வியாழன், 5 நவம்பர், 2009

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்



சென்னை, அக். 4: இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபட்சவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபட்சவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் தில்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும். ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது. இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்.
கருத்துக்கள்

குற்றம் செய்தவனை விட அதற்குத் திட்டம் தீட்டிய சதிகாரன்தான் பயங்கரக் குற்றவாளி. போர்க்குற்றவாளிகளைத் தண்டித்தால் அடுத்து தண்டனை சூத்திரதாரியான காங்.கைத்தான் தண்டிக்க வேண்டும். எனவே, தாங்கள் தப்பிக்க சிங்களர்களைக் காப்பாற்றுகிறார்கள். இந்த நம்பிக்கை சிங்களத்திற்கும் ண்டு. அமெரிக்காவும் உள்ளார்ந்த மனத்துடன் செயல்படவில்லை. எல்லாமே நாடகம்தான். எனவே, இக்கருத்துகளை இங்குக் கூறுவதை விட உலக நாடுகளிடம் பரப்பி நீதி வேண்டுங்கள். சிங்களம் மட்டுமல்ல இந்தியம் சீனம் பாக்கிசுதானம் அமெரிக்கம் ச்பபானியம் என எல்லா நயவஞ்சகர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். அதற்குக் காங். அரசை மத்தியில் இருந்து அகற்ற வேண்டும். முடியுமா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:26:00 AM

நெடுமாறன் உண்மையைத்தான் சொல்கின்றார். இலங்கையில் போர் நடப்பதற்கு இந்தியாவில் இருந்து கொண்டு பயங்கரவாதிகளிற்கு சார்பாக செயற்பட்டதன் முலம் மக்கள் ஆதரவற்ற மாவீரன்(?) நெடுமாறன், போர்வாள்(?) கோபாலசாமி, மரம்வளர்த்த(?) ராமதாஸ், சிறுத்தைவால்(?) திருமா போர்க்குற்றவாளிகள். இந்திய அரசு இவர்களைக் காப்பாற்றுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகின்றது. தாமே முன்வந்து இதனை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆனால் இவர்களைத் தண்டிப்பதும் தெருவில் போகும் பிச்சைக்காரனைப் பிடித்து சிறையில் அடைப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால் இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

By Ravi
11/5/2009 3:02:00 AM

Shame on all Tamil Nadu Tamils who have not supported the Eelam Tamils. They did not have even liitle bit of feeling what the americans have. Hindus were masacred by Hindus and goes on defending the pertuators.No other country would have dared to do. In this process India shot her foot by inviting the Chinese to the door step. Get rid of Sonia, Chithambaram, Congress party, Karunanithy and family owned DMK and support Nedumaran, seeman and Vaiko, etc.

By Ram Chetty
11/5/2009 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக