சனி, 19 நவம்பர், 2016

Sinhala Buddhist vihara, SL militarization pose threat to resettlement at Valikaamam North


Feature Article
2ND LEAD (Adds video)

Sinhala Buddhist vihara, SL militarization pose threat to resettlement at Valikaamam North

[TamilNet, Wednesday, 16 November 2016, 21:25 GMT]
The occupying military of genocidal Sri Lanka has constructed Buddhist vihare at the site of a Saiva temple (Kumaara-koayil), which was located in the lands belonging to a popular Eezham Tamil female singer from Veemankaamam North GS Division in Valikaam North of Jaffna district. Uprooted Tamil families, along with some journalists in Jaffna, were able to access the area this week after 26 years. Despite the propaganda from SL President Maithiripala Sirisena that these lands were being released back to the people in Valikaamam North, the GS divisions still remains largely militarized, the journalists said providing visuals from the site. Sinhala police, SL ‘Terrorist’ Investigation Division and the ‘State Intelligence Service’ are occupying the lands that belong to more than 60 families at the locality surrounding the Buddhist temple, named ‘Gamunu Vihare’.



Veeman-kaamam
Sinhalese visiting from South as ‘pilgrims’ to SL military constructed Buddhist vihare at Veeman-kaamam. Sinhala military and police personnel are also seen among the pilgrims in civil cloth.
Sinhala Police officials have told the uprooted landowners visiting their village that there was no plan to vacate the Vihara and the lands in the vicinity on both the sides of the KKS Road.

Meanwhile, Sinhalese visitors from South are being encouraged to visit the military-built Vihara as ‘pilgrims’ in order to discourage the landowners from demanding removal of the Buddhist vihara.

Veeman-kaamam is situated between Thellippazhai and Kaangkeasanthu'rai (KKS) in Valikaamam North (J-236) GS division.

SL military is still stationed at several places in the GS divisions that were claimed as being released back to the people by the SL President.

Veeman-kaamam
Uprooted Eezham Tamils visiting their village after 26 years see total destruction of their village


938 acres are yet to be released at KKS West (J/235 GS division). 243 uprooted Tamil families have registered for resettlement there. They were disappointed after witnessing the level of Sinhala militarization.

At KKS South (J/234) GS division, the occupying Sinhala military is still stationed in 86 acres of lands that belong to 131 families, civil officials at Thellippazhai said.

The Sinhala military is still occupying 247 acres of lands belonging to more than 300 families at KKS Centre (J/233) GS division, the officials added.

The real intention of the Colombo establishment was to discourage people from resettling in their lands and make them to sell their lands back to the SL military establishment, civil officials commented.

Nadeswara College, which was one of the key education institutions in Valikaamam North, was reconstructed and re-opened amidst much propaganda some time back. But, the SL military is still stationed surrounding the school, making it very difficult for the students to attend the school.

Veeman-kaamam
The level of militarization along the KKS Road running through Veeman-kaamam


Veeman-kaamam
Sinhala military constructed ‘Gamunu vihare’ at the locality of Hindu temple Kumaara-koayil in Veeman-kaamam near KKS


Chronology:

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 – பெங்களூரு முத்துச்செல்வன்




தலைப்பு-ஆரியச்சூழ்ச்சி, பெரியார், முத்துச்செல்வன் ;thalaippu_aariya-chuuzhchi_muthuchelvzn

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

8/9

 தாம் தமிழை விரும்புவதற்கான காரணங்களைத் தந்தை பெரியார் அடுக்கும்போதே, மொழி குறித்துக் கருத்தறிவிப்பது மொழியின் தத்துவத்திலுள்ள தன்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டே ஆகுமே தவிர, “நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. எனக்குத் தோன்றிய, என் பட்டறிவுக்கு எட்டிய செய்திகளைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன்” என்று கூறிவிடுகிறார்..
  தாம் தமிழை விரும்புவதற்குக் காரணம். “அது நம் தாய்மொழிப் பற்றுக்காக என்று அல்ல; என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டது என்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது, எலும்புக்கூட்டை பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்த நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற மொழிகளையும்விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதால் மற்ற மொழி வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடம் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்” என்றும் ”வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி – தமிழைவிட மேலான ஒரு மொழி இந்த நாட்டில் இல்லை என்பதற்காகவே நான் தமிழை விரும்புகிறேன்” என்கிறார். மொழியியலார் நிலையில் நிற்காமல் வாழும் சூழலில் மொழிக்கலப்பு எத்தகைய கேடுகளை விளைவிக்குமென்பதைக் குமுக அடிப்படையில் விளக்கியுள்ளார்.
 ‘தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது, இன்று வடமொழிக் கலப்பால் இடக் கைபோல் பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ்மொழி சிக்கிக் கொண்டதுதான்.” எனக் கூறுகிறர். தமிழ்நாட்டு மன்னர்கள் ஆரிய மதங்களை ஏற்றுத் தழுவியதால் அம்மதங்களின் கருத்துகளைத் தமிழில் எழுத வேண்டிய நிலை வந்த போது அம்மதச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் இல்லை என்பதால்  மிகுதியாக வடமொழிச் சொற்களைக் கையாளத் தொடங்கினர் என்று கருத்தறிவித்துள்ள பெரியார், தமிழிலிருந்து சைவத்தையும் ஆரிய மதங்களையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று கூறுகிறார்.
  “தமிழர் வாழ்வில் பிற துறைகளைக் காட்டிலும் சமயம், மெய்ப்பொருளியல் ஆகியவற்றிலேயே வடமொழியின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகின்றது” என்று கூறும் முனைவர் தெ.ஞானசுந்தரம், “இரு நாகரிகக் கலப்பின் விளைவாக, ஆரியர் வழிபட்ட தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம் பெறலாயின. … அதன் பயனாக இறை வழிபாட்டிலும் ஆரியர்களின் வழிபாட்டு முறை இடம் பெறலாயிற்று”  என்று சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம் நுழைந்ததை எடுத்துக் காட்டுகிறார். (சமற்கிருத ஆதிக்கம் நூல்)
  தந்தை பெரியார் தம் பட்டறிவைக் கொண்டு, “தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடாத்திய தமிழர் மரபில் – இன்று, ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை; ஓர் எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழைமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். (மொழி, எழுத்து என்னும் பொருள் பற்றி,  கும்பகோணம் அரசு கல்லூரியில் 13.1.1938 அன்று ஆற்றிய சொற்பொழிவிலிருந்து) அதாவது தாய்மொழியில் சிந்தித்து அதன் வழியே ஆராய்ச்சி மனப்பான்மை வளர்வதே உண்மையான வளர்ச்சி என்பதைச் சுட்டிக்கட்டியுள்ளார். இன்று இந்தக் கருத்தை அறிவியலறிஞர்கள் பலர் ஒப்புக்கொள்கிறார்கள்.
(தொடரும்)
    –     பெங்களூரு முத்துச்செல்வன்

செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்




மாணிக்கவாசகம் பள்ளி, பணமாற்ற விளக்கம்02 ; manickavasakam_palli_panamatram02

செல்லாப்பணத்தாள் மாற்றம்

– மாணிக்கவாசகம் பள்ளியில்

மாணவர்களுக்கு  வழிகாட்டினர்

  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டையில் இருந்தாலும் தலைநகரில் உள்ள வசதியான பள்ளி போன்று மாணவர்களை  இற்றைநாள்(up to date) விவரம் அறிந்தவர்களாக ஆக்குவதிலும் கல்வியுடன்  பிற துறை நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதிலும் முன்னணியில் உள்ளது.  எனவே, இன்றைய தலையாயச் சிக்கலான செல்லாததாக அறிவிக்கப்பட்ட  500 உரூபா, 1000 உரூபாய் பணத்தாள்களை மாற்றுவது எப்படி என்று விளக்கி உள்ளனர்.
 இக்கூட்டத்தில் பள்ளி மாணவர் விசய் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 தலைமையுரையாகப் புதிய  உரூபாய் 500 பணத்தாள்,  உரூபாய் 1000 பணத்தாள் ஆகியவற்றை .எப்படிப் பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
 இது தொடர்பான தகவல்கள்   அடங்கிய  துண்டறிக்கைகளும் மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டன. .பணம் மாற்றும் படிவம் வேண்டுவோர் பள்ளியில் வந்து பெற்று கொள்ளலாம் எனவும் எடுத்துச் சொல்லப்பட்டது.
 பழைய 500,1000  உரூபாய்த் தாள்கள் அனைத்தும் வங்கியில் செல்லும் என்றும்,  ஆனால், அவற்றை வங்கியில் தான் கொண்டு சென்று மாற்ற இயலும் என்றும் தெளிவாகப்  பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும்; வீட்டைச் சுற்றி உள்ள அனைவரிடமும் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்  என்பன போன்ற தகவல்களை ஆசிரியர்  சிரீதர் எடுத்துச் சொன்னார்.
நிறைவாக மாணவி அல்நிசுமாபேகம் நன்றி கூறினார்.

(படங்களைப் பெரிய அளவில் காண அழுத்திப் பார்க்க வேண்டுகிறோம்)

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி




தலைப்பு-அபுதாபி மார்பகப்புற்றுநோய் விழிப்புணர்வு03 ;abudabi_medicalawarness03

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

  அபுதாபி அரோரா  நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு  வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி  சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல  முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து  நலமான வாழ்வுக்கு  ஓகாவின்  முதன்மையை தமிழகத்தைச் சேர்ந்த  ஓகப்பயிற்சியாளர் இந்துமதி மாதவு செய்முறை பயிற்சியின் மூலம் விவரித்தார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக  ஓகப் பயிற்சியினை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம்  முதலான  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துமதி மாதவு ஓகைக் குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)

இந்துமதி  பாலசுப்பிரமணியன் <mkindu@hotmail.com>
தரவு : முதுவை இதாயத்து