சனி, 4 மே, 2013

தமிழ்ப்பெயர் சூட்டிக் கொள்ளும் கலைஞர் குடும்பத்தினருக்குக் கலைஞர் பிறந்த நாள் பரிசு


மத்தியப் பணியாளர் தேர்வு - கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி

வெளியானது  மத்தியப் பணியார் தேர்வு முடிவு கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி
கோவை:சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை நஞ்சப்பா ரோட்டில் அமைந்துள்ளது கோவை உயர்கல்வி மையம். மாநகராட்சி மற்றும் அரசு கலை கல்லூரி சார்பில் நடத்தப்படும் இம்மையத்தில், அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இம்மையத்தில் பயிற்சி பெற்ற திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார்(460 ரேங்க்), அபிநயநிஷாந்தினி(717) டில்லியை சேர்ந்த மனோஜ்(771), சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார்(343), ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (789), உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
* வெற்றியின் ரகசியம்!சாதனை மாணவ,மாணவியர் கூறியதாவது:தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி மையத்தில், பேராசிரியர் கனகராஜ் அளித்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கடினமாக உழைத்தோம். தினமும் 10 மணி நேரம் வரை படிப்பதை வழக்கமாக கொண்டோம். "டிவி', "சினிமா' பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டோம். தினமும் செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாக்கினோம். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பக்கபலமாக அமைந்தது. கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி கொண்டு செயல்பட்டால் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கோவை உயர்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு, இம்மையத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். ஆரம்ப தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டு முதல், நேர்காணல் பயிற்சியை, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்குகிறோம். கோவை மாநகராட்சிக்கும், அரசு கலை கல்லூரிக்கும், பயிற்சி பெறும் மாணவர்கள் சார்பில் நன்றி,'' என்றார்.
"விருப்பத்துடன் படித்ததால்ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது'
மதுரை:""சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க முடிந்தது,'' என, அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.மதுரை மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பாங்க் ஆப் இந்தியா மேலாளர் தங்கராஜ் குணாளன். மனைவி வசந்தி. இவர்களது மகன் பிரபுசங்கர், 29. இவர், டி.வி.எஸ்.,லட்சுமி மெட்ரிக் பள்ளியில், 1 முதல், 12ம் வகுப்பு வரை படித்தார். 2000ல் பிளஸ் 2 தேர்வில், 1157 மதிப்பெண்கள் பெற்றார்.பின், மதுரை மருத்துவக்கல்லூரியில், 2005ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., நிறுவனத்தில், எம்.டி., பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சங்க தலைவராக திகழ்ந்தார்.தற்போது, சென்னை செட்டிநாடு மருத்துவ கல்லூரியில், உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும், டாக்டர் நவீனா என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. நவீனா, நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்., படிக்கிறார்.இரண்டாவது முறையாக, ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதிய பிரபுசங்கர், அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரபுசங்கர் கூறியதாவது:சிறிய வயதிலிருந்து, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, ஆசை இருந்தது. கடந்த முறை, தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை. இந்தாண்டு புவியியல், வரலாறு பாடங்களை தேர்வு செய்து படித்தேன். டிப்பதை சுமையாக கருதாமல், விருப்பத்துடன் படித்ததால், சாதிக்க முடிந்தது.சென்னை "சத்யா கோச்சிங்' சென்டரில் சர்ந்தேன். பணி காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை. தினமும், "தினமலர்' நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்து கொண்டேன். ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றத்தை கொண்டு வருவேன்* முதலிடம் பெற்ற அருண் பேட்டி
சென்னை:""மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்,'' என, யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
தேசிய அளவில், ஆறாம் இடமும், தமிழக அளவில், முதலிடமும் பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த அருண் தம்புராஜ் கூறியதாவது:சொந்த ஊர் மதுரை; வளர்ந்தது சென்னை. மயிலாப்பூரில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி படிப்பை முடித்தேன். பிளஸ் 2வில், நல்ல மதிப்பெண் எடுத்ததால், திருச்சி மருத்துவ கல்லூரியில படிக்க இடம் கிடைத்தது. திருச்சி மருத்துவ கல்லூரியிலிருந்து, சென்னை மருத்துவ கல்லூரிக்கு மாற்றலாகி வந்தேன். சென்னையில் தான் மருத்துவ படிப்பை முடித்தேன்.அப்பா, காவல் துறையில் பணிபுரிபவர் என்பதால், மக்களுக்கான சேவை செய்து குறித்து, எப்போது வீட்டில் பேசி கொண்டே இருப்பர். அப்பாவின் பேச்சு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது. மருத்துவ படிப்பு முடிந்த உடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்; ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்தது. இன்றும், ஐ.பி.எஸ்., தேர்வு தொடர்பான வழக்கு கோட்டில் உள்ளது.நன்றாக தேர்வு எழுதியும், ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்ததால், இரண்டு ஆண்டுகளாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவில்லை. நண்பர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தான், மறுபடியும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனால், இந்த முறை நானே எதிர்பார்க்காத வகையில், முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோரே, என் வெற்றிக்கு காரணம். மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்.இவ்வாறு, அருண் கூறினார்.

5 பேருக்கு உயிர் கொடுத்த தொழிலதிபர் - மூளைச்சாவு ஏற்பட்டதால் தானம்

5 பேருக்கு உயிர் கொடுத்த தொழிலதிபர் மூளைச்சாவு ஏற்பட்டதால் தானம்


திருப்பூர்:மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து, தொழிலதிபரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டன.திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் துணிக்கடை வைத்திருந்தவர் வெள்ளியங்கிரி, 43; இவரது தந்தை, தண்டபாணி, 77, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குடும்பத்தினர் மருத்துவமனையிலே தங்கி இருந்தனர். வெள்ளியங்கிரி, தந்தையை பார்க்க, தினமும் மருத்துவமனைக்கு, சென்று வந்து கொண்டிருந்தார்.

கடந்த 29ம் தேதி,திருப்பூர், பெரியார் காலனியில் உள்ள வீட்டில்,தனியாக இருந்த வெள்ளியங்கிரி, மயக்க நிலையில் விழுந்துகிடந்தார். உறவினர்கள் , வீட்டை உடைத்து, அவரை மீட்டு கோவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதை, கடந்த 30 ம் தேதி, டாக்டர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன் வந்தனர்.
கடந்த 2ம் தேதி அதிகாலை, சென்னையில் இருந்து வந்த, மருத்துவ குழு, உறுப்புகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டது. கிட்னிகளில் ஒன்று, கோவை மெடிக்கல் சென்டருக்கும், மற்றொன்று, ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், கல்லீரல், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், விழித்திரைகள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தானமாக வழங்கப்பட்டன.
வெள்ளியங்கரியின் சகோதரி கணவர், அருண்குமார் கூறியதாவது:உடல் உறுப்புகள் கிடைக்காமல், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 1994ம் ஆண்டு, என் சகோதரிக்கு, சிறுநீரகம் கிடைக்காமல், எட்டு மாதங்கள் அலைந்து, 25 லட்சம் ரூபாய் செலவழித்தோம். வெள்ளியங்கிரிக்கு, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டதும், உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். யாருக்கு, இந்த உறுப்புகள் பொருத்தப்படுகிறது என, தெரியாது. ஆனால், எங்கிருந்தோ ஐந்து குடும்பங்கள் வாழ்த்தும்.இவ்வாறு, அருண்குமார் கூறினார்.
வெள்ளியங்கிரியின் மனைவி பெயர் ராஜேஸ்வரி, 32; இவர்களுக்கு, சரண், 8, ஹர்சினி, 3, என குழந்தைகள் உள்ளனர்

இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க நடவடிக்கை!

இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க நடவடிக்கை

இலங்கையில் மனித உரிமைகளைக் காக்கவும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டு வருவதால் அந்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளுக்கு இப்போது தலைமை வகிக்கும் ஆஸ்திரேலியா, இலங்கையை இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் பிரண்டன் ஓ'கானர் இருநாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவரிடம், இலங்கை மனித உரிமை விஷயத்தில் எந்த அளவுக்கு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது என எண்ணுகிறீர்கள்?, இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரண்டன், "இலங்கையில் மனித உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தங்கள் சொந்த மக்களின் நலன்களைக் காப்பது அனைத்து அரசுகளுக்குமே அவசியமானது.
போர்ப் படிப்பினை, நல்லிணக்க ஆணையம் அளித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக அமையும். இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டுமென்றே ஆஸ்திரேலியா விரும்புகிறது' என்றார்.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா அறிவித்துள்ளது. பிரிட்டன் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
எனினும் இலங்கையுடன் நல்லறவு பேணப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
54 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் மாநாடு நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான நடவடிக்கைக் குழு விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. அப்போது இலங்கையில் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று தெரிகிறது.

வெள்ளி, 3 மே, 2013

கச்சத்தீவை மீட்கக் கோரி செயலலிதா தீர்மானம்

கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டசபையில் செயலலிதா தனி த் தீர்மானம்
கச்சத்தீவை மீட்க கோரி சட்டசபையில் ஜெயலலிதா தனி தீர்மானம்
சென்னை, மே. 3-

கச்சத்தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தை கொண்டு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீவு கச்சத்தீவு. இருபதாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்தத் தீவில் புனித அந்தோணியர் தேவாலயத்தை அமைத்தார்.

இங்கு ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்த தற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பின்பு, ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இருந்த கச்சத்தீவு இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படும் வரை, தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து வந்தனர். வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் கச்சத் தீவினை பயன்படுத்தி வந்தனர்.

1974 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திலும் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவோ, கச்சத்தீவில் ஓய்வெடுக்கவோ இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

எல்லை மீறினார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. பல சமயங்களில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பல நேர்வுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ் வாதாரப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறுவதே என்பதால், இதுகுறித்த முக்கிய தீர்மானத்தை நான் இப்பேரவையில் முன் மொழிய விழைகிறேன்.

'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்தியா - இலங்கை ஒப் பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலி யுறுத்துகிறது' என்னும் தீர்மானத்தினை முன் மொழிகிறேன்.

என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது, உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். இந்த தீர்மானத்தை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.), சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), பிரின்ஸ் (காங்), ஆறுமுகம் (இந்திய கம்யூ), அஸ்லம் பாஷா (மனித நேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழ கம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசு (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசினார்கள்.

சபாநாயகர் தனபாலும் தீர்மானத்தை ஆதரித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். இறுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவாக விளக்கம் அளித்து பேசினார். பின்னர் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஏக மனதாக நிறைவேறியது. 

கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும் : முதல்வர்

சென்னை
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை காக்க வேண்டும் என்றால், மத்திய அரசு கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
3.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இந்திய நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 1974-ஆம் ஆண்டைய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீவு கச்சத் தீவு.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு, சுதந்திரம் அடைந்த பின்பு, இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படும் வரை, தமிழக மீனவர்கள்  பாக் ஜலசந்தி பகுதியில், கச்சத் தீவு பகுதியில் மீன் பிடித்து வந்தனர். 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்திலும் பாரம்பரிய மீன் பிடி உரிமைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.  இருப்பினும், இந்திய மீனவர்கள்  பாக் ஜலசந்தி பகுதியில் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கவோ, கச்சத் தீவில் ஓய்வெடுக்கவோ, இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
எல்லை மீறினார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.  பல சமயங்களில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல நேர்வுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்து மீறல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறுவதே என்பதால், இது குறித்த முக்கிய தீர்மானத்தை இப்பேரவையில் முன்மொழிய விழைகிறேன்.
தீர்மானம்
“தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்துதல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத் தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது” என்னும் தீர்மானத்தினை முன்மொழிகிறேன் என்று கூறினார்.
பதிலுரை
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் நாசம் ஆக்கப்பட்டன. இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழக மீனவர்களைக் காக்க கச்சத் தீவினை மீட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், கச்சத் தீவினை மீட்கும் தீர்மானத்தினை நான் முன்மொழிந்துள்ளேன்.
மீனவர்களின் நலன் காக்கும் இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

மனுநீதிச் சோழனுக்கு மணி மண்டபம்: செயலலிதா அறிவிப்பு

மனுநீதி ச் சோழனுக்கு மணி மண்டபம்:  செயலலிதா அறிவிப்பு
மனுநீதி சோழனுக்கு மணி மண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, மே 3-

சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த பதில்கள் வருமாறு:-

உலகநாதன் (இந்திய கம்யூ):- சென்னை ஐகோர்ட்டில் மனு நீதி சோழனுக்கு சிலை இருப்பது போல்திருவாரூர் மண்ணிலும் அவருக்கு மணி மண்டபம் - சிலை வைக்கப்படுமா?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- உங்களது கோரிக்கை ஏற்கப்படுகிறது. மனு நீதி சோழனுக்கு அவர் பிறந்த மண்ணில் நினைவு மண்டபம் எழுப்பப்படும், கட்டப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கவேல் (இந்திய கம்யூ):- திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் சிற்பக்கலை கல்லூரி அமைக்க அரசு ஆவண செய்யுமா?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தமிழ்நாட்டில் சிற்பக்கலை அழியக் கூடாது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாகும். கொள்கை ஆகும். ஆனால் இன்றைய நவீன உலகில் மாணவர்கள் சிற்பக்கலைகளை கற்க அதிக அளவில் முன் வருவதில்லை இதனால் பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்தில் உள்ள கல்லூரியிலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவர்கள் இந்த கலைகளை கற்க ஆர்வத்துடன் முன் வருவதில்லை.

இந்த அரசுக்கு புதிய சிற்பக்கலை கல்லூரியை துவக்குவதில் எந்த சிரமமும் இல்லை உறுப்பினர் சிற்பக் கலைக்கல்லூரி வேண்டும் என்று கேட்கிறார். மாணவர்கள் அதிக அளவில் சேர அவர் உத்தரவாதம் அளித்தால் கல்லூரி துவங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Copper plates tell on charities of Jaffna and Vanni at Chithamparam

Copper plates tell on charities of Jaffna and Vanni at Chithamparam

[TamilNet, Friday, 03 May 2013, 06:46 GMT]
A copper plate grant issued by the chieftains of Vanni in the Dutch times, refers to an earlier charity; a mutt built by the King of Jaffna, Pararaja Sekaran at Chithamparam in Tamil Nadu, and on the charities made by chieftains of different parts of Vanni to another mutt built by a Vanni chieftain, Kayilaaya Vanniyan, at Chithamparam. The present conditions of the royal mutt of the Kingdom of Jaffna, called Iraasaakka’l Thampiraan Madam and the Vanni Chieftain’s mutt called Kayilaaya Vanniyan Madam at Chithamparam are not known today. The copper plates in the custody of a family at Ka’l’liyang-kaadu in Nalloor, Jaffna, were deciphered and published earlier by Dr S. Gunasingham of Trincomalee and by Prof S. Pathmanathan. A mutt at Chithamparam, in the name of the Ka’l’liyang-kaadu village is in completely ruined conditions today.

Tamil Nadu Government should initiate a survey of the various charities of Eezham Tamils at Chithamparam, bring in a legislation in the State Assembly to protect them and declare the enclave as a heritage site of Eezham Tamils, in order to make them meaningful to the present context, is a request coming from Eezham Tamil circles connected to the charities living in the island and in the diaspora.

The mutts could be renovated or rebuilt in their traditional form of architecture, for various purposes such as a heritage museum of Eezham Tamils, archives and library of Eezham Tamil literary contributions, a publishing house to bring out standard reprints, and heritage tourism facilities for visitors coming from the island and from the diaspora, the sources connected to the charities told TamilNet, adding that such facilities would especially be useful to the next generation in the Eezham Tamil diaspora in knowing about its heritage.

Cultural institutions of the Eezham Tamil diaspora across the world should make the claim and negotiate with the Tamil Nadu Government for a collaborative programme, the sources further said, adding that credible forces in Tamil Nadu should come forward to help the Eezham Tamils in materialising the project.

Ka'l'liyang-kaadu Copper Plates
The Ka'l'liyang-kaadu Copper Plates, issued by the chieftains of Vanni on a grant made by them to the Kayilai-vanniyanaar madam at Chithamparam. The copper plates also note the existence of an earlier mutt at Chithamparam built by a King of Jaffna, Pararaja Sekaran. [Image courtesy: Pathmanathan. S., Vanniyar, 1972]


Vanni chieftains of the principalities of Panang-kaamam, Karikkaddu-moolai, Thennamaravadi, Meal-pattu, Mu’l’liyava’lai, Mayilaaththai and Pachchilaip-pa’l’li, as well as the villagers of these chieftaincies had collectively made the charity mentioned in the copper plates.

The charity was made on the 22 day of the month Chiththirai in the Subhakritu year of the Salivahana Era 1644, which was a Thursday and a full-moon day, while the moon was transiting the constellation Swathi. It corresponds to April-May 1722 CE.

The charity was in the form of paddy-field lands and the grant uses the Eezham Tamil word Kamam to mean a unit of cultivable land. Stipulated part of the produce (3 Marakkaal measures of paddy per unit of Kamam) was given to the mutt of the Vanni chieftains at Chithamparam, which was called Kayilaip-pi’l’lai Vanniyanaar Madam.

The caretaker of the charity of Vanni chieftains was Chooriyamoorthi Thampiraan who was at that time the pontiff of a mutt built earlier by King Pararaja Sekaran.

Those who help the charity would get the merit of having the dharshan of the dancing Siva at the second quarter of the night (which is considered very auspicious) and those who harm it commit the sin of arson on the temple, the copper plates say, adding that more than those who make charities, the ones who urge for them and the ones who protect them get the merit ten-fold.

Chronology:

Keith Locke questions New Zealand's silence

Keith Locke questions New Zealand's silence on Sri Lanka hosting CHOGM

[TamilNet, Friday, 03 May 2013, 04:46 GMT]
“So far Canada's campaign to move CHOGM away from Sri Lanka has met with little success. Britain's Conservative government has been critical of Rajapaksa but won't support changing the conference venue. Australia has turned a blind eye to the continuing tragedy in Sri Lanka, apparently so it can justify returning Tamil boatpeople to their home country. And what of New Zealand? Our Government seems to be keeping as quiet as possible,” writes Keith Locke, former Green MP, in an opinion article published in The Dominion Post on Friday.

Excerpts from Keith Locke's article follow:

Keith Locke
Mr Keith Locke
“Holding CHOGM in Colombo will make a mockery of the charter just developed by the Commonwealth and signed in March by the head of the Commonwealth, Queen Elizabeth.

“This charter commits Commonwealth leaders to democracy, human rights, tolerance, freedom of expression, good governance and the rule of law - none of which are respected by the Rajapaksa government.

“To make matters worse, Sri Lanka's president, as the CHOGM host, will become chair of the Commonwealth for the two years until the heads of state next meet.

“So far Canada's campaign to move CHOGM away from Sri Lanka has met with little success.

“Britain's Conservative government has been critical of Rajapaksa but won't support changing the conference venue.

“Australia has turned a blind eye to the continuing tragedy in Sri Lanka, apparently so it can justify returning Tamil boatpeople to their home country.

“And what of New Zealand?

“Our Government seems to be keeping as quiet as possible.

“It is not as if the New Zealand Government is ignorant of the dire human rights issues in Sri Lanka. I was a member of Parliament's foreign affairs, defence and trade select committee when, in 2009 and 2010, it was briefed by the Ministry of Foreign Affairs and Trade.

“We were told about difficult conditions in the internment camps for Tamils and the limitations on access by international aid organisations; the absence of a political reconciliation process; and the danger to democracy following the arrest of Rajapaksa's opponent in the February 2010 election, General Sarath Fonseka.

“Since then Rajapaksa has strengthened his grip on power, supported by his brother, Gotabhaya, who is defence secretary; another brother, Basil, who is economic development minister; and a fourth brother, Chamal, who is Speaker.

“Amnesty International, in its latest report on April 30 said the "violent repression and the consolidation of political power go hand in hand" and "there is a real climate of fear in Sri Lanka, with those brave enough to speak out against the government often having to suffer badly for it".

“The reputation of both New Zealand and the Commonwealth is at stake here. New Zealand rightly challenges abuses of democracy in our region - such as in Fiji (which has been suspended from the Commonwealth). But we can be accused of a double standard if at the same time we allow the Commonwealth to be chaired for the next two years by a president who refuses any accountability for the deaths of so many innocent civilians in his country's civil war and who is governing in an increasingly authoritarian manner. ”

Chronology:


Related Articles:
11.04.13   NZ Intelligence alleged of monitoring former Green MP for in..


External Links:
The Dominion Post: NZ's reputation at stake over summit venue

Commonwealth SG upholds SL venue of CHOGM, meets Colombo’s HR outfit

2ND LEAD

Commonwealth SG upholds SL venue of CHOGM, meets Colombo’s HR outfit

[TamilNet, Thursday, 02 May 2013, 22:19 GMT]
While widespread calls from credible quarters across the world were urging either change of the CHOGM venue or boycott, if it is going to take place in Sri Lanka, and while the UK Tamils staged a demonstration against the venue, the Commonwealth Secretary General Kamalesh Sharma upheld the venue in a press meet in London last Friday. “I meet leaders continually and continue to take soundings with leaders, and have been doing so recently as well, and no member of government has indicated remotely that it wishes to change the venue, Kamalesh Sharma said, answering a question put by Jonathan Miller of Channel 4 News. Meanwhile, Kamalesh Sharma also received a ‘human rights’ outfit of genocidal Colombo that came to meet him in London this week.

In the press conference on last Friday that followed the meeting of the Commonwealth Ministerial Action Group (CMAG), Kamalesh Sharma said that the Commonwealth would be picking up items from the LLRC report for implementation, and it would put its ‘partnership’ and ‘good offices’ in the process.

Bob Carr from Australia went a step further in telling that Australia’s concern was for “full implementation of the Lessons Learned and Reconciliation Report recommendations.”

Any one who goes through the report could find that the thrust of the LLRC recommendations is structural genocide of Eezham Tamils, demographic assimilation and annihilation of the identity of the nation of Eezham Tamils in the island.

Bob Carr also defended the Sri Lankan State by his ‘reasonable’ interpretation of concluding that “there were abuses on both sides,” and by reducing the on-going genocide to “inter-religious tensions,” saying that Sri Lanka is not the only country in Asia that has such tensions.

Richard Uku, who presided the press conference, was trying his best to deviate the focus on Sri Lanka by encouraging questions on other matters and by saying, “This is not a press conference on Sri Lanka.” But still questions were focussing on Sri Lanka.

While Kamalesh Sharma continued to defend soft approach on Sri Lanka, questions were put on the limit of toleration and on the difference between the responses of the Commonwealth on apartheid and on Sri Lanka.

When questions citing examples doubted the genuineness of Sri Lanka in engaging with Commonwealth, Kamalesh Sharma continued to defend the Commonwealth ‘engaging’ with Sri Lanka.

The CMAG avoided taking up the venue question in its formal agenda. But it was discussed under ‘other matters’.

* * *


Meanwhile, Commonwealth Secretary General Kamalesh Sharma on Tuesday received Sri Lanka's Human Rights Commission officials at Marlborough House in London. Extracts of the new release, issued by the Commonwealth Secretariat on the meeting, follow:

“Commonwealth Secretary-General Kamalesh Sharma received the Chair of the Human Rights Commission of Sri Lanka, Justice Priyantha R P Perera, and his delegation at Marlborough House yesterday.

“The group is in London to take part in a Commonwealth roundtable on reconciliation, being held at the Commonwealth Secretariat from 1 to 3 May. The roundtable is enabling several Commonwealth member countries that have sought peace and reconciliation after conflict and had to deal with the attendant challenges of such a process to share experiences. Other national human rights institutions taking part are those of Kenya, Northern Ireland, Sierra Leone and Uganda.

“The Human Rights Commission of Sri Lanka delegation includes Commissioner Prathiba Sri Warna Mahanamahewa; the Regional Coordinator for Jaffna, Thangavel Kanagaraj; the Regional Coordinator for Vavunija, Malalaratnage Rohitha Priyadharshana; and the Regional Coordinator for Batticaloa, Abdul Careem Abdul Azeez.

“In his meeting with the Sri Lankan delegation, the Commonwealth Secretary-General focused discussions on the Commonwealth’s plans to support the Human Rights Commission of Sri Lanka in achieving specific targets that the Secretary-General had identified in his statement issued at the conclusion of his last visit to Sri Lanka in February, and contact with the Human Rights Unit of the Commonwealth Secretariat thereafter. The goal of the Commonwealth’s partnership with the Commission is to support Sri Lanka’s national efforts and plans to provide access for all its citizens to a life of dignity and opportunity in keeping with the values of the Commonwealth.

“The Commonwealth Secretariat and the Human Rights Commission of Sri Lanka have agreed on two immediate areas of technical assistance, which are expected to be carried out over the next three to six months. This will entail strengthening the capacity of the Commission on effective use of national inquiries as a means of human rights protection, and on its role in taking forward an agenda aimed at national reconciliation.

“Commonwealth Secretariat technical assistance in the above-mentioned areas is part of strengthening the effectiveness and authority of the Human Rights Commission of Sri Lanka. This will ultimately work towards helping the Commission regain its ‘A status’ accreditation with the UN International Coordinating Committee for national human rights protection mechanisms. This status is accorded to human rights institutions that comply fully with the Paris Principles, the international standards for these institutions.

“Also discussed were remaining challenges of land resettlement of people who had been displaced by conflict; reconciliation efforts linked to Sri Lanka’s trilingual policy of Sinhala, Tamil and English; and the importance of an effective grievance reporting system.”

Chronology:

Colombo appropriates lands of 400 Tamil families in Vavuniyaa

Colombo appropriates lands of 400 Tamil families in Vavuniyaa

[TamilNet, Thursday, 02 May 2013, 20:33 GMT]
The Colombo government has begun to appropriate 400 acres of lands belonging to Tamils in Veerapuram in Vavuniyaa Cheddiku'lam division to settle down Sinhalese, according to Vanni district Tamil National Alliance parliamentarian Sivasakthi Aanandan. In a similar move, at Nochchikku'lam GS division, private lands of Eezham Tamils have been appropriated for the purpose of 56th brigade headquarters for the occupying Sri Lanka Army, news sources in Vavuniyaa said.

Sinhala settlers now residing in Ulukku'lam village on the border of the Vavuniyaa district are to be settled down in Veerapuram, the TNA MP added.

400 Tamil families were settled down under a housing project in Veerapuram in 1995. Each family was allocated one acre.

Already, the occupying Sri Lanka Army has begun to appropriate twenty acres of private lands belonging to Tamils to construct the 56th brigade headquarters in Vavuniyaa.

குடிநீருக்காக அலைவதா!

குடிநீருக்காக அலைவதா!

கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டால், நீர் வியாபாரமாக மாறுவதை விவரிக்கும், விருதை காந்தி: நான், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சம்மேளனத்தின் செயலராக பணியாற்றுகிறேன். உலகின் மொத்த நீர் பரப்பில், 2 சதவீத நீர் மட்டுமே குடிக்க உகந்தது. கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, கடந்தாண்டு இந்தியாவில் மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர் விற்பனை நடந்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி.கடந்த, 1990களில், "குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது; பாட்டில்களின் மீது, "மினரல் வாட்டர்' என்று எழுதக் கூடாது' என்று, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தாலும், யாரும் பின்பற்றவில்லை. பன்னாட்டு கம்பெனிகள், இந்திய நீர்நிலைகள் மீது குறி வைத்துள்ளதால், வணிக சுரண்டல்கள் அதிகரித்து விட்டன.தென் தமிழகத்தின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணியில், பல பன்னாட்டு கம்பெனிகள், தண்ணீரை உறிஞ்சுகின்றன. காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை என, அனைத்திலும், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், மழை நீரானது, ஆற்று மணல் மூலம், நிலத்தடி நீராக உறிஞ்சப்படாமல், கடலில் கலந்து வீணாகிறது.சிறிதளவு சேமிக்கப்பட்ட நிலத்தடி நீரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியத்தால், தொழிற்சாலையின் கழிவுநீர், நிலத்தடி நீரில் கலந்து, குரோமியம் அதிகரிப்பதால், சிறுநீரக பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. நைட்ரேட், புளோரைடு அதிகரிப்பதால், நீரை குடிப்பவர்களின் பற்களில் கரையும், எலும்பு பலவீனமும் ஏற்படும்.
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் சட்டம் இருந்தும், பொதுச் சொத்தான தண்ணீரை, கேன்களில் அடைத்து, விற்பனை செய்வது தொடர்கிறது. மரங்களை அதிகமாக வளர்த்து, அதனால் கிடைக்கும் மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியும். இல்லையேல், வருங்கால தலைமுறையும், குடிநீருக்கு அலையும் அவலம் தொடரும்.

தேசியக் கொடியைக் காட்டுங்கள்.. எந்த நாடு என்று சொல்கிறேன்: 3 அகவைச் சிறுமி

தேசிய க் கொடியை க் காட்டுங்கள்.. எந்த நாடு என்று சொல்கிறேன்:  3  அகவை ச்  சிறுமி

பெ.நா.பாளையம்: இந்திய தேசிய கொடியை காண் பித்தால் காங்கிரஸ் கட்சி கொடி, என்று கூறுபவர்கள் மத்தியில் ,பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமி, எந்த நாட்டின் தேசிய கொடியை காண்பித் தாலும் அசராமல் நாட்டின் பெயரை கூறுகிறார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூ.கவுண்டம்பாளையத்தில் உள்ள சால்சர் குடியிருப்பில் வசிக்கும் சிவராமகிருட்டிணன்-சங்கீதா இணையரின் மகள் சாகித்யாவர்சினி. இவர், உலகில் உள்ள எந்த நாட்டின் கொடியை காட்டினாலும், அதன் பெயர், தலைநகரம் ஆகியவற்றை மனப்பாடமாக கூறுகிறார்.
சிறுமியின் தந்தை சிவராமகிருஷ்ணன் கூறுகையில்,""சாகித்யாவர்ஷினி, தனது சகோதரன் அருண் பாடம் படிக்கும் போது, உலக வரைபடம் குறித்து விபரங்கள் சேகரித்த போது அதை கூர்ந்து கவனித்து வந்தார். "டிவி'யில் வரும் உலக செய்திகள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நாட்டுக் கொடிகளை காண்பிக்கும் போது, அந்த நாட்டு பெயர்களை சாகித்யாவர்ஷினி சரியாக கூறினார். இச்சம்பவத்துக்கு பிறகுதான், அவரிடம் இருந்த திறமை எங்களுக்கு தெரியவந்தது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் கொடிகள், தலைநகரம், நாடுகள் குறித்து கூறி, வியப்பில் ஆழ்த்துகிறார். வீட்டில் சிறு நூலகம் உள்ளது. அதில் உள்ள புத்தகங்களை பார்ப்பதில் இப்போதே கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நாங்கள் சொல்லிக் கொடுத்த பின், தற்போது 20 திருக்குறள்களை சரியாக கூறுகிறார். சாகித்யாவர்ஷினியை வரும் ஜூன் மாதம்தான் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார். சாகித்யாவர்ஷினியின் திறமை குறித்து உளவியல் நிபுணர் செந்தில்குமார் கூறுகையில்,""சில குழந்தைகள் இது போன்று அதீத திறமை மிக்கவர்களாகவும், மனப்பாடம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் நாட்டின் கொடிகளை பார்த்து தலைநகரம், நாட்டின் பெயர்களை கூறுவதோடு, இதே வயதில் சிலர் ஓவியம் வரைவதிலும் திறமை உள்ளவர்களாக இருப்பர். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக காணப்படும் இது போன்ற சிறுவர், சிறுமிகளின் திறமைகளை ஊக்கவிக்க வேண்டும்,'' என்றார்.

வியாழன், 2 மே, 2013

Eezham Tamil activist elected to represent youth wing of German left party

Eezham Tamil activist elected to represent youth wing of German left party

[TamilNet, Wednesday, 01 May 2013, 23:56 GMT]
Balakrishnan Koculan, a 29 year old Eezham Tamil youth activist, was elected to represent the official youth wing of the German Die Linke party on Sunday. In the 6th Federal Congress of the Left Youth -Die Linksjugend [`solid] held at Magdeburg in Germany, Mr. Koculan along with seven other activists were elected by 200 delegates of the youth organization from across several states in Germany, with Koculan getting 52.63% of votes. Speaking to TamilNet, Mr. Koculan urged Tamil youth in the diaspora to challenge the unjust approach of the global establishments towards the Eezham Tamils’ struggle, stressing the necessity of building alliances with progressive forces.

Koculan
“Our youth in the diaspora do not face the brutal repression that the Eezham Tamil youth in the homeland face and have greater space for freely expressing their opinions. They should keep in mind that the actors in the western establishments that contributed to Sri Lanka's genocidal war on our liberation struggle cannot be trusted,” Mr. Koculan said.

“The youth should identify those progressive forces that stand with our liberation struggle on principled grounds and build bridges with them,” he further added.

Mr. Koculan, currently a student at Heinrich-Hertz-Europakolleg, is an Eezham Tamil youth activist who is well known among grassroots community circles in Germany. He has also worked towards building solidarity with leftist groups and other oppressed nations.

The parent party of the Die Linksjugend [`solid], Die Linke, has 76 seats at the German federal parliament and eight members in the European Parliament. The Left is a member of the Party of the European Left and is the largest party in the European United Left–Nordic Green Left grouping in the European Parliament.

TNPF prepared to join TNA, if pre-2009 goals upheld: Gajendrakumar

TNPF prepared to join TNA, if pre-2009 goals upheld: Gajendrakumar

[TamilNet, Wednesday, 01 May 2013, 23:28 GMT]
Amidst news reports on split within the Tamil National Alliance (TNA) and disunity in the Tamil political camp, the leader of the Tamil National People’s Front (TNPF) Mr Gajendrakumar Ponnambalam on Wednesday came forward to tell that his party is prepared to join with the TNA, and even prepared to dissolve its identity itself, if the TNA could stick to pre-2009 political goals of Tamils. The current split within the TNA is between the ITAK, the major constituent party of electoral political origins and other parties of militant political origins. Both factions have now approached the TNPF. The deceptive prospects of Northern Provincial Council elections, which the LLRC-based Geneva resolution urged to conduct, and Indo-US competitive engineering in the hijack of Tamil polity are behind the split, news sources in Jaffna said.

TNPF meeting
Mr Gajendrakumar announced the stand of his party publicly, while addressing TNA’s May Day meeting in Jaffna, organised at Arasadi near Nelliyadi in Vadamaraadchi.

While he was addressing the meeting, masked people entered his house premises in Jaffna and after asking his whereabouts noted down the numbers of the vehicles parked in the premises, news sources said.

Eezham Tamils in the North and East originally mandated the TNA, in the times of the LTTE, to politically pursue the Tamil national cause.

Declaration on the independence and sovereignty of the nation of Eezham Tamils and people in the North and East democratically mandating a separate country called Tamil Eelam, predate all militant politics of Tamils.

The absence of the LTTE, which genocide-abetters branded as ‘terrorists,’ could never mean the abandonment of the democratic cause and no power on the Earth has right to instruct Tamils on it, is the position of Tamil national political circles.

The split in the TNA after May 2009, causing Gajendrakumar to come out and form the TNPF, was due to infirmity in the TNA in asserting to the sovereignty of the nation of Eezham Tamils in the island.

TNA’s infirmity, implied denouncement of the national cause of Eezham Tamils, confused statements on federal solutions, talk on the 13th Amendment, withdrawal of opposition to the LLRC recommendations that were seeking demographic assimilation and ultimately the TNA going behind ‘non-descript’ solutions – all were due to pressure, intimidation and hijack alternately or jointly coming from India and the USA, is well known to the gagged Tamil masses in the island.

In recent times, New Delhi is planning to bring in some faces kept by it in reserve in India, to stage the Provincial Council deception of its rotten 13th Amendment, as though the demonstration in the East jointly blessed by India and the USA is not enough, alternative political activists in Jaffna say.

TNPF meeting


Speaking at the May Day meeting on Wednesday, Gajendrakumar came hard on the TNA for giving importance to the 13th Amendment-based deception of Provincial Council. He refuted the argument coming from some sections of the TNA that they would contest to ‘disprove’ the ineffectiveness of the model. Is there any need to still disprove it by contesting, asked Mr Gajendrakumar.

He also came hard on the TNA for not mobilising or undertaking any genuine people’s struggle.

The TNA either brings itself into the scene to get the credit whenever people rise up and organise protests or they show keenness in organising protests only to compete with the TNPF, Gajendrakumar said with examples, urging the TNA to genuinely take up people’s politics and mobilise the masses.

கலைஞர் குடும்பத்தினருக்குக் கணையாழிகள் பரிசுப் போட்டி


கருணாநிதி பிறந்த நாளையொட்டி
தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்:
 மா.சுப்பிரமணியன்

கலைஞர் குடும்பத்தினர் தாங்கள் நடத்தும் சன்  தொலைக்காட்சி முதலான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நைன்கிளெவுட் முதலான திரை நிறுவனங்களுக்கும்  சன்சைன் முதலான கல்விக்கூடங்களுக்கும்  சன்ரைசர் மட்டையாட்டக்குழு முதலான பிற அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் உதயநிதி முதலான குடும்பத்தினருக்கும் உள்ள பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டினால் அவர்களுக்குத்  தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் கணையாழிகள் அணிவிக்கப் பெறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருணாநிதி பிறந்த நாளையொட்டி த் தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: மா.சுப்பிரமணியன்
சென்னை, மே. 2-

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளை நாடெங்கும் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும் அதனையொட்டி வீதிதோறும் கழகக் கொடியேற்று விழா, ஏழை எளியோர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், கருத்தரங்கம், கவியரங்கம், மருத்துவ முகாம், ரத்த தானம், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தின் புலவர் பெருமக்களும், கவிஞர் பெருமக்களும் பங்கேற்று தலைவர் கலைஞர் அவரின் பரிமாணங்களை அவரவர் நடையில் எழுதும் வண்ணம் மாபெரும் கவிதைப் போட்டி ஒன்றினை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டிகான கவிதைகள், ‘‘வரலாறாய் வாழ்பவர்’’ என்கிற தலைப்பில் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ அல்லது புதுக்கவிதைகளாகவோ இருக்கலாம்.

தேர்வாகும் கவிதைக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும் - இரண்டாம் பரிசாக ரூபாய் 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 25 ஆயிரமும் ஆறுதல் பரிசாக 10 கவிஞர்களுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதிக்குள் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட 200 மாநகராட்சி வார்டுகளில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை சூட்டி அதற்கான சான்றுகளை 15-ந்தேதிக்குள்ளும், கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்பு கவிஞர் பெருமக்கள், தங்களுடைய கவிதைகளை, வருகின்ற மே மாதம் 10-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதிக்குள்ளும், ‘அன்பகம்‘, எண்.4 தொழிலாளர் குடியிருப்பு, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Thursday, May 02,2013 03:12 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
கலைஞர் குடும்பத்தினர் தாங்கள் நடத்தும் சன் தொலைக்காட்சி முதலான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நைன்கிளெவுட் முதலான திரை நிறுவனங்களுக்கும் சன்சைன் முதலான கல்விக்கூடங்களுக்கும் சன்ரைசர் மட்டையாட்டக்குழு முதலான பிற அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் உதயநிதி முதலான குடும்பத்தினருக்கும் உள்ள பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டினால் அவர்களுக்குத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் கணையாழி அணிவிக்கப் பெறும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Thursday, May 02,2013 02:41 PM, ஈன said: 0 0
எங்கிருந்து வந்தது இந்த தங்கம். விரைவில் அமலாப்பிரிவினர் இவரது மற்றும் நண்பர் உறவினர்கள் வீடுகளை முற்றுகை இடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
Thursday, May 02,2013 02:03 PM, சன் ரைசெர்ஸ் said: 2 5
இவங்க குடும்ப கம்பெனி பெயர் எல்லாம் இப்படி இருக்கு -
Thursday, May 02,2013 01:58 PM, டீக்கடை பெஞ்சு said: 1 8
மை சைல்டு நேம் இஸ் "தமிழ் மகன்"..! தங்க மோதிரம் தருவீங்களா..?
On Thursday, May 02,2013 02:01 PM, சோமு said : 3 6
திமுக வுக்கு ஒட்டு போடணும் போடுவீங்களா

வெட்கக்கேடான செய்தி வேறு இல்லை

இதைவிட வெட்கக்கேடான செய்தி வேறு இல்லை. அரசு வணிக நிறுவனம் அன்று. தாய்மொழிவழிக்கல்வியையே அனைத்து நாட்டுக் கல்வியாளர்களும் வற்புறுத்துகையில் அயல்வழிக்கல்வியை ஊக்கப்படுத்துவது அரசிற்கு இழிவு தேடித்தரும் செயல் ஆகும். தமிழ் நலம் சார்ந்த கொள்கைகளை முதல்வர் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகையில் மாநகராட்சியும் பள்ளிக்கல்வித்துறையும் இவ்வாறு அதற்கு எதிராக நடந்து கொள்வது  முறைகேடானது. தமிழ்வழிக்கல்விக்கு வரவேற்பு இல்லையெனில், காரணம் அறிந்து குறையை நீக்க வேண்டும். அதற்கான ஒரே காரணம், பணி வாய்ப்பு இன்மைதான். எனவே, கடந்த ஆட்சியில் ஒப்புக்குப் போடப்பட்ட தவறான ஆணையை நீக்கித் தமிழ்வழியில் கல்வி கற்றவர்களின் வேலைவாய்ப்பிற்கு முழு முன்னுரிமை அளித்து அதன்பின்பே, தேவையெனில் தமிழ் அறிந்த அயல்மொழிவழிக்கல்வியினருக்கு  வாய்ப்பு அளிக்கப்படும் எனப்புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பகுதி 1 இல் கட்டாயம் தமிழைத்தான் படிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரவேண்டும். . ஆர்வமுள்ளவர்கள் அவரவர்  தேவைக்கேற்ப பிற மொழிகளைக்  க்ற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், கல்வி நிலையங்களை யார் நடத்தினாலும், தமிழ்வழிக்கல்வி மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலையைக் கொண்டுவரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


போட்டியை ச் சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி க் கல்வியை அதிகரிக்க முடிவு



தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள குறைவான அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு சேர்க்கைக்கு, பலத்த போட்டி நிலவுகிறது.அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போலீசார் பாதுகாப்புடன், விண்ணப்பங்களை வழங்குகின்றனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக, இந்த பள்ளி இயங்குவது தான், போட்டிக்கு காரணம். ஆசிரியர்களும், முழு ஈடுபாட்டுடன் உழைப்பதால், மாநில அளவிலான இடங்களில், இந்த பள்ளி இடம் பிடிக்கிறது. அத்துடன், தேர்ச்சியும், 100 சதவீதமாக இருந்து வருகிறது.இதேபோன்று, படிப்படியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலவழி கல்வி முறையை அறிமுகப்படுத்தி, தரமான கல்வியை வழங்கினால், தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரை இழுக்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கும், 250 பள்ளிகளில், 95 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது, மேலும், 20 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகளை துவக்க உள்ளதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சியைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையும், அதிகளவில், ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவங்க, திட்டமிட்டுள்ளன.கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த பள்ளிகளில், 640 வகுப்புகள், ஆங்கில வழியில் நடந்து வருவதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், 500 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, சட்டசபையில், இம்மாதம், 10ம் தேதி, பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியாகலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில்,"படிப்படியாக, அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கில வழி கல்வி திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும். அந்த வகையில், வரும் கல்வி ஆண்டிலும், கணிசமான அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்குள் இருந்தாலும், இவற்றில், 43 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, 36 ஆயிரமாக இருந்தபோதும், இவற்றில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, 58.05 லட்சமாகத் தான் உள்ளது.ஆண்டுக்கு ஆண்டு, தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் எடுத்து வரும் நிலையில், போட்டியை சமாளிக்கவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.- நமது நிருபர் -

ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்

ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்

பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று தொல்லியல் துறை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார்.
இதில் ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி "ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் பேசியது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாள்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.
கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.
தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.
கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.
பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.
ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.
கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது.
பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.
நிகழ்ச்சியில் தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநர் வெ.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

மாணவர்களும் சம்பாதிக்கலாம்!




மாணவர்களும் சம்பாதிக்கலாம்!

"பார்ட் டைம்' எனும் பகுதி நேர வேலையில், 150 கோடி சம்பாதித்த, 17 வயது சிறுவன் நிக்: நான், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவன். என் பெற்றோர், ஒன்பது வயதிலேயே கணினி வாங்கி தந்தனர். அதில் படம் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது என, ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளை போலவே இருந்தேன். ஆர்வ மிகுதியால் கணினி தொடர்பான, "சாப்ட்வேர் புரோகிராம்'களை எழுத ஆரம்பித்த போது, எனக்கு, 15 வயது. விளையாட்டாக, "ட்ரிம்மிட்' என்ற சாப்ட்வேரை எழுதி, இணையத்தில் வெளியிட்டேன். அதை பயன்படுத்திய பலர், சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். சிலர், அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டினர். பாராட்டுக்கு முக்கியத்துவம் தராமல், சுட்டிக் காட்டப்பட்ட தவறுகளை திருத்தி, "சம்லி' என்ற புதிய புரோகிராமை வெளியிட்டேன். என் புதிய வெளியீட்டை பார்த்த பலரும், சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். யாஹூ நிறுவனம், என் சம்லி சாப்ட்வேரின் பயன்பாடுகளை அறிந்து, அதை விலைக்கு வாங்க முற்பட்டது. அதை, 150 கோடிக்கு விற்ற போது, எனக்கு, 17 வயது. பள்ளியில் படித்தபடி, சும்மா ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலையாக எழுதியதே, இந்த சாப்ட்வேர். இங்கிலாந்தில், மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே, பகுதி நேரமாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந் தோ, சுயமாக தொழில் துவங்குவது வழக்கம். பெற்றோரும் இதற்கு தடை விதிக்காமல், இதுவும் ஒருவகையான படிப்பு என்ற மனநிலையில் இருப்பர். சிலர், பகுதிநேர பணியின் ஆர்வமிகுதியால் படிப்பை நிறுத்தி, முழுநேரத் தொழிலாக செய்கின்றனர். இதனால், பலர் ஜெயித்து தங்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். முயற்சிகள் தோற்றாலும் பிரச்னையில்லை; மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர, இங்கிலாந்தின் கல்வி முறை உதவுகிறது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், யாஹூ, கூகுள், பேஸ்புக் போன்ற கணினி துறையில் சிறந்த நிறுவனங்கள், என்னைப் போன்ற மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை என்பதால், பகுதி நேர வேலையிலும் மாணவர்கள் சாதிக்கலாம்.

தமிழை வாழ்விக்கும் கொடை திருக்குறள்!

தமிழை வாழ்விக்கும் கொடை திருக்குறள்!











தமிழை வாழ்விக்கும் கொடைதான் திருக்குறள் என புகழாரம் சூட்டினார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் உள்ள திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் 16-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஆகியவை திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, ஓய்வுபெற்ற பேராசிரியர் ப. தர்மலிங்கம் தலைமை வகித்தார்.
விழாவில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய நிறைவுரை:
அடுத்த தலைமுறைக்கு திருக்குறளை எடுத்துச் செல்லும் பணியை தொடர்ந்து 16-வது ஆண்டாகச் செய்து வரும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையை நிறுவி செயல்பட்டு வரும் தயாபரனை பாராட்டுகிறேன்.
உலகில் எத்தனையோ மொழிகள், இனங்கள் உண்டு. அந்தந்த மொழிகளில் இலக்கியங்களும் உண்டு. ஆனால், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் பொதுவான மறையைத் தந்திருப்பது தமிழினம் மட்டும்தான். அதுதான் திருக்குறள்.
மேலை நாடுகளில் வயதானவர்களுக்கு மறதி நோய் அதிக அளவில் ஏற்படுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஆய்வு நடத்தியபோது கிடைத்த விடை என்ன தெரியுமா? விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்ற பெயரில் எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ளாத நிலையை ஏற்படுத்தி இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறெட்டு நாற்பத்தி எட்டு என்று மனதால் கணக்குப் போடக்கூட கால்குலேட்டர் தேவைப்படுகிறது என்கிற நிலைமைதான் மறதி நோய் ஏற்படக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இள வயதில் மனனம் செய்வதால் முதுமையில் மறதி நோய் வராது.
திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு இரண்டு முக்கியமான பலன்கள் கிடைக்கும். ஒன்று வாழ்க்கை நெறிகளை அறிந்து கொள்வது, மற்றொன்று முதுமைக்கு அவர்கள் சேர்த்து வைக்கும் ஓய்வூதியமாக மறதி நோய் ஏற்படாது என்பதும்தான் அவை.
திருக்குறளை குழந்தைகள் அர்த்தம் தெரியாமல் படிப்பதால் பலன் உண்டா என்று கேட்கலாம். அனைத்து குறள்களுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு தான் படிக்க வேண்டும் என்பதில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையில் சோதனைகள், இடர்பாடுகள் வரும் போது அவர்கள் அதை எதிர்கொள்ள குறள் வழிகாட்டும். வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுக்குக் குறளின் பொருளை எடுத்துரைக்கும்.
குழந்தைகள் தற்போது திருக்குறளை மனப்பாடம் செய்வது அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சியாகும்.
வீட்டில் குழந்தைகளுக்கு தினந்தோறும் ஒரு திருக்குறளையும், ஆத்திச்சூடியையும் கற்றுக் கொடுங்கள். வீட்டில் தமிழிலேயே பேசுங்கள்.
திருக்குறளைக் கற்றுத் தேர்ந்த பிறகு பாரதியையும், கம்பனையும், இளங்கோவடிகளையும் குழந்தைகள் படித்தார்களானால், அது தமிழைத் தலைமுறை தலைமுறைக்கும் கொண்டு செல்லும் என்றார் அவர்.
போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பித்த 32 குழந்தைகளுக்கும், 500 குறள்களை ஒப்பித்த 35 குழந்தைகளுக்கும், 850 குறள்களை ஒப்பித்த 2 குழந்தைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், அறக்கட்டளை தலைவர் பூவை. பி. தயாபரன் அறிமுக உரையாற்றினார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்) ஆ. புகழேந்தி, பேராசிரியர் ரெ. நடராசன், திருக்குறள் சு. முருகானந்தம், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கி. சிவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு
தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளை தினமணியுடன் இணைந்து நடத்த தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குறள் தினவிழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களிலும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை போன்று ஏதேனும் ஒரு அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்து அனுப்பினால், மாநில அளவிலான போட்டியை தினமணி நடத்த தயாராக உள்ளது. அதற்கு எந்த அமைப்புகள் வேண்டுமானாலும் முன்வரலாம். இதை ஒரு வேண்டுகோளாக, அறைகூவலாக இங்கு வைக்கிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான போட்டியை நடத்த முன்வரும் அமைப்புடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கவும், சான்றிதழ்களை வழங்கவும் தினமணி தயாராக உள்ளது என்றார் அவர்.