சிபீட உறுப்பினரான ஜேசன் லூவிஸ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
திரையிடலைத் தொடர்ந்து கருத்துரைத்த Massachusetts மாநீல ஆட்சிபீட ஜேசன் லூவிஸ் அவர்கள் சிறிலங்கா அரசினால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையைக் கோரியும் ஐ நா நிபுணர் குழுவின் பரிந்துரையை வலியுறுத்தியும் State Houseசில் தீர்மானமொன்றை விரைவில் நிறைவேற்றவுள்ளதாக தெரிவித்தார்.
ஆவணப்படம் பெரும் தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில் தொடர்ந்து சபையோர் கேள்விகளுக்கு கலாநிதி ஜெராட் ஃபிரான்சிஸ் தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தின் நியாப்பாடுகளை முன்னிறுத்தி பதிலுரைத்தார்.
இதேவேளை கெல்லரி கிளின்ரன் அம்மையாரின் கவனத்துக்கு சமர்பிக்கும் நோக்கில் நீதிகோரும் கையொப்பங்கள் அனைத்துலக மன்னிப்புச்சபையினால் சபையில் வேண்டப்பட்டது.
நாதம் ஊடகசேவை

செருமனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !


ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்றுள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதிய அரசவை உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளின் அறிமுகஅரங்கம் ஜேர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17-09-2011) மதியம் 14:00 மணிக்கு Gartenverein NORA , Eberstr 46 , 44145 Dortmund இடத்தில் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், பிரதிஅவைத் தலைவர் சுகன்யா புத்திசிகாமணி, அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர், தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா, கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.
புதிய அரசவை உறுப்பினர்களது விபரம் :
கனடா :
நிமல் விநாயகமூர்த்தி
வின் மாகாலிங்கம்
ஜெயபாலன் அழகரட்ணம்
சிறிசங்கர் சின்னராஜா
கென்றி கிருபைராஜா
தனபாலன் மார்க்கண்டு
டென்மார்க் :
இளையராஜ் கண்ணன் சிதம்பரநாதன்
ஜேர்மனி :
வாசுகி தனகராஜா
சுப்பிரமணியம் பரமானந்தன்
தணிகா சுப்பிரமணியம்
பிரியதர்சினி மனோகரன்
நோர்வே :
தோமஸ் அலோசியஸ்
பிரித்தானியா :
மணிவண்னன் பத்மநாபன்
நிமலன் சீவரட்ணம்
சொக்கலிங்கம் யோகலிங்கம்
சிவயூசம் சுகுமார்
நாதம் ஊடகசேவை

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

Bharathiya vidhya bhavan schools, cbe, literary functions: பாரதிய வித்யாபவன் பள்ளிகள், கோயம்புத்தூர்- இலக்கிய மன்ற விழாக்கள்

பாரதிய வித்யாபவன் பள்ளிகள், கோயம்புத்தூர்- இலக்கிய மன்ற விழாக்கள்

பதிவு செய்த நாள் : September 13, 2011



கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. (திருக்குறள் 414)
பாரதிய வித்யாபவன் பள்ளிகள், கோயம்புத்தூர்
இலக்கிய மன்ற விழாக்கள்

நாள் :  ஆவணி 28,2042 ***  செப்தம்பர் 14,2011

காலை 7.30 மணி : சிறப்புரை : இரத்தினசபாபதி பள்ளிக்கலையரங்கு

முற்பகல் 10.30 மணி : தொடக்கவுரை : அச்சனூர் பள்ளியரங்கு

தலைமை : திரு ப.ஆழ்வாரப்பன், கல்வி அலுவலர்

சிறப்புரையும் தொடக்கவுரையும் : திரு இலக்குவனார் திருவள்ளுவன்


அன்புடன் அழைப்போர்
செல்வி பெ.குமுதினி
முதல்வர்
பாரதிய வித்யாபவன் பதின்மேனிலைப்பள்ளி
இரத்தினசபாபதிபுரம்
திருமதி கொ.மீரா
முதல்வர்
பாரதிய வித்யாபவன் பதின்மேனிலைப்பள்ளி
அச்சனூர்


pe'sum padam - dinamalar


ப.சிதம்பரத்தை வெறுப்பேற்றிய தமிழக அரசு அதிகாரிகள்!

இதில் எந்தத் தவறும் இல்லை. மாநில அரசிடமிருந்த மிகுதியான பணத்தைச்சுருட்டிக் கொண்டு குறைவான பணத்தைத் தரும் மத்திய அரசு இதுபோன்ற கூட்டம் நடத்துவது மாநில உரிமைக்கு எதிரானது. தேவையெனில் மாநில அரசிடம் அறிக்கை கேட்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். நேரடியாக அதிகாரத்தைச் செலுத்துவது தவறு. வேணும் கட்டைக்கு வேணும்! வெங்கலக்கட்டைக்கு வேணும் என்று பழமொழி ஒன்ற உண்டு. மூவர் விடுதலையை விதிமுறைக்கும் மனித நேயத்திற்கும் மாறாக மறுத்த அடிமை அமைச்சருக்கு இது தேவையான ஒன்றுதான். குறுக்கு வழியில் அமைச்சராகலாம். மக்கள் உள்ளத்தை  ஆள முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ப.சிதம்பரத்தை வெறுப்பேற்றிய தமிழக அரசு அதிகாரிகள்!

First Published : 12 Sep 2011 05:35:46 PM IST


புதுக்கோட்டை, செப். 12: மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள் அன்று நடைபெறும் என உறுதி செய்யப்பட்டது.இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இல்லாததால் கூட்டத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர், வெறுத்துப் போய் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். இதனால் காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாநில அரசின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யும் நோக்கில் சில மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டமாக நடைபெறுவது வழக்கம்.இதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டம் திங்கள் அன்று நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த மாதம் தேதி கேட்டார். அதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.இந்நிலையில், திங்கள் அன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்குக்கு வந்தார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அரங்கு வெறிச்சோடியிருந்தது. கூட்டத்துக்கு ஆட்கள்தான் வரவில்லை என்று பார்த்தால், தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியரே அங்கு இல்லை! அடுத்த நிலை அதிகாரிகளிடம் விசாரித்தால், ஆட்சியர் திடீர் பயணமாக சென்னை சென்றுவிட்டார் என்றனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் ப.சிதம்பரம். தொடர்ந்து இது முக்கியக் கூட்டம், ஆட்சியர் இல்லாமல் நடத்த முடியாது என கடுமையாகக் கூறிவிட்டு வெறுப்புடன் வெளியேறினார் ப.சிதம்பரம்.இதனால், அங்கே திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் செயலைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக குமுறலுடன் தெரிவித்தனர்.
கருத்துகள்


he is worst ever hm of india.
By kamal
9/12/2011 10:35:00 PM

தேர்தலில் தோல்வி அடைந்தவர் உள்துறை அமைச்சர். வெட்கம். இது வேறு எங்காவது நடக்குமா? கேவலம். மரியாதையாக பதவி விலக வேண்டும் சிதம்பரம்.
By velmurugan
9/12/2011 8:41:00 PM


ப சி அரசு செலவில் இங்கு வர ,போக இந்த கூட்டங்கள் செயல் படுகின்றன.ஆகவே கூட்டம் நடக்கவிட்டால் அடுத்த கூட்டத்திற்கு வர மீண்டும் ஒரு சான்ஸ்.இதில் குறை என்ன?
By Tamilian
9/12/2011 7:11:00 PM

By அகிலன்
9/12/2011 6:28:00 PM
மாவட்ட ஆட்சியரின் இம்மாதிரியான நடவடிக்கைகல் ஏற்புடையதல்ல.
By maruthaiahpillai

இந்த சிதம்பரம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க மக்கள் கறுவிக்கொண்டு உள்ளனர்.
By ராமஸ்வாமி.ச.
9/12/2011 6:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

muuvar uyir: 3 பேர் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோருவது ஏன்?

திங்கள், 12 செப்டம்பர், 2011

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

தினமலர் நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 8, 2011



ஜெனீவா: “இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் நம்பகத் தன்மை இருக்கும் என, எதிர்பார்க்க முடியாது. அதனால், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, மற்றொரு சர்வதேச விசாரணையை ஐ.நா., மேற்கொள்ள வேண்டும்’ என, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில், 2009 மே மாதத்தில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரின் போது, பாதுகாப்பு வளையங்களில் இருந்த மக்கள் மீது, ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசி கொலை செய்தது. இதுகுறித்து இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, “கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுவாழ்வு’ குழு, போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து, அறிக்கை தயார் செய்துள்ளது. வரும் நவம்பர் மாதம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பில், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு (ஏ.ஐ.,) நேற்று வெளியிட்ட 70 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இறுதிக் கட்ட போரில், இருதரப்பாலும் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழு நடத்திய விசாரணையின் விளைவாக நீதி நிலைநாட்டப்படும்; உண்மை வெளிவரும் என, சர்வதேச சமூகம் ஏமாந்து விட வேண்டாம். இறுதிப் போரில் மக்கள் அதிகளவில் பலியானதற்கு, ராணுவத்தின் கொத்துக் குண்டு வீச்சுகள் தான் காரணம். இது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, அந்நாட்டில் உள்ள ஊடகங்களை அரசு மவுனப்படுத்தியுள்ளது. எதிர்ப்போரை வெள்ளை வேன்களில் கடத்தி காணாமல் போகச் செய்துள்ளது. அதனால், நம்பகத் தன்மையுள்ள மற்றொரு சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா., நடத்த வேண்டும். இவ்வாறு பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் விசாரணைக்குப் பன்னாட்டு மன்னிப்பு அவை கண்டனம்

இலங்கை அரசின் விசாரணைக்கு ஆம்னஸ்டி கண்டனம்

தினமணி நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 8, 2011


வாஷிங்டன், செப்.7: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் நிராயுதபாணிகளான தமிழர்களை வஞ்சகமாக போர்ப் பகுதியில் தள்ளி, தப்பவிடாமல் பீரங்கிகளுக்கும் தானியங்கி துப்பாக்கிகளுக்கும் இரையாக்கி ஆயிரக்கணக்கானவர்களை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக்கொன்ற ராணுவத்தின் கயமையை முறையாக விசாரிக்காமல் பூசி மெழுகப் பார்க்கிறது இலங்கை அரசு நியமித்த விசாரணைக் கமிஷன் என்று லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட “ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.கற்ற பாடங்கள் மூலம் சமரசம் காண்பதற்கான கமிஷன் (எல்.எல்.ஆர்.சி.) என்ற பெயரில் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான கமிஷனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச நியமித்திருந்தார்.போரின் கடைசி கட்டத்தில் தமிழர்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்ற எதிர்ப்பிரசாரத்தை இலங்கை அரசு மேற்கொண்டது.அப்படியே நடந்திருந்தது என்றாலும் இலங்கை அரசின் விசாரணை வெளிப்படையாகக் கூறப்பட்ட புகார்களைக்கூட விசாரிக்காமல், பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் வெளியான தகவல்களைக் கூட சரிபார்க்காமல் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கிற கதையாக, இருபத்தொராவது நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித இனப் படுகொலையை எதுவுமே நடக்காத மாதிரி மூடி மறைத்துவிட்டது. இதைத்தான் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தமிழர்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்கூட விட்டுவைக்கப்படாமல் போர் தீவிரமாக நடந்த பகுதியையே போர் நிறுத்தப் பகுதியாக அறிவித்து, அடிபட்டவர்கள் பெயரளவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ முகாம்களையும் இரக்கமின்றி தாக்கி அழித்த விடியோ ஆதாரங்களைக் கூட புனைந்தது, செயற்கையானது என்று கூறி நிராகரித்துவிட்டது இலங்கை அரசு.ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட நடுநிலைப் பார்வையாளர்களும் சமாதானத் தூதர்களும் போர் தொடங்கும் முன்னதாக இலங்கையிலிருந்து புறப்பட்டபோது தமிழர்கள் அவர்களைப் போக வேண்டாம் என்று கெஞ்சி கதறியதன் காரணம் என்னவென்று பிறகு நடந்த படுகொலைகள் எடுத்துக்காட்டிவிட்டன.அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்கூட, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவது நடுநிலையாளர்களை, மனித உரிமை ஆர்வலர்களை திடுக்கிடச் செய்கிறது.இந்த நிலையில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் இந்த அக்கிரமத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழர்களுக்கு ஈழம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் பட்ட துயரத்துக்கு சிறிதளாவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியிருக்கிறது. போர்க் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை, போர்க் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்படும் அதிபரே நியமித்த குழு மேற்கொள்ளும் என்று உலகம் எதிர்பார்ப்பது வெட்டிவேலைதான்.சர்வதேச சமூகம் வேறு ஏதாவது வழிமுறைகள் மூலம்தான் உலுத்தர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டும்.திட்டமிட்ட படுகொலைகளையும் ஏராளமான தமிழர்கள் கைதும் செய்யப்படாமல் காவலிலும் வைக்கப்படாமல் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்களையும் சரியாக விசாரிக்கவில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய-பசிபிக் பகுதி இயக்குநர் சாம் ஜாரிஃபி சுட்டிக்காட்டுகிறார். அவரது அறிக்கை 69 பக்கங்களுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. “அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?’ என்று பொருத்தமான தலைப்பையும் இட்டிருக்கிறார்.இலங்கை அரசு நியமித்த கமிஷன் விசாரித்து அளித்த அறிக்கையானது சர்வதேச தரத்துக்கு வெகு தொலைவில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.உண்மைகள் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் நடந்த விசாரணைகளிலிருந்து என்ன மாதிரி அறிக்கை தயாரிக்க முடியும்? இப்படிப்பட்ட தகுதிக்குறைவான அறிக்கையைத்தான் இலங்கை அரசால் தர முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பொருமுகின்றனர். இனியாவது சர்வதேசச் சமுதாயம் விழித்தெழுந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை உரிய கண்ணோட்டத்தில் பார்த்து போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

இந்திய ஆதரவு இல்லாதிருந்தால் பிரபாகரனை மீட்டுச் சென்றிருக்கும் வ.அ.ஒ.அ.(நேட்டோ)

இந்திய ஆதரவு இல்லாதிருந்தால் பிரபாகரனை மீட்டுச் சென்றிருக்கும் நேட்டோ

சிறிலங்காவுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான்வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான், நேட்டோவின் கனவு பலிக்காது போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் எட்டு படைப்பிரிவுகள் முல்லைத்தீவு நோக்கி முன்னேறிச் சென்றபோது, பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும், முக்கிய தளபதிகளையும் வான்வழியாக மீட்க சில வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிஸ்டவசமாக இந்தியா துணை நின்றதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு எப்போதுமே ஒரு உண்மையான நண்பனாக இந்தியா இருப்பதாகவும், அதன்மூலமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் சிறிலங்கா அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Short URL: http://meenakam.com/?p=34694

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்

congressmen type two: நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரசுகாரர்கள்…?

நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க…?

இன்று சென்னை ஊடகவியலாளர்கள் மத்தியில், இரண்டு காங்கிரச்கார்ர்கள் ஏற்பாட்டில், ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட இரண்டு காங்கிரஸ்காரர்களின் “பிள்ளைகளை” கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்களும் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று சொல்லிக்கொடுத்த வாய்ப்பாட்டை ” கிளிப்பிள்ளை” போல உச்சரித்தனர். நமது ஊடகவியலாளர்கள் அத்துடன் “திருப்தி” அடையவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை “தனியாக” கேட்டபோது, “பல விசயங்கள்” வெட்டவெளிச்சமாகி உள்ளன.
அதாவது இத்தனை நாள் அல்லது இத்தனை ஆண்டுகள் “எங்கே போயிருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு, “பத்தொன்பது” ஆண்டுகளாக “காங்கிரஸ்” தலைமையிடம் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று முறையிட்டு வ்ந்தோம்.என்கிறார்கள். அந்த “பலியான” குடும்பங்களுக்கு ” இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை ஒரு அரசு வேலை கூட போட்டுக் கொடுக்கவில்லை” என்ற குமுறலை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்தவர் “குடும்பத்திற்கு” அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை கொடுத்து, “ஆற்றுப்படுத்தல்”‘ செய்வார்களே? ஏன் இவர்கள் விசயத்தில் செய்யவில்லை?
ராஜீவ் காந்தி கொலையால் “லாபம்” பெற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவ்வாறு “நன்றி” அறிவிக்கும் செயலை செய்ய விரும்பவில்லையா? ராஜீவ் கொலைக்கு காரணமான, அமெரிக்காவும், அவர்களது அடிவருடியான “சுப்பிரமணிய சாமியும், சந்திராசாமியும்” தியாகியாக ஆகிவிட்ட “தமிழ்நாட்டு” காங்கிரச்காரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை தருவதை “தடை”செய்தார்களா?” அல்லது ராஜீவ் கொலைக்கு பின்னாலிருந்து ஏற்பாடு செய்த “காங்கிரஸ் பணிக்’ குழு” வின் அலுவலக செயலாளராக அந்த நேரத்தில் இருந்த ஆந்திராவை சேர்ந்த “கல்யாண ராவ்” என்பவர் ” உடன் சென்ற காங்கிரஸ்காரர்கள் “தியாகிகள்” ஆனதை “பதிவு” செய்ய விரும்பாததால்,அவர்களதுகுடும்பங்களை ”அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டார்களா?
அல்லது “தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்” யாரும் ராஜீவ் உடன் “கொல்லப்படவோ” அல்லது “காயம்படவோ” இல்லையே என்ற “கருத்து”‘ மக்கள் மத்தியில் “அம்பலமாகிவிடக்கூடாதே” என்பதற்காக உண்மையில் இறந்த “”’தியாகிகள் பற்றிய செய்தியை “மறக்கடிக்க” அவர்களது “”வாரிசுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இறந்த “காங்கி’ர’ஸ்காரர்கள்” குடும்பத்தில் உள்ள வாரிசுகள், ”கோபத்தில்”‘ தலைவர்களைப் பார்த்து, ” நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்?’ என்று கேட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த ” வாரிசுகளை” இத்தினை ஆண்டுகளும் ” கண்டுகொள்ளாமல்” விட்டார்களா? அல்லது அதில் சில ” வாரிசுகள்” அந்த நேரத்திலேயே அப்படி கேள்விகளை கேட்டுவிட்டதால், அவர்களை ” நடுத்தெருவில்” விட்டார்களா?
அப்படியானால் தெருவில் இறங்கி ” மூன்று தமிழர் உயிர்காப்பு ” என்று போராடும் தமிழர்கள், ” ராஜீவ் கொலையில் செத்துப்போனவர் எல்லாம் போலீஸ்காரன். எங்கே போனான் காங்கிரஸ்காரன்?” என்று கேள்வி முழக்கம் எழுப்புகிறார்களே? அதில் உள்ள “சூட்சுமம்” இப்போதுதானே புரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் “இரண்டுரகம்” இருக்கிறார்கள். ஒன்று “உயிர் தியாகம் செய்து நடுத்தெருவில் ” நிற்பவர்கள். இரண்டாவது ” சதி செயல் தெரிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள” ஓட்டம் பிடித்தவர்கள்.
இதில் இரண்டாவது ரகம்காரர்கள், முதல் ரகம்காரர்களின் ”வாரிசுகளுக்கு” பட்டை நாமம் போட்டுவிட்டு, இப்போது அவர்களை ”தங்கள் துருப்பு சீட்டுகளாக” பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாமே “அரசியல் காரணங்களுகாக” மூன்று பேர் தூக்கை ”துரிதப்படுததும்” சிதம்பரத்தின் ” சித்து விளையாட்டுகள்”.
– TSS.MANI
Short URL: http://meenakam.com/?p=34816
Share/Bookmark

daily one time food-mother of Santhan: அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து அழுதார் மரணதண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தனின் தாயார்.
மரண வாசலில் இருந்து மீண்டு நிற்கும் மூவரில், சற்று வித்தியாசமானவர் சாந்தன். சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பக்தர்கள் குழாம் ஒன்றையே சிறையில் உருவாக்கிவிட்டார்.
சாந்த சொரூபியாக வலம் வரும் சாந்தன் பேசுவது ரொம்பவும் குறைவு. பெயர் மாற்றக் குழப்பத்தால் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் இவருக்கு, ‘ஈழத்தில் இருக்கும் தாய், தந்தையர் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் கதி என்ன?’ என்றே தெரியவில்லை.
அந்தத் துயரத்தை ஜூனியர் விகடன் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருந்தார்!
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம்.
‘தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்…’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ… திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
‘எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை… உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!” என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
ஐயா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு… வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம்.
ஆனா, ஐயா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது ஐயா…”
தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ”10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் ஐயா… 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)… வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார்.
தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்… தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்…
புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, ‘அம்மா பாவம்… நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார்.
அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்… எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது… எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, ஐயா…
எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை… ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது.
வறுமை இன்னொரு பக்கம்… வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்…
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது.
இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது…
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை… 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை… வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்… (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்)
என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…
எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
ஜூனியர் விகடன்
Short URL: http://meenakam.com/?p=34807

thamizh internet in cellphone: உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய…

உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய…

உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில்  தெரிய… www.m.opera.com போகவும். download opera mini 5.1 (English India) என்ற இணைய உலாவிக்கான (browser) மென் பொருளை, நினைவக அட்டையில் (memory card) சேமித்த பிறகு O-opera mini  என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள்   உங்கள் கைப்பேசி மெனு பட்டியலில் காணக் கிடைக்கும்.
Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும்.
அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும்போது மட்டும் கொஞ்சம்   நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
ஆப்ரா ப்ரவுசர் இணைய தளம் திறக்கப்பட்டு, பிரவுசர் அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும்.
accept கொடுத்து தொடருங்கள்.
தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு பிரசர் செட்டிங்கில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆப்ரா பிரவுசரின் அட்ரஸ் பார் போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறகு… தவறில்லாமல்… opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும்.
அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை  விட்டு, வெளியேறவும்.
தவறான மாற்றங்கள் உலாவியை திறப்பதில் சிக்கலை உருவாக்கும். அப்படி ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அந்த மென்பொருளை அழித்த பிறகு முதலிருந்து தான் தொடங்க வேண்டும்.
எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு மொபைலை switch off செய்த பிறகு on செய்யுங்கள்.
அவ்வளவுதான்!
நோக்கியா, சோனி எரிக்சன் தயாரிப்பு கைப்பேசிகளில் சோதித்துப் பார்த்தபோது சரியாகவே இயங்குகிறது.
- மனிதன் ( foryouths@beyouths.com )
மீனகம் தளத்தினை செல்பேசியில் காண: http://meenakam.com/?mobile என்று தட்டச்சு செய்யவும்..
Popularity: 11% [?]
Short URL: http://meenakam.com/newsnet/?p=4069

pe'sum padam:பேசும்படம்


இலங்கையில் பொதுநல மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்பு

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்பு

First Published : 11 Sep 2011 01:13:45 PM IST

Last Updated : 11 Sep 2011 01:56:30 PM IST

கொழும்பு, செப்.11: இறுதிக்கட்ட போரில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் வருகிற 2013-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ளது.இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை 2013-ம் ஆண்டு இலங்கையில் நடத்துவது தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் காரணமாக 2011-ம் ஆண்டு கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு தள்ளி வைக்கப்பட்டது.போர்க்காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், இலங்கையில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான ஒடுக்குமுறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இவ்வாறான பின்னணியில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை இலங்கையில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கி விடும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப்போகின்றது என்ற நிலையில், கூட்டம் இலங்கையில் நடத்தப்படுவது கவலை தருவதாகும்.காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதாக இருந்தால் அதற்கு முன்பு வன்னியில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உள்ளூர் மற்றும் அனைத்துலக விசாரணை நடத்த இலங்கை அரசை காமன்வெல்த் நாடுகள் கட்டாயப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.