புதன், 6 பிப்ரவரி, 2019

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்!

அகரமுதல

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்
 திராவிட இயக்க வைர விழுது, தன்மானப் போராளி சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன் சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் (எ) சின்னத்தம்பி தம்முடைய 93ஆம் அகவையில் இன்று (தை 23, 2050 / 06.02.2019) வைகறை 2.15 மணிக்கு இயற்கை எய்தினார்.
ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழும் அவர் வாழும்பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுக்க மருத்துவர்களை நாடினார். வாழ்பவர் கண்ணைத் தானமாகப் பெறச் சட்டத்தில் இடமில்லை என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். பின் மறைவிற்குப் பின்னான கண் தான விருப்பத்தையும் உடல் கொடை விருப்பத்தையும் அளித்துள்ளார். அவரது விருப்பம் நிறைவேற்றப்படும் என அவரின் மகள் திருவாட்டி அன்புச்செல்வி திருவள்ளுவன் தெரிவித்தார்.

திங்கள், 4 பிப்ரவரி, 2019

திருவள்ளுவரின் தொழிற் புரட்சிச் சிந்தனைகள் – சிறப்புரை முனைவர் கு.மோகனராசு

அகரமுதல


தை 21, 2050 திங்கட்கிழமை – 04.02.2019 மாலை 5.15

நிகழ்விடம் : எம்.சி.டி,முத்தையா(செட்டியார்) ஆண்கள் மேனிலைப்பள்ளி
இராசா அண்ணாமலை சாலை,புரசைவாக்கம்
சிறப்புரை: அருட்திரு முனைவர் கு. 
மோகனராசு
முனைவர் இரா.கத்தூரி இராசா, செயலாளர் 
முனைவர் இராசதேவன், தலைவர் 
உலகத் திருக்குறள் பேரவை, சென்னைக் கிளை 
பையா வளாகம், 286, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600007

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிஞர் ஏடகம்

அகரமுதல

தை 20, 2050 / ஞாயிறு / 03.02.2019 மாலை 4.00
ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017
குவிகம் இல்லம்: அளவளாவல்
 முத்தொள்ளாயிரம் குறித்துக் கவிஞர் ஏடகம்
தொடர்பிற்கு: 9791069435. 8939604745