சனி, 4 பிப்ரவரி, 2012

Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice

Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice

[TamilNet, Friday, 03 February 2012, 19:18 GMT]
24-year-old Garolin Vinotha Nesarajah, who killed herself along with her 20-month-old baby boy on 16 January in a refugee centre in Førde in Western Norway, was not prepared for her deportation, as she feared she would be interrogated and tortured by the Sri Lanka Army back home, reporters in Jaffna said. Garolin immolated herself along with the baby, the Norwegian police think. Garolin’s death raises several questions at the international system that continues to keep the people of the nation of Eezham Tamils deprived of State, deprived of international justice and deprived of psychological security or hope in life, maddening them further and further by pushing them into the hands of genocidal Sri Lanka, social workers in Jaffna said.

Garolin with child
Garolin Nesaraja
Garolin with her child, photo taken from a framed picture in her house in Jaffna
Meera Nesaraja
Meera, the deceased younger sister of Garolin
Nesaraja, father of Garolin
Mr. Nesaraja
When the family in the island was contacted by media, Garolin's father, Nesarajah has said that his daughter, who had joined the Tigers in 2003 at the age of 16, came back home in 6 months as her mother had passed away suffering from cancer.

She chose not to go back to the movement, as she wanted to stay with her brothers and sister, looking after them.

The Tigers wanted her to either re-join the movement or at least come back to the movement and seek formal release by citing LTTE's agreement with the UNICEF on the under-aged cadres.

Her father chose not to send her back to Vanni and instead he sought the help of SL Human Rights Commission in Jaffna to assist her formal release.

Later, Vinotha converted herself from Saivism to Christianity and she became Karolin after receiving baptism from the Full Gospel Church in Kokkuvil, Jaffna, on 30 December 2005. Her name became Garolin in the Norwegian records.

Neighbours of her house in Chaavat-kaddu in Aanaikkoaddai, Jaffna, told reporters that in 2006, during a time when there were abductions and killings of those who had received training from the LTTE were rampant, the Sri Lanka Army was searching for her in Jaffna.

It was some relatives in Norway who provided monetary help to send Garolin out of the island for safety, the family said.

Garolin was the eldest in the family with 3 brothers and a sister: Parath Nesarajah (23) Prasath Nesarajah (21) Meera Nesarajah (18) and Ranjith Nesarajah (17).

After reaching Norway, she was in dispute with her relatives who had initially helped her. She complained to the Norwegian police that she was being forced to pay the money back. The case was investigated as a ‘human trafficking’ case, according to Norwegian media. The case was later dropped.

Following the rift with her relatives, she opted to live alone and worked at a hotel.

Later, when the Norwegian authorities rejected her application for asylum, she chose to move back to the camp for asylum seekers.

She was living together with a Kurdish asylum seeker, with whom she had a baby boy in April 2010.

The case of her partner was also rejected for asylum in Norway. Later, Garolin was living alone with her child.

Meanwhile, her younger sister in Jaffna, Meera Nesarajah (18), who was married and had a child, was found dead on 06 December 2011. Initially considered as a case of suicide, her death became later suspected of murder and SL police in Jaffna currently carries out an investigation involving her husband.

Garolin last spoke to her brother, Parath in Jaffna, on 15 January around 3:00 p.m., telling him that she had sent 50,000 rupees for the 45th day ritual of her deceased sister and that she would again contact him on the 19th.

But, she committed suicide the following day on the evening of 16th January.

According to her father, Garolin was regularly in touch with them sending photos of her life in Norway. She also used to occasionally send money despite her own difficulties, her father said.

After the rejection of her asylum case in Norway, the fear of repatriation back to a country where she could be persecuted might have caused her suicide, media reports in Norway said.

The released cadres of the LTTE and those who were formerly supporting the Tigers constantly live under threat, fear and subordination in the island and Garolin's return could have easily become a risk for her, commented media circles in Jaffna.

The argument of the Norwegian immigration authorities in rejecting her asylum case was that she could re-join her family either in Sri Lanka or in Iraq.

According to reasons cited by the Norwegian authorities, there was no evidence for persecution against her in Sri Lanka.

She had been given notice to leave Norway before 10 January and she was living under conditions of deportation at any time.

Garolin was buried in Norway on 27 January after a ceremony at Førde church.

The child was buried before, according to Muslim rites.

Garolin's brother, Parath Nesarajah, was given visa to attend her funeral in Norway.

The family members of Nesarajah
The family of Nesaraja in Chaavat-kaddu, Aanaikkoaddai


Chronology:


Related Articles:
13.12.07   Chaavatkaddu


External Links:
BT: Garolin gravlagd i dag
BT: Eit siste farvel med Garolin
vg.no: Politiet: Hun valgte branndøden
BT: Den siste som snakket med Garolin
NRK: Familien forstår ikkje politiet sin konklusjon på dødsbrannen
BT: Dødsbrannen var påsett
BT: - Dette kan jo også ha vært et stort skrik om hjelp
BT: - Ein tragedie at slikt skal skje

Indian university confers honorary doctorate on Erik Solheim

Indian university confers honorary doctorate on Erik Solheim

[TamilNet, Friday, 03 February 2012, 02:05 GMT]
TERI University of India (The Energy and Resources Institute), which is a deemed university located in New Delhi, has conferred honorary doctorate on Norwegian Minister of Development Mr. Erik Solheim in its fourth convocation this year held on Wednesday. The deemed university, specialized in sustainable development, got accreditation in India in 1999. The university has affiliated centers in Japan, Malaysia, United Arab Emirates, USA and UK, besides in some prominent Indian cities. Mr. Solheim is involved in international peace facilitation on behalf of Norway in several countries in the world. As Development minister, his office is part of the foreign ministry establishment of the Norwegian government, since Norway sees ‘development’ and ‘foreign relations’ intertwined in facilitating its interests.

Mr. Solheim was chosen by TERI University as a person who has made contributions to environmental protection and the need to maintain equity, ecological security, and the wealth of global natural resources.

As peace facilitator to the national crisis in the island of Sri Lanka, Mr. Solheim, became a miserable failure in 2009. The peace process ended up in mass-scale genocide of Eelam Tamils, in which nearly 140,000 Eelam Tamils went unaccounted.

A committee appointed by the Norwegian government to evaluate the peace process came out with the finding criticizing those who were handling the peace process that Norway should have withdrawn from the peace process before it ended up in a massacre, at least to enlighten the world of the impending realities.

The peace process was also criticized in the Norwegian report for not being prepared with contingencies to meet such a catastrophic turn of affairs.

Despite his historic failure with Eelam Tamils and the State of Sri Lanka, Mr. Solheim continues to handle ‘peace facilitation’ on behalf of Norway in countries like Myanmar, Philippines and elsewhere.

Commenting on the Norwegian report findings some times back, Mr. Solheim said that he was constantly in touch with the Indian government on every move of his peace facilitation in the island of Sri Lanka.

The Indian ruling circles were generally satisfied with the way the war had ended in the island of Sri Lanka, was the assessment of political observers.

SL government will not deliver justice: HRW

SL government will not deliver justice: HRW

[TamilNet, Thursday, 02 February 2012, 23:59 GMT]
The acting Geneva Advocacy Director at Human Rights Watch, Philippe Dam, has said in a statement issued by the HRW Thursday that justice and accountability will not come from the Sri Lankan government. “Only international action will address the suffering of victims,” Mr. Dam said urging the United Nations Human Rights Council to address the lack of accountability for wartime abuses during its March 2012 session. Sri Lanka has a long history of failed promises to prosecute serious human rights abuses, the statement by the HRC further said.

Full text of the statement by the Human Rights Watch follows:

Sri Lanka: UN Must Act at Next Human Rights Council Session Accountability Still a Pipe Dream for Victims

(New York, February 2, 2012) – The United Nations Human Rights Council should address the lack of accountability for wartime abuses in Sri Lanka during its March 2012 session, Human Rights Watch said in a letter to Human Rights Council (HRC) member countries and observers today. Nearly three years since the end of the war, the Sri Lankan government has not kept its commitments to its people, the UN secretary-general, and the HRC to undertake credible measures towards accountability.

“The Human Rights Council is uniquely positioned to ensure that the deaths and injuries of tens of thousands of civilians in the last months of Sri Lanka’s conflict are properly investigated,” said Philippe Dam, acting Geneva advocacy director at Human Rights Watch. “The failure of the council to respond to one of the worst episodes of human rights abuse since its creation would only undermine its relevance.”

Human Rights Watch urged the HRC to adopt measures to implement the recommendations made to UN Secretary-General Ban Ki-moon by his Panel of Experts, which found credible allegations of serious laws-of-war violations by government forces and the secessionist Liberation Tigers of Tamil Eelam. Among other things, the panel recommended establishing an independent international mechanism to monitor and assess the extent to which the Sri Lankan government is carrying out an effective domestic accountability process, to conduct investigations independently into the alleged violations, and to collect and safeguard for appropriate future use information provided to it.

The Sri Lankan government’s own Lessons Learnt and Reconciliation Commission’s (LLRC) report, which the government has claimed will serve as the basis for a roadmap on accountability, largely exonerates the actions of government forces and ignores the findings of the UN Panel of Experts, said Human Rights Watch. While some of the recommendations on reconciliation are useful and should be implemented, it only calls for investigations into a handful of specific incidents and fails to address the indiscriminate use of heavy artillery against civilian areas.

The Sri Lankan government has recently suggested that the recommendations of the LLRC report, which will not be submitted to the HRC, will be implemented shortly. However, Sri Lanka has a long history of failed promises to prosecute serious human rights abuses. Human Rights Watch has documented serious abuses by both sides during the 26-year armed conflict that ended in May 2009, virtually none of which have been prosecuted.

“It has long been clear that justice and accountability will not come from the Sri Lankan government,” said Dam. “Only international action will address the suffering of victims.”

Pro Rajapaksa gang abducts, threatens Kaaththaankudi civil activist

Pro Rajapaksa gang abducts, threatens Kaaththaankudi civil activist

[TamilNet, Thursday, 02 February 2012, 23:34 GMT]
A.C.M. Asam, a member of the Kaaththaankudi Good Governance People Movement was abducted last Friday by an armed men who came in motorbikes when he was returning home after seeing his ailing mother in the Batticaloa Teaching Hospital. Mr. Asam was later released after four hours, according to M.M.Abdur Rahuman, Soora council member of the movement at a media briefing held this week. Mr. Asam had exposed the fraud to the tune of 150,000 rupees that took place in the Kaaththaankudy UC. Asam had been threatened by the abductors not to work against Kaaththaankudi Urban Council chairman M.L.A.M.Hisbullah, who is a Deputy Minister in SL President Mahinda Rajapaksa's regime.

The abduction took place in front of the Batticaloa zonal education office in the Sri Lankan military high security area in Batticaloa city where the district headquarters of the SLA Brigade is also located.

A man standing in front of the office had asked Asam to give a lift in his motorbike. He obliged and took him in his motorbike. After driving a few meters three armed men standing on the way had threatened Asam and had blindfolded him and took him away by force.

Asam was also threatened by the abductors to leave the civil movement.

Playing with the knowledge of hearing: கேள்வி ஞானத்தால் வாசித்தேன்


"கேள்வி ஞானத்தால் வாசித்தேன்!' 



ஒன்றரை அடியில், வடிவமைக்கப்பட்ட வீணையைக் கொண் டு, உலகம் முழுக்க கச்சேரி நடத்தும் ரங்கராஜன்: பள்ளியில் படிக்கும் போது, பிரபல வீணை வித்வான்கள் ஈமணி சங்கர சாஸ்திரி, சிட்டிபாபு போன்றோரின் கச்சேரிகளுக்குச் சென்று, அவர்கள் வாசிக்கும் போது, ஆர்வமாக கவனிப்பது என் வழக்கம். கடந்த, 1979ல், எனக்கு, 20 வயதாக இருக்கும் போது, வீட்டிற்கு அருகில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், மயூரவள்ளி தாயாருக்கு, சரஸ்வதி அலங்காரம் நடந்தது. மறுநாள் அந்த அலங்காரப் பொருட்களில், சரஸ்வதியின் கையிலிருந்த ஒன்றரை அடி பொம்மை வீணையை, என் கைகளில் கொடுத்த வீரராகவப் பட்டாச்சாரியார், அதை வாசிக்க கூறினார். நானும், எனக்குள்ள இசையின் கேள்வி ஞானத்திலேயே, அந்த வீணையை வாங்கி, வாசிக்க ஆரம்பித்தேன். சிறப்பு வாய்ந்த அந்த வீணை, தஞ்சையில் வீணைகள் தயாராகும் பலா மரத்தில் வடிவமைக்கப்பட்டது. அதில், 24 ஸ்வரங்களையும் அமைத்து, தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். வீணை வித்வான்கள், சிட்டிபாபு, பாலசந்தர், காயத்ரி போன்றோர் முன்னிலையில், வாசித்து காட்டி, அவர்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா, என் வீணை இசையின் தீவிர ரசிகர். என் கச்சேரியை பாராட்டி இருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா உட்பட, இதுவரை, உலகம் முழுக்க, 1,000 மேடைக் கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கிறேன்; வீணை தவிர, சித்தார், சந்தூரியையும் வாசிப்பேன். என் இசையில் சில ஆல்பங்கள் வந்துள்ளன. சரஸ்வதியின் மடியிலிருந்த வீணை, எனக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்ததாலோ என்னவோ, இசையில் என்னால் பல சாதனைகளை செய்ய முடிகிறது.

Learning thamizh is compulsory in schools : பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம்

பள்ளிகளில் தமிழ்  இலங்க வேண்டிய நிலைப் பாட்டிற்குப் பாராட்டுகள். படிப்படியாக என்னும் முந்தைய அரசின் தவறான நிலையை மாற்றி இக்கல்வியாண்டிலிருந்தே எல்லா நிலைகளிலும் தமிழ் என்னும் நிலையைக் கொண்டு வர  வேண்டும். முதல்வர் முயன்றால் முயாதது என ஒன்று உண்டோ?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம்

First Published : 04 Feb 2012 01:24:16 AM IST


சென்னை, பிப். 3: பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேரவை காங்கிரஸ் குழு தலைவர் கோபிநாத் (ஓசூர்) வெள்ளிக்கிழமை பேசும் போது நடந்த விவாதம்:கோபிநாத்: திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் கட்டாயத் தமிழ் என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், உருது, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். திமுக ஆட்சிக் காலத்தில் எனது கோரிக்கையை பலமுறை எடுத்துக் கூறியும் பதில் கிடைக்கவில்லை.அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுபான்மையின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் விரும்பிப் பார்க்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் கேபிள் டி.வி.க்களில் வரவில்லை. இது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் சி.வி.சண்முகம்: 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளி மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் அந்தச் சட்டத்தை கொண்டு வந்தனர். 2006-ம் ஆண்டில் முதலாம் வகுப்பில் தமிழில் முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள் இப்போது ஆறாம் வகுப்பில் தமிழை முதல் பாடமாக படித்துக் கொண்டிருப்பர். இந்தச் சட்டம் படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2016-ல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிரதான மொழிப் பாடமாக தமிழ் இருக்கும். பகுதி 4-ல் விருப்பப் பாடம் கொண்டு வரப்பட்டு அதற்கான மதிப்பெண், தேர்ச்சிக்கு கட்டாயமாக்கப்படாது.கோபிநாத்: கட்டாயச் சட்டம் கொண்டு வரும் போது, அரசுக்கு அதிகாரிகள் சார்பில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன. சிறுபான்மைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அறிவியல் தமிழ் என்கிற திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை மீண்டும் வர வேண்டும். அதைப் படிக்கிறோம். பிரதான மொழி பாடத்தை எங்களது மொழிகளிலேயே படிக்கிறோம்.முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் கட்டாயம் தமிழ் படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கர்நாடகத்தில் கன்னட மொழியிலும், ஆந்திரத்தில் தெலுங்கு மொழியிலும்தான் படித்தாக வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

TID arrests two Tamil fishermen in Mannaar

TID arrests two Tamil fishermen in Mannaar

[TamilNet, Thursday, 02 February 2012, 02:51 GMT]
A group of persons, arriving in a white van and identifying themselves as from the Sri Lankan ‘Terrorism Investigation Division’ (TID), arrested two Tamil fishermen in Mannaar on January 19th, sources in Mannaar said. The TID officers had later had informed relatives of the fishermen after inquiry that TID police had detained the fishermen on reports that they had helped he LTTE.

28 year-old newly married, Alex Thavaseelan of Pa'l'lmunai, and 48 year-old Joseph Gnanaseelan, father of five children of Amman Koyail-Uppuk-ku'lam in Mannaar district, were arrested according to complaints lodged with the Vavuniyaa regional office of the International Committee of Red cross(ICRC) by their relatives.

Gnanaseelan has been detained in the Fourth Floor of the TID Headquarters in Colombo and Alex Thavaseelan in Vavuniyaa TID office.

Later on January 21 houses of the Tamil fishermen and their relatives were searched by the TID officials.
சொல்கிறார்கள்                                                                                                                               
"அடையாளத்தை தந்தது!' 



பென்சிங் என்ற கத்திச் சண்டைப் போட்டியில், ஆசிய அளவில் முத்திரை பதித்துள்ள கார்த்திக்: என் அண்ணன் மாநில அளவில், தடகளத்தில் கலக்கியவர். அவருடன், பயிற்சிக்குப் போகும் போது தான், எனக்கும் தடகளத்தில் ஆர்வம் வந்தது. அதிலும், நிறைய பதக்கங்கள் வாங்கியிருக்கிறேன். திடீரென்று ஒரு நாள், அண்ணனிடம், அவரின் பயிற்சியாளர், பென்சிங் பற்றியும், அதைக் கற்றுக் கொள்ளவும் கூறினார். என் அண்ணன் மறுக்கவே, நான் முயற்சி செய்து கற்றுக் கொண்டேன். இரண்டு ஆண்டில், தேசிய அளவில், என் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். தொடர்ந்து ஆறு முறை மாநில சாம்பியன், தேசிய போட்டியில் தங்கம், தெற்காசியப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் என்று வேகமாக முன்னேறினேன். பழைய சினிமாக்களில் உள்ள கத்திச் சண்டை போலத்தான், இந்த விளையாட்டிற்கும் அடிப்படை. ஆனால், இந்த விளையாட்டில் கூர்மையான வாளுக்கு பதில் கம்பி இருக்கும். உடம்பில் பட்டால், வலி தாங்க முடியாது. இதில் எப்பி, பாயில், சேபர் என்று, மூன்று பிரிவுகள் உண்டு. பாயிலில் கழுத்துக்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியைத் தாக்குவர். எப்பியில், ஒட்டுமொத்த உடம்பையும் தாக்குவர். சேபரில், இடுப்பிற்கு மேல், கைகளைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் தாக்குவர். இவற்றில், சேபர் தான் மிக வேகமான பிரிவு; துல்லியம் தேவை. மொத்த ஆட்டமுமே, ஒன்பது நிமிடத்தில் முடிந்துவிடும். இந்த விளையாட்டிற்கான மின்சார இணைப்புள்ள ஆடை, கவசத்தின் விலை மட்டும், 25 ஆயிரம் ரூபாய். விளையாடும் போது, ஆடையைப் பலமுறை மாற்ற வேண்டிவரும். கொஞ்சம் செலவு பிடிக்கும் விளையாட்டாக இருந்தாலும், அதுதான் எனக்கு, அடையாளத்தை உருவாக்கியது. பென்சிங் விளையாட்டு ஒலிம்பிக்கில், 48 பதக்கங்களைக் கொண்ட விளையாட்டு. வரும் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில், தங்கம் வெல்ல வேண்டும்; அது தான் கனவு!

Family members of Annaa : அண்ணா குடும்பத்தினர்: இன்றைய நிலை

Blog post image #1
தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.
அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.
1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண்ணிக்கையாக அமைந்தது.
அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரியின் பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.
தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணாவுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வைத்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.
தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தரவில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்திலோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தினருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன்வந்தபோதுகூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்கத்தில் வேறு யாருக்கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல்களை செல்வி.ஜெயலலிதா அரசு நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றாண்டையொட்டி (2009) அண்ணாவின் வளர்ப்பு மகன்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.
அண்ணாவின் முதல் மகன் பரிமளம், மருத்துவம் பயின்றவர். டாக்டர் அண்ணா பரிமளம் என்றழைக்கப்பட்ட இவர், அரசு தோல் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே www.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார். தற்போதும் அந்த இணையதளம் மாதமிருமுறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கைவிட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத்தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர்களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதியரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரிமளம்-சரோஜா தம்பதியரின் இரண்டாவது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.
அண்ணாவின் இரண்டாவது மகன் சி.என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணாவின் காஞ்சி பத்திரிகையில் பணியாற்றியதோடு, அச்சுத்தொழிலையும் மேற்கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், காலமாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கிறார். இத்தம்பதியரின் மகள் பிரியதர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.
சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதியரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம்பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.
அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ.ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜாமணி-வெங்கடேஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.
அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும்பத்தினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணாவுக்குப் பிறகு அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத்தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல்தளங்களில் விமர்சனம் எழுகின்றபோதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.
தகவல் உதவி: செம்பியன் 

வியாழன், 2 பிப்ரவரி, 2012

Saraswathy daughter of Paventhar Bharathidasan expired : பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவுக்கு மலர்வணக்கம்


சரசுவதி கண்ணப்பன்(பாவேந்தரின் மூத்தமகள்,22 அகவையில் எடுக்கப்பெற்ற படம்)

பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி அவர்கள் தம் 92 ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை எய்தினார், அவரின் மறைவுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவேந்தரின் மகன் திரு.மன்னர்மன்னன் அவர்கள் தலைமையில் புதுவைத் தமிழறிஞர்கள், பாவலர்கள், பெரியோர்கள் பலர் கலந்துகொண்டு மலர்வணக்கம் செய்தனர்.

பாவேந்தரின் குடும்பத்தின் சார்பில் மன்னர்மன்னன், பாரதி,செல்வம்,தென்னவன்,அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவைத்தமிழறிஞர்கள் பாவலர்மணி சித்தன், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முத்து, திரு. வி.பி.சிவக்கொழுந்து, கவிஞர் கல்லாடன், புரவலர் ந.கோவிந்தசாமி,பேராசிரியர் தெ.முருகசாமி, நந்திவர்மன், வழகறிஞர் கோவிந்தராசன், பேராசிரியர் க.இளமதிசானகிராமன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கனகராசு, முனைவர் செங்கமலத் தாயார், பாவலர் மாநி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மன்னர் மன்னன் ஐயா தம் தமக்கையாரின் சிறப்பினையும் அக்காலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திருமணச் சிறப்பு நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார்.


மன்னர்மன்னன், மு.முத்து, பாரதி,மு.இளங்கோவன், மதனகல்யாணி உள்ளிட்டோர்


மன்னர் மன்னன்,மு.முத்து,புரவலர் ந.கோவிந்தசாமி,மாநி உள்ளிட்டோர்


வி.பி.சிவக்கொழுந்து, மு.முத்து,கோ.பாரதி, வழக்கறிஞர் கோவிந்தராசு, மு.இ.

T.B.can be cured by continous treatment:தொடர் சிகிச்சையால் குணப்படுத்தலாம்!

 சொல்கிறார்கள்



சமூக நல மருத்துவர் ரம்யா அனந்தகிருஷ்ணன்: இந்தியாவில், 40 சதவீதம் மக்களுக்கு காசநோய்த் தொற்று, அவர்களின் உடலுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால், இந்தத் தொற்று, எப்போது நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ, அப்போது, காசநோயாக மாறிவிடும். சர்க்கரை நோய் உடையவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்தான உணவைச் சாப்பிடாதவர்கள் போன் றோருக்கு, காசநோய்க் கிருமி பாதிப்பை ஏற்படுத்துகிறது. காசநோய் பெரும்பாலும், நுரையீரலில் தோன்றுகிறது. இவர்களின் சளியைப் பரிசோதனை செய்தால், அதில் காசநோய்க் கிருமி இருக்கும். ஒரு சிலருக்கு, கழுத்தில் கட்டி போன்றும், எலும்புகள், மூளை நரம்புகளில் காசநோய் தோன்றலாம். நுரையீரல் பாதிக் கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், பக்கத்தில் இருப்பவர்களுக்கும், காற்றில் அந்தத் தொற்று பரவும். காசநோய் என்பது, 100 சதவீதம் குணப்படுத்தக்கூடிய நோய் தான். ஆறு மாதம் தொடர் சிகிச்சையின் மூலம், ஒருவரை காசநோயிலிருந்து குணப்படுத்திவிட முடியும். ஒருவருக்கு, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருமல், மாலை நேரங்களில் காய்ச்சல், பசி யின்மை, எடை குறைதல் மற்றும் நெஞ்சு வலி தோன்றினால், கட் டாயம் அவர்களது சளியைப் பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய் பரம்பரையாய் வருவதல்ல. ஆனால், காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால், நம்மையும், நம்மைச் சுற்றி இருப்போரையும் நாம் தற்காத்துக் கொள்ள, உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Last king of Kandy remembered in Tamil Nadu

Last king of Kandy remembered in Tamil Nadu

[TamilNet, Wednesday, 01 February 2012, 01:48 GMT]
Sri Wikrama Rajasinghe alias Ka’n’nuch-chaami, the last king of Kandy, from whom the British captured the sovereignty of the last remaining kingdom in the island then called Ceylon, was remembered by his heirs and relatives in Tamil Nadu at his memorial in Vealoor (Vellore) in Tamil Nadu on his 181st death anniversary on Monday. Those who claim and uphold ‘unitary’ sovereignty over the entire island today never care for the king, who fought against colonialism for native sovereignty last remaining in the island, just because he was belonging to the Mathurai Naayakka dynasty of Tamil-Telugu origin. This is a small, but revealing example on the attitude of the sovereignty claim of the Sinhala state of Sri Lanka, showing why the sovereignty of genocide-affected Eezham Tamils in the island should never be vested into the hands of this state, commented an academic in Jaffna.

The last King of Kandy
The last Queen of Kandy
The paintings of the King and Queen made by a British Army officer before they were taken to Vellore
Colombo museum
The throne, crown and other regalia of Sri Wikrama Rajasinghe in the display of Colombo museum. Image courtesy: Srilanka.travel-culture.com
Among the three kingdoms in the island at the advent of European colonialism, Kotte (Colombo) and Jaffna were captured by the Portuguese in the 16th and early 17th centuries, and later went into the hands of the Dutch and the British who came in succession. Kandy was the last remaining native kingdom when the British came in 1796.

In 1815, the invading British captured Sri Wikrama Rajasinghe and his queen after a brutal war. Later, the chieftains of Kandy signed a treaty with the invaders, agreeing for the transfer of sovereignty to the British Crown.

The Royal family was then taken to British India and was imprisoned at the Fort of Vealoor (Vellore) in Tamil Nadu. The Vellore fort was also once belonging to the dynasty of Wikrama Rajasinghe, originating from the Vijayanagara Empire.

The king died on 30 January 1832, at Vellore and was buried at the bed of the river Paalaa’ru, nearby. His queen Saaviththiri Devi and children were also buried at the same place after their death later.

The crown, throne and other royal regalia taken by the British to London were later returned to Ceylon and they are now in the display of Colombo Museum. The personal items used by the imprisoned king, such as his dice-game set etc., could be found in the Tamil Nadu State museum at Vellore.

The birth name of the king was Ka’n’nuch-chaami. Another contender for the throne of Kandy from the same family, by the name Muththuch-chaami, was patronized by the British who kept him in Va’n’naar-pa’n’nai in Jaffna in the locality where the Kilner Building stands now. The British who wanted to appease Wikrama Rajasinghe after their defeat in an earlier war, presented him the head of Muththuch-chaami on a platter.

The story of Wikrama Rajasinghe became folklore in Tamil in the 19th century itself. Early plays by the name of Ka’ndi Raajan Kathai, and in the form of Kooththu theatre, were composed and performed at Mathurai in Tamil Nadu as early as in the late 19th century.

However, in Sinhala historiography, the English version that Wikrama Rajasinghe was a tyrant became easily accepted and the highlight was the king brutally torturing and killing the family of a Sinhala chieftain for treason.

The English historiography found it convenient to justify the transfer of sovereignty, citing tyranny of the Naayakka king on the Kandyans.

But in our times today, the powers of new imperialism contesting for the island and the international system such as the UN, find it convenient to cite at ‘Sri Lankan sovereignty’ in allowing even genocide of a nation.

Mahinda Rajapaksa, who never hesitated to commit genocide of Eezham Tamils, justifies all his actions in the name of ‘Sri Lankan sovereignty’ and he is the hero of the ‘Mahavamsa’ he is composing.

The international polity of the New World Order seems to have ‘matured’ enough in making no pretentions over proclaiming shamelessly that ‘sovereignty’ is not a people’s right to protect their nation.

Sri Lanka that doesn’t remember much the Tamil-Telugu sovereign of the Mathurai family who last defended sovereignty in the island against European colonialism, now maintains an impressive memorial in Colombo for the IPKF of the New Delhi Establishment that was known for its atrocities committed on Tamils of the island, in the name of upholding Sri Lanka’s sovereignty.

The advent of this new historiography on sovereignty in the island, replacing the English historiography, has to be carefully understood both in the island and in Tamil Nadu, commented the academic in Jaffna.

Related Articles:
19.01.12   Tamil sovereignty alone can check protracted genocide: Jose ..
22.02.10   Myth of Sri Lankan state and the historic responsibility of ..
21.06.03   Negotiating Tamil sovereignty

CPI moots Tamil Nadu State Assembly participation in Geneva HRC

CPI moots Tamil Nadu State Assembly participation in Geneva HRC

[TamilNet, Wednesday, 01 February 2012, 17:56 GMT]
Tamil Nadu State Assembly should press New Delhi to make arrangements for its participation in the UN Human Rights Council sessions in Geneva in March to present the case of war crimes against Eezham Tamils, said, Communist Party of India’s MLA for Sivagangai, Mr. S. Gunasekaran, during debate on Governor’s Address in the Tamil Nadu Assembly. He reminded the Assembly on its earlier resolution on this issue and said that a case should be filed in the International Court of Justice against SL President Mahinda Rajapaksa for the genocide committed on Eezham Tamils. Deprivation of political, homeland and language rights of Eezham Tamils continue in the island and they are treated like slaves without security. SL has not even spent the Indian monetary assistance meant for Eezham Tamils sufficiently, the MLA said.

S. Gunasegaran
S. Gunasegaran, Communist Party of India MLA and Deputy Leader for the party in the Tamil Nadu State Assembly
Mr Gunasekaran, who is also the deputy leader of CPI in the Assembly, started his speech highlighting the attack on Tamil Nadu fishermen by Sri Lanka military in the Palk Bay.

Whenever an attack takes place on the fishermen, every Tamil feels humiliated. This has to be stopped once and for all, and the TN Assembly should insist on its participation in the talks between New Delhi and Colombo, Mr. Gunasekaran said.

Commenting on the issue, an Eezham Tamil politician in the island told TamilNet that the fishermen issue is one that has been deliberately created by New Delhi and Colombo, to deviate the concentration of people’s uprising in Tamil Nadu for the liberation of Eezham Tamils.

Similar intentions are behind in fuelling Tamil Nadu–Kerala issues too, the Eezham Tamil politician said.

Further comments from the new generation Eezham Tamil politician in the island follows:

All the three powers, India, China and the US that are engaged in a geopolitical game in the southern part of South Asia, harp on keeping the local peoples engrossed in rivalries so that the agenda of imperialist and corporate grab could be achieved smoothly and imperceptibly.

A game is also now being played by all the three of them in fuelling political rage among the people of Maldives, in the name of fundamentalism and anti-fundamentalism, while their land, sea, resources and economy are grabbed in partnership by the powers.

Peoples of the region should realise, that if they keep quiet when powers-orchestrated genocide and structural genocide befall on one of the peoples in the region, it will befall on all of them one after the other.

When there was an open genocide on the nation of Eezham Tamils, the politicians sitting in power in Tamil Nadu kept quiet. The people of Kerala kept quiet at their elite in New Delhi setting its course. The Maldivians kept quiet at their government bracketing itself with the genocidal regime of Rajapaksa. And progressive voice among the Sinhalese was microscopic.

Many countries of Asia, Africa and Latin America, tagging them with one or the other power, bail out genocidal state and regime of Sri Lanka in the Human Rights Council and in other international forums by projecting the issue as a ‘sovereignty’ issue. But the immoral stand only helps the designs of imperialism that deprives sovereignty of small nations one after the other. The stand could never help the peoples of those countries or their sovereignty.

Liberation of the nation of Eezham Tamils is not a mere Tamil sentiment. At the core, it is not even a Tamil–Sinhala issue. But the liberation and independence of Eezham Tamils is a test case for all the peoples in the region and elsewhere in course-correcting the powers to set a civilized paradigm for world polity.

The responsibility and leadership of Tamil Nadu in this regard is of prime significance that has to be understood and projected to the masses in the right perspective. The role the Tamil Nadu CPI could play, ranges from elucidating on the wider perspective of the need for Eezham Tamil independence to enlightening the imperialists in the garb of Marxism in India on their course-correction, commented the new genre Eezham Tamil politician.

Destructive trend of Sinhalicisation harmful for future harmony in East: Thurairatnam

Destructive trend of Sinhalicisation harmful for future harmony in East: Thurairatnam

[TamilNet, Tuesday, 31 January 2012, 23:57 GMT]
Archaeological traces of heritage, preserved in 25 acres of land in Chuvaami-malai and Kevu'liya-madu villages in Paddippazhai DS division of Batticaloa district, are being destroyed by Sinhala encroachers, who are attempting to construct a Buddhist vihara at the occupied lands, civil sources Paddippazhai said. Condemning the move, Eastern Provincial Council (EPC) member R. Thurairatnam, said the destructive trend is opposed to any future ethnic harmony in the East. The historical evidences in the area were well preserved even during the times of war, Mr. Thurairatnam observed.

The occupying Sri Lanka Army and SL Police are assisting the encroachers to carry out the destruction, civil sources in the area said.

140 Sinhala families had encroached lands that belonged to Tamils in the villages of Kevu'liya-madu and Chuvaami-malai four years ago, after the war ended. Now the encroachers claim that the area belong to them.

The act of destruction of archaeological traces of heritage in the lands confirm that the traces belong to Eezham Tamil heritage, a young Tamil politician in Batticaloa said.

The trend also indicates why the Sri Lankan government, aiming total demographic change in the East, has not been interested in giving land and police powers to Eezham Tamils, he added.

Recognition for the party of LTTE is cancelled : விடுதலைப் புலிகள் கட்சிப் பதிவு நீக்கம்

விடுதலைப் புலிகள் கட்சிப் பதிவு ரத்து

First Published : 02 Feb 2012 03:01:05 AM IST


கொழும்பு, பிப். 1: இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் (பி.எஃப்.எல்.டி.) பதிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது.    இதுதவிர, ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (இஎன்டிஎல்எஃப்), இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனர் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்கிய தேசிய ஐக்கியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பதிவைப் புதுப்பிப்பதற்காக ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாத காரணத்தாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

can not give War Rdport to the UN: Sri Lanka : போர் குறித்த அறிக்கையை ஐநாவிடம் அளிக்க முடியாது: இலங்கை

போர் குறித்த அறிக்கையை ஐநாவிடம் அளிக்க முடியாது: இலங்கை

First Published : 01 Feb 2012 03:01:47 PM IST


கொழும்பு, பிப்.1: இறுதிக்கட்ட போர் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் அளிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கைப் போரின்போது ராணுவத் தாக்குதலில் பெருமளவில் மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்றும், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து இது குறித்து நாங்களே விசாரிப்போம் என்று அறிவித்த இலங்கை அரசு, தனது அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இதில், ராணுவத்தினர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.‌இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் இறுதிக்கட்ட போர் குறித்த அறிக்கையை ஐ.நாவிடம் அளிக்க முடியாது என்று இல‌ங்கை அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.அதிபர் ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே தெரிவித்தார்.அதே நேரத்தில், அரசின் விசாரணை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்பதால், அதை ஐ.நா.விடம் அளிக்க தயங்குகின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள்

அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று நொண்டி சாக்கு சொல்லி ஈராக் மீது படைஎடுத்தீர்களே. போரில் மனிதஉரிமை மீறல் நடந்தற்கான விசாரண அறிக்கை தராததற்கு இலங்கை மீது போர் தொடுப்போம் என ஒரு மிரட்டலாகிலும் விடலாமே.
By வரதராஜ் k
2/1/2012 7:41:00 PM

Vaiko accused rajapakshe : விருந்து வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார் இராசபட்ச: வைகோ குற்றச்சாட்டு

விருந்து வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார் ராஜபட்ச: வைகோ குற்றச்சாட்டு

First Published : 01 Feb 2012 10:43:21 AM IST

Last Updated : 01 Feb 2012 01:10:01 PM IST

சென்னை, பிப்.1: 13-வது சட்டத் திருத்தத்தை தனது அரசு நிறைவேற்றும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதி அளித்துவிட்டு பின்னர் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறுவது விருந்து சோறு போட்டுவிட்டு கன்னத்தில் அறைந்த செயலாகும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசும், சிங்கள அரசும் நடத்திய மோசடி நாடகம் ஒரு ஏமாற்று வேலை என்பது அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஜனவரி 17 ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை பயணம் குறித்து தெரிவிக்கையில், ராஜபட்ச அரசு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை தரும் என்றும், 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றும் என்றும், ஏன் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதிகாரங்களை வழங்கும் என்றும் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக கூறினார். ஆனால், ஜனவரி 30 ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவ்விதம் நான் சொல்லவே இல்லை என்றும், இலங்கை நாடாளுமன்றம் தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இது இந்திய அமைச்சருக்கு விருந்து சோறு போட்டுவிட்டு கன்னத்தில் அறைந்துள்ள செயலாகும். தொடர்ந்து இந்திய அரசு தமிழக மக்களையும், ஈழத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக 13 ஆவது அரசியல் திருத்தத்தை சிங்கள அரசு நிறைவேற்றும் என்று கூறி வருகிறது.2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ஒரு பொய்யை வெளியிட்டார்கள்.13 ஆவது திருத்தம் என்பதையே ஈழத்தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் உண்மையான அதிகாரப் பகிர்வு கிடையாது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, ஒப்பந்தம் கையெழுத்தான பத்து நாட்களுக்குள் அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா மறுத்தது மட்டும் அன்றி, அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். அப்பொழுதும் இந்திய அரசு ஊமையாக இருந்தது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கொழும்பு உச்சநீதிமன்றத்தில் இணைப்பு கூடாது என்று சிங்கள அரசு தரப்பில் சொல்லப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு, வடக்கு-கிழக்கு இணைப்பு கிடையாது என்று தீர்பபளித்ததையும் இந்திய அரசு கண்டுகொள்ளாமல் அப்போதும் வாய்திறக்கவில்லை.தொடர்ந்து ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசையும் தமிழ் இனப்படுகொலை நடத்தி, தொடர்ந்து இன அழிப்பு வேலையில் ஈடுபட்டு வரும் சிங்கள அரசையும், இந்த இரு அரசுகள் நடத்தும் கபட நாடகத்தையும், தாய்த் தமிழகத்தில் உள்ளோரும், ஈழத்தமிழர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இனியும் இந்திய அரசின் செய்யும் மாய்மால ஏமாற்று வேலைகள் ஒருபோதும் எடுபடாது.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

வைகோ சொல்வதில் நியாயம் உள்ளது.இந்தியாவும் இலங்கையும் ஒன்றை ஒன்று ஏமாற்ற முயலுகின்றன .இதில் பல முறை இலங்கையே வெற்றி பெற்றுள்ளது. ஆக அங்கு உள்ள தமிழர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை..மறவன்
By மறவன்
2/1/2012 8:48:00 PM
ராஜீவ் போட்ட ஒப்பந்தத்தை அமல் படுத்தாதற்குஇலங்கையின்மீது மத்திய அரசுக்கு கோபம் வரவேண்டும். ஆனால் மாறாக அந்த கோபம் தமிழர்கள்மீது பாய்ந்து பலர் சாவிற்கு வழிவகுத்தது.
By வரதராஜ் k
2/1/2012 7:34:00 PM
'முத்துக்குமார்' என்ற கௌரவமான பெயரை களங்கப்படுத்திட வேண்டாம். இப்பெயரில் கருத்து தெரிவிப்பவர் தன பெயரை 'கோயபல்ஸ்' என்று வைத்துக் கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும்!
By நல்லரசு
2/1/2012 6:28:00 PM
கிருஷ்ணாவிடம் ராஜபக்ஷே சொன்னது உண்மையாக இருக்கலாம். அதையே நிருபர்கள் கேட்ட பொழுது, பாராழுமன்றத்தில் நிறைவேற்றுவதில் பிரச்சனையாக கூடாது என்ற நோக்கில், 'நான் அவ்வாறு கூறவில்லை, பாரழுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று ராஜ தந்திரத்துடன் ராஜபக்ஷே கூறியிருக்கலாம். முன்பு நடந்த பல்டிகளை போன்று இப்போதும் நடக்கும் என்று நம்பலாகாது. வைக்கோவின் அறிக்கையில் நியாயம் இருந்தாலும், இப்போதைய நிலமைகள் வேறு. "ஒரு நாட்டுக்குள் அனைத்து மக்களும் சமம்" என்று எல்லா நாடுகளும் கூறிவரும் நிலையில், இலங்கை இதிலிருந்து தப்ப முடியாது. வைக்கோவின் அறிக்கை இந்தியா அரசின் முயற்சியை மேலும் துரீதபடுத்தும்.

1.இப்படியெல்லாம் கூப்பாடுப் போட்டுக் கொண்டிருப் பதில் எந்தப் பலனும் தராது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு ஏதோ ஒரு உள் நோக்கத்தோடு தலையிட்டிருக்கின்றார்கள். இது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இலங்கை ஐ நா அமைப்பின் உறுப்பு நாடாம்; ஆதலால், அதன் மீது, ஐ நா வே போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்ற சேதியும் இப்போது கொஞ்சம் கேட்கின்றது. இதெல்லாம் நமக்கு தேவையா? கொஞ்சம் மாந்தர் நேயத்தோடு சிந்தனை செய்து, நடுநிலையோடு நின்று, தமிழர்கள் அனைவரும் இனிமேல் செயல்படவேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்; இந்தியா வரப் போகின்ற போர்க் குற்ற விசாரணையில், ஐ நாவிற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். போர்க் குற்றவாளிகள் அனைவரையும் நீதி தேவன் முன் நிறுத்தச் சொல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம்தான், ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை உலகச் சமுதாயம் அறியும். அவர்களுக்கு நீதியும் கிடைக்கும். கிடைக்கச் செய்யுங்கள். இல்லை யென்றால் இலங்கையின் அக்கரையில் தமிழ் மண்ணில் 7 கோடி தமிழர்கள் வாழ்வது அர்த்த மில்லாமல் போய்விடும். உலக ரங்கில் நமக்கு என்ன மரிய
By பழனிசாமி T
2/1/2012 2:31:00 PM
2.மீண்டும் இன்னொருக் கோரிக்கை. இலங்கையில் தமிழர் மத்தியில், ஈழத்தில் ஐ நா மூலம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஒரு வேலை மத்திய அரசு இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமென்று கை நழுவலாம்; இனிமேல் தமிழர்கள் காதுகளில் பூ சுற்றும் வேலை வேண்டாம். உள்நாட்டு விவகாரமென்றால், ஏன் அன்று கச்சத் தீவைக் கொடுக்க வேண்டும்; இந்திய இலங்கை ஒப்பந்தம்; அமைதிப் படையென்றப் பேரில், போர்ப் படையை அனுப்பவேண்டும். அன்று, வங்காள தேசத்தைப் பிரித்துக் கொடுத்தவர்கள்; இன்று ஐ நா அவையில் பாலஸ்தீனிய தனி நாட்டிற்க்கு ஆதரவுக் கொடுத்தவர்கள், மேலும் கிழக்கு ஜெருசலம் மாநகரை பிய்த்து, அந்நாட்டின் தலை நகரமாக ஆகவேண்டும் என்றக் கோரிக்கையை அங்கு வலி யுருத்தியவர்கள்; இதையெல்லாம் யார் இவர்களுக்கு கற்றுக் கொடுத்தது. அங்கு ஒரு நீதி; இங்கு ஒரு தலைப் பட்சமான நீதியா? நாம் வெறும் பொது வாகேடுப்பைதான் வலியுறுத்துகின்றோம். வேண்டுமென்றால், பொது வாக்கெடுப்பின் மூலம், இலங்கையரசு தமிழர்களோடு, நியாமாக இவ்விவகாரத்தை தீர்த்துக் கொள்ளட்டும்.
By பழனிசாமி T
2/1/2012 2:26:00 PM
சோனியாவும், ராஜபட்சேவும் தமிழினத்திற்கு எதிராக நடத்துகின்ற கூட்டு யுத்தத்தில் தமிழர்களை ஏமாற்ற அரங்கேற்றும் நாடகங்களில் இதுவும் ஒன்று!
By பொன்மலை ராஜா

புதன், 1 பிப்ரவரி, 2012

Not only Devikulam And Peermedu: இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?

சு. செந்தில் குமரன்
நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப்  பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று  ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற  அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி,  வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம்  பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர்,  ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல)  கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட,  தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின்  கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி,  ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும்  இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர்.  இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள்.  அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார்  தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான்  இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள்  அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.


பெட்டி செய்தி : பணிக்கரின் ஆவேசம்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.

தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீரிமேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.

அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீரிமேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார். அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார்"



தம்பி,  தயார் தயார்!

தமிழக எல்லைப்புறத்தில் நாம் இழந்த பகுதிகளை மீட்க 1956ம் ஆண்டு அனைத்துக் கட்சிப் போராட்டம் ஒன்று நடந்தது. அதைக் குறித்து 1956ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி (கருணாநிதி குறிப்பிட்டதுபோல் ஜனவரி 14ந்தேதி அல்ல) எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள்...

எல்லா கிளர்ச்சியும், குண்டு கிளம்பும் வரையில்தான். முழக்கமிட்டவன் ஐயோ என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக் கூட்டம் கல் கண்டதும் கடுகிப்போதல் போல இந்த வீராதி வீரர்கள் வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி முழங்கிற்று! எழுவது பிணங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை. எமது உரிமையையாவது தாருங்கள் அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி மார்காட்டி நின்றனர் மக்கள்.

தம்பி, இந்தத் திங்கள், உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கிளம்பிய சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும்.

மொழி வழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது.

கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும் அங்கெல்லாம் நீங்கவில்லை.

பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டுப் போய் நிற்கிறது.

புதிய போலீஸ் படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

பம்பாயில் உத்தரப்பிரதேச போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப்பிரதேச போலீஸ்!

அருந்தமிழ்நாட்டில் மட்டும். தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அக்கிரமத்தை  உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும்  அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இதுபோது, நாட்டு மானங்காப்போம் என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

இதற்கிடையில், பெரியார், இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி  கண்டேன்-கண்களை அகலத் திறந்து பார்த்தேன்-ஆச்சரியத்தால் மூர்ச்கையாகிவிடக் கூடிய நிலைமை - அவர் நம்மையும் அழைத்து ஒரு பொதுத்திட்டம் தீட்டப் போவதாகப் பேசினார் என்று பத்திரிகையில் இருந்தது. நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன்-நானாக அவரை நாடுவது என்றாலோ, ‘வழி மறித்தான்களும், இடம் அடைத்தான்’களும் புடைசூழ அல்லவா அவர் நிற்கிறார்?

இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவதுபோல, நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது-கலந்து பேசலாம் என்பதாக.

சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார்-எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள்.

‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்’ என்றார் ம.பொ.சி. ‘பரவாயில்லையே, இப்போது நாம் ம.பொ.சி.யைப் பார்ப்பது, பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும் பிறவாதல்லவா-முதலில் பெரியாரும் ம.பொ.சி.யுமல்லவா சந்தித்தனர்-பிறகுதானே நாம், பரவாயில்லை-என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மகத்தான சந்திப்பின்போது பேசப்பட்டவைகள் பற்றி அவர் கூறக்கேட்டு இன்புற்றேன்.

தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார் என்று கூறினார்-களிப்புற்றேன்-அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும் வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார்.

எனினும், 27ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியார் கலந்து கொள்ளவில்லை; காரணம், முன்னாளே காட்டினார்.
அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ, உண்மை குறித்தோ ஆராய்ச்சி நடத்துவது தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல-ஆனால், ஒன்றுமட்டும் கூறுவேன். அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவை யாகாது.

மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத்தந்தி’ ஆசிரியர் ஆதித்தன் என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது - நீ வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் - தம்மிடமே சொன்னதாகச் சொன்னார் - ஆனால், சொன்னவர் தினத்தந்தி!

நான் அவரிடம் சொன்னேன். ‘நான் இங்கு வருவதுதான் பெரியார் இங்கு வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூறமுடியும்? நாளைக்கு 28ல் வேறோர் இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்-பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அதுமட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?’ என்று கேட்டேன்.

காரணம் அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை பற்றி மட்டுமே ம.பொ.சி.யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன் வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்குக்கானதாக உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதுகிறார். அதன்படி இங்கே காரியம் நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒருசேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார்.

இதுவும் பொருத்தமாகப் படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும் கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும்தான் கவனிக்கப்பட இருக்கிறது. அங்கு பெரியார், தம்முடைய மற்ற பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர். எனக்குப் புரிந்தது-புன்னகையும் பிறந்தது.

தம்பி!  27ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்ட மாபாவிகளிலே பலர், 28ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு பெரியார், தட்டாமல் தயங்காமல் வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார்.

பெரியார் 27ல் வரவில்லை, 28ம் தேதிய கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். 27ம் தேதிய கூட்டம் தேவிகுளம், பீரிமேடு சம்பந்தமாக.

28ம் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக. இந்த ஒரு பிரச்சினைக்காக ‘இதுக’ளோடு, நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை மட்டுந்தான் என்று 28ம் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் அதிலே ‘இதுகள்’ இருந்தபோதிலும், வந்தார்!

நான் திகைத்துப் போனேன்-உன் நிலை எப்படியோ?

ஒன்று மறந்தேனே கூற... 28ம் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும், திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரும், கே.எஸ்.ராமசாமி சாஸ்திரிகளும், வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர். 27ல் இந்த ‘ஜமா’ இல்லை!

27ல் தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை என்ற  பெயரில், தமிழரின் உரிமைப் பிரச்சினை, மொழிவழி அரசுப் பிரச்சினை, அதை வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப்பிரதேச யோசனையை வீழ்த்தும் பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை இவைகளுக்கெல்லாம்.

தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி, திராவிட பார்லிமெண்டரி கட்சி, ஷெட்யூல் காஸ்ட் ஃபெடரேஷன், வடக்கெல்லைப் பாதுகாப்பு கமிட்டி, திருகொச்சி இணைப்பு கமிட்டி, எழுத்தாளர் சங்கம், புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள் ஒப்பமளித்தனர்; உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு அமைக்கப்பட்டது. பி.டி.ராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ம.பொ.சி. அமைப்புச் செயலாளராகவும், நமது என்.வி.நடராஜன், ப.ஜீவானந்தம், அந்தோணிப் பிள்ளை, சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர்.

இதுபோன்றதோர் ‘கூட்டணி’ இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர, தயாராகி விட்டனர்.

இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை.

தேவிகுளம், பீரிமேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும் மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே நோக்கம்.

இல்லையேல் பி.டி.இராஜன் தலைவர், ம.பொ.சி.யும் ஜீவானந்தமும் செயலாளர்கள் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?

தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக் கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ ஏசினோம். ஏசப்பட்டிருக்கிறோம் எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற பெருங்கேட்டினை நீக்கிட நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசியது கேட்டு, உளம் பூரித்தேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என் உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர். நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன். அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம், கசப்பு- அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப் பழந்தமிழ்ப் புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்திய பான்மை போல், அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும் செயல்’ என்று பேசினதை நான் என்றும் மறந்திட முடியாது!

இந்தக் கூட்டு முயற்சியைக் குறைகூறிப் பேசுவோரும் எழக்கூடும் நாட்டிலே எதற்குத்தான் வாய்ப்பு ஏற்படவில்லை?

இந்தக் கூட்டணி அமைந்ததால் தத்தமது கட்சி கலைக்கப்பட்டு, கொடி அகற்றப்பட்டுக் கொள்கை தகர்க்கப்பட்டுப் போகும் என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணியமாட்டான், ஒவ்வோர் கட்சியும் இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தத்தமது சக்திக்கேற்ற வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக, நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள்.

தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும் மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! என்று இரு தரப்பிலும் பேசிடுவது. அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக் கூட்டுமுயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை விடுத்துக் கூடுமானபோதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து வேறுபாடு எழும் பிரச்சினைகளில் தனித்து நின்று, ஆனால் ஓர் அமைப்பை மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர் ம.பொ.சி.யும் பேசியபோது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல் கூடாது? நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர் கழகமும் கம்யூனிஸ்ட்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க ஒன்றுபட்டுப் பாடுபடவில்லையா? இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்று காரணம் காட்டிப் பெரியார் அவருக்குப் பெருந்துணைவராக இல்லையா? அதேபோல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்துகொள்ளவா முடியாது - நிச்சயம் முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று. 27ம் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட ‘அன்பினைப்’ பார்த்தபோது இஃதன்றோ, தமிழம் காண  வேண்டிய காட்சி என்று தோன்றிற்று.

‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு; மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும் ஒத்துப் போகிறோம்; ஒரே அபிப்பிராயம்தான்’ என்று பேசினார்.

பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி இருந்தால், பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி!

‘என் அன்புக்குரிய ஆச்சாரியார்.

நண்பர்;

தலைவரென்றே சொல்லலாம்.’

‘இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன்’ என்றார்.

28ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழி காண ஏற்பட்டது.

27ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும். சென்னைக்கு உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப்பிரதேசம் என்ற பேய்த் திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது.

28ன் உடனடி விளைவு, ஆங்கிலமே பொதுமொழியாதல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குத் தெரிவிப்பது.

அதில் நாங்கள் அனைவரும் இசைவு தந்திருக்கிறோம்.

27ம் தேதி செய்த முடிவு, தேவிகுளம், பீரிமேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20ல் நாடெங்கும் பொது வேலைநிறுத்தம் செய்வது என்பதாகும்.

தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான முறைகொண்டும் நம்மை ஒடுக்கத் தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றி போலீஸ் வட்டமிட்ட வண்ணம் இருக்கிறது.

அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய்த் துடிக்கின்றனவோ என்னவோ யார் கண்டார்கள் - சிறையில்! எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக, அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும்.

தம்பி, தயார்! தயார்!

அண்ணன்
அண்ணாதுரை


நள்ளிரவில்... நடுரோட்டில்... பசியோடு...
தமிழக - கேரள எல்லை குறித்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர்  நாடக, சினிமா கலைஞரும், எழுத்தாளருமான ‘பாரதி’ மணி. அவர் அந்த சம்பவத்தை இங்கு நினைவு கூர்கிறார்:

"1954ல் நான் நாகர்கோயில் சேது லஷ்மிபா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு மாசத்துகொருமுறை ம.பொ.சி., சின்ன அண்ணாமலை,  ந.சஞ்சீவி, கே.விநாயகம் தமிழரசு கழகம் சார்பா பொதுக்கூட்டம் பேச வருவாங்க. நான் ரொம்ப ஆர்வமா அவர்கள் பேச்சையெல்லாம் போய்க் கேட்பேன்.  பள்ளித்தோழன் தாணுப்பிள்ளை என்பவன், ஸ்டூடண்ட் லீடர். போராட்டம், மறியல்  எல்லாத்துக்கும் சட்டாம்பிள்ளை மாதிரி முன்னாடி நிப்பான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனைப் பாக்கப் போயிருந்தப்ப, ‘டேய்! இன்னிக்கு ஒரு மறியல் இருக்குடா,  நீயும் வா’ன்னு என்னையும் கூட்டிட்டுப் போயிட்டான். முனிசிபல் கோர்ட் வாசல்ல நிறையப்பேர்  நின்னுக்கிட்டு, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் ‘பட்டம் தாணுப்பிள்ளை ஒழிக’ என்றும் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்தான் அப்போது ஆளுங்கட்சியான பி.எஸ்.பி. பார்ட்டி சார்பில் திருவிதாங்கூர், கொச்சிக்கு முதல்வர். தமிழர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். ‘கண்டால் அறியுன் நபர்’ அப்படிங்கிற எழுதப்படாத சட்டம் மூலம் தமிழர்களின்மீது போலீஸைக் கொண்டு அராஜகம் செய்து வந்தவர். எஃப்.ஐ.ஆர். இல்லாமலே யாரை வேண்டுமானாலும் ஒரு மாதம் உள்ளே வைக்கலாம் என்பது அப்போது வழக்கில் இருந்தது.

மொத்தம் அறுபது பேரோடு நானும் கலந்துகொண்டு கோஷம் போட ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு வேனில் வந்த போலீஸ், எங்களையெல்லாம் அதில் அள்ளிப் போட்டுக்கொண்டு கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய், ஒரு சிறிய அறையில் மொத்தமாக அடைத்துப் போட்டார்கள். மதியம் மூணு மணியிலேர்ந்து ராத்திரி மூணு மணி வரைக்கும் அந்த ரூமுக்குள்ளேயே தண்ணீர்கூட கொடுக்க மறுத்து, எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். ஏற்கெனவே அழுக்கடைந்திருந்த அந்த அறையில், மற்றவர்களின் வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ள, சுவாசிப்பதே மிக சிரமமாக இருந்தது. ஒருவழியாக இரவு மூன்று மணிக்குமேல் எங்களையெல்லாம் திறந்துவிட்டு, அதே வேனில் ஏற்றினார்கள். அந்த வேன் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. கடைசியில்,  நாகர்கோயிலிலிருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில்  நடுரோட்டில் எங்களை இறக்கிவிட்டு, அந்த வேன் போய்விட்டது. கும்மிருட்டில் மரத்தடியில் பசியோடு படுத்திருந்தோம். விடிந்ததும் தான்  நாங்கள் அழகிய பாண்டியபுரத்தின் அருகில் இருக்கிறோம் என்றே தெரிந்தது. அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து, ஊர் வந்து சேர்ந்தோம்.

அப்படி அந்தச் சம்பவத்தில் கைதானவர்களில், நான் ஒருவன்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவன். தெருவுக்குள் நுழைந்ததுமே ஒருவர் மாலையோடு ஓடி வந்தார். இன்னும் நான்கு பேர், என்னை தங்கள் தோளில் தூக்கிவைத்துக் கொண்டு வீடுவரைக்கும் கொண்டு போனார்கள்.’ ‘நேற்று வகுப்புத் தோழனைப் பார்க்கப்போன உன் மகன் இன்றைக்கு போராட்டத் தியாகியாக வீடு திரும்பி இருக்கிறான், வந்து பார்’ என்று என் அப்பா, அம்மாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்."

- கல்யாண்குமார்