சனி, 9 ஜூலை, 2011

193- ஆவது நாடாகத் தெற்குச் சூடான் இன்று உதயம்

கிண்டலாக எழுதி உள்ளார். இன்று ௧௯௩ ஆவது நாடு தெற்குச் சூடான். நாளை ௧௦௪ ஆவது நாடு தமிழ் ஈழம்.  ௨௩ ஆண்டுகள் போராட்டத்தில் வாகை சூடிய தெற்குச் சூடான் போல் ௫௦ ஆண்டுகளாகப் போராடும் தமிழ்  ஈழம் விடுதலையாகாத காரணம்  இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்சித்தலைமைக்குக் கொத்தடிமைகளாக உள்ள மக்களுமே! இந்த நிலை விரைவில் மாறித் தமிழ் ஈழம் மலரட்டும்! வளரட்டு்ம்! தழைத்தோங்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஜுபா, ஜூலை 9-
 
ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என கோரி கடந்த 20 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
 
அதை தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில் சூடானை 2 ஆக பிரித்து தெற்கு சூடான் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதை தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு இன்று உதயமாகிறது.
 
இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193-வது நாடாகும். மேலும் அது ஆப்பிரிக்கா கண்டத்தின் 54-வது நாடு என்ற பெருமையை பெறுகிறது. தெற்கு சூடானின் தலை நகராக ஜுபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
புதிய நாடாக உதயமாவதை தொடர்ந்து இன்று அங்கு சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது. வாண வேடிக்கையுடன் வண்ணமயாக கொண்டாடப்படும் இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பங்கேற்கிறார். அதற்காக அவர் தெற்கு சூடானுக்கு புறப்பட்டு சென்றார். 
 
கருத்து
Saturday, July 09,2011 02:00 PM, தமிழர் விடுதலை இயக்கம் said:
தெற்கு சூடான் மக்களுக்கு எமது உளங்கனிந்த சுதந்திரநாள் வாழ்த்துக்கள் - தமிழர் விடுதலை இயக்கம்
Saturday, July 09,2011 01:59 PM, Malar said:
எங்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றும் தேவையில்லை. இப்போ இருக்கிற அமைதியான, சமாதானமான ஸ்ரீலங்காவே போதும்.
On Saturday, July 09,2011 02:22 PM, Ilakkuvanar Thiruvalluvan said :
கிண்டலாக எழுதி உள்ளார். இன்று ௧௯௩ ஆவது நாடு தெற்குச் சூடான். நாளை ௧௦௪ ஆவது நாடு தமிழ் ஈழம். ௨௩ ஆண்டுகள் போராட்டத்தில் வாகை சூடிய தெற்குச் சூடான் போல் ௫௦ ஆண்டுகளாகப் போராடும் தமிழ் ஈழம் விடுதலையாகாத காரணம் இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்சித்தலைமைக்குக் கொத்தடிமைகளாக உள்ள மக்களுமே! இந்த நிலை விரைவில் மாறித் தமிழ் ஈழம் மலரட்டும்! வளரட்டு்ம்! தழைத்தோங்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Saturday, July 09,2011 01:13 PM, ramesh said:
இதைபோலவே தமிழ் ஈழம் உருவாகநும்
 

changing the name of West Bengal: மேற்கு வங்கப் பெயர் மாற்றம்: மார்க்சியப் பொதுவுடைமைஆதரவு

வங்கம் என்றால்  வளைவு எனப் பொருள். அதனால்தான் கையில் அணியும் வளைவான அணிகலனுக்கு வங்கி எனப் பெயர் வந்தது. வங்கம் என்பது வளைவைத் தொடர்ந்து வளைவான நீர்ப்பகுதியையும் அடுத்து நீர்ப்பகுதியில் மோதும்அலையையும் அடுத்து அலைகடலில் செல்வதற்கு அமைக்கப்பட்ட வளைவான கலனான கப்பலையும் குறித்தது. வளைவான கடலோரம் அஃதாவது வங்கக்கடலோரம் அமைந்த நிலத்திற்கு வங்கம் எனப் பெயரிட்டனர் பழந்தமிழர்கள். காளிக்கோட்டம் கல்கத்தா என்றானது போல் தமிழர் நிலமாகிய வங்கம் பின்னர் பங்கம் என்றும் வங்காளம் பங்காளம் என்றும் ஆகிப் பெங்கால் என்றானது. எனவே, ஒருகாலத்தில் இன்றைய இந்தியப் பகுதி முழுமையும் தமிழ் நிலமாக இரு்நதது என்பதை அடுத்து வரும் தலைமுறையினரும் உணரும் வகையில் வங்கம் எனப் பெயரிடுவது உதவியாக அமையும். (ஆனால் பெயரிடுவோர் நோக்கம் அதுவல்ல) 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மேற்கு வங்கப் பெயர் மாற்றம்: மார்க்சிஸ்ட் ஆதரவு

First Published : 09 Jul 2011 03:33:28 AM IST


கொல்கத்தா, ஜூலை 8: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளதற்கு அங்குள்ள பிரதான எதிர்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சூரியகாந்த மிஸ்ரா "மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியின் போதே மாநிலப் பெயர் மாற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எப்படி மாற்றலாம் என்று சில பெயர்கள் கூட ஆலோசிக்கப்பட்டன. ஆனால் முடிவெடுக்கப்பட முடியவில்லை' என்றார். அம்மாநிலத்தின் பல்வேறு தரப்பினரும் மம்தா பானர்ஜியின் இம்முயற்சியை வரவேற்றுள்ளனர்.வங்கம், வங்க தேசம், வங்காளம், வங்கப் பிரதேசம் உள்ளிட்ட சில பெயர்கள் புதிய பெயருக்கான பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  "வங்கம் என்பது மேற்கு வங்க மாநிலத்திலிருந்த ஒரு பழங்கால அரசாகும். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் வங்கம் என்ற பெயரைப் பார்க்க முடியும்' என்று பல தரப்பினர் கூறுகின்றனர். "ஆங்கில அகர வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் கடைசிப் பகுதியாக வருவதால் அனைத்து மாநிலங்களுக்கான விவாதங்களின் போது மற்ற மாநிலத்தவர் அனைவரும் பேசிய பிறகே மேற்கு வங்கத்த்துக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் ஆங்கில அகர வரிசையில் முதலில் வருகிற வகையில் மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும்' என்று அங்குள்ள பல அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.  "வங்க மாநிலத்தின் கிழக்குப் பகுதி வங்க தேசமாகத் தனியாகப் பிரிந்த பிறகு வங்க மாநிலத்தை மேற்கு வங்கம் என்று அழைப்பதில் அர்த்தமில்லை' என்று சில வரலாற்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

3 idiots - dinamalar photo

Singapore president about Bose: போசு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் சிங்கப்பூர் அதிபர்

நேதாஜி பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் சிங்கப்பூர் அதிபர்

First Published : 07 Jul 2011 01:15:42 AM IST


சிங்கப்பூர், ஜூலை 6: இந்தியாவின் மறைந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை சிங்கப்பூர் அதிபர் வெளியிட்டு அவரைப் பற்றி நினைவுகூர்ந்தார்.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், நேதாஜியின் உறவினருமான சுகதோ போஸ் எழுதிய நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.  அப்போது அவர் நேதாஜியைப் பற்றி நினைவுகூர்ந்தார். 1940-களில் நேதாஜி ஆற்றிய உரைகள்தான் பிரிட்டிஷார் பற்றிய உண்மையான தோற்றத்தை தனக்கு உணர்த்தியது என்று நாதன் குறிப்பிட்டார். அவரது உரையைக் கேட்ட நாளிலிருந்து இன்று வரை தான் அப்போது எடுத்த நிலைபாட்டையே கடைபிடிப்பதாகவும் அவர் கூறினார்.  மேலும் நேதாஜியின் உரைகளே தனக்கு முதல் அரசியல் பாடமாக அமைந்தது என்று குறிப்பிட்ட நாதன், இந்தியாவில் ஆட்சி புரிந்தபோது பிரிட்டிஷார் கொடூரமாக நடந்து கொண்ட விதம் பற்றி நேதாஜி விவரித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.  நேதாஜி ஆசியாவைச் சேர்ந்த முக்கியமான தேசியவாதி என்றும், ஒருமுகச் சிந்தனையாளர் என்றும் நாதன் நேதாஜியைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு பற்றியும் அவர் விவரித்தார். 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் வந்த நேதாஜி, நாடு கடந்த இந்திய விடுதலைப் போரட்டத்தை அரசியல்ரீதியாக அங்கு வாழும் மக்களிடம் கொண்டு சென்ற விதம் பற்றியும் நினைவுகூர்ந்தார்.  "பேரரசரின் எதிர்ப்பாளர்கள்:சுபாஷ் சந்திர போஸýம், பேரரசுக்கு எதிரான இந்தியப் போராட்டமும்' என்ற 388 பக்கமுள்ள நேதாஜி பற்றிய புத்தகத்தை ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பிரசுரம் வெளியிட்டுள்ளது.  1897-ம் ஆண்டு ஒரிசாவில் பிறந்த நேதாஜி பிரிட்டிஷ் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேறினார். பின்னர் தேசப்பற்றினால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டபோது சாதுர்யமாக தப்பி 1943-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு இந்திய தேசிய ராணுவத்தை புனரமைத்து விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தார். நாடு விடுதலையடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1945-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் மறைந்தார்.
கருத்துகள்

நேரு குடும்பம் முற்றில்லுமாக நல்ல பல தலைவர்களின் உண்மைகளை மறைத்து விட்டன. சிங்கபூருக்கு நன்றி.
By நசீ, canada
7/7/2011 4:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

channel 4 news about genocide: இலங்கைப் படையினர் செய்த சித்திரவதைக் காணொளி ; செய்தி அலைவரிசை ( சேனல் 4 )விளக்கம்

உண்மையை எத்தனை நாளைக்குத்தான் மறைக்க முடியும் எனக் கருதுகிறார்கள் வஞ்சகர்கள்? உண்மை இப்பொழுது சுடத் தொடங்கியுள்ளது. விரைவில் கயவர்களை அழிக்கும்.தமிழ் ஈழம் மலரும்.                   அதன்பின் எந்த நாட்டிலும் இனப்படுகொலை என்பதற்கே இடமில்லாத சூழல் உருவாகும். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை ராணுவத்தின் சித்திரவதை விடியோ: சேனல் 4 விளக்கம்

First Published : 09 Jul 2011 03:19:27 AM IST


லண்டன், ஜூலை 8: விடுதலைப் புலிகளுடனான உச்ச கட்ட போரின்போது பிடிபட்டவர்களை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்வது போன்ற விடியோ பதிவுகள் அனைத்தும் உண்மையானவையே என்று சேனல் 4 தொலைக்காட்சி விளக்கமளித்திருக்கிறது.  இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதுபற்றி ஐ.நா. அமைத்த நிபுணர் குழு, போரின்போது இனப்படுகொலைக்கு நிகரான குற்றங்களை இலங்கை ராணுவம் செய்திருப்பதாகக் கூறியது.  போரின்போது செல்போன்களில் எடுக்கப்பட்ட விடியோ, புகைப்பட ஆதாரங்கள் அவ்வப்போது இணையதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன. லண்டனில் இருந்து வெளியாகும் சேனல்-4 தொலைக்காட்சி, இலங்கைப் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை, சம்பந்தப்பட்ட விடியோ ஆதாரங்களுடன் ஒளிபரப்பி வருகிறது.  அண்மையில் "இலங்கையின் கொலைக் களங்கள்' என்கிற தலைப்பில் இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. பிடிபட்ட ஒருவரை கத்தியால் உடல் முழுவதும் குத்தி நீண்ட நேரம் சித்திரவதை செய்து, பின்னர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொல்லும் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் காட்சி அதில் இடம்பெற்றது.  நூற்றுக்கணக்கான உடல்களை வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்க அதைச் சுற்றி ராணுவ வீரர்கள் நின்று எக்காளமிடும் காட்சியும், சித்திரவதைகளாலும், கொத்துக் குண்டுகளாலும் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் காட்சிகளும் ரத்தத்தை உறையச் செய்கின்றன.  சேனல்-4 வெளியிட்ட இந்த விடியோ பதிவுகளை இந்தியாவின் முக்கிய ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன. இதனால் இலங்கை அரசுமீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கை மேலும் வலுத்திருக்கிறது.  இந்த நிலையில், இந்த விடியோ பதிவுகள் அனைத்தும் போலியானவை என்றும், இவற்றை வெளியிட்டுவரும் சேனல்-4 தொலைக்காட்சி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இலங்கை அரசு மிரட்டி வருகிறது.  ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சேனல்-4 மறுத்திருக்கிறது. விடியோக்கள் அனைத்தும் பாரபட்சமற்ற முறையில் சரிபார்க்கப்பட்டு உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சேனல்-4 செய்தித் தொடர்பாளர் மரியோ பென்ட்லி தெரிவித்திருக்கிறார்.  இப்போது வெளியாகியிருக்கும் ஆவணப்படத்தில் காட்டப்பட்ட விடியோக்கள் அனைத்தும் முன்னரே வெளியான விடியோக்களின் தொடர்ச்சிதான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், போரின்போது இலங்கை ராணுவம் வீசிய குண்டுகள் மருத்துவமனைகள் மீது விழுந்திருக்கலாம் என்று அதிபர் ராஜபட்சவின் ஆலோசகரே ஒப்புக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல்: கருணா

தான் இன்னும் இராசபக்சேவின் அடிமைதான். எனவே, தன் உயிரைப் பறிக்க வேண்டா என அவருக்கு நினைவூட்டுகிறார் போலும்.  பாணாந்துறைக் கோயிலைப்பற்றிக் கூறுகிறாரே, தமிழ்க்கோயில்கள் எல்லாம் புத்த விகாரையாக மாற்றப்படும் எனச் சிங்களத் தளபதி அறிவித்து அதன்படி அவை இடிக்கப்பட்டனவே! அவை பற்றி ஏன் ஒன்றும் கூறவில்லை. இந்துக்களையெல்லாம் கொடூரமான முறையில் அழித்துவிட்டு யாருக்காக இந்து புத்த அமைதி (சமாதானம்) எனப் பேசுகிறார். அறம் வெல்லும் பொழுது கருணாவை அழிவில் இருந்து மீட்க யாராலும் இயலாது. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல்: கருணா
First Published : 08 Jul 2011 02:28:57 PM IST

Last Updated : 08 Jul 2011 02:46:36 PM IST

கொழும்பு, ஜூலை.8: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை நடத்தி வருகிறது என இலங்கை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா தெரிவித்துள்ளார்.கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் இலங்கை அதிபர் ராஜபட்ச பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கிழக்கிலும் ராஜபட்சவின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைச்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபட்சவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று உள்ளதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில் வடக்கில் புத்த விகாரை ஒன்று இருப்பதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்து – புத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.அரந்தாலா, தலதா மாளிகை மற்றும் பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேவையென்றால் அரசினால் விடியோ தொகுப்பு ஒன்றை தயாரிக்க முடியும் என்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தில்லியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையைப்  போர்க்குற்றம் எனச் சுருக்குவதும் தமிழ் ஈழ அரசிற்கு ஏற்பளிப்பது குறித்துக் கூறாததும் ஈழத்தமிழர்களின் இன்னல்களையும் அடிமை நிலையையும் புரிந்து கொள்ளாமல் போராடுவதைக் காட்டுகின்றது. எனினும் இந்த அளவிலாவது தில்லியில் பிறர் கவனத்தைக் கவரும் வண்ணம்  ஆர்ப்பாட்டம் நடத்தியதற்குப் பாராட்டுகள். தமிழர் வரலாற்றையும் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் புரிந்து கொண்டு தமிழ் ஈழ மலர்ச்சிக்கு அடுத்துப் போராடி வெற்றி காண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

First Published : 09 Jul 2011 01:45:19 AM IST


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
புது தில்லி, ஜூலை 8: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜூலை 8- ம் தேதி, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நாடுதழுவிய அளவில் கடைப்பிடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.  இதையொட்டி தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டி. ராஜா பேசியதாவது:  இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், ஜனநாயக உரிமைகள் கிடைக்கப்பெறவும், சிங்களரைப் போல தமிழர்களும் சரி சமமாக எல்லா உரிமைகளும் பெறவும் கடந்த 50 ஆண்டுகளாக நீண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அடுத்தடுத்து இலங்கையை ஆண்ட அரசுகள், தமிழர்கள் கோரிய உரிமைகளை வழங்காமல், வஞ்சகம் செய்தன. இது ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. பின்னர் நடந்த உச்சகட்ட போரில் சர்வதேச சட்டம், நெறிமுறைகளை மதிக்காமல் கொத்துக் குண்டுகளை வீசி 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான விடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் வேறெங்கும் நடக்காத போர்க்குற்றங்கள் இலங்கையில் நடந்தேறியுள்ளன. கடந்த 2009- ம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும், இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கைப் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காண வேண்டும். இதற்கு இந்தியா உதவிட வேண்டும். ராஜபட்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  தமிழக சட்டப் பேரவையில் ஜூன் 7- ம் தேதி நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வலியுறுத்தப்படும் என்றார் டி. ராஜா. இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. லிங்கம், துணைப் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, துணைச் செயலர் அமர்ஜித் கெüர், தில்லி மாநில செயலர் தினேஷ் வர்ஷ்னேய் உள்பட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

cartoon by mathi about dhayanithi maran, dinamani

வழுவான ஆதாரங்கள் என்றால் பிழையான, தவறான ஆதாரங்கள் எனப் பொருள். அப்படி என்றால் மதியின் கருத்திற்கிணங்க தயாநிதி மாறன் மீது பொய்யான சான்றுகள் அடிப்படையில்தான் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றாகிறது. இதற்குத் தாயநிதி மகிழலாம். வலுவான ஆதாரங்கள் என்றால்தான் வலிமையான சான்றுகள் எனப் பொருள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வெள்ளி, 8 ஜூலை, 2011

No share of power: தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு இல்லை: இலங்கை அரசு

எல்லாம் நல்லதற்கே! தமிழர் நிலத்தில் தமிழர்க்கு உரிமையில்லை என்பதை இறையாண்மை நடிகர்கள் புரிந்து கொள்ளட்டும்! வன்கொடுமைச் சிங்களத்தின் அடாவடித்தனததை மனச்சான்றுள்ள நாடுகள் புரிந்து  கொண்டு மண்ணின் மைந்தர்கள் மாண்புறத் திகழத் தமிழ் ஈழத்தை விரைவில்  ஏற்க வழி வகுக்கும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு இல்லை: இலங்கை அரசு

First Published : 08 Jul 2011 02:28:57 AM IST


கொழும்பு, ஜூலை 7: இலங்கையில் தமிழர்களுடன் எந்தவிதமான அரசியல் அதிகாரப் பகிர்வும் செய்து கொள்ளமாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதனால் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கும் அவலநிலை தொடரும் என்றே தெரிகிறது.இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, மூத்த அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா இது குறித்துப் பேசியது: இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் தமிழர் பிரச்னையைத் தீர்க்க, அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது. அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது. எனினும் தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பிரச்னைக்கு நல்ல தீர்வு காணப்படும். அரசியல் அதிகாரப் பகிர்வு திட்டத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டது இல்லை அவர்.

Prof.Dr.I.Maraimalai talk about Aachichuudi of Avvai: ஔவையின் ஆத்திசூடி- பேராசிரியர் இ.மறைமலை உரை: பிச்சினிக்காடு இளங்கோ வலைப்பதி

நாள்: 20.04.2011. இடம்: வாணிமகால், சென்னை.
தியாகபிரம்ம கான சபா,கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை கம்பன் கழகம் இணைந்து செய்த ஏற்பாடு.

சொற்பொழிவு ஆற்றியவர் முனைவர் மறைமலை இலக்குவனார்.

வெகுநாட்களாக எனக்குள் ஓர் ஆதங்கம் இருந்துகொண்டே இருந்தது. சின்னவயதில் அவ்வையின் ஆத்திசூடியைப் படித்திருந்தாலும் வயது ஆக ஆக அது அவ்வை பாடியது குழந்தைகளுக்கு அல்ல. அது முற்றிலும் பெரியோர்களுக்கே , அதாவது வயது வந்தவர்களுக்கேஎன்பதுதான். அண்மையில் சென்னையில் வாணிமகாலில் எண்ணெழுத்திகழேல்என்ற ஒற்றைத்தொடரைப்பற்றி முனைவர் மறைமலை இலக்குவனார் பேசியபோது தொடக்கத்திலேயே குறிப்பிட்டார் ஆத்திசூடிகுழந்தைகளுக்குப் பாடப்பட்டதல்ல என்றார்.
அண்மையில் நடைபெற்றிருக்கிற; நடைபெற்றுவருகிற நிகழ்வுகளைப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒன்றைப் பொருத்திப்பார்க்கலாம் என்றார்.
இராஜபக்சே யைப்பார்த்து ஈவது விலக்கேல்’, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பார்த்து அறம்செய விரும்பு’, இந்தியாவைப் பார்த்து இயல்வது கரவேல்’ , ஒபாமாவைப் பார்த்து ஆறுவது சினம்என்று சொன்னது போலவே இருக்கும் என்று தொடங்கினார்.
அவ்வையின் கருத்துகள் இப்பொழுதுதான் நாட்டுக்குத் தேவை என்றார். எனக்குள் இருந்த அந்த நீண்டநாள் ஆதங்கம் அப்பொழுதே அகன்றது. அவ்வையின் ஒரு சொற்றொடருக்கு ஒருமணி நேரத்துக்கும் மேலாகப் பேச முடியும் என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
டாக்டர் மறைமலை தம் பரந்த அறிவால்,பட்டறிவால், ஆழ்ந்த வாசிப்பால் பெற்ற சிந்தனைகளை மென்மையாக; தன்மையாக; உண்மை கலந்து ஊட்டினார்.
அவ்வையார் எத்தனைபேர் என்பதில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் ஆத்திசூடி பாடிய அவ்வை கி.பி.15-16 தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆனால், அதியமான் காலத்து அவ்வைதான் முதன்முதலில் போரைத் தடுத்த தூதர். அதுவும் பெண் தூதர் என்றார்.
செம்மொழிச் சிறப்புடைய எந்தச் செம்மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்குண்டு.அதாவது சங்ககாலத்திலேயே 43 பெண்பாற்புலவர்கள் பாடல் புனைந்திருக்கிறார்கள். இப்படி எடுத்துக்காட்டு எந்தமொழியிலும் இல்லை.தமிழுக்குத்தான் உண்டு என்று சுட்டினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார், மீள்வாசிப்பு, மறுவாசிப்பு என்ற பெயரில் தமிழுக்கு இழுக்கு ஏற்படுத்த பலர் பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.கணினிக்குப் பொருந்தாத தமிழ் என்று சீர்திருத்தம் செய்ய வந்ததையும், தமிழ் எழுத்துகளை மாற்ற வந்ததையும் வருத்தத்தோடு குறிப்பிட்டார். அப்படி நடந்த மாற்றத்தைச் சாடி தன்னுடைய இளவல் திருவள்ளுவர் கண்டித்து எழுதியதையும், அவ்வையார் கூற்றுப்படி எண்ணெழுத்திகழேல் என்று கண்டித்ததையும் எடுத்துசொல்லி,  ஒரு மொழியின் எழுத்தை இகழக்கூடாது .அது சட்டப்படி குற்றம் என்பதையும் குறிப்பிட்டார்.
சங்ககால அவ்வை அதியமான் இறந்தபோது பாடிய கையறுநிலைப்பாடல் மிகச்சிறப்புடைய பாடல். அந்தப் பாடலில் கள்என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது.கள் என்பது அந்தக் காலத்தில் காபி போன்றது என்றார். அதில் நகைச்சுவை மறைந்திருந்தது.  அதியமான் மீது பாய்ந்த வேல் விருந்தோம்பல் மீது பாய்ந்த வேல். கொடைமீது பாய்ந்தவேல் என்று அவ்வைக் குறிப்பிட்டதைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசு அதிகாரி ( போக்குவரவு துறை அதிகாரி) எட்டு என்று கூட்டு எண் வராமல் வாகனங்களுக்கு எண் வழங்க ஆணை பிறப்பித்தார். ஏனென்றால், அது சனியின் எண். மூடநம்பிக்கை இப்படி வளர்ந்த அவலத்தைப் பார்த்தும் எண்ணெழுத்திகழேல் என்றும் பாடியிருக்கலாம் என்றார் முனைவர்.
சைவ வைணவ மோதலைத் தடுக்கவும் அவ்வை எண்ணெழுத்திகழேல் என்று பாடியிருக்கலாம். எண் என்பது அறிவியல்தாய்.
எழுத்தென்பது மானுடவியல் .இலக்கணம் இல்லாமல் B.A. படிக்கும் நிலை அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க இந்தியாவிலிருந்து அதிகம் செல்கிறார்கள் என்ற செய்தியும் முனைவர் மறைமலையின் பேச்சின் ஊடே கிடைத்தது.
இந்தியாவில் ஆங்கிலம், அரபு  ஆதிக்கம் செலுத்தியபோது ஆங்கிலத்தை கோனெழுத்து என்றும், அரபைக் கோழி எழுத்து என்றும் கேலி பேசினார்கள். அவர்களைப் பார்த்தும் எண்ணெழுத்திகழேல் என்று பாடியிருக்கலாம்.
அவ்வையின் சிறப்பைப் பற்றி ஒரு கதை சொல்லப்பட்டது.
வடக்கேயும் அவ்வைக்கதை உண்டு. அங்கேயும் அவ்வையின் சிறப்பு பரவியிருக்கிறது என்று குறிப்பிடவந்த பேராசிரியர் ஒரு கதையின்வழி எடுத்துரைத்தார். அதாவது நாரதர்   ஐந்திரம் என்ற இலக்கணநூல் எழுதியதற்கு இந்திரனுக்குப் பரிசுதர முன்வருகிறார். அதற்கு இந்திரன் அதெப்படிச் சரியாகும். கலைமகளுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்கிறான். கலைமகளோ நான்முகனுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்கிறாள். நான்முகனோ திருமாலுக்கே செல்லவேண்டும் என்கிறான். திருமாலோ சக்தி இல்லாமல் எதுவும் இல்லை என்கிறார். பராசக்தியோ சிவம் இல்லாமல் சக்தியில்லை என்கிறாள். சிவனோ, அது குமரன் முருகனுக்கே உரியது என்கிறான்.முருகனோ விநாயகனுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்கிறார். விநாயகனோ என்னைப்பாடி பாட்டெழுதும் அவ்வைக்கே பரிசு என முடிவு செய்யப்படும் கதையை விளக்கி அவ்வையின் சிறப்பை எடுத்துக்கூறினார்.
எதுவும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கிறது என்பதைக் குறிக்கத்தான் இந்தக்கதையும்கூட. இதைத்தான் பாரதி அறிவொன்றே தெய்வம் என்றான்.அறிவு என்பது அறியாமையைச் சார்ந்தது. இது பற்றி இன்னும் விவாதிக்கவேண்டும். எந்தக் கூற்றையும் பேசுபவன், கேட்பவன், சூழ்நிலை வைத்தே முடிவு செய்யவேண்டும். அவ்வையின் எண்ணெழுத்திகழேல்’ என்ற கூற்றையும் இவை வைத்தே முடிவு செய்யவேண்டும். ஏனெனில் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஏற்பது இகழ்ச்சி என்று பாடியதற்கும் அப்படிக் காரணங்கள் உண்டு. நாட்டுப்பற்று உணர்வு குன்றியிருந்தகாலம். சமயப்பொறை தேவைப்பட்டது. அதனால்தான், போர்த்தொழில் புரியேல் என்று பாடியிருக்கவேண்டும்.
இப்படி மறைமலை இலக்குவனார் ஆழ்ந்த கருத்துகளை அமைதியாக நெஞ்சில் பதியவைத்தார்.
வாழும் கவிஞர்களை வாழும்போதே போற்றிவரும் பேராசிரியர் மறைமலை, மறைந்தும் மறையாது வாழும் அவ்வைப்பற்றி சிறப்புரை ஆற்றி அனைவரையும் சிந்திக்க வைத்தார். ஒரு சொற்றொடரை வைத்துக்கொண்டு ஒருமணி நேரமா? வியப்பாக இருந்தது.
கிருஷ்ணா சுவீட்ஸ் ஆதரவில் நடைபெற்றாலும் சுவையாகவும் பயனுடையதாகவும் அமைந்தது மறைமலை இலக்குவனாரின் பேச்சு.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம் .வீரப்பன் , இலக்கியவீதி இனியவன். புதுகைத்தென்றல் ஆசிரியர் தர்மராஜன், கவிஞர் மலர்மன்னன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது; மனமும் நிறைவடைந்தது.

BSNL announcement about the foreign missed calls: அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'

"அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'

First Published : 08 Jul 2011 03:07:47 AM IST


சென்னை, ஜூலை 7: அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களிருந்து வரும் "மிஸ்டு கால்களை' திரும்ப தொடர்பு கொள்ள வேண்டாமென வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டுள்ளது.  அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். செல்போனுக்கு +2392879106, +2392 879062, +2392879051, +2392879106 உள்ளிட்ட எண்களிலிருந்து மிஸ்டு கால் வருகிறது. இது சாவ் டோம் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடுகளிலிருந்து வரும் அழைப்பாகும். இந்த எண்களை திரும்ப அழைத்தால் வெளிநாட்டு எண்களை (ஐ.எஸ்.டி.) அழைப்பதற்கான பணம் எடுக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. எனவே அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களில் இருந்து "மிஸ்டு கால்' வந்தால் அதனை திரும்பத் தொடர்பு கொள்ள வேண்டாம்.

வியாழன், 7 ஜூலை, 2011

இனப் படு கொலை புரிந்த சிங்களக் காடைகளைத் தண்டிக்க வேண்டும் பொதுவுடைமைக் கட்சியின் போராட்டம் வெற்றி பெற வைகோ வாழ்த்து

கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் வெற்றி பெற வைகோ வாழ்த்து

First Published : 07 Jul 2011 12:35:37 PM IST

Last Updated : 07 Jul 2011 12:38:48 PM IST

சென்னை, ஜூலை.7: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 8-ம் தேதி மேற்கொள்ளவிருக்கும் அறப்போராட்டம் வெற்றிபெற மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தீவில் ஈழத் தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜ பட்சவையும் இப்படுகொலையில் ஈடுபட்ட கொடியோரையும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், இலங்கை அரசுக்குப் பொருளாதார தடை ஏற்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்திலும், இந்திய நாடெங்கிலும் ஜூலை 8-ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெறவும், போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்கள் ஆதரவு திரளவும் மதிமுக சார்பில்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

எல்லாத் தமிழர்களும் அவசியமாக July 8 -ல், நடத்தப் படவுள்ள போராட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும். இது இலங்கைத் தமிழர் வாழ்வுப் பிரச்சனை மட்டுமன்றி எல்லாத் தமிழர்களின் சுயமரியாதை, மானப் பிரச்சனையாகும்.ஈழத்தில் போர்க்குற்ற விசாரணைப் பற்றி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை, ஐ நா வில் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ள இலங்கைக்கு முழு ஆதரவுக் கொடுக்கும் என்றும் வெளியுறவு செயலர் நிருபாம ராவ் அறிவித்திருப்பது தமிழக சட்டச் சபையில் கொண்டுவந்த 2 தீர்மானங்களை அவமதிப்பதுப் போல் உள்ளது; இது அனாகரீகமான செயல்;மேலும் உலகிலுள்ள கோடானுக் கோடி தமிழர்களின் மனங்களை புண்படுத்துவதுமாக வுள்ளது; ஈழப் போரின் போது, இலங்கைக்கு இந்தியா செய்த ராணுவ உதவிகள், ஐ நா வில் இலங்கைக்கு கொடுத்த பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையில் இலங்கை விசயத்தில் இந்தியா மேற்கொண்ட நிலைப் பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை மூலம் உண்மையை சொல்லவைக்க வேண்டும்; போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்; இதன் மூலம் ஈழத்தில் தமிழர்களுக்கு மத்தியில் ஐ நா மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்;
By பழனிசாமி T
7/7/2011 2:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Scholar Sivathambi expired: மூத்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி காலமானார்

தமிழ் ஈழ ஆதரவு நிலையால் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனதுபோல் அந்த நிலையில் இருந்து திசை மாறியதால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்றவர். காலத்தின் கோலம் இவ்வாறிருப்பினும் சிறந்த  இலக்கியத்திறனாய்வாளர் என்ற முறையிலும் சங்கத்தமிழில் புலமை மிக்கவர் என்ற நிலையிலும்  இவரது மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில்  இரங்கலைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 
 
 
மூத்த தமிழறிஞர் 
கார்த்திகேசு சிவதம்பி காலமானார்

First Published : 07 Jul 2011 03:28:10 AM IST


சென்னை, ஜூலை 6: இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி (79) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.  அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர்.  1932-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் "பலதுறை சங்கம ஆய்வு' என்ற முறையில் அமைந்திருக்கும். பல அறிவுத் துறைகளின் துணைகொண்டு ஒரு கருத்தை நிறுவுவதில் வல்லவர்.  "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.  சென்னைப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.  கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது. இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்.  இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது, அமைதிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
கருத்துகள்

ஈழத் தமிழர்கள் ரத்த ​வெள்ளத்தில் மிதக்கும் ​போதும், தமிழச்சிகள் கூட்டுப் பாலியல் ​கொடு​மைக்குள்ளாக்கப்பட்டு பிணமாக்கப்பட்ட​போதும் தமிழ்த் தா​யை வாழ​வைக்கும் ​​பொருட்டு ​​கோ​வை ​செம்​மொழி மாநாட்டில் கலந்து ​கொண்டு, க​ருணாநிதி​ பரிவாரத்​தை வாழ்த்திய கார்த்தி​கேசு கருணாநிதி தம்பி மரணமுற்றதற்காக வருந்துகி​றேன். ஜனார்த்தனன்
By ஜனார்த்தனன்
7/7/2011 4:56:00 PM
பட் கீப் சிலேன்ட் ஒன முல்லிவைக்கள் படுகொலை ஜோஇன் ஹான்ட்ஸ் வித் அண்டி பாமில் போர்செஸ்
By க.vijayakumar
7/7/2011 11:07:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 10:11:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 8:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *