வெள்ளி, 22 ஜனவரி, 2021

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021

 அகரமுதல


மொழியைக் காப்போம்!                               இனத்தைக் காப்போம்!

 

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 540)

தமிழ்க்காப்புக் கழகம்

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் தேசிய மொழிகளைப் பாதுகாப்பதற்குக் குரல்  கொடுப்பதற்குக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

நாள்: தை 13, 2052 / 26.01.2021

செவ்வாய் முற்பகல் 10.00 மணி

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

நிகழ்த்துநர் : thozharthiagu.chennai@gmail.com-









வியாழன், 21 ஜனவரி, 2021

குவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்

 அகரமுதல

தை 11, 2052 / ஞாயிறு 24.01.2021

மாலை 6.30

குவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்

முனைவர் தென்காசி தெ.கணேசன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுச் சொல் / Passcode: kuvikam123  
பயன்படுத்தலாம் அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.

 



 



“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!”

 அகரமுதல




“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!”

சிதம்பரம் ‘வள்ளலார் பெருவிழா’ வில் தீர்மானம்!


தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற “வள்ளலார் பெருவிழா”வில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஆகியன இணைந்து நடத்திய “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா, தை 07, 2052 /20.01.2021 மாலை கீரப்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இப்பெருவிழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் தலைமை தாங்க, இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஞான. சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பரதூர் செயலாளர் மாணவர் செ. பொன்னிவளவன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேட்டுக்குப்பம் திருமதி. பிரேமா திருவருட்பாவை இசைபட ஓதினார். சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம், சிலம்பம், இளவட்டக் கல் தூக்குதல் நிகழ்ச்சி ஆகியன பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இப்பள்ளியின் ஆசிரியர் இரா. எல்லாளன் இவ்விளையாட்டுகளை ஒழுங்கு செய்தார்.

புவனகிரியில் அமைந்துள்ள வள்ளலார் சபையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தொண்டாற்றி வரும் கீரப்பாளையம் திரு. நா. நல்லதம்பி அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. பெருவிழாவின் நோக்க உரையை தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் திரு. வே. சுப்ரமணிய சிவா நிகழ்த்தினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், விழாப் பேருரையாற்றினார். புதுக்கோட்டை மேலை சிவப்புரி கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் தா. மணி, ஆவடி – தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் தமிழ்த்திரு. கலையரசி நடராசன், கீரப்பாளையம் கற்ப சித்தர் திரு. நாகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் முன்னணிப் பொறுப்பாளர் திரு. வே. இளவரசன் நன்றி நவின்றார். வள்ளலார் பெருவிழாவைத் தமிழ்த்தேசியப் பேரியக்க காட்டுமன்னார்குடி நகரச் செயலாளர் திரு. சிவ. அருளமுதன் மற்றும் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ. குபேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பெருவிழாவில், பின்வரும் இரண்டு தீர்மானங்களும் பங்கேற்பாளர்களின் பலத்த கையொலிகளுடன் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1 : வள்ளலார் இராமலிங்க அடிகள் சிந்தனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துக!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் உரிமை இயக்கங்களும் ஆன்மிகச் சான்றோர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்று, இந்த ஆண்டு முதல் தைப் பூசத் திருநாளை தமிழ்நாடு தழுவிய அரசு விடுமுறையாக அறிவித்ததற்குத் தமிழ்நாடு அரசுக்கு வள்ளலார் பெருவிழா நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது!

தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது; மெய்யியல் வகையிலும், அறிவியல் முறையிலும் புதிய படிநிலைகளைத் தொட்டுக் காட்டுவது ஆகும்!

நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும்!

அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலார் சிந்தனைகள் அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல துறைகள் சார்ந்து விரிந்து நிற்பதாகும். அதனால்தான், வள்ளலார் அவர்களைத் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் என்று அழைக்கிறோம்.

வள்ளலார் சிந்தனைகள் குறித்து ஆழமான – விரிவான ஆய்வுகள் வெளிவந்தால், தமிழினத்தின் பெருமையை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படும். மேலும், உலக மன்பதைக்கும் புதிய வழிகாட்டுதல்களை வழங்குவதாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகள் பெயரில் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்தி, அவரது பன்முகச் சிந்தனைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்தல் வேண்டும் என இப்பெருவிழா தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 2 : மல்லர் கம்ப வீரர்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும்!

தமிழர் மரபில் தோன்றிச் சோழப்பேரரசு காலத்தில் தமிழர்களிடையே விரிவாகப் பயிலப்பட்ட வீர விளையாட்டுகளில் மல்லர் கம்பம் முகாமையானது. தாராசுரம் கல்வெட்டு இதற்கு அழுத்தமான சான்றாக விளங்குகிறது.

தமிழ்நாட்டை மராட்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் மல்லர் கம்பம் வீர விளையாட்டை மராட்டியர்கள் தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் சென்று, மராட்டியர்களின் தேசிய விளையாட்டாகவே வளர்த்திருக்கிறார்கள். மகாராட்டிர மாநிலத்தில் மல்லர் கம்பம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் விளையாட்டுகளின் பட்டியலில் மல்லர் கம்பமும் சேர்க்கப்பட்டு, சிறப்பான முறையில் அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இடைக்காலத்தில், தமிழ்நாட்டில் மங்கியிருந்த இந்த வீர விளையாட்டுக் கலையை விழுப்புரத்தைச் சேர்ந்த உலகதுரை என்ற பெருமகனார் மீட்டெடுத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மல்லர் கம்பம் வீர விளையாட்டு பொங்கல் விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் பெருமளவில் விளையாடப்படுகின்றன.


ஆயினும், இந்த வீர விளையாட்டுக்குத் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் தராமல் இருப்பது வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசு மராட்டிய மாநில அரசைப் போல மல்லர் கம்பம் வீர விளையாட்டையும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டு, மாவட்ட அளவிலும் தமிழ்நாடு அளவிலும் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்குவோருக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்ற விளையாட்டுகளைப் போல மல்லர் கம்பத்தையும் பயிற்றுவிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பெருவிழா கேட்டுக் கொள்கிறது!

விழாவில், வள்ளலார் தொண்டர்களும், இறைநெறிச் சான்றோர்களும், தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

 

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தமிழ்க்கூடல், 20.01.21

 அகரமுதல

தை 07, 2052 / 20.01.21 புதன் கிழமை
காலை 11.00

உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை
தமிழ்க்கூடல்

கூடலுரை :

காரைக்காலம்மையாரும் இந்தியப் பெண் கவிஞர்களும்

முனைவர் யாழ் சந்திரா
தமிழரின் மரபுவழி மருத்துவம் :
திரு சு.முத்தையா

 




திங்கள், 18 ஜனவரி, 2021

பாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா

 அகரமுதல


பாதிரி ஊரில்
தைத்திருநாள் கலை இலக்கிய விழா

பாதிரி ஊராட்சி மன்றமும் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கமும் இணைந்து தைத்திருநாள் பொங்கல் கலை இலக்கிய விழா வந்தவாசியை அடுத்த பாதிரி ஊரில் உள்ள காந்தித் திடலில் நடைபெற்றது.

இந்த விழாவில் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. இரகமத்துல்லா தலைமை வகித்தார். பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருட்டிணன் வரவேற்றார்.

செல்வி. இரீனாவின் பரத நாட்டியத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தமிழிசைப் பாடல்களை இரா.அருண்குமார், பெ.பார்த்திபன் ஆகியோர் பாடினர். உழவர் திருநாள் சிறப்புக் கவிதைகளைக் கவிஞர்கள் வந்தை குமரன், க.புனிதவதி, ஊடகவியலாளர்
தமிழ் இராசா ஆகியோர் வாசித்தனர்.

மேலும், ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ என்ற தலைப்பில் சீ.கேசவராசுஜ், ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் வி.எல்.இராசன், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் வந்தை பிரேம், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற தலைப்பில் சா.தமீம் ஆகியோர் கருத்துரையாற்றினர். பள்ளி மாணவன் இல. கோபாலகிருட்டிணன் ‘ஓகாசனம்’ செய்து காட்டினார்.

பின்னர், குறும்பாக் கவிஞரும், தமிழ்ச் சங்க அறிவுரைஞருமான மு.முருகேசு நடுவராகப் பங்கேற்ற ‘இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் பயணம் – சிகரத்தை நோக்கியே!,
சிரமத்தை நோக்கியே!’ எனும் தலைப்பிலான சிந்தனைச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
‘சிகரத்தை நோக்கியே’ என்ற அணியில் செயலாளர் பா.சீனிவாசன், இரா.பாசுகரன், ஆசிரியை எசு.இரசீனா ஆகியோரும், ‘சிரமத்தை நோக்கியே’ என்ற அணியில் துணைத் தலைவர் ம.சுரேசு பாபு, பேராசிரியர் க.பூபாலன், இரா.நளினி ஆகியோரும் பங்கேற்றனர். இறுதியில், ‘இன்றைய இளைஞர்களின் பயணம் சிகரத்தை நோக்கியே’ என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார்.

‘நாமும் தமிழும்’ என்ற தலைப்பில் மனோசு குழுவினரின் குறுநாடகம் நடைபெற்றது. மேலும், கலைநிகழ்ச்சிகளிலும் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைத் துணைச் செயலாளர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, இளைஞர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ம.பாபு நன்றி கூறினார்.