சனி, 29 செப்டம்பர், 2012

பேரவைத்தலைவர் செயக்குமார் பதவி விலகல் - T.N.Speaker Jayakumar Resigned

29 Sep 2012 01:10:44 PM IST




தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா 

சென்னை, செப்., 29 : தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த டி. ஜெயக்குமார் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இனி, அவரது பணிகளை துணை சபாநயாகராக உள்ள பி. தனபால் கவனிப்பார் என்றும், தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சராக இருந்த டி. ஜெயக்குமார், சபாநாயகர் பதவியில் இருந்து விலகியிருப்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
++++++++++ 


சபாநாயகர் பதவியில் இருந்து ஜெயக்குமாரின் விலகலுக்கு காரணம்?

First Published : 29 Sep 2012 04:23:18 PM IST


சென்னை, செப்., 29 : அதிமுகவில் அமைச்சர்கள் மாற்றம் என்பது சர்வ சாதாரணம். தற்போது சபாநயாகருக்கும் அதே நிலை என்பதுபோல, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி. ஜெயக்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ராஜினாமா கடிதம் பெறப்பட்டதும், உடனடியாக அரசு கெசட்டிலும் வெளியாகி, செயலாளர் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பும் அனுப்பியுள்ளார்.இந்த திடீர் ராஜினாமாவுக்குக் காரணம் என்ன என்று தமிழக மக்கள் குழம்பியுள்ளனர்.கடந்த 18ம் தேதி டி. ஜெயக்குமாரின் பிறந்த நாள், சென்னையில் மிக மிக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் அதிக தடபுடல் காட்டியுள்ளனர். மேலும், ஜெயக்குமாரின் ஜாதகத்தில், முதல்வராகும் யோகம் இருப்பதாக வந்த தகவலால், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடுத்த சி.எம். நான்தான் என்ற அளவிற்கு அதிகாரத் தோரணை காட்டி வந்துள்ளனர். இது மட்டும் அல்லாமல், பிறந்த நாள் அன்று வாழ்த்துச் சொல்ல வந்த மேயரையும், அமைச்சர் பன்னீர்செல்வத்தையும் வெகு நேரம் காக்க வைத்து பார்க்காமலேயே திருப்பி அனுப்பியுள்ளார் ஜெயக்குமார். இவை போதாதா... இது பற்றி எல்லாம் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனடியாக பதவி விலகல் நடந்துள்ளது என்று ஒரு தரப்பு கூறுகிறது. இது ஒருபுறமிருக்க, ஜெயக்குமாரின் ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து விலக்கியதால் பதவி விலகியதாக ஜெயக்குமார் தரப்பு செய்தியை பரப்பி வருவது மறுபக்கம்.
++++++++++++++++++++++++++++
 
மாலை மலர்
 
சென்னை, செப். 29-

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
 

‘Systemic rape of Tamil women is genocidal attack on psyche of Tamils’: Grenada feminist

‘Systemic rape of Tamil women is genocidal attack on psyche of Tamils’: Grenada feminist

[TamilNet, Friday, 28 September 2012, 15:22 GMT]
Arguing that systematic abuse of Tamil women, especially ex-LTTE women cadres, by the Sri Lankan state’s forces “must be viewed as the convergence of state power, colonialism, sexism, racism, classism and imperialism”, Kimalee Philip, a Canada based feminist hailing from Grenada, contends in a commentary sent to TamilNet that rape of Tamil women constitutes a significant attack on the collective psyche of Tamil women and the Eezham Tamil people as such. Ms Philip, who was responding to the recently published TamilNet analytical feature on the genocide-intended sexual violence inflicted on ex-LTTE women cadres by Sri Lankan military and police, further argues that the Sri Lankan state condones and commands the continued dehumanization of Tamil bodies, minds and communities so as to deter Tamil women asserting their agency and freedom.

Kimalee Philip is an anti-racist, decolonial feminist and educator from Grenada currently based in Toronto. She organizes with the Network for Pan-African Solidarity and is currently working on a documentary on the Grenada Revolution.

The full text of her commentary sent to TamilNet follows:

Kimalee Philip
Kimalee Philip
In the name of state dominance and empire, Tamil women, in particular, ex-Liberation Tamil Tigers of Eelam (LTTE) cadres are being systemically raped as their bodies and very existence represent a threat to the Sri Lankan state- a state that simultaneously renders visible and invisible the Tamil people.

In the summer of 2010, the author was fortunate to attend the International Women’s Conference in Montreal, Canada. The salient connections of rape, torture, oppression and continued marginalization of women was very much present despite the diverse presence of women.

At the same time, this conference seemed to also represent a unifying and growing resistance among women from multiple geopolitical spaces and colonial locations.

Significantly enough, at the time of the conference, the Canadian government decided to imprison Tamil migrants who had arrived on the MV Sun Sea. Of the 492 Tamil refugee claimants who arrived in August 2010 on the MV Sun Sea, a majority were detained by Canadian immigration authorities.

As of May 30, 2011, the Immigration and Refugee Board (IRB) had ordered the deportation of four of the Sun Sea migrants, on the grounds that they were members of the LTTE.

Unfortunately many of the responses from the general Canadian public were that ‘these people’ were disrespectfully trying to ‘jump the cue’ and that like every other law-abiding good immigrant, they should follow the immigration process as set out by the government.

There was a significantly large women Tamil delegation present at the Women’s Conference who were trying to solicit broader support for the Tamil refugees on the MV Sun Sea but to also create awareness around the living conditions of Tamil people on the island of Sri Lanka.

Like the violence experienced by women in the Congo, the ongoing violence inflicted upon the Tamil people particularly the women ex-LTTE cadres must be viewed as the convergence of state power, colonialism, sexism, racism, classism and imperialism.

The Tamil women participating in forms of resistance represents agency and freedom that puts into question the validity and power of the Sri Lankan state therefore, through sexual violence, the state condones and commands the continued dehumanization of their bodies, minds and communities.

The Sri Lankan military is an arm of the state that actualizes state violence through the ongoing harassment of the Tamil people.

As the Tamil people continue to fight for sovereignty and independence, their resilient attempts for a national identity continues to fuel the anger that feeds the Sri Lankan state machine.

The process of elimination includes but is not limited to, the denial of land ownership and control, the denial of Tamil identity that is sovereign and that has political power, the killing off of Tamil people and the systemic raping and miscegenation of Tamil women which represents a significant attack on the psyche of Tamil women and ultimately their communities.

The genocide of the Tamil people is not an internal matter. It is an international concern and a violation of international law and international human rights.

According to UN Women (UNIFEM at the time), 80% of the Tamil refugees in Sri Lanka are women and children. In the year 2008, the South Asian Human Rights Index placed Sri Lanka as the number one human rights violator and the number 3 violator of women’s human rights in the world.

Tamil women continue to be victims of forced pregnancies, sterilizations, torture, rape, disappearances and murder compounded by growing levels of poverty and limited access to food, water and medicine.

The call cannot primarily be one of relief, rehabilitation and reconciliation but rather to hold the Sri Lankan government accountable for its ongoing oppression of the Tamil people and the systemic violation of women’s rights as rape continues to be used as a weapon of war on the battlefield that is women’s bodies.

Chronology:

Ki’linochchi rises up against resettlement farce and SL military occupation

Ki’linochchi rises up against resettlement farce and SL military occupation

[TamilNet, Friday, 28 September 2012, 10:22 GMT]
More than 50% of the participants, who took part in a protest held opposite the District Secretariat of Ki'linochchi district on Thursday, were parents of missing persons, allegedly abducted or arrested and held incomunicado by the occupying Sri Lankan military. The protestors who carried the photos of their missing kith and kin, put forward three main demands to the SL State and to the United Nations Human Rights Council, to end Sinhala colonisation in the Tamil homeland, to ensure freedom of movement to the civilians to resettle in their own houses and to reveal the whereabouts of their loved ones. The protest, organised by the Tamil National Alliance, saw the participation of Tamil National Peoples Front (TNPF) and Democratic Peoples Front (DPF).



TNA leaders, Mavai Senathiraja, S. Sritharan and Vino Noakraathalingam, together with DPF leader Mano Ganesan and Selvaraja Kajendren, the general secretary of the TNPF, attended the peoples’ protest.

Protest in Ki'linochchi
The Sri Lankan State, which has not recognized the resolution passed during the UN Human Rights Council (UNHRC) sessions in March this year, is continuing with the same trend of subjugating the Tamil people, Maavai Senathiraja, a leader of the ITAK told the gathering.

While Mavai Senathiraja of the TNA was harping on the US-tabled Geneva resolution, Selvarajah Kajendren of the TNPF criticised the TNA for having failed to set the course in correct direction.

By failing to attend the UNHRC sessions and by simply calling for the countries to back the resolution, the TNA not only failed in setting the trend, but also shares the responsibility in the post-Geneva scenario for having brought the accountability process onto an LLRC-based track, which is full of traps, Mr Kajendren said. While xtending TNPFs support to agitations being organised by the TNA, Kajendren also appreciated the TNA for taking part in the protests organised by the TNPF.

Mavai Senathiraja 27 09 2012 by TamilNet

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! எள்ளினால் சினவாமை வேண்டும்!

 கேலி செய்தவனை அன்பால் திருத்திய 
சீக்கிய ப் பெண்

இலண்டன்: முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி, மன்னிப்பு கேட்க வைத்தார், சீக்கிய பெண்.

அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக, பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து, ஆண் போன்று தோற்றம் அளித்தார். பொருள் வாங்க வரிசையில் நின்ற அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த வாலிபர் ஒருவர், அப்படத்தை "ரெட்டிட்' இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்தார். தனது படத்தை இணையதளத்தில் எதேச்சையாக பல்பிரீத் பார்க்க நேர்ந்தபோது, அவர் கோபப்படவில்லை. புகைப்படத்தை வெளியிட்ட வாலிபரின் அநாகரீக வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், "ஆம். முகத்தில் முடி வளர்ந்த, சீக்கிய பெண், நான். இதனால், நான் ஆணா? பெண்ணா? என பலர் குழம்பிப் போய் விடுகின்றனர். எனது தோற்றத்தை கண்டு வருத்தப்படவில்லை. அவமானப்படுவதாக கருதவும் இல்லை' என, அதே இணையதள பக்கத்தில், பொறுமையாக பதில் தந்தார், பல்பிரீத். அதோடு நிற்காமல், "புகைப்படம் எடுத்தவர், என்னை நேரடியாக கேட்டிருந்தால், சிரித்தபடி "போஸ்' கொடுத்திருப்பேன். இதன் மூலம், நான் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் என்னை காண்போர், "ஹலோ' சொன்னால் சந்தோஷப்படுவேன்' என, நட்புடன் கூறினார்.

சாதாரணமாக பார்த்தாலே, "என்ன, முறைக்கிறாய்? எனக் கேட்டு, சண்டை போடத் தயாராக இருக்கும் உலகத்தில், தன்னை இகழ்ந்தவனுக்கு எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார், இந்த பெண் என, பல்பிரீத்துக்கு ஏகப்பட்ட விசிறிகள் இணையதளத்தில் உருவாகி விட்டனர். பல்பிரீத்தின் நல்ல குணத்தை பாராட்டி, இணையதளத்தில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர் முகத்தில் முடி வளர்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதையும், அதற்கு தீர்வாக என்ன செய்யலாம் என்பதையும் அன்பு மேலீட்டால் சிலர் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த பல்பிரீத், "ஹார்மோன் குறைபாட்டால்தான் முகத்தில் முடி வளர்கிறது; சிகிச்சைக்கு பின், ஹார்மோன் குறைபாடு சரியாகி விட்டது; ஆனால், முகத்தில் வளர்ந்த முடி அப்படியேதான் இருக்கிறது; இதற்கு வருத்தப்படவில்லை. துரதிருஷ்டவசமாக நினைக்கவும் இல்லை' எனத் தெரிவித்தார். சமீபத்தில் பல்பிரீத்துக்கு இணையளத்தில் "ஹலோ' சொல்லி இருப்பது புகைப்படத்தை வெளியிட்ட அதே வாலிபர். இம்முறை அவர் கிண்டலடிக்கவில்லை. மாறாக வாலிபர் கேட்டது "மன்னிப்பு'

அன்பை வளர்க்கும் வழி-பாரதியார்

அன்பை வளர்க்கும் வழி

* ஏழைகளுக்கு வயிறு நிறைய அன்னம் இடுவது தான் மேலான தர்மம். அதை விடச் சிறந்தது ஏழை ஒருவன் கல்விகற்க வழிசெய்வது தான்.
* பிறர் சொத்தை அபகரிக்க மனதால் நினைப்பது கூட, திருடுவதற்குச் சமமானதாகும். அதற்குரிய தண்டனை மனிதன் மூலம் கிடைக்காவிட்டாலும், இயற்கை மூலம் கிடைத்தே தீரும்.
* தனக்கும், குடும்பத்திற்கும், நாட்டுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் வாழ்வதையே வாழ்வின் நோக்கமாக கொள்ளுங்கள்.
* மாற்றம் என்பது உலகநியதி. அதற்காக, அனைத்தையும் மாற்றிக் கொள்வதும் இயலாது. பொருள் பொதிந்த அம்சங்களை வைத்துக் கொண்டு. பயனில்லாத அம்சங்களை விட்டுவிடுங்கள்.
* மண்ணும், காற்றும், நீரும், நிலாவும், நம்மைச் சுற்றி வாழும் அனைத்து உயிர்களும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இயற்கையைத் தவிர வேறு தெய்வமில்லை.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அன்பு காட்ட வேண்டும். அன்பை வளர்க்கும் வழி இதுவே.
-பாரதியார்

உலக நெஞ்சக நாள் - world heart day

இருக்க வேண்டும் இரும்பு இதயம்: இன்று உலக இதயநாள்
தினமலர்


உடல் உறுப்புகளில் இருதயம் முக்கியமானது. இருதய துடிப்பு இருக்கும் வரை தான், உயிர் துடிப்பும் இருக்கும். உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை, இருதயம் செய்கிறது. இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளால், இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்.,29ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய்களில் 80 சதவீத மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை.
இதுவே அதிகம்:

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம். ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர். இதிலிருந்து இருதய நோயின் பாதிப்பு எந்தள உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்.

என்ன காரணம்:

முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, உழைப்பின்மை, நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. அதேபோல், உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்போர், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண்டுக்கு சிறுவர்கள் உட்பட 6 லட்சம் பேர், இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

மாரடைப்பை தடுப்பது எப்படி

* புகை பிடிப்பதை முற்றிலும் கை விடுங்கள். பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி செய்வதற்கு சமம். எனவே, முடிந்தளவுக்கு உடம்புக்கு வேலை கொடுங்கள்.
* உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் பயன்படுத்தாதீர்கள். இதனால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சைக்கிள் ஓட்டுவது நல்லது.
* இனிப்பு வகைகளை சாப்பிட விரும்பினால் சாக்லேட்டிற்கு பதிலாக, மாம்பழம் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
* பெரும்பாலான நேரங்களில், "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப் படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* "பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்புஅளிக்கின்றன.

ஊறுகாய் உற்பத்தியில் வெற்றி!

சொல்கிறார்கள்


"பிள்ளையார் சுழி போட்டுச்சு!' ஊறுகாய் தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ள மீனா: தேனி தான் எங்க ஊர். எங்க வீட்டுக்காரருக்கு, ஓட்டல்ல சப்ளையர் வேலை. ரெண்டு பிள்ளைக. குடும்பம் அவர் வருமானத்தை மட்டும் நம்பி, ஏனோ தானோன்னு ஓடுச்சு. எங்க பக்கத்து வீட்டுல இருந்த அம்மா ஒருத்தவுக, நான் போட்டுத் தந்த ஊறுகாய சாப்பிட்டதும், "உனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு; ஊறுகாய் போட்டே கூட பொழச்சுக்கலாம்'னு சொன்னாக. அந்த வார்த்தைங்கதேன், இந்த தொழிலை எடுத்துச் செய்ய, என் மனசுல பிள்ளையார் சுழி போட்டுச்சு! முதன்முதலா, நூறு பாட்டில் பூண்டு ஊறுகாய் போட்டு, "முனீஸ்வரன் ஊறுகாய்'ன்னு லேபிள் ஒட்டி, அக்கம் பக்கத்துல இருக்கறவுகளுக்கு கொடுத்தோம். வாங்குனவுக என்ன சொல்றாகனு கேட்டு, அடுத்து போடலாம்னு காத்திருந்தோம். ஒரு வாரத்துக்குள்ள, "சாப்பிடறதுக்கு எப்பவும் அடம் பிடிக்கற எங்க பிள்ளைக, உங்க ஊறுகாயால, இப்போ மறுசோறு கேக்குதுக... பெரியவுகளுக்கும், ருசி உச்சிக்கு ஏறுது'ன்னு ஒருத்தர் தப்பாம பாராட்ட, எங்களுக்கு சந்தோஷம் தாங்கல. அடுத்த தடவை, எலுமிச்சை ஊறுகாய் போட்டு, கடைகளுக்கு சப்ளை செய்தோம். எங்ககிட்ட ரொம்ப யோசிச்சு சரக்கு எடுத்த கடைக்காரர், "என்னம்மா, ஊறுகாயில ஏதும் மை ஒட்டி வெச்சிட்டீகளா? ஒங்க ஊறுகா பிச்சுக்கிட்டுப் போகுது'னு பாராட்டுனதோட, "உன் கைப் பக்குவத்துல, பிரண்டை ஊறுகா போட்டுக் கொடு... சூப்பரா போகும்'னு ஐடியாவும், ஆர்டரும் கொடுத்தாரு. பகல் முழுக்க சர்வர் வேலை, ராத்திரி ஊறுகாய் போடுறதுக்கு உதவி செய்யிறது, காலைல எட்டு மணி வரைக்கும் கடைகளுக்கு ஊறுகாய் சப்ளை செய்யிறதுன்னு, என்னோட சேர்ந்து உழைச்ச என் வீட்டுக்காரர், ஒரு கட்டத்துல, சர்வர் வேலையை விடுற அளவுக்கு, தொழில் முன்னேற்றம் கண்டது. தக்காளி, மாங்காய், எலுமிச்சை, பூண்டு, பிரண்டை, இஞ்சி, நார்த்தங்காய், மிளகாய் என்று, 14 வகையான ஊறுகாய்களை, மாதத்துக்கு, 1,000 முதல், 1,500 பாட்டில்கள் தயாரிக்கிறோம். தேனி, உசிலம்பட்டி மட்டுமல்லாது, கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், வியாபாரம் விரிந்திருக்கிறது. மாதம் கிட்டத்தட்ட, 15 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தீர்ப்பாய விசாரணை - வைகோவிடம் தடுமாறிய உளவுத்துறை

புலிகளால் ஆபத்து என்று எத்தனை வழக்குகள் – வைகோவின் கேள்விகளுக்கு த் தடுமாறிய உளவுத்துறை சுமன்.


இன்று காலை “விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடையாணையை எதிர்த்து சென்னை MRC நகரில் உள்ள ” இமேஜ் ஆடிடோரியத்தில்”( Image Auditorium) நடைபெற்ற தீர்ப்பாய விசாரணையில் வைகோ அவர்கள் பங்குபெற்று, உள்நாட்டு உளவுத்துறை இயக்குனர்.திரு.சுமன் அவர்கள் குறுக்கு விசாரணை செய்ய நீதிபதியிடம் அனுமதி கோரினார், இந்த கோரிக்கையை முதல் எதிர்த்த அரசு தரப்பு, நீதிபதி அவர்கள் திரு,வைகோ அவர்களின் கோரிக்கையினை ஏற்று திரு.சுமன் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தார்… நீதிபதி அவர்கள் இரு தரப்பினரையும் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணகளை முழுமையாக படித்து விட்டீர்களா என்று கேட்டார், திரு.வைகோ அவர்களும் எதிர் தரப்பினரும் “ஆம்” என்றனர்…
பிறகு வைகோ அவர்கள் உள்நாட்டு உளவுத்துறை இயக்குனர்.திரு.சுமன்அவர்களை விசாரிக்க தொடங்கினார்…. அவரிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் “இல்லை” என்றும், “என்னிடம் சரியான தகவல் தெரியவில்லை.அது நீதிபதி அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளது” என்றும் கூறி கொண்டிருந்தார்..( அந்த ஆவணம் இன்னும் எதிர் தரப்பிற்கு கொடுக்கப்படவில்லை.இறுதி விசாரணையின் போது கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது..)
வைகோ அவர்கள் கேட்ட சில கேள்விகளும் அதற்கு திரு.சுமன் அவர்கள் அளித்த பதில்களும்…
வைகோ கேள்வி: கடந்த 24 மாதங்களில், இந்தியாவில் விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ??
சுமன் பதில் : நிறைய வழக்குகள் இருக்கின்றது சரியாக தெரியவில்லை..
வைகோ கேள்வி: விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் உங்கள் கணக்கின் படி இந்தியாவில் எத்தனை உள்ளது??
சுமன் பதில் : நிறைய அமைப்புகள் உள்ளது… எண்ணிக்கை ஆவணங்களில் உள்ளது…. எனக்கு நியாபகமில்லை.
வைகோ கேள்வி: (மதிமுக தலைவர் என்ற முறையில் கேட்கிறேன் ) விடுதலை புலிகளின் ஆதரவு அமைப்புகள் பட்டியலில் மதிமுக-வும் உண்டா?
சுமன் பதில் : ஆம்.
வைகோ கேள்வி: விடுதலைபுலிகள் அமைப்புக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு என்று கூறுகிறீர்கள், அதற்க்கு தகுந்த ஆதாரமோ, ஏதேனும் வழக்குகளோ உண்டா??
சுமன் பதில்: அப்படி எதுவும் இல்லை…. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறும் மத்திய அரசின் வாதத்திற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்வாறு விசாரணை தொடர்ந்தது…. திரு.வைகோ அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் திரு.சுமன் அவர்களால் பதில் கூற முடியவில்லை, இதை கவனித்த நீதிபதி அவர்கள், திரு.சுமன் அவர்களிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணகளை முழுமையாக படிக்காமல் வந்துவிட்டது போல தெரிகிறது என்று கடிந்து கொண்டார்.. விவாதம் இவ்வாறு தொடர்ந்தது ..
நாளையும் நம் தலைவர் அவர்களின் குறுக்கு விசாரணை தொடரும்… இந்த “வரலாற்று சிறப்புமிக்க வழக்கு விசாரணையை” நேரில் காண வாருங்கள்….
தீர்பாயத்தின் விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு சென்னை MRC நகரில் உள்ள ” இமேஜ் ஆடிடோரியத்தில்”( Image Auditorium) நடைபெற உள்ளது … இந்த விசாரணையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர். வைகோ அவர்கள் பங்கேற்று தமது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கவுள்ளார்…

உலக வெறிநோய் ஒழிப்பு நாள் - world rabies day


வெ றி நோய்  அரக்கன்.
ரேபிஸ் என்ற அரக்கன்: இன்று உலக ரேபிஸ் தினம்

ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.

ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.

கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.

பழமையும் புதுமையும் இணைப்பே எங்கள் வெற்றி

சொல்கிறார்கள்
தரவு : தினமலர் 

"மிக்ஸ் அண்டு மேட்ச்' தான் எங்கள் வெற்றி! கைத்தறி ஆடைகள் மட்டுமே தயார் செய்து, இன்றைய பேஷன் உலகுக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கும் ஜெயஸ்ரீ: "ஊருக்கெல்லாம், வாண்டு மாமான்னு அறிமுகமான எங்க தாத்தா கிருஷ்ணமூர்த்தி, பக்கா காந்தியவாதி. "நம் பாரம்பரியம் அழிந்து விடக் கூடாது. அதற்கென்று தனிச்சிறப்பு உண்டு' ன்னு அடிக்கடி சொல்லும் தாத்தா, நாங்க சின்னக் குழந்தைகளா இருந்த போதே, எங்களுக்கு பாரம்பரியத்தையும், தேசிய உணர்வையும் ஊட்டினார். அந்த தாக்கத்தின் ஆழம் தான், சேலத்துல நாங்க நடத்துற, "சில்க் த்ரெட்ஸ் ÷ஷாரூம்' உருவாகறதுக்கு அடிப்படை! இந்த தலைமுறைப் பெண்கள், கைத்தறி ஆடைகளை அணியறதில்லைங்கிற வருத்தம், எங்களுக்கு உண்டு. இதனால, தறித் தொழில் செய்ற குடும்பங்கள் பல, முடங்குற ஆதங்கம் நிறைய உண்டு. இந்த நிலையை மாத்தி, கதர் ஆடைகளை மக்கள் விரும்பச் செய்ய, சில புதுமையான முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தோம். "கைத்தறியா... அது பாட்டி புடவை'ன்னு ஒதுக்கும் பெண்களுக்கு, அந்த புடவையில், நவீன, "ஹேண்ட் ஒர்க்' செய்து, "டிரெண்டியா' மாத்திக் கொடுத்தப்ப, "வா...வ்'ன்னு வரவேற்பு தந்தாங்க. "சில்க் த்ரட்ஸ் ÷ஷாரூம்' மூலமா, இப்போ உள்ளூரில் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கறதோட, நம் பாரம்பரியக் கலையையும், தொழிலையும் புதுப்பிக்கிற சந்தோஷமும் கிடைச்சுருக்கு. நெசவாளர்களை வைத்து புடவைகள் நெய்யச் செய்து, இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களிடம், அந்தப் புடவைகளைக் கொடுத்து, காய்கறிகள், பூக்களில் இருந்து கிடைக்குற இயற்கை வண்ணத்தை பயன்படுத்தி, சேலையை பாலில் நனைத்து, கையாலேயே வரையப்பட்ட டிசைன்கள் கொண்ட, "ஆர்ட் சாரீஸ்' தயாரிக்கிறோம். மகாராஷ்டிரா புடவையில், ஆந்திரா ஆர்ட் கலம்காரி டிசைன், காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் குஜராத் ராஜ்கோல் பட்டோலா மாடல், ஒடிசா காட்டன் புடவையில், சத்தீஸ்கர் பட்டு டிசைன் என, "மிக்ஸ் அண்ட் மேட்ச்' செய்து, புது வகையான மாடல்களை உருவாக்கித் தர்றோம்.

மருந்துச்சீட்டுகளில் தமிழ் எப்போது?

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பு வோருக்கான தொடர் சிகிச்சை நடைமுறைகள் மற்றும் அவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுவதால், பலர் புரியாமல் தவிக்கின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, தமிழில் அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, "டிஸ்சார்ஜ் சம்மரி' வழங்கப்படும்.
ஆங்கிலத்தில் அறிவுரை:


இதில், நோயாளி மருத்துவமனைக்கு வரும் போது இருந்த நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம், கொடுக்கப்பட்ட மருந்துகள், தற்போதைய உடல் நிலை பற்றிய விவரம், தொடர் சிகிச்சைக்கு உரிய அறிவுரை அல்லது, வீடு திரும்பிய பின் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை பற்றிய அறிவுரைகள் இருக்கும். இந்த குறிப்புகள் அனைத்தும், ஆங்கில மொழியில் எழுதி தரப்படுகிறது. நோயின் தன்மை, அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகிய விவரங்கள், மருத்துவர்களுக்கு தெரிந்தால் போதும் என்ற கருத்து உள்ளது. இவற்றை ஆங்கில மொழியில் எழுதுவதால் பிரச்னை ஒன்றும் இல்லை என, நோயாளிகளும் தெரிவிக்கின்றனர். ஆனால்,
சிகிச்சைக்கு பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை, நோயாளிக்கு கண்டிப்பாக புரிய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோர் பெரும்பாலும், ஆங்கிலம் அறியாதவர்கள் என்பதால், ஆங்கிலத்தில் அளிக்கப் படும் மருத்துவ அறிவுரையை புரிந்து கொள்வதில், அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு, அறிவுரைகள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்ட துண்டு சீட்டுகளாக வழங்கப்படுகிறது. இவற்றில், குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்; பாலூட்டுவதற்கான கால இடைவெளி; பாலுட்டும் நேரத்தில் உடல் பராமரிப்பு போன்ற முக்கிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆங்கிலத்தில் இருப்பதால், பெரும்பாலான பெண்களுக்கு பயனில்லாமல் போய்விடுகிறது.
இது குறித்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று திரும்பிய, சுமதி கூறியதாவது: ஏழைகள் தான் பெரும்பாலும் இங்கு வருகின்றனர். ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் இதில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஆலோசனைகளை தமிழில் அச்சடித்து கொடுத்தால், அதை படித்து தெரிந்து கொள்ளவும், அதை நடைமுறையில் பின்பற்றவும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு சுமதி கூறினார். மேலும், ""ஆங்கிலத்தில் அறிவுரைகள் இருப்பதால், அவற்றால் பயன்
Advertisement
இல்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது என்று மருத்துவமனை ஊழியர் களிடம் கேட்டால், திட்டு தான் விழும். தமிழில் விவரங்களை தரும் முறையை அரசு மருத்துவமனையில் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
"தமிழ் என்றால் சிரமம்':


நோயாளிகளுக்கான அறிவுரை களை தமிழில் வழங்குவது குறித்து, சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு, டிஸ்சார்ஜ் சம்மரியில், அவர்கள் விரும்பிக் கேட்டால் அறிவுரைகளை தமிழில் எழுதி கொடுக்கிறோம். இதற்காக, ஒரு ஸ்டெனோ பணியில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். மேலும், ""மற்ற எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. மருத்துவ தகவல்களை, தமிழில் எழுதி கொடுப்பது சற்று சிரமமான விஷயம். அரசு டிஸ்சார்ஜ் சம்மரி தாள்களை அச்சடித்து வழங்கும் போதே, அதை தமிழில் அச்சடித்தால், நடைமுறை மாற வாய்ப்பு உண்டு,'' என்றார். தமிழ், தமிழர், தமிழ் நாடு என, தவறாமல் முழங்கும் நமது அரசியல்வாதிகளின் கவனம், சற்று, பாக் ஜலசந்தியின் அப்புறத்தில் இருந்து இப்புறம் திரும்பினால், தமிழ் பிழைக்க, தமிழர் வாழ்வு மேம்பட வழிபிறக்கும்.
-  தினமலர்  செய்தியாளர்  -




சிறை செல்லும் சிங்கள இரத்னா இராம்

அச்சிடுக மின்-அஞ்சல்

 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2012 01:45
n-ram
இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த, இந்து ராம் மீது, தமிழக காவல்துறை கூட்டுச் சதி, அத்து மீறி நுழைதல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமி என்பவர் சேரன் என்டர்பிரைசஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து பத்திரிக்கையை நடத்தி வரும் கஸ்தூரி அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம், ஸ்போர்டிங் பாஸ்டைம் இன்டியா லிமிட்டெட் (எஸ்.பி.ஐ.எல்) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது.  இந்த எஸ்.பி.ஐ.எல் நிறுவனம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் 400 ஏக்கர் நிலத்தை சர்வதேச தரத்தில் கோல்ஃப் மைதானம் அமைப்பதற்காக வாங்குகிறது.  எஸ்பிஐஎல் நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  ஆண்டுதோறும், 3 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.  இந்நஷ்டம் தொடர்ந்து ஏற்பட்டதால் 24 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, இந்நிறுவனத்தை விற்க கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனம் முடிவெடுக்கிறது.
2004ம் ஆண்டு, கே.சி.பழனிச்சாமியின் சேரன் நிறுவனம், எஸ்.பி.ஐ.எல் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகிறது.  2004ல் இந்நிறுவனம் வாங்கப்படும் போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த 400 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 30 கோடி ரூபாய்.  2007ல் இந்நிலத்தின் மதிப்பு 300 கோடியாகிறது. 2007ல் திமுக பதவியேற்றவுடன், இந்து ராம், கருணாநிதியோடு காண்பித்த நெருக்கம் ஊரறிந்தது.   கருணாநிதியின் சொம்பாகவே ராம் மாறிப்போனார்.   இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, 2007ல் சேரன் நிறுவனத்திடமிருந்து 400 ஏக்கர் நிலத்தை 2004ல் வாங்கிய அதே விலைக்கு தருமாறு மிரட்டுகிறார்கள் சிங்கள ரத்னா ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர். 2005 முதல் சேரன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், ஃபேர் பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்துக்கும் சிவில் வழக்குகள் நடந்து வருகின்றன.
இதன் நடுவே சேரன் நிறுவனம் மீது குற்ற எண் 776/2007 என்ற எண்ணில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில், போலி ஆவணம் தயாரித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.  அந்த வழக்கின் விசாரணைக்காக மத்தியக் குற்றப்பிரிவு ஆய்வாளர் லாமெக் என்பவர் 25.02.2008 அன்று கோவையில் உள்ள சேரன் நிறுவன அலுவலகத்தில் சோதனையிட வருகிறார். அன்று சோதனை நடத்தியவர் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சோதனை நடத்தி விட்டு, எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று மகஜர் ஒன்றை தயாரித்து, சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவன கணக்காளர்கள் கருணாகரன் மற்றும் வினோத் குமார் ஆகியோரிடம் சாட்சிக் கையெழுத்துப் பெற்று விட்டு, சென்று விடுகிறார்.
அன்று மாலையே 5.30 மணிக்கு மீண்டும் அதே அலுவலகத்துக்கு இன்ஸ்பெக்டர் லாமெக் வருகிறார். இரண்டாவது முறை வருகையில் அவரோடு யூனிபார்ம் அணியாத நான்கு நபர்கள் வருகிறார்கள்.  அவர்கள் யார் என்று கேட்டால், வழக்கறிஞர்கள் என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.
வழக்கறிஞருக்கு போலீஸ் சோதனையில் என்ன வேலை என்று கேட்க முடியாமல் அந்நிறுவனத்தினர் திகைத்து நிற்கிறார்கள்.   இந்த லாமெக் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத, மற்ற விலை மதிப்புள்ள ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்கள்.  அவர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்களுக்கு எவ்வித பட்டியலும் தயாரிக்கப்படவில்லை. சோதனை என்ற பெயரில் இந்தக் கொள்ளை நடந்த பிறகு, விசாரித்தால், வழக்கறிஞர் என்ற போர்வையில் வந்த அந்த நபர்கள் இந்து நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அடியாட்கள் என்பது தெரிகிறது. இந்து நிறுவனம் இப்படி ரவுடித்தனத்தில் இறங்கியதற்கான காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த 400 ஏக்கர் நிலம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து எப்படியாவது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நிலம் எங்களுடையது என்று மோசடியாக வழக்கை ஜெயிப்பதற்காகத்தான்.
அந்த ஆவணங்கள் கிடைக்காததால் அவர்கள் அள்ளிச் சென்ற மற்ற ஆவணங்கள் என்ன தெரியுமா ?  ஃபேர்பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தோடு லண்டனில் உள்ள சர்வதேச கிரிக்கெட்  கவுன்சில் முன்பாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கான்ட்ராக்ட் தொடர்பாக நடக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள்.
இந்து நிறுவனத்தின் ரமேஷ் ரங்கராஜன் மற்றும் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்தின்  பால் ரிவெட் ஆகியோர்    அப்போது சென்னை மாநகர ஆணையாளராக இருந்த நாஞ்சில் குமரனை 13.12.2007 அன்று நேராகச் சந்தித்து, இரண்டரை மணி நேரம் எப்படி அசல் ஆவணங்களை கைப்பற்றுவது என்று விவாதித்தாக கே.சி.பழனிச்சாமி தன் புகாரில் தெரிவிக்கிறார். நாஞ்சில் குமரன் இரண்டரை மணி நேரம் இவர்களோடு விவாதிக்கிறார் என்றால் சும்மா விவாதித்திருப்பாரா… சென்னை மாநகரின் கமிஷனராக எப்படியாவது ஆகி விட வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் தவம் கிடப்பதன் பொருள் புரிகிறதா ?
Kumaran_1
நாஞ்சில் குமரன்
இந்த சட்டவிரோதச் சோதனையின் பின்னணியில் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணியிம் இருப்பதாக மனுதாரர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவுப் போலீசார், குற்ற எண் 85/2012ல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120-B, 457 மற்றும் 395 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.  இதில் 395 பிரிவுக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.
naFIR-85-of-2012_Page_1
FIR_85_of_2012_Page_2
FIR_85_of_2012_Page_3
FIR_85_of_2012_Page_4
FIR_85_of_2012_Page_5
FIR_85_of_2012_Page_7
இந்து ராம், என்று அழைக்கப்படும் நரசிம்மன் ராம், இந்தியா மட்டுமல்லாமல் உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ராம் ஒற்றை ஆளாகவே ராஜீவ் காந்தியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.  போபர்ஸ் ஊழல் வெளி வருவதற்கு இந்துவில் அப்போது பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் மற்றும் ராம் பெரிய அளவில் காரணமாக இருந்தார்கள். இந்து நாளேடு வெளியிட்ட போபர்ஸ் ஆவணங்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்தன.
இடது சாரி சிந்தனையாளராக பரவலாக அறியப்பட்ட ராமின் உண்மை முகம், இந்து பத்திரிக்கையை தொடர்ந்து கையகப்படுத்தி வைத்திருப்பதில் அவர் கையாண்ட தந்திரங்களின் மூலம் வெளியானது. ஒரு மிகப்பெரிய ஊழலை வெளிக் கொணர்ந்து எப்படி உலகப்புகழ் அடைந்தாரோ, அதே போல, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க சிறிதும் வெட்கமின்றிப் பணியாற்றினார் ராம்.
இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக தொடர்ந்து நீடிக்க, ராம் செய்த தந்திரங்களை அவரது சொந்த சகோதரர் என் ரவி எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை அவர் வார்த்தையிலேயே பாருங்கள்.
When I had proposed 65 as the age of retirement for a Director from any active role, it was with a view to ensuring a smooth succession at the top leadership of the company and of the newspaper while giving professionally qualified younger family members an opportunity to move to the top most echeleons. That suggestion was accepted by all concerned including the Editor-in-Chief who convened an informal meeting of all the five editorial directors on the same day i.e., 25th September 2009. An editorial succession plan was also agreed upon as follows: N. Ram to step down from any active role on May 4, 2010 and N. Ravi who had been the Editor between 1991-2003 would take over as Editor-in-Chief; Malini Parthasarathy would become Editor of The Hindu, Nirmala Lakshman would become Editor of the Sunday Magazine, features  and Frontline and K.Venugopal, the Editor of Businessline. Ram confirmed his commitment to retire and also this succession plan to me not once but twice shortly after. When everyone took his word at face value and in good faith, in the month of February 2010, he reneged on his commitment to retire to my utter shock and dismay.
That act of breach of faith triggered a whole series of unsavoury events which have taken an ugly turn and which are all now in the public domain.
பதவி விலகுகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய மோசடிப் பேர்விழி என்று ராமை அவர் சொந்த சகோதரரே கூறுகிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராமின் அயோக்கியத்தனங்களை மேலும் வெளிப்படுத்துகிறார் ரவி.
In my book, the two major blots on the journalistic record of The Hindu over the last forty years relate to its stand on the Emergency that was in force between June 1975 and March 1977 and on the largest scam in the history of independent India, the 2G scam. Under it’s then Editor, G.Kasturi, The Hindu disgracefully extended tacit support to and even collaborated with the Emergency regime. On the 2G scam, under the Editor-in-Chief N. Ram, The Hindu shamefully acted as an apologist and mouthpiece of the prime accused A.Raja. It had only muted coverage of the 2G scam. While The Hindueditorially asked for the resignations of Ashok Chavan, Suresh Kalmadi and B.S.Yeddyyurappa, there was not even a whisper about A.Raja’s resignation. On the other hand, two obliging interviews of A.Raja were specially arranged to be done, not by the Correspondent covering telecom, but shockingly by R.K.Radhakrishnan who used to cover matters relating to DMK. After A.Raja’s resignation and arrest, a change in stance reflecting a shameless and seamless U-turn is all too obvious even for a school kid to miss.
இதற்கு பதிலளித்து என் ராம் விளக்கம் அளிக்கிறார்.   இந்த விளக்கத்திற்கு பதிலளித்த சகோதரர் ரவி கூறுவதைப் பாருங்கள்.
Dear Ram,
The Hindu of April 23, 2011 carried on Page 15 of the Chennai edition your refutation of a report that was not carried in The Hindu.  Fairness demands that you publish my account of the issue of the coverage of A. Raja relating to the Telecom licences and 2G spectrum allocation that is given below:
At the meeting of the Board of directors of Kasturi and Sons in January, I had specifically raised the issue of the biased coverage of the 2G spectrum scandal.  While Raja was in office, even as evidence was mounting and there were widespread calls for his resignation, The Hindu did not demand his resignation. On the other hand, it functioned as an apologist for Raja and even on the day of his resignation carried an interview with him on the front page, with the transcript published inside. In this interview as well as the one on May 22, 2010, there were no hard questions but only the obvious ones designed to elicit ready, scripted answers. The entire coverage up to the point of his resignation was tailored to make him look good.
This unexplained softness towards Raja contrasted sharply with the coverage and editorial stand on other scams including those relating to the Commonwealth Games, Adarsh Society and land allotment in Karnataka.  In those instances, The Hindu was quick to demand the resignations of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa even at a stage when the evidence was far less compelling than the material that was in the public domain on the 2G scam before Raja resigned. All the editorial outrage was reserved for the period after Raja’s resignation.
With regard to the advertisement that was published in The Hindu of May 22, 2010 along with his interview on the front page with the full transcript inside, records in the Central Government, particularly in the Ministry of Telecommunications relating to the clearance of this particular advertisement and of some others would go to establish by whom and how this advertisement was cleared.  Of all the newspapers that are said to have carried the advertisement, only The Hindu published a friendly interview and not the others. People in the media are aware that promotional advertisements of this type unrelated to any occasion or to any specific announcements are issued as much as rewards to the media as for publicity for the Minister. The Minister’s intention to hugely reward The Hindu that had been so friendly to him in its coverage was obvious. Publication in other newspapers was just a cover, it would have been untenable for any Ministry to have issued an advertisement to just one newspaper.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாள்தோறும் வட இந்திய ஊடகங்களில் குறிப்பாக தி பயனீரில் ஆதாரங்கள் குவிந்த வண்ணம் இருந்தபோது, அந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்தது இந்து.  இந்து நாளேடு, நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கறாராக இருந்து வந்தது.  இந்த காரணத்தாலேயே, இந்து நாளேடு பார்ப்பன நாளேடு என்ற பொருளில், கருணாநிதி இந்துவை மவுன்ட் ரோடு மகா விஷ்ணு என்று அழைப்பார். ஆனால், அவர் மகளை மட்டும் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்தார் என்பது வேறு கதை.
அப்படி இருந்த இந்து, ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைத்ததோடு அல்லாமல், அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஆ.ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் பேட்டியை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிட்டது.  ‘It's institutional aberration that needs intervention'.
அந்தப் பேட்டியை எடுத்தவர் இந்துவின் நீண்ட நாளைய மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்பவர். இவரை பத்திரிக்கையாளர் என்பதை விட, கருணாநிதியின் ப்ரோக்கர் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும்.  கருணாநிதியின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என்று சொல்லிக் கொள்வதில் இவருக்கு அலாதிப் பெருமை.  இந்து நாளேட்டில், தொலைத் தொடர்புத் துறைக்கென்று தனியான செய்தியாளர் இருக்கையில், இந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் பேட்டியை எடுத்து வெளியிட்டார் என்.ராம்.   அந்தப் பேட்டி வெளியான ஒரு சில நாட்களிலேயே மத்திய தொலைத் தொடர்புத் துறையின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான விளம்பரங்கள், இந்து நாளேட்டில் வெளி வந்தன.  இந்தச் செயலைச் செய்ததன் மூலம், ஒரு உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளராக அறியப்பட்ட ராம், பத்திரிக்கைத் துறையின் வேசியாக மாறினார்.
rkcrop
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
2ஜி ஊழலில் ராசா தவறே செய்யவில்லை என்பது போல, ராசா மன்மோகன் சிங்குக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எழுதிய கடிதங்களை ஒரு முழுப்பக்கத்துக்கு வெளியிட்டு ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்.ராம்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி செய்த அத்தனை ஊழல்களையும், மறைத்து, அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் ராம்.  கருணாநிதிக்கு அவ்வப்போது நடக்கும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வது, அவர் எடுக்கும் திட்டங்களைப் பாராட்டி செய்தி வெளியிடுவது என, ஏறக்குறைய ஆங்கில முரசொலியாகவே இந்துவை மாற்றினார் என்.ராம்.
இவற்றையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் ராமின் சிங்கள சார்பை ஒரு நாளும் மன்னிக்க முடியாது.  இலங்கைத் தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில், ராம் சிங்களக் கைக்கூலியாகவே செயல்பட்டார் என்றால் அது மிகைச் சொல் அல்ல.
நினைவு தெரிந்த நாள் முதலாகவே, என்.ராம், சிங்கள சார்பாகவே செயல்பட்டார்.  அவரின் “சிறப்பான சேவையை” பாராட்டியே, இலங்கை அரசு, ராமுக்கு லங்கா ரத்னா விருது வழங்கி 2005ம் ஆண்டு கவுரவித்தது.  இந்த விருது, இந்தியாவின் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத் தக்கது.  இப்படி தொடர்ந்து தனது சிங்கள ஆதரவு நிலையை கடைபிடித்து வந்த ராம், இலங்கையில் அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்ட போது கூட சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நிலைபாடு எடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
2005111517191402
2010ல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பேட்டியை வெளியிட்டார் ராம்.  N. Ram interviews Sri Lanka's President Mahinda Rajapaksa அந்தப் பேட்டியை எடுத்த ராம், இலங்கை அரசின் இனப் படுகொலையை மறைப்பதற்காகவே இப்படிப்பட்ட ஒரு பேட்டியை வெளியிட்டார் என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு தலைச் சிறந்த பத்திரிக்கையாளரான ராம், ராஜபக்ஷேவின் ஊதுகுழலாக செயல்பட்டார் என்று ரெட்டிஃப் இணையதளம் செய்தி வெளியிட்டது.
ஒருவர் தீவிரமான புலிகள் எதிர்ப்பாளராகவே இருக்கட்டும்.  விடுதலைப் புலிகள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கட்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதர் கூட, சிங்களப் படைகளின் படுகொலைகளை நியாயப்படுத்த முடியுமா ?  அந்தத் தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாகி கையிழந்து, காலிழந்து தவித்ததைக் கண்டு மனிதனாக உள்ள யாருக்காவது மனம் பொறுக்குமா ?
3
11 மே 2009 அன்று பிபிசியும், இந்து நாளேடும் வெளியிட்ட செய்திகளில் வேறுபாடுகள்
ஆனால் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி, ராஜபக்ஷேவின் செய்தித் தொடர்பாளராகவே செயல்பட்டார் என்.ராம்.  போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்ததன் மூலம், ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் ஆதர்சமாக இருந்த ராம், எப்படி இருக்கக் கூடாது என்ற முன்னுதாரணமாக மாறிப் போனது சோகமான உண்மை.   பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்கிறார் வள்ளுவர்.  தன் செயல்களால் இழிவான சிறுமையில் வீழ்ந்து விட்டார் ராம்.
400 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக, ரவுடிகளைப் பயன்படுத்தி ஆவணங்களைக் கொள்ளையடித்த குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருக்கும் என்.ராமுக்கு சிறிதாவது மனசாட்சி இருக்குமென்றால், தற்போது இந்து பத்திரிக்கை தொடங்கியிருக்கும், The Hindu Centre for Politics and Public Policy என்ற அமைப்பின் நிர்வாகக் குழுவிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.  தொலைக்காட்சிகளில் தோன்றி பத்திரிக்கை உலக ஜாம்பவான் போல நடிப்பதை நிறுத்த வேண்டும்.
இலங்கையில் அல்லலுற்ற மக்கள், தமிழரல்லாதவராகவே இருக்கட்டும்.  ஒரு மக்கள் கூட்டமே, ஒரு இனமே அழிக்கப்படுகையில், அழிப்பவனுக்கு ஆதரவாக நிலையெடுத்ததன் மூலம், ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் தகுதியை மட்டுமல்ல….  ஒரு உணர்வுள்ள மனிதன் என்ற தகுதியையே இழந்து விட்டார் ராம்.  அந்த மக்கள் இட்ட சாபம் வயிரெறிந்து விட்ட சாபமல்லவா ?
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்,  பெரும் செல்வத்தையே தேய்க்கும் படையல்லவா ?