சனி, 31 அக்டோபர், 2009

General India news in detail

சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் உட்பட 10 ரயில்கள், நாளை முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.



இதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 12.25 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 12.40 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் மாலை 3.30 மணிக்கு பதிலாக மாலை 3.45 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.05 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக இரவு 7.35 மணிக்கும், திருச்செந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.40 மணிக்கு பதிலாக மாலை 2.40 மணிக்கும், சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11.20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கும், ஹவுரா - திருச்சி எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து இரவு 8.25க்குப் பதிலாக 8.20க்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.



நிஜாமுதின்-மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து மாலை 6.40 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், நிஜாமுதின்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து மாலை 6.40 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், ஹவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 8.20 மணிக்கும் நாளை முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது என்று, தெற்கு ரயில்வேயின் ரயில்கள் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Front page news and headlines today

அரசு துறை அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறுகிறது அரசு. ஆனால், கோவையில் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட வேலைகளை செய்து தர, புரோக்கர்கள் ஆபீஸ் திறந்து, தடாலடியாக விளம்பரமும் செய்துள்ளனர்.



மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் பணிகளை, மாவட்ட வழங்கல் அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் "உதவி பங்கீட்டு அலுவலர்' அலுவலகங்கள், கோவை வடக்கு மற்றும் தெற்கு தாசில்தார் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிய ரேஷன் கார்டுக்கு விண் ணப்பம் அளித்தல், முகவரி மாற் றம், பெயர் சேர்ப்பு உள்ளிட்ட ரேஷன் தொடர்பான பல்வேறு பணிகளை, உதவி பங்கீட்டு அலுவலர் அலுவலகங்கள் கவனிக் கின்றன. இதற்காக, தினமும் ஏராளமான மக்கள், இந்த அலுவலக பணியாளர்களை அணுகி வருகின்றனர். போதிய கல்வியறிவு இல்லாதோர், தங்களது கோரிக்கை தொடர் பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும், ஆபீசில் யாரை அணுகுவது, என்ற விபரம் தெரியாமல் தவிக்கின்றனர்.



இவர்களின் தவிப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றும் புரோக் கர்கள், தாலுகா அலுவலக வளாகத் தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தங்களிடம் உள்ள விண்ணப் பத்தை விலைக்கு விற்று, பூர்த்தி செய்து தருகின்றனர்; இதற்கு, விண்ணப்பத்துக்கு இவ்வளவு என "ரேட்' நிர்ணயித்து கறந்து விடுகின்றனர். ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு தொடர்பான விண்ணப்பத் துக்கு 25 ரூபாயும், புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பத்துக்கு 30 ரூபாயும் வசூலித்துக் கொள்கின்றனர். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், "ஒரு விண்ணப்பத்துக்கு 10 ரூபாய் வரை செலவிட்டு வாங்குகிறோம்; அதை பூர்த்தி செய்து கொடுக்க, கொஞ்சம் சேர்த்து வசூல் செய்கிறோம்' என சர்வசாதாரணமாக கூறுகின்றனர்.



ரேஷன் பெயரில் இவ்வாறான வசூல் வேட்டை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ புரோக்கர்கள் சிலர் "ஹைடெக்காக' தொழிலை மாற்றி ஆபீஸ் திறந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்."ரேஷன் கார்டு வேண்டுமா, எங்களை அணுகுங்க!' என்று நகரில் பல இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி, நோட்டீஸ் வழங்கி வெளிப்படையாகவே விளம்பரம் செய்துள்ளனர். தவிர, தெருவிலுள்ள மரங்கள், மின் கம்பங்களில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அவற்றில் சில மொபைல் போன் எண்கள், புரோக்கர் அலுவலக முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நோட்டீஸ் விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:ரேஷன் கார்டில் என்ன பிரச்னை? முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், கார்டு மிஸ்ஸிங், கார்டு கேன்சல், புதிய கார்டு பெற எங்களை அணுகலாம். மேலும், சாதிச் சான்று, வாரிசுச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, திருமணம் பதிவு செய்தல் போன்ற அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வளவு நாட்களாக திரைமறைவில் மட்டுமே செயல்பட்டு வந்த புரோக்கர்கள், தற்போது வெளிப்படையாகவே ஆபீஸ் திறந்து, அப்பாவி மக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளதை, அரசுத் துறை அதிகாரிகளும் பார்த்தபடி செல்கின்றனர்; இவர்களுக்கு இப்படியொரு தொழிலை நடத்த லைசென்ஸ் யார் கொடுத்தது? இது சட்டவிதிகளை மீறிய செயல் ஆகாதா? என்ற கேள்விகள் எதுவும் அதிகாரிகளின் மனதில் எழாதது வியப்பாக உள்ளது.இப்படி பகிரங்கமாக நோட் டீஸ் அச்சடித்து, "பிசினஸாகவே' தொழில் செய்யும் அளவுக்கு இவர்களுக்கு ஊக்கமளித்தது சம் மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந் துள்ளது. இது போன்ற முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிடில், அரசுத் துறைகளின் அனைத்து விதமான வேலைகளுக்கும் "ஆபீஸ் போட்டு' புரோக்கர்கள் களமிறங்கிவிடும் அபாயம் நிலவுகிறது.



- நமது நிருபர் -

அரசு ஊழியர்களிடம் கால்கடுக்க நின்றும் அலுவலகத்திற்கு அடிக்கடி அலைந்தும் கையூட்டு கொடுத்தும் காலம் கடந்து உணவுப் பொருள் பங்கீட்டு அட்டையை வாங்க நேர்வதால் இத்தகைய பணியைக் குறை சொல்லத் தேவையில்லை. குறைவான கட்டணத்தில் சேவை தருவதால் பொது மக்களுக்கு ஆதாயம்தான். இதை ஒரு பணியாக (சர்வீஸ்) எடுத்துக் கொண்டால் தவறு ஏதும் இல்லை. இவ்வாறு அரசையே நம்பி நலத் திட்ட உதவிகள் பெறாமல் தவிக்கும் பொது மக்களுக்கு இது போன்ற பணி மையங்கள் ஊர் தோறும் இருந்தால் நல்லதுதான். நான் கிண்டலுக்குக் கூறவில்லை. நலத் திட்ட உதவிகள் பெறுவதில் பொதுமக்கள் பணத்தைச் செலவழித்தும் உரிய பயன் கிட்டாததால் கூறுகின்றேன்.
வாழ்க இவர்களின் பொதுநலத் தொண்டு.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 151: பிரித்தாளும் சூழ்ச்சி!



பிரபாகரன் தனது தளபதிகளுடன்...
கிட்டுவும், மொகைதீனும் கையெழுத்திட்டு உருவான உடன்படிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆளும் தரப்பினர், தமிழர்-முஸ்லிம் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். அமைதிப்படையும், விடுதலைப் புலிகளும் நேரடியாக மோதிய சூழ்நிலையில், தமிழர்கள்-முஸ்லிம்கள் இடையே முரண்பாடுகளும் வளர்த்து விடப்பட்டன. இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "முஸ்லிம் காங்கிரஸ், ஜிகாத் அமைப்பினருக்கு அமைதிப் படை ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகப் போராடும்படி தூண்டியது. ஆனாலும், புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் நடைபெற அனுமதிக்கவில்லை' (தமிழீழம் சிவக்கிறது பக். 345) என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியபோது, பிற போராளி குழுக்களுக்கும், மறுபுறம் ஜிகாத் இளைஞர்களுக்கும் ஏராளமான ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி விட்டுத்தான் சென்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் நோக்கம் இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினாலும், புலிகள் தொடர்ந்து நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதே நிலையைத்தான் பிரேமதாசா அரசும் விரும்பியது. பிரேமதாசா-புலிகள் பேச்சு முறிவடைந்து யுத்தம் பெருமளவில் மூண்ட நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் "பொத்துவில்' என்கிற இடத்தில் தமிழர்-முஸ்லிம்களிடையே பெரும் மோதல் எழுந்தது. இதில் தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பொத்துவிலில் தொடங்கிய மோதல் அம்பாறை மாவட்டம் முழுவதும் விரிவடைந்தது. இதனால் தமிழர்கள் அந்தப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டார்கள். இவ்வாறாக 75 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர நேர்ந்தது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்ததாகவும் தகவல் உள்ளது. "நூற்றுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்க் கிராமங்கள் பல அடியோடு அழிக்கப்பட்ட நிலையில், பாண்டிருப்பு, காரைத்தீவு, கோமாரி, தம்பிலுவில், திருக்கோவில் கிராமங்களில் மட்டுமே தமிழ் மக்கள் வசிக்கிறார்கள்' (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்-பக். 352). இதன் தொடர் நிகழ்வாக, முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து, "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் சி.புஷ்பராஜா வெளியிட்டுள்ளார். அந்தத் தகவலின்படி 1990-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி குருக்கள் மடத்திலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காத்தான்குடி பள்ளிவாசலிலும், அதே ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஏறாவூரிலும் ஆக மொத்தம் 271 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார். "ஈழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மாபெரும் தவறுதான்' என்று குறித்துள்ள புஷ்பராஜா, தான் அங்கம் வகித்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் அமைதிப்படையினருடன் சேர்ந்து 1987-இல் கல்முனையிலும், 1989-இல் சம்மாந்துறையிலும் முஸ்லிம் மக்களுக்குச் செய்த கொடுமைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் (பக்.502). யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குள், புலிகளின் அரண்களையும் கொரில்லா நடவடிக்கைகளையும் ஜிகாதி இளைஞர்களில் சிலர் சிங்களப்படைக்குக் காட்டிக்கொடுத்து வந்தனர் என்றும், இந்த ஜிகாதி இளைஞர்களுக்கு யாழ் நகர முஸ்லிம்கள் புகலிடம் அளித்தனர் என்றும், இதனைக் கண்டித்த புலிகள் இந்தப் போக்கைக் கைவிடுமாறும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த எச்சரிக்கைக்கு பயன் ஏற்படாத நிலையில், ஜிகாதி இளைஞர்களின் துப்பு, சிங்களப் படையின் தாக்குதலைக் கடுமையாக்கியது. வேறு வழியின்றி விடுதலைப் புலிகள் முஸ்லிம் வட்டாரங்களில் வாழ்ந்தோரை குறுகிய காலக்கெடுவில் யாழ்குடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர் (புலிகள் அறிக்கை). பலத்த விமர்சனத்துக்கு ஆளான இந்த உத்தரவு குறித்து பி.பி.சி. வானொலிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அளித்த பேட்டியில், ""1990-ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக் கலவரம் வெடித்துப் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பைக் கருதி நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தாற்காலிகமாக வெளியேறும்படிக் கேட்டுக் கொண்டோம். ஆயினும், யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்'' என்றார். முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? என்று பி.பி.சி. நிருபர் கேட்ட இன்னொரு கேள்விக்கு வே.பிரபாகரன் அளித்த பதில்: ""முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடு உடைய ஓர் இனக்குழு என்ற வகையில், அவர்களது பிரச்னை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம் மற்றும் நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை, அவர்கள் தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும், விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிகடா ஆகக் கூடாது'' என்றும் அவர் பதிலளித்தார்.இந்திய அரசியலில் ஒரு மாற்றமாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் மண்டல் கமிஷனின் பரிந்துரை அமலாக்கத்தில் பிரச்னை எழுந்தது. ஆனால், மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவது என்பதில் வி.பி.சிங் உறுதியாக இருந்தார். இம் முயற்சியை இந்தியாவின் வட மாநிலங்களில் மாணவர்களும், படித்த வர்க்கத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். தீக்குளிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம், இந்திய மக்களை இருவேறு பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த பாஜக எந்த நிலை எடுப்பது என்பது குறித்து அந்தக் கட்சிக்குள்ளேயே பலத்த விவாதம் எழுந்தது. இறுதியில் மண்டலுக்கு எதிராக, ராமர் கோயிலா - பாபர் மசூதியா? என்கிற பிரச்னையை பாஜக கையிலெடுத்தது. ஆறாயிரம் மைல்களை உள்ளடக்கிய ரதயாத்திரைத் திட்டத்தை, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-இல், குஜராத்தின் சோமநாத் கோயிலில் இருந்து, தொடங்கினார். வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் புயலைக் கிளப்பிய இந்த ரதயாத்திரை, பீகார் எல்லையைத் தொட்டவுடன், அம்மாநில முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் யாத்திரையைத் தடை செய்து, அத்வானியைக் கைது செய்தார். அரசு விருந்தினர் மாளிகை ஒன்றில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்க, அவருடன் வந்த தொண்டர்கள் உத்தரபிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கே, அம்மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், ஊர்வலத்தில் வந்தவர்களைக் கூட்டமாகக் கைது செய்து, நகரவிடாமல் செய்தார். அதனையும் மீறி ஒன்றரை லட்சம் பேர் தடுக்கப்பட்டனர். அதையும் மீறி "கரசேவகர்கள்' என்றழைக்கப்பட்ட தொண்டர்கள் சரயு நதியைத் தாண்டிச் சென்று, பாபர் மசூதி அமைப்பில் காவிக்கொடியை நட்டனர். சிறப்பு அதிரடிப் படைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் உயிர்துறந்தனர். ஏராளமான பேர் படுகாயமுற்றனர். வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த தனது 86 உறுப்பினர்களின் ஆதரவை பாரதீய ஜனதாக் கட்சி விலக்கிக் கொண்டது. பிரதமர் வி.பி.சிங் தனது பதவியைத் துறந்தார். 1979-இல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவைப் பதவி விலகியதையொட்டி, சரண்சிங் பிரதமராவதற்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்த அதே உத்தியைப் பயன்படுத்தி, தற்போது சொற்ப எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட முன்னாள் "இளந்துருக்கியரா'ன சந்திரசேகர் பிரதமர் ஆவதைக் காங்கிரஸ் கட்சி வரவேற்று, ஆதரவு தெரிவித்தது. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-இல் சந்திரசேகர் பிரதமரானார். உடனடித் தேர்தலை யாருமே விரும்பாத நேரத்தில், சந்திரசேகர் ஆட்சி இடைக்கால ஏற்பாடாகவே அப்போது கருதப்பட்டது.நாளை: ராஜீவ் படுகொலை!
கருத்துக்கள்

இப்படியெல்லாம் சகோதர யுத்தத்தைத்' தூண்டியவர்களும் தூண்டியவர்கள் பக்கம் அணி சேர்ந்தவர்களும்தான் 'சகோதர யுத்தத்திற்குக் ' காரணம் விடுதலைப்போராளிகள் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.வெட்கக் கேடு!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
யார் யாருக்குப் பலன்? அரசாணை வெளியீடு



சென்னை, அக். 30: வாழும் இடத்திலேயே ஜாதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பயன் பெறுவார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசின் உத்தரவின் விவரம்: முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் வகுப்புகளில் கள்ளர் வகுப்பும், அதன் உட்பிரிவான ஈசநாட்டு கள்ளர் வகுப்பும் தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளர் வகுப்பின் மற்ற உட்பிரிவுகளான கந்தர்வ கோட்டை கள்ளர், பிரமலைக்கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர் ஆகிய வகுப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சீர்மரபினர் வகுப்புகளாகவும், இதர மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மறவர் வகுப்பும், அதன் உட்பிரிவுகளான அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர் மற்றும் செம்பநாடு மறவர் வகுப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சீர்மரபினர் வகுப்புகளாகவும், இதர மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு உட்பிரிவான கருமறவர் வகுப்பு தமிழகம் முழுவதிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகமுடையார் வகுப்பு தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள்... மொழிவாரி மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு இணங்க சில வகுப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாகவும், மாநிலத்தின் இதர பகுதிகளில் முன்னேறிய வகுப்புகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தாசபளஞ்சிகா வகுப்பு கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும், புலவர் வகுப்பு கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும், வைநாடு செட்டி வகுப்பு நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரையர் மற்றும் லத்தீன் கத்தோலிக்க கிறித்துவ வண்ணார் வகுப்புகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சியர்களுக்கு வேண்டுகோள்... மேற்கூறப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் வேறு இடங்களில் குடிபெயர்ந்தால் அங்கேயே அவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்க அதிகாரம் படைத்த அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரேஷன் அட்டை உள்ளிட்டவை... சொந்த மாவட்டங்களில் சொத்துகளோ அல்லது ரேஷன் அட்டையோ இல்லாத நிலையில் அங்கு ஜாதிச் சான்றிதழை பெற இயலுவதில்லை. பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்டுள்ள வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து மாநிலத்தின் வேறு பகுதிகளில் குடியேறும் நிலை உள்ளது. இந்த நிலையில், அவர்கள் தாங்கள் குறிப்பிட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் மற்றும் அந்த வகுப்பு பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்து குடியேறியவர் என்பதற்கும் ஆதாரமாக அந்தப் பகுதிகளில் (மாவட்டங்கள் அல்லது வட்டத்தில்) தங்களது பெற்றோருக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுடைய வகுப்பு அவர்களது சொந்த மாவட்டத்தில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதோ அதற்குரிய சான்றிதழ்களை குடியேறிய பகுதிகளில் உள்ள ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் வழங்கலாம் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதே கார்ட்டூன்கள்:
கார்ட்டூனிஸ்ட் மதி



திண்டுக்கல், அக். 30: சில கோடுகளைக் கொண்டு அதிக வெளிப்பாடுகளை விளக்குவதும், சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதுமே கார்ட்டூன்கள் என "தினமணி' நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் எஸ்.மதி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி நாடார்கள் சுந்தர விசாலாட்சி வித்யாசாலை பள்ளிகளின் மேலாண்மைக் குழு சார்பில் நா.சு.வி.வி. தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவையொட்டி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கார்ட்டூன் கண்காட்சியைத் திறந்துவைத்து எஸ்.மதி பேசியதாவது: உலகில் உள்ள உயிரினங்களில் சிரிக்கும் வாய்ப்பை மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளார். நகைச்சுவை என்பது மிக முக்கியமான விஷயமாகும். இதில் ஒவ்வொருவரிடமும் உள்ள அளவில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். பிரச்னையே வாழ்க்கையாக அமைந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் முடிந்த அளவு நகைச்சுவையை வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் உள்ள நகைச்சுவை உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும். நகைச்சுவை உணர்வுக்கு அற்புதமான விஷயம் கார்ட்டூன். குறைவான கோடுகளைக் கொண்டு வரையப்படும் கார்ட்டூன் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூடியது. அதுமட்டுமின்றி, சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கக் கூடியது. கார்ட்டூன் வரைவதற்கு நிறைய விஷயங்களைப் படிக்க வேண்டியுள்ளது. எனவே, மாணவர்கள் நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். காமிக்ஸ் உள்ளிட்ட எந்த புத்தகத்தையும் படிக்கலாம். புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், வாழ்க்கையில் புத்தகங்களே உற்ற நண்பர்கள் என்பதை உணர முடியும். புத்தகம் படிப்பதால் உங்களுக்கு நன்மை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது நாட்டுக்கே நன்மை. கற்கும் காலத்தில் மாணவர்களுக்கு உள்ள ஒரே பிரச்னை படிப்பு மட்டும்தான். எனவே, உங்களது செயலில் நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும். தடைகளைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. தடைகளும் பிரச்னைகளும் உள்ள இடத்தில்தான் வளர்ச்சிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ், ஆங்கிலம் இரண்டும் இரு கண்களைப் போன்றவை. எனவே, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதும் திறனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பில் வெற்றி பெறுவதைவிட, வாழ்க்கையில் வெற்றி பெறுவதே மிக முக்கியம். டிவி தொடர்களுக்கு முக்கியத்துவம் கூடாது: மாணவர்களின் மீது உள்ள நம்பிக்கைகூட பெரியவர்கள் மீதும் பெற்றோர்கள் மீது இல்லாமல் போய்விட்டது. காரணம் பெரியோரும், பெற்றோர்களும் டி.வி.க்கு அடிமையாகி விட்டனர். டி.வி. தொடர்களில் பெண்களைச் சதிகாரர்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்திரித்துக் காட்டுகின்றனர். பெண்களை இழிவுபடுத்திக் காண்பிக்கும் தொடர் நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதை பெண்கள் நிறுத்த வேண்டும். குழந்தைகள் டி.வி. பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். தங்களுடைய எண்ணங்களை பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது. மருத்துவம், பொறியியல் மட்டுமே சாதிக்கும் துறைகள் அல்ல. சாதிப்பதற்கு எத்தனையோ துறைகள் உள்ளன. மிருகங்களுக்குத் தான் ஈன்ற குட்டிகளில் ஆண், பெண் பேதம் தெரிவதில்லை. இதனால் தன் பெண் குட்டிகளை கொல்வதில்லை. ஆறறிவு, பகுத்தறிவு எனப் பேசும் மனிதர்கள் பெண் கருக் கொலை செய்வது இங்கேதான் உள்ளது. பெண் தெய்வங்கள் என்பது இந்து மதத்தில்தான் அதிகம் உள்ளன. பெண் சிசுக் கொலை தடுக்கப்பட வேண்டும். பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்றார்.
கருத்துக்கள்

பல பக்கங்களில் விளக்க முடியாவதவற்றைஒரு சில கோடுகள் தீட்டி உணரத்துவன கருத்துப் படங்களே! இதில் தலைசிறந்து விளங்கும் மதியின் கருத்துகள் சரியானவை. மக்களைப் பண்படுத்தும் கருத்தாளர் மதியும் கருத்துப்பட ஓவியர்களும் வாழ்க!அவர்களின் தொண்டு தொடர்க!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மதுரை முன்னாள் எம்.பி. மோகன் மரணம்



மதுரை, அக். 30: உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மதுரை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கட்சி) பி.மோகன் (60) வெள்ளிக்கிழமை மாலை மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களாக குடல் வால்வு ரத்தக் கசிவுப் பிரச்னையால் அவதியுற்று, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட மோகன் 30.12.1949-ல் பிறந்தார். இவரது தந்தை பொன்னுச்சாமி. தாய் மீனாட்சி. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்த மோகன், கல்லூரி பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். 1973 முதல் மார்க்சிஸ்ட் கட்சியில் மாணவர் அணி, இளைஞர் சங்கம் என பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநிலக் குழு உறுப்பினரானார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அவர் இதுவரை 6 முறை சிறை சென்றுள்ளார். 1991, 1996, 1998 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.இரண்டு முறை எம்.பி.: மதுரை மக்களவைத் தொகுதியில் 1999-ல் அதிமுக கூட்டணியிலும், 2004-ல் திமுக கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியில் மு.க. அழகிரிக்கு எதிராகப் போட்டியிட்டு அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தலின்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் தேர்தல் பிரசாரத்தில்கூட முழுமையாக அவரால் பங்கேற்க முடியவில்லை. ஓரளவு உடல்நலம் தேறிய நிலையில், வீடு திரும்பிய அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். பி.மோகனுக்கு மனைவி பூங்காவனம், 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மனைவி பூங்காவனம் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இன்று இறுதி ஊர்வலம்: மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டுக்கு, மோகனின் உடல் சென்னையிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும், சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இறுதி ஊர்வலம் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

ஆரியச் சார்புடைய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் தமிழ் உணர்வுடனும் மிக எளிமையாகவும் தொண்டுணர்வுடனும் வாழ்ந்த திரு மோகன் இறந்துவிட்டாரா? அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. தினமணி இணைய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைக் குடும்பத்தார்க்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். துயரத்துடனும் வருத்தத்துடனும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:38:00 AM

great loss for tamil nadu working group

By P.RADHAKRISHNAN
10/31/2009 12:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அஞ்சலி



சென்னை, அக். 30: முன்னாள் எம்.பி. மோகன் (60) மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு அஞ்சலியைச் செலுத்துகிறது என்று அதன் செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மோகன் மறைவு, கட்சிக்கும் ஏழை உழைப்பாளி மக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் மனைவி பூங்காவனத்துக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை (அக்டோபர் 31) மாலை 5 மணி அளவில் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள கட்சி மாவட்டக் குழு அலுவலகத்திலிருந்து புறப்படும். தத்தனேரி மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோகன் மறைவு: முதல்வர் இரங்கல்



சென்னை, அக். 30: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பி. மோகனின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மோகனின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாபெரும் இழப்பு. என்னைப் பொருத்தவரையில் ஒரு சிறந்த நண்பரை இழந்துவிட்ட அந்த உணர்வோடு இந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கிறேன். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் என்றாலும்கூட, என்னிடத்தில் மிகுந்த மதிப்பும், அன்பும் கொண்டவர். ஆளுங்கட்சியாக திமுக இருக்கிற காரணத்தால், ஒவ்வொரு வாரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரின் தொகுதி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். தொகுதி மக்களுக்காக அரும்பாடுபட்டவர். தொழிலாள தோழர்களுக்காக துணை நின்றவர். அவர்களுக்காக பல போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பாக மதுரை மாவட்டத்துக்கு பெரும் இழப்பு. என்னுடைய இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கும், கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மிக எளிமையாகவும் தொண்டுணர்வுடனும் வாழ்ந்த திரு மோகன் இறந்துவிட்டாரா? அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. தினமணி இணைய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைக் குடும்பத்தார்க்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். துயரத்துடனும் வருத்தத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு:
கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, அக். 30: மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து நடத்துவதாக அறிவித்தப் பொதுக்கூட்டத்தை தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே முதல்வர் கருணாநிதி ஒத்திவைத்துள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுக அரசின் நிலை நாளுக்குநாள் பலவீனமடைந்து வருவதைப் பார்க்கும்போது தமிழக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பது தெரிகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுகவின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாகவும், அதில் தானே கலந்து கொள்ளப்போவதாகவும் அக்டோபர் 21-ல் கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான மறுநாள் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சி.பி.ஐ. தனது பணியை முறையாக செய்தால் ராசா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதோடு, கருணாநிதி குடும்பத்தினர் பற்றிய தகவல்களும் வெளியே வந்துவிடும். எனவே, மத்திய அமைச்சருக்கு எதிரான பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார். 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைவிட, வாழ்வாதாரங்களை விட குடும்பத்தினரின் வருமானமே கருணாநிதிக்கு முக்கியம். அதனால் ""மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையோ, மத்திய அரசையோ கண்டிக்கும் கூட்டமல்ல'' என்று முதலில் தெரிவித்தார். ""ஜெய்ராம் ரமேஷை எதிர்த்து திமுக பொதுக்கூட்டம் நடத்தும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் ஏன் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது?'' என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், "நீண்ட நாள்களுக்கு முன்பே அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துவிட்டார். இப்போது தேவையற்ற குழப்பங்களை ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார். இதன் மூலம் கருணாநிதியின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. கடைசியில் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ""முல்லைப் பெரியாறு பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கண்டனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது'' என்று அறிவித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும். எனவேதான் மக்களின் அனுதாபத்தைப் பெற மருத்துவமனைக்குச் சென்று ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். கற்பனையில் உதிக்கக் கூடிய எல்லா நாடகங்களும் நடத்தப்படுகின்றன. உண்மையை மறைக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட முதல்வர் தேவைதானா என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

நியாயமான கேள்விகளே! ஆனால், மக்கள் கேட்பது யார் என்றுதானே பார்க்கிறார்கள்? கேட்கப்படுபவரையும் கேட்பவரையும் ஒப்பிட்டுப் பார்த்துக் குறைந்த தீமையை ஏற்றுக் கொள்கின்றனரே! இரு தீமைகளையும் அகற்ற வேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும் சரியான எதிர்க்கட்சி இல்லாமையால் தறிகெட்டவர்கள் பின்னால் தமிழ்நாடு சென்று தடுமாறுகிறதே! கொள்கைக் குழப்பங்களிலும் தடுமாற்றங்களிலும் கொள்ளைக் கொலை கூட்டணியிலும் ஆளும்கட்சி சிக்கித் தவிப்பது நன்கு புரிந்தாலும் இரண்டில் ஒன்று என்னும் முடிவிற்கு வருகிறார்களே தவிர இரண்டும் வேண்டா என்னும் முடிவிற்கு வர மறுக்கிறார்களே! உண்மையான பாதையில் நடைபோட விரும்புபவர்களின் கண்களையும் தேர்தல் சூதினால் கட்டிப் போட்டு விடுகின்றார்களே! ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுகவே நீயாவது திருந்தக் கூடாதா? நீயும் அதே பாதையில் திமுக இடத்தைப் பிடிக்கத்தானே போட்டி போடுகின்றாய்! தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போகும் தலைவர் யார் என்று தெரியவில்லையே!

ஏக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை

28 October, 2009 by admin

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயானந்தமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்திற்குக் குறைவான அல்லது தமிழ் மக்களை தாங்களே ஆளக்கூடிய தன்னாட்சித் தீர்வுக்குக் குறைவான தீர்வு எந்தவகையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஸ்டித் தீர்வு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஆராய்ந்து வருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ள ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாங்கள் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஆனால் எங்களில் சமஸ்டித் தீர்வுக்கு எத்தனை பேர் உடன்படுவார்கள் என்பது கேள்விக் குறியான விடயம்.

இலங்கையில் சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் அல்லது அது தோல்வி கண்டதன் விளைவாகவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளமே தனித் தமிழமே ஆகும். இத்தனித் தமிழீழத்திற்கே மக்கள் அப்போது ஆணை வழங்கியிருந்தனர். இன்றும் அதில் உறுதியாக உள்ளனர்.

இதைவிடுத்து நாம் மக்களின் ஆணையை புறக்கணித்துவிட்டு குறைவான எந்தவொரு தீர்வுக்கோ அல்லது சமஸ்டி முறையிலான ஒற்றையாட்சி தீர்வுக்கோ இறங்கிச் செல்ல முடியாது.

தமிழீழக் கொள்கைக்காகவே எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

எனவே அவர்களின் தியாகத்தை எவரும் மறந்துவிட முடியாது. அவர்களின் அடிச்சுவட்டில் நின்று நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு நனவாகும்.” என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி,

“நான் தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தங்கியுள்ள போதிலும் எமது கொள்கையில் இருந்து நான் மாறப்போவதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து விலகப்போவதுமில்லை.

தற்போதும் எனக்கு வாக்களித்த மக்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கின்றேன். எமது தமிழீழத்திற்காக தாயகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ற வகையில் நாம் எமது கொள்கையை மாற்ற முடியாது. அதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுவே எனது சிந்தனை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவன் என்ற வகையில் அதன் நோக்கத்திலும் அது எதற்காக உருவாக்கப்பட்டது என்ற கொள்கையில் இருந்தும் விலகிச் செல்ல முடியாது.

இன்று கூட்டமைப்பு பற்றி முடிவுகள் எடுக்க முனைபவர்கள் இதுபற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1734
ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு-150:
புலிகள் - முஸ்லிம்கள் உறவு!



கிட்டு
"இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவார்கள். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர மொழியாலும் இனத்தாலும் முழுக்க, முழுக்க தமிழர்களே ஆவார்கள். உருது, அரபி, பாரசீகம் மற்றும் மலாய் பேசும் முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு வெளியே, கொழும்பு நகரை ஒட்டி, குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்று அழைக்கப்படுகிற பகுதியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே உருவாகப்போகும் தமிழீழ நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகத்தான் அவர்கள் திகழ்கிறார்கள்' இவ்வாறு புலிகள் - முஸ்லிம்கள் உறவு குறித்து "தென் செய்தி' வெளியீடு எண் 8 கூறுகிறது. இந்நிலையில், "இலங்கை, வடக்கு - கிழக்கு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் குறித்து உண்மைகளைத் திரித்துக் கூறும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதையொட்டி 1988-ஆம் ஆண்டு, சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் கிட்டுவுடன் முஸ்லிம் தூதுக் குழு ஒன்று பேச்சு நடத்தியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசில் மூத்த அமைச்சராக இருந்த பதுஃதீன் முகமது தலைமையில் வந்த தூதுக் குழுவினர் கிட்டுவுடன் பேசி, உருவாகப் போகும் தமிழீழத்தில் தங்களுக்குள்ள உரிமைகள் குறித்துப் பேசி உடன்பாடு கண்டதாக' -அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விடுதலைப் புலிகள் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ் தேசிய இனத்தில் தனித்துவமான கலை, கலாசாரம், பண்பாடுகளைக் கொண்ட இனக் குழுவினரான இலங்கைவாழ் முஸ்லிம்கள், அச்சம், ஐயப்பாடுகளின்றி தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் போன்றவற்றைப் போற்றி வளர்க்கவும் பாதுகாக்கவும் தமிழ் தேசிய இனத்தின் ஏனையவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் உத்தரவாதம் வழங்குகின்றோம். பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசியல் உரிமைகளை மேம்படையச் செய்ய எமது இயக்கம் எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழ் தேசிய இனத்தில் சமத்துவமான நிலைமையை அவர்கள் அடையும்வரை அவர்களுக்கு அவர்கள் பின்தங்கிய துறைகளில் சிறப்புச் சலுகைகள், உதவிகள் ஆட்சி நிர்வாகத்தின்கீழ் கிடைக்க எமது இயக்கம் ஆவனவற்றைச் செய்யும். இனத்தின் தனித்துவம் காப்பாற்றப்பட நிரந்தர வாழ்விடம் எவ்வளவு அவசியம் என்பதை நன்கறிந்தவர்கள் முஸ்லிம்கள். பாரம்பரியமாக இருந்து வந்த நிலத்தை, சியோனிஸ்டுகளான யூதர்களிடம் இழந்துவிட்டு இன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் அகதிகள் முகாம்களிலிருந்து தமது போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களது நிலைமைகளைப் போலன்றி, தம் நிலத்தைக் காப்பாற்ற தனித்துவமான தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் என்பவற்றைக் காப்பாற்ற எம்முடன் சேர்ந்து போராட முன்வந்திருக்கிறார்கள். அதன் ஒருபடிதான் முஸ்லிம் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை. இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஓர் இனக்குழு என்பதனையும் வடக்கு-கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் மொழி பேசும் மக்களின் பாராம்பரியத் தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரியத் தாயகமாக உள்ளது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறோம். வடக்கு-கிழக்கு ஒன்றிணைத்த தாயகத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவர் என்பதையும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு எதிர்பார்க்கப்படும் முழு உத்தரவாதமும் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். தாயகத்தில், முஸ்லிம் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் எனவும் தாயகத்தில், உரிமைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்களுடன் பெருமளவில் இணைவதன் மூலமாகத்தான் தமது மண்ணையும் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியுமென்பதையும் முஸ்லிம் மக்களின் நலனுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகப் பாடுபாட்டு வருவார்கள் என்பதும் உறுதியாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாகாண சபைக்கான 13-வது அரசியல் சட்டத் திருத்தம் முஸ்லிம் மக்களினதும் ஏனைய தமிழ் பேசும் மக்களினதும் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை. முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆட்சியதிகாரங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டிற்குப் பாரதூரமான குந்தகமெதுவும் ஏற்படுத்தக்கூடாது. மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்குள்ள இன உரிமைகளையும் சலுகைகளையும் வாய்ப்பினையும் சுதந்திரத்தினையும் அனுபவிப்பதற்கு வடக்கு-கிழக்கு மாகாணத்தைத் தமது தாயகமாகக்கொண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 33 சதவிகிதம் தொகையினர். வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் 18 சதவிகிதத் தொகையினர். முஸ்லிம்கள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெற்று ஆட்சி அதிகாரங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெறக்கூடிய வகையில் ஒன்றிணைந்த தாயகத்திலுள்ள 30 சதவிகிதத்திற்குக் குறைவில்லாத வகையில், மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுடன் இவ் விகிதப்படியான உரித்துகளைப் பெறுவதற்குத் தேவையான அரசியல் சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு இருதரப்பினரும் முழு முயற்சிகளையும் மேற்கொள்வர். வருங்கால அரச காணிப் பங்கீடு முஸ்லிம்களுக்குக் கிழக்கு மாகாணத்தில் 35 சதவிகிதம் குறைவில்லா வகையிலும் மன்னார் மாவட்டத்தில் 30 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் வட மாகாணத்தில் ஏனைய பகுதிகளில் 5 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் இருக்க வேண்டும். வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலைவாய்ப்பிற்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பர். கல்வித்துறையில் எல்லா இடங்களிலும் சம வாய்ப்புகள் பேணப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியின்போது கல்வித் துறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் விசேஷ கவனிப்புச் செலுத்தப்படும். பல்கலைக்கழக மட்டம் வரையிலான பிரத்தியேகக் கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும். முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். முஸ்லிம் மக்களது தனித்துவத்தின் உரிமைகள், அக்கறைகள் என்பவற்றைப் பாதிக்கக்கூடிய எந்தவித சட்டவாக்கியங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி வடக்கு-கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது. வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, அம் மாகாண சபையின் துணை முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்கள் அரசியல், நிர்வாக, அபிவிருத்தி அலகுகள் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்படுதல் வேண்டும். இதுபற்றி விடுதலைப் புலிகள் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றுள் உள்ளடக்கப்பட வேண்டிய பாரம்பரிய எல்லைகள், மூலவளங்கள் என்பன பற்றி மேலும் இருபகுதியினரும் ஆய்வு நடத்தி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு பல நிலைகள் விவாதித்து முடிவு காணப்பட்டன. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இந்த உடன்பாட்டில் விடுதலைப் புலிகள் சார்பில் கிட்டுவும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் எம்.ஐ.எம். மொகைதீனும் கையெழுத்திட்டனர்.நாளை: பிரித்தாளும் சூழ்ச்சி!
மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் சந்திப்பு மேலும் பயன்படும்: கருணாநிதி



சென்னை, அக். 29: ""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மேலும் பயன்படுகின்ற சந்திப்பாக இருக்கும்'' என்று முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்: "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' அமைப்பின் சார்பில், என்னைச் சந்திக்க அனுமதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஒரு வாரத்துக்கு முன்பே எனக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் கண்டவுடன் அதற்கு ஒப்புதல் தெரிவித்து இருந்தேன். தலைமைச் செயலகத்தில் கடந்த திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு, என்.வரதராஜன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு என்னைச் சந்தித்தது. "அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்த பலவற்றை திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது என்று அவர்களிடம் விளக்கினேன். மேலும் சிலவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்று தெரிவித்தேன். மேலும், அருந்ததிய குலவீரன் மாவீரர் ஒண்டிவீரன் பகடைக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலித்து ஆவன செய்வதாகக் கூறியுள்ளேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு திமுக அரசு ஆற்றியுள்ள பணிகள் ஏராளம். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு பயன்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இது, மேலும் பயன்படுகின்ற சந்திப்பு'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

கண்டிப்பாக இச்சந்திப்பு மேலும் பயன்படும் , கூட்டணி அமைவதற்கு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2009 2:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ராசாவை நீக்க பிரதமருக்கு துணிவு இருக்கிறதா?:

ஜெயலலிதா கேள்வி



சென்னை, அக். 29: "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்யும் துணிவு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருக்கிறதா என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக ரூ.60 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இதில் உள்ள முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் தொலைதொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மிகப்பெரிய ஊழலுக்கு தலைமை தாங்கிய மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா, பதவி விலக முடியாது என அறிவித்துள்ளார். இது பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறாது என்பதற்கு இடமளிக்கிறது. அவர் அவ்வாறு அறிவித்ததில் வியப்பேதும் இல்லை. தி.மு.க.வில் இருக்கும் ஒருவரிடமிருந்து யாரும் எவ்வித நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. பிரமதர் மன்மோகன் சிங், ராசாவை ராஜிநாமா செய்யச் சொல்லவில்லை. இது ஆச்சர்யம் அளிக்கிறது. தனக்கு முன்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பின்பற்றிய அதே முறையைத்தான் தானும் பின்பற்றியதாகவும், பிரதமரின் அனுமதியுடன்தான் அனைத்தும் நடைபெற்றதாகவும் ராசா பகிரங்கமாக கூறியுள்ளார். இதை மன்மோகன் சிங் ஒப்புக் கொள்கிறாரா? அதனால்தான் ராசா ராஜிநாமா செய்ய வேண்டாமென்று நினைக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்கினால்தான் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நான் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். இல்லையெனில், மத்திய அமைச்சர் ராசா சொல்வதை கேட்கக்கூடிய சில துறை அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, சிபிஐ தனது பணியை நிறுத்தி விடும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் யாரும் பயனடையவில்லை எனில், அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏன் அடிமாட்டு விலைக்கு அரசு விற்றது? யாராவது ஆதாயம் அடைந்தார்கள் என்றால், யார் அந்த பயனாளிகள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. தொலை தொடர்பு துறையின் சில அதிகாரிகளிடம் மட்டுமின்றி, அத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பங்கு குறித்தும் சிபிஐ ஆழமாக விசாரிக்க வேண்டும்.தொடர்புகள் பற்றி விசாரணை... 2004-ல் ராசாவுக்கு நெருக்கமானவர்களால் வெறும் ஒரு லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையதாக விளங்கும் "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' கட்டுமான நிறுவனத்திற்கும், "ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இ.டி.ஏ. குழுமம், ஸ்வான் டெலிகாம் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு, இ.டி.ஏ. மற்றும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையேயான தொடர்பு ஆகியவை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற முழுமையான விசாரணை நடத்தினால்தான், தலைமைச் செயலக வளாகம், புதிய மாநில நூலகம், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலங்கள் உள்பட பல்வேறு முக்கியக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் இ.டி.ஏ. குழும இயக்குநர்களுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள நிதித் தொடர்புகள் குறித்த உண்மை நிலையும் தெரியும். மேலும் தமிழக அரசின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, சர்ச்சைக்குரிய, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளது இ.டி.ஏ. குழுமத்தின் "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம்தான் என்பதும் தெரிய வரும். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் "ஸ்டார் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தை பதிவு செய்ததும் இந்த இ.டி.ஏ. குழுமம்தான் என்பதும் வெளிப்படும். 1960, 1970-ம் ஆண்டுகளில் இருந்த "ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் ஒரு பகுதிதான் இ.டி.ஏ. குழுமம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1972-73-ம் ஆண்டுகளில் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் மற்றும் இதர மேம்பாலங்கள் கட்டும் பணியையும் இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைத்தார். இதில் உள்ள சில தொடர்புகள் குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதில் உள்ள எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால், ராசாவை மத்திய அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியும் துணிச்சல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வர வேண்டும். இதை மன்மோகன் சிங் செய்வாரா? என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துக்கள்

பாவம்! எப்படி எப்படியோ பேசிப் பார்க்கின்றார், காங்.கில் இருந்து திமுகவைப் பிரிப்பதற்கு! முடியவில்லையே! இந்த நேரத்தில், தமிழ் இன உணர்வுடன் தமிழ் ஈழம் அமைப்பது குறித்துப் பேசினாலாவது பயன் இருக்கும். யார் சொல்வது அந்த அம்மாவிடம்! அடுத்தவர் பேச்சைக் கேட்பதில்லை என்பதைப் பெருமையாக எண்ணுபவராயிற்றே!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2009 2:49:00 AM

Instead of commeting JJ, people should read what JJ said in her statement, it is 100% truth. Yes, she is also corrupt but you cannot compared to this one, because this is the biggest in India.

By Chand
10/30/2009 2:41:00 AM

அம்மா சொல்லுவது சரிதானே -

By Sirupakkam-Rajaraman
10/30/2009 1:46:00 AM

Is n't it true that if you want to catch a thief you have to ask another thief about his secrets!

By Guru
10/30/2009 1:24:00 AM

Thank you Madam, this proves that you had nice rest for the past few months. We need you to reveal these political curruption. We need to take your perspectives seriously beacause, "Paamu Ariyum Paampin Kaal".

By Raj
10/30/2009 12:43:00 AM

the biggest escape route available to the corrupt is that the present accuser also is equally corrupt. and hence her words do not carry weight and value among public..

By SR Sami
10/30/2009 12:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *