வியாழன், 25 பிப்ரவரி, 2010

மேற்கு வங்க தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்டா?



புது தில்லி, பிப்.24: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மேற்கு வங்க மாநிலத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் எனக் கூறப்படுவதால் மம்தா பானர்ஜி மிகுந்த வேதனையடைந்துள்ளார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது வேதனையை அவர் வெளியிட்டார். இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியில் கூறப்படுபவை. அதே பாணியிலான கேள்வியை செய்தியாளர்களாகிய நீங்களும் கேட்காதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்விதம் பதிலளித்தார்.மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் பல எம்பிக்கள் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தனர். தங்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். 800 மக்கள் பிரதிநிதிகளையும் ஒரு பட்ஜெட்டில் திருப்திபடுத்த இயலாது என்று அப்போது பானர்ஜி குறிப்பிட்டார். வேகன் தொழிற்சாலை ஒரிசா, ஆந்திரம் மற்றும் அசாமில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிற்சாலைகள் பிற மாநிலங்களில்தான் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக மேற்கு வங்க மாநிலத்தைப் புறக்கணித்துவிட முடியாது. மற்ற அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அதேபோலத்தான் தானும் செயல்படுவதாக அவர் கூறினார்.மேற்கு வங்க மாநிலம் வளர்ச்சிப் பணிகளிலிருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.கொல்கத்தா மெட்ரோ ரயில் இணைப்பு விரிவாக்கம், துறைமுக இணைப்புக்கு விரிவாக்கம், ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை ஒட்டி சம்ஸ்கிருத எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம், பாரத தீர்த்த யாத்திரை ரயில் சேவை உள்ளிட்டவை மேற்கு வங்க மாநிலத்துக்காக அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களாகும்.
கருத்துக்கள்

இரவீந்திர நாத தாகூர் அவர்களின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வங்கமொழியின் பெயரால் தொடர்வண்டி இயக்கவது அல்லது அவரது நூலான கீதாஞ்சலியின் பெயரால் இயக்குவது என்பது பொருத்தமாக இருக்கும். சமற்கிருதத்தின் பெயரால் இயக்குவதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
உண்மைதான். அப்படி யாரும் இருந்தால் வேண்டுமென்றே தமிழக அரசைக் குறை கூறுகிற, தமிழ் நலனுக்குஎதிராகவே உளறுகிற வன்முறைக் காங்கிரசுக் கட்சியை நன்முறைக் கட்சியாகப் பேசுகிற, தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எதையாவது உளறுகிற , நாடு நலனுக்கு எதிரான - தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டட- காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார் எனக் கனவு காண்கின்ற இவருக்கு அறிவுரை கூறியிருப்பார்களே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Front page news and headlines today

மதுரை : ""தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போய்விட்டது'' என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்.,வக்கீல்கள் பிரிவு சார்பில் மதுரையில் நடந்த வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் பேசினார். வக்கீல் கோபாலன் தலைமை வகித்தார்.



இளங்கோவன் பேசியதாவது: பயங்கரவாதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்கள், 72 நாட்கள் அவகாசம் கேட்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் படிக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்காமல், சீர்குலைக்கும் விதமாக, தீய கருத்துக்கள் திணிக்கப்பட்டால் வளர்ச்சி பாதிக்கும். தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, இலவச "டிவி', அரசு மருத்துவ காப்பீடு போன்ற நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை முழுமையாக மக்களுக்கு சென்றடைய, அமைதி நிலவ வேண்டும். தமிழகத்தில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயங்கரவாத கருத்துக்களை பரப்புகிறவர்களை அடக்க முடியவில்லையே?



உங்களுக்கு பல்லக்கு தூக்க, கவிதை பாடச் சொல்கிறீர்கள். அதற்கு பலர் உள்ளனர். நானும், காமராஜரும் ஒரே மாதிரி என்கின்றீர்கள். காமராஜர் கடைசிவரை சாமானியனாகத்தான் இருந்தார். ஆனால் பதவிக்கு வரும்வரை சாமானியனாக இருந்தவர்கள், இன்று அப்படி உள்ளனரா? நாங்கள் வெள்ளையர்களையே எதிர்த்தவர்கள். எங்கள் ஆதரவுடன் நடக்கும் ஆட்சி என்பதால், நல்லமுறையில் அது இருக்க வேண்டும் என, தோழமை உணர்வுடன் உணர்த்துகிறேன். அடுத்த தேர்தலில் உங்களை, மக்கள் நிராகரித்துவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறேன். தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போய்விட்டது. சிலர் ஆறு மாதம் மலைக்குப் போய்விடுகின்றனர்.



மதுரை மேற்கு தொகுதியில் நாங்கள் இல்லையெனில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வெற்றி பெற்றிருக்க முடியுமா? என சிலர் கூறுகின்றனர். காங்., கூட்டணி இல்லாமல் இதை அவர்களால் பேசியிருக்க முடியுமா? தமிழகத்தில் காங்., ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு. எல்லா கூத்துக்களுக்கும் விடிவு உண்டு. தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி பங்கேற்றனர்.


பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு: மம்தா அறிவிப்பு



புது தில்லி, பிப். 24: ரயில்வே தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மம்தா அறிவித்தார்.நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ரயில்வே பட்ஜெட் உரையில் இது குறித்து அவர் மேலும் கூறியது:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் நடத்தப்படும். பணியாளர்கள் தேர்வு முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.இனி மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை எழுதலாம். ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்று மம்தா தெரிவித்தார்.முன்னதாக கடந்த நவம்பரில் மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகள் நடத்தப்படும் என்று மம்தா உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வுக் கட்டணம் இல்லை: பொருளாதார ரீதியில் பின் தங்கிய, அதாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு உள்பட்ட மகளிர் தேர்வுக் கட்டணம் இல்லாமலேயே ரயில்வே தேர்வு எழுதலாம் என்றும் பட்ஜெட் உரையில் மம்தா அறிவித்தார்.
கருத்துக்கள்

தாய்மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்புநல்கும் மம்தாவிற்குப் பாராட்டுகள். இதனை அனைத்துத் துறைகளும் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி மொழிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய மொழிகளின் உரிமைகள் காக்கப்பட்டு இந்தியக் கண்டத்தின் ஒற்றுமையும் பேணப்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
யானைமலை விவகாரம்: முதல்வருக்கே தெரியாமல் அரசு ஆணையா? - வைகோ



சென்னை, பிப்.24- மதுரையில் யானைமலையைக் குடைந்து சிற்ப நகரம் உருவாக்கும் திட்டம் குறித்து அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஏற்கெனவே வெளியான அரசு ஆணை முதல்வருக்கே தெரியாமல் வெளியிடப்பட்டதா என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயற்கை சிற்பமாக அமைந்துள்ள மிகப் பழமையான யானைமலையைக் குடையும் திட்டத்தை எதிர்த்து மார்ச் 4ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால், யானைமலையைக் குடையும் எண்ணமே அரசுக்கு இல்லை என்றும், அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்த பின்னரும், சில அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்கின்றனர் என்று முதல்வர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

ஆனால், தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலர் 2009, டிசம்பர் 30}ம் தேதியிட்ட அரசு ஆணை எண்.227}ன்படி யானைமலை குறித்து அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை ஒற்றைப்பாறையினைக் குடைந்து சிற்ப நகரம் உருவாக்க ஆய்வுக் குழுவினை அமைத்து அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் முதன்மைச் செயலர் தலைமையில் அக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், யானைமலையைக் குடையும் திட்டமே இல்லை என்று முதல்வர் இப்போது கூறுகிறார். அப்படியென்றால், முதல்வருக்கே தெரியாமல் அரசு ஆணை வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. நிர்வாகம் முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பது கவலையளிப்பதாக உள்ளது.

சைவ, வைணவ, சமண சமயங்களின் திருத்தலமாக யானைமலை திகழ்வதால் இத்திட்டத்துக்கு மிகப்பெரும் எதிர்ப்பு உருவாகியது.

யானைமலையை உடைத்தால் கிடைக்கும் கிரானைட் கற்களால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் இத்திட்டத்துக்கு ஆதரவானவர்கள் கூறியதாக தெரிகிறது. இச்செய்தி பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.

யானைமலையை உடைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துகொண்டு தற்போது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கத்தை முதல்வர் தருகிறார். யானைமலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது என்றும், அதுதொடர்பான அரசு ஆணை ரத்து செய்யப்பட்டது என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை யானைமலை பாதுகாப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

(தொடர்ச்சி) கலைஞர் கட்டுப்பாட்டில் நிருவாகம் இல்லை எனக் கூறுவதைவிட அவர் நம்பும் சிலர்அவரது பணிச்சுமையைப் பயன்படுத்தி,அவரை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் கருத வேண்டும். எனவே, உரிய ஆணைகளை உடனடியாகக் கலைஞர் நீக்க வேண்டும்; ஆணைகள் பிறப்பிக்கச் செல்வாக்கைப் பயன்படுத்தியவர்கள், உடன் பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:47:00 AM

ஒரு வேளை கலைஞருக்குத் தெரியாமல் ஆணை பிறப்பித்திருக்கலாம். ஏனெனில் யானைமலையைச் சுக்கு நூறாக்கச் சுற்றுலாத் துறை மறுத்தபின்பு மேலிடச் செல்வாக்கால் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.(நேற்றே ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.) சுற்றுலாத் துறை குறித்துச் சுற்றுலா அமைச்சர்தான் விளக்கம் அல்லது மறுப்பு தெரவித்திருக்க வேண்டும். ஆனால் பள்ளிக் கல்வி அமைச்சர்தான் மறுப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தொடர்புடைய அமைச்சரே மறுப்புதெரிவித்த பின்பு வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் போராடுவதாகக் கலைஞர் தெரிவித்துள்ளார். வைக்கோ ஆணையை எண்ணுடன் குறிப்பிடுகிறார். அப்படியானால் துறையையேமாற்றிக்கூறும் கலைஞர் அவர்களுக்குத் தெரியாமல்தான் இது நடந்திருக்க வேண்டும். கலை பண்பாட்டுத் துறையிலும் கலைஞருக்குத் தெரியாமல் பல முறைகேடான மோசடியான நியமனங்கள் போடப்பட்டுள்ளன. எனவே கலைஞர் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு எல்லாம் யார் யார் காரணம் என அறிந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் கட்டுப்பாட்டில் நிருவாகம் இல்லை எனக் கூறுவதைவிட அவர் நம்பும் சிலர்அவரது பணிச்சுமையைப் பயன்படுத்தி,அவரை ஏமாற்றகிறார்கள் என்றுதான் கருத வேண

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:43:00 AM

Narayana intha kosu tholai thangala pa. ena dhan ya ungaluku problem, govt la seat ilana athukaga ipdiya ethavathu ethirupu solliyae arasiyal nadathiduvenga pola.....

By Raj
2/25/2010 1:52:00 AM

shame shame useless karunanithi. this is the high time to quit from politics!

By charan
2/25/2010 12:33:00 AM

correct statement,they looted all our government money and temple land ,now they plan for granite stone. KK family world no 1 rich family,looted entire tamilnadu resource, god will give punishment to them definetly.

By nambi
2/24/2010 11:03:00 PM

question nalla than iruke... answer than varathe ange irunthe...

By nallavan
2/24/2010 10:48:00 PM

Ranganathan, If you cannot appreciate good things, please keep mum. Don't criticise some one's good intention. Vaiko is doing something with out any expectation. You people won't vote to him, but he won't stop to work for world Tamilians. He will be keep going, no one can stop him except nature. Mr.Vaiko you please go ahead we are with you.

By Joseph Chandran, Republic of Congo.
2/24/2010 10:32:00 PM

Thamizhina thalaivanagum thaguthi padaitha ore Thalaivan! ezhutha padikka theriatha Kutti thalaivarkalum, anja nenjarkalum naadalum kevalam thodarvathu kalathin koolam andri verenna?

By Selvarajan
2/24/2010 9:34:00 PM

U R a right person in a wrong party (ADMK)

By M.Babu
2/24/2010 9:10:00 PM

The government of Tamilnadu should take suitable action to protect elephant rock(yananimalai) in othakadi of Madurai district.The rock having beautiful temples and shrines praising of saiva,vaishna and jainism religions. The government can draw comprehensive plan for development of othakadi city by providing basic amenities and other infrastructures.The government should bring out in world map to popularise the rock temples/shrines among the national and international visitors

By v.thatchanamoorthy
2/24/2010 7:59:00 PM

ADMK MLA'S IN DMK GENERAL COUNCIL ????????????? QUESTION BY MDMK GENERAL SECRETARAY ON BEHALF OF ADMK ??????????? SUPER JOKE AND COMADY MR.VAI.KO !!!!!!!!!!!!!!!!!!!

By S. RANGANATHAN
2/24/2010 7:18:00 PM

போராட்டம் நடத்தியே உங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

By மு. சந்திரசேகரன்
2/24/2010 7:00:00 PM

"Very Good super u give statement like this ok}

By shan
2/24/2010 6:37:00 PM

SUper, super ....... keep it up....

By senthil, nanguneri
2/24/2010 5:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Latest indian and world political news information

சென்னை:"முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குழுவில் இடம்பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து தான் தி.மு.க., முடிவு எடுத்தது. இது, கோர்ட்டுக்கு எதிர்ப்பானது அல்ல' என்று சட்ட அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பதிலளித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:



முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தமிழகம், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் 2006 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை முடக்கும் வண்ணம் கேரள அரசு, "கேரளா பாசன மற்றும் பாதுகாப்பு திருத்தச் சட்டம் -2006' என்ற சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றியது.



இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் போனாராம். அந்த வழக்கை கருணாநிதி முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 2006 மார்ச் 31ம் தேதி தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர ஒரு மனுவை ஜெயலலிதா போட்டாரே தவிர, அந்த மனுவுக்கு ஒரு நம்பரை கூட வாங்க வில்லை. நம்பர் போடாத வழக்கு விசாரணைக்கே வராது.



தி.மு.க., அரசு அமைந்த பின் தான், அந்த மனுவுக்கு நம்பர் வாங்கி, அதை கோர்ட் விசாரணைக்கு தகுதியுள்ளதாக்கி, வழக்கையும் நடத்தி வருகிறோம். ஜெயலலிதா காலத்தில் இந்த முல்லைப் பெரியாறு வழக்கில் வாதாடிய அதே வக்கீலும் சேர்ந்து தான் இப்போதும் தமிழகத்துக்காக வாதாடி இருக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் வக்கீல்கள் வாதம் சிறப்பாக இருக்குமாம், கருணாநிதி ஆட்சியில் சிறப்பாக இருக்காதாம். இது என்ன வாதமோ?



இவ்வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பிய போது நாம் ஏன் எதிர்க்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இவ்வழக்கை, எந்த பிரிவு "பெஞ்ச்' விசாரிக்க வேண்டுமென முடிவு செய்வது நீதிமன்றத்தின் உரிமை. அதை நாம் எதிர்க்க முடியாது. இவ்வழக்கு இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை.இதில் அரசியல் சட்ட சம்பந்தப்பட்ட விவகாரங்களும் அடங்கியிருக்கிறது என்று கோர்ட் கருதினால் அதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றும் முழு அதிகாரம் நீதிமன்றத்துக்கு தான் உண்டே தவிர அதை எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை.



ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறாவிட்டால் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரளாவின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?' என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள அரசு பிறப்பித்த சட்டம் சரியா, இல்லையா என்பதை ஆராய அல்ல இந்த ஐவர் குழு; மீண்டும் அணையின் பலத்தை சோதித்து பார்க்க, நீரின் உபயோகத்தை கண்டறிய என்று தான் சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது.



ஐவர் குழுவில் இடம்பெறாவிட்டால் அது எப்படி கேரள சட்டத்துக்கு ஆதரவாகி விடும்?இன்னும் சொல்லப்போனால், இந்த ஐவர் குழுவை வரவேற்றிருக்கிறார் கேரளா முதல்வர். அதுமட்டுமல்ல, இந்த குழு அமைக்கப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பு ரத்தாகி விட்டது என்றும், தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்போது புரிகிறதா ஜெயலலிதாவுக்கு, ஐவர் குழு யாருக்கு சாதகம் என்று?



இந்திய அரசியல் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர், சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை விமர்சிக்கலாமா என்றும் ஜெயலலிதா கேள்வி கேட்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஒரு பெஞ்ச் அல்ல, சுப்ரீம் கோர்ட்டே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான்.



அந்த சுப்ரீம் கோர்ட், பெரியாறு அணை பிரச்னையில் ஒரு தீர்ப்புச் சொல்லி, அதை இரண்டு முறை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்த பின்பும், அந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரளா ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றி விட்டதே, அதற்கு கேரளா அரசு பெற்றிருக்கிற தண்டனை என்ன?ஒரு குழுவில் இடம் பெறுவதும், பெறாமல் இருப்பதும் நமது விருப்பம். நாட்டு நலன் கருதி, குழுவில் பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து இது நாம் எடுத்திருக்கிற முடிவு. நீதிமன்றத்துக்கு எதிர்ப்பானது அல்ல.



முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பிரதமர், கேரளா முதல்வர்களுடன் எட்டு முறைக்கு மேல் முதல்வர் கருணாநிதியே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதா தன் ஆட்சியில் ஒரு முறையேனும் இப்படி கலந்து உரையாடியது உண்டா?



பிரதமருக்கும், மத்திய நீர்வளத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கும், முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து 15 முறை கடிதங்களை முதல்வர் எழுதியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் மூன்றே மூன்று தான். இந்த லட்சணத்தில் கருணாநிதி உரிமையை விட்டு விட்டதாக அறிக்கை வேறு விடுகிறார்.இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.





வாசகர் கருத்து
திராவிட என்ற சொல்லை தமிழ் நாட்டு கட்சிகள் பேட்டர்ன் போட்டு கொண்டுள்ளன. நமது பழைய கலாசாரம் என்ன என்று தெரியாமல் பிதற்றி கொண்டு இருக்கிறார்கள். ஒன்பது மணிக்கு ஒயின் ஷாப்க்கு போனால் தெரியும் நமது கலாச்சார வழி தோன்றல்கள். நமது அரசியல் வாதிகள் உரம் போட்டு வளர்ப்பது மக்களின் முட்டாள் தனத்தை தானே.
by P Ram,Jakarta,Indonesia 24-02-2010 18:05:23 IST
நன்றி துரைமுருகன் அவர்களே! '''' சுப்ரீம் கோர்ட்டே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான்'''' என்று சொன்னதற்கு. இதை தலைவர் காதிலும் போடுங்கள் ; ஏனெனில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ,நம் கட்சி காரர் தொழிலுக்கு இடைஞ்சல் ஆகா இருந்தால் ஏற்க மறுக்கிறோம் அல்லவா !!

by FG Smith,London,United Kingdom 24-02-2010 18:01:49 IST
முக்கியமான விஷயங்களில் எல்ல கட்சியினரையும் கலந்து முடிவெடுபதுதான் நல்லது .
by G Divaharan,Tirunelveli,India 24-02-2010 09:55:49 IST
ippadiye 1voru alukum vilakam koduthu time wast pannama kadamaiyai seithal makalukku nallathu
by m rajaram,sivaganga,India 24-02-2010 09:55:39 IST
என்ன அய்யா சொல்ல வறீங்க. இப்பிடி மாத்தி மாத்தி அறிக்கை விடாம எதாவது பண்ணி தொலைங்க.
எப்ப தான் போட்டி போட்டு மக்களுக்கு நல்லது செய்வீங்களோ?
கலைஞர் இப்ப தான் துரைமுருகனுக்கு வாய தொறக்க உத்தரவு குடுத்தாரு போல இருக்கு.
நீங்க ஆஸ்திரேலியால காலேஜ் கட்டுரீங்கலாமே அது உண்மையா?
நம்ம தமிழ்நாடு மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு / வெளி ஒதுக்கீடு எதாவது கொடுங்க சார்.
உங்களை வாழ வச்ச தமிழ் மக்களுக்கு தண்ணி மட்டுமாவது கொடுங்க.
by RK Sudhan,dubai,United Arab Emirates 24-02-2010 09:14:34 IST
போதும் மூடு...நீ எவ்ளோ கேவலமானவன் நு தெரியும்.வேலூர் ல நீ அடிக்கிற கூத்து எங்களுக்கு தெரியும்
by SD சத்,okc,ok,United States 24-02-2010 08:11:22 IST
திருவள்ளுவன் சென்னை எழுதியிருக்கிறத பார்த்தா தமாஷா இருக்கு. யார ஆரியதாசர்கள்னு சொல்றார்னு புரியலை. இந்த பிரச்சனைல எங்கேர்ந்து ஆரியர் திராவிடர் பிரச்சனை வந்தது? ஏதோ வீராவேசமா கருத்து சொல்லணுமேனு உளறி கொட்டினா மாதிரி இருக்கு.
by வெங்கடேசன்,Chennai,India 24-02-2010 07:21:59 IST
அய்யா துறைசிங்கம், உங்க அறிக்கையில் ஒன்றும் என்னை போன்ற பாமரன் மண்டையில் ஏறவில்லை. ஜெ திட்டிய அறிக்கை தான் இது.
by mokka சாமீ,jawa,Indonesia 24-02-2010 07:08:35 IST
முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளாவின் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா அரசு மார்ச் 31ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டதாக துரைமுருகனே கூறுகிறார், இந்நிலையில் சரியாக மே மாதம் 16ஆம் தேதி மைனாரிட்டி திமுக அரசு பதவியேற்றது. நானும் வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கு தெரிந்தவரை, வழக்கு நம்பர் ஆகி விசாரணைக்கு வர ஒரு மாதத்துக்கு மேல் ஆகும், அந்த ஒரு மாத இடைவெளியில் மைனாரிட்டி அரசு பதவிக்கு வந்துவிட்டது. ஆகவே வழக்கை மேற்கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பு கருணாநிதி&கோ வசம் மாற்றப்படுகிறது. துரைமுருகனுக்கு போதுமான அறிவு இல்லை என்பதால்தான் பொதுப்பணிதுறை பறிக்கப்பட்டு திமுகவில் ஓரம் கட்டப்பட்டு விட்டார். இழந்த பதவியை மீட்க தரம் இல்லாத அறிக்கை விட்டு தடுமாறுகிறார்.
by N பாலகிருஷ்ணன் ,Ramnad,India 24-02-2010 06:59:53 IST
அறைவேக்கட்டுத்தனமான அறிக்கை விடுவதில் ஜெயாவை யாரும் மிஞ்ச யாராலும் முடியாது
by P Amal,Castries,Saint Lucia 24-02-2010 04:58:38 IST
ஐயோ! ஐயோ! ஏன்தான் இப்படி வேண்டுமென்றே குழப்புகிறார்களோ! ஐவர் குழு வாயிலாக அணை வலிமையற்று உள்ளதாகக் கூறச் சொன்னால் கேரள அரசின் சட்டம் சரியென்றுதானே உ நீ ம சொல்லும்? உ நீ ம தீர்ப்புகளையே கேரள அரசு மீறும் பொழுது அதன் தீர்ப்பை எதிர்ப்பது ஒன்றும் தவறல்லவே! காங்கிரசு வாயை மூடிக் கொண்டிருக்கச் சொன்னதால்தான் திமுக அரசு தவறான முடிவை எடுத்துத தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறதோ! தமிழக நலன்கைள விட்டுக் கொடுப்பதே தமிழக ஆட்சியாளர்களின் பொழுது போக்கு என்றானபிறகு நாம் என்ன செய்ய முடியும்? இந்திய அரசியலில் ஆரியர்களின் செல்வாக்கும் ஆரியத்தில் ஊறிய மலையாளிகள் செல்வாக்கும் மிகுதியாக உள்ளமையால் ஆரியதாசர்களான திராவிடம் அடிபணிந்து கிடக்கிறது.எனவே, கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நம் உரிமைகளை மீட்டு வெற்றி பெற வேண்டும்.
by I. thiruvalluvan,chennai,India 24-02-2010 04:52:25 IST
DMK,only,was part of Central Govt,for more than 13 years,as against AIADMK of 10 months.Why DMK has not influnced in Mullai Periyaru,eventhough,DMK had Environment Ministry?
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 24-02-2010 03:38:51 IST
அறிக்கையில் ஜேஜே வை நக்கல் செய்வதை தவிர்த்து பார்த்தால், அறிக்கையில் சாதகமான அம்சத்தையும் பாதகமான அம்சத்தையும் காணோம்.
by B Sivanesan,London,United Kingdom 24-02-2010 03:05:26 IST
பச்சை சீலைக்கு சரியான நெத்தியடி பதில்!
ஆனா அந்த கூட்டத்துக்குதான் ஒரு மண்ணும் தெரியாதே!
கும்மாளம் போட தோழியோட திராட்சை தோட்டத்துக்கு போக விடாம பண்ணிட்டாங்க,இப்போ கொடநாட்டுகும் போக வழி இல்லை!
by S செந்தில் ,India,India 24-02-2010 03:03:19 IST