சனி, 18 டிசம்பர், 2010

we will meent in the court:kalaignar: சவாலை சந்திக்கத் தயார்: முதல்வர் கருணாநிதி

ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்றுதான் முதல்வர் கூறியிருப்பார். நீங்கள் சவாலைச் சந்திக்கத்  தயார் எனச செய்தி வெளியிட்டுள்ளீர்களே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


அமைச்சர் பதவி அளிக்கப் பணமா? ஆதாரத்தை வெளியிட்டால் சவாலை சந்திக்கத் தயார்: முதல்வர் கருணாநிதி


சென்னை, டிச. 17: ""பணம் பெற்றுக்கொண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் ரூ. 600 கோடி கொடுத்ததாக நீரா ராடியாவுடனான உரையாடலில் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்திகளும் பத்திரிகைகளில் வெளியாகின. இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இதுபோன்றதொரு செய்தி வந்தது. அதைப் பார்த்த நான், அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி அந்தச் செய்தியை மறுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.ஆனால், இந்தச் செய்தி சில பத்திரிகைகளில் வெளிவந்து அவை ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுகின்றன. இதனால், அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகிவிடுமோ என்பதால் அதை மறுத்திட விரும்புகிறேன்.அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?உண்மையிலேயே தயாநிதி மாறன் அமைச்சர் பதவிக்காக ரூ. 600 கோடி பணம் கொடுத்த செய்தியை நிரூபிக்கத் தயாரா? அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்' என்று அறிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

ready to help india-announcement by singhalam: புலிகள் அச்சுறுத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவத் தயார்: இலங்கை

எவ்வாறு பொய்களைக் கட்டவிழ்த்து விடுவது அவற்றை எவ்வாறு பரப்புவது என்பது குறித்தெல்லாம் சிங்களமும் இந்தியமும் கருத்து பரிமாறிக் கொள்வது எப்பொழுதும் நடக்கும்  ஒன்றுதான். ஆனால், இந்தியா படை உதவி கேட்டால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்பது இந்தியாவைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம். தமிழ் நாட்டு மக்களை நீயே கொல்வதை விட நாங்கள்  கொல்வது உனக்கு எளிது எனச் சொல்வதற்காக்வும் இருக்கலாம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்.ஐ அகற்றினால் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும். ஒற்றுமையும் நிலைக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புலிகள் அச்சுறுத்தல் விவகாரத்தில் 
இந்தியாவுக்கு உதவத் தயார்: இலங்கை

கொழும்பு, டிச.17: விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதுகுறித்து ரம்புக்வெலவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்

WELLSAID NAZEER MOHAMMED
By VEERA
12/17/2010 8:12:00 PM
wellsaid Nazeer
By Veera
12/17/2010 8:10:00 PM
தமிழினத்தை அழிக்க தமிழகத்துக்கும் சிங்களப் படையை அனுப்பலாம் என்ற திமிர் எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு இலங்கையின் ஈன அமைச்சர் கருத்து தெரிவித்திருக்கின்றான். தமிழினமே நீ, தமிழினத் தலைவனே..தங்கத் தாரகை அம்மாவே..மனித தெய்வம் எந்திரனே..திராவிடத் தெய்வம் விஜயகாந்தே..விஜயே..தலயே... என்றெல்லாம் பிதற்றித் திரிகிறாய். அன்பு உறவுகளே, நாம் தமிழர் என்னும் உணர்வோடு ஒன்றுபட்ட தமிழராய் தற்போதையச் சூழலில் செந்தமிழர் சீமானை நம்புவோம். ஆனால் யாரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். முத்துக்குமார் நம்பிய திருமாவளவன் கலைஞரிடம் கூழைக் கும்பிடு போடுகிறார். இராமதாசோ முழுமையான தன்னல வாதியாகயிருக்கிறார். மாவீரர் பழ.நெடுமாறன் முதுமையால் தற்போது முழுமையாக தமிழினத்துக்காக உழைக்க முடியா நிலையிலிருக்கிறார். எனவே தற்போதுள்ளச் சூழலில் சீமானையே நம்புவோம்.
By கு.காமராஜ்
12/17/2010 4:11:00 PM
நீ போத்திகிட்டு இரு அதுவே போதும்
By சிவா
12/17/2010 3:50:00 PM
சோனியா, கருணாநிதி மற்றும் ராஜபக்ஷே கூட்டு திட்டம்.
By ஆதவன்
12/17/2010 3:25:00 PM
கடைசியிலே கதை இப்படிப் போகுதா? ராணுவ உதவி கேட்டு நம்மைக் கெஞ்சிய காலம் போய் இப்போது இவர்கள் உதவி செய்கிறார்கலாமா?
By தன. குணசேகரன்
12/17/2010 3:07:00 PM
Sonia Gandhi and Rahul Gandhi are agents of Foreign agencies who want to destroy India.All Hindu community should awake,strive hard in pushing out these cowardous rajiv & soniya family
By Indian
12/17/2010 2:51:00 PM
Fact is Indian Army supported to Sri Lankan Army to destroy LTTE and lot of innocent Tamil Peoples in SriLanka. The Human viloation what extend have done at your end, it was already been disclosed in the videos through wikileaks. and also condemned by lot of countries. Now you are degrading indian army through giving such type of Statements.
By Seenu
12/17/2010 2:33:00 PM
அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு, விடுதலைப் புலிகளால் இரண்டு கிழட்டு அரசியல் வாதிகளுக்கு.................... என்று இந்திய உளவுத் துறையால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா? இதற்கு முன் இந்திய உளவுத் துறை வைகோவிற்காக் கருணாநிதியைக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று ரீல் விட்டார்கள், கிருஷ்ண ராஜ சாகர் அணையைத் தகர்க்கப் போகிறார்கள் என்று சொன்னார்கள், புருலியா ஆயுத மழையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்றார்கள், எவனோ ரயில் தண்டவாளத்தில் பட்டாசு விட்டதற்கெல்லாம் புலிகள் என்றார்கள், ஒரு வதந்தி மலரின் நிருபர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டதற்கும் அதயே சொன்னார்கள், தற்போது ஊடகங்கள் மூலமாக சிங்களன் செய்வதை விட இந்தியர்கள் தமிழர்கள் மீது அதிகம் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்தியச் சதியினால் இலங்கையில் இனி தமிழர்களே வாழ முடியாத சூழ்நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள் . அதை இப்போது இங்கேயும் நடத்த முற்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தயவு செய்து இந்தமாதிரியான பொய்ப் பிரச்சாரத்தை தினமணி நிறுத்திக்கொள்ள வேண்டு என்று கேட்ட
By Nazeer Mohammed
12/17/2010 2:05:00 PM
Soniya Gandhi and Rahul Gandhi are agents of Foreign agencies who want to destroy India.All Hindu community should awake,strive hard in pushing out these cowardous rajiv & soniya family ...இவர்ஹளுடன் சேர்ந்து மஞ்ச துண்டும் , சோடா கிளாஸ் சிதம்பரமும் ஸ்ரீலங்கன் கவர்மெண்டை தமிழ்நாடு வரை கொண்டு வருவனுங்கா
By Thamizhan
12/17/2010 1:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இலக்குவனார் விருது வழங்கும் விழா - நூற்றாண்டு நிறைவு விழா

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்
நூற்றாண்டு நிறைவு விழா
இலக்குவனார் விருது வழங்கும் விழா



..
.

இதைத் தங்களின் வலைகளில் இணைப்பதற்குக் கீழுள்ளதைப்

படி (copy) எடுத்துத் தங்கள் வலைகளில் இணைக்க வேண்டுகிறோம்





நன்றி


murdering thamizh in yaazhppaanam

யாள்ப்பாந பேரூந்திள் தமில் நள்ள நிளையிழ் விழையாடுது ( காணொழி)

yarlpaanam001
நாங்களும் எழுத்துப் பிழை விட்டுத்தான் சில செய்திகள் பிரசுரிக்கின்றோம்…. ஆனால் யாழ்ப்பாணப் பேருந்துகளிலும் பெயர்ப்பலகைகளிலும் தற்போது தமிழ் கொலை
}
இது உங்களுக்குப்பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் valaiyakam,tamilish,tamil10 திரட்டிகளில் உங்களின் ஓட்டினையும் இடவும்

ilangai attacked thamizh fisher men : தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்களைப் பறித்த இலங்கைக் கடற்படை

உங்கள் உயிர் போனாலும் எங்களுக்குக் கவலை இல்லை. மீன் பறிபோனதற்கா வருந்தப் போகிறோம். ஆனால் சிங்களவன் ஒருவனைப் பற்றிக்கூட ஏதும் சொன்னால் நாங்கள் பொறுக்க மாட்டோம். எச்சரிக்கை என்கிறது இந்தியம். இதை நம்புவோர் இன்னும் உளரே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்களைப் பறித்த இலங்கை கடற்படை


ராமேசுவரம், டிச. 16:       நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்து இறால் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறித்துச் சென்றனர். இதனால் ரூ. 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.   ராமேசுவரத்திலிருந்து இம் மாதம் 15-ம் தேதி சுமார் 650 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இப் படகுகளில் சென்றவர்கள் வழக்கம்போல் இந்திய, இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 7-க்கும் மேற்பட்ட போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அப்போது கரை நோக்கி திரும்பிய விசைப்படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர், 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த இறால் மீன்களைப் பறித்துக்கொண்டு, மீனவர்களை கயிறு, கம்பால் சரமாரியாகத் தாக்கினர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல், ராமேசுவரம் கரையை நோக்கித் திரும்பினர். இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்தால் ரூ. 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

owner of corruption : ஊழலுக்குக் காங்கிரசு துணை போகாது: தங்கபாலு

உண்மைதான். அடுத்தவர் ஊழலுக்குக் காங். என்றும் துணை நிற்காது. ஊழல் என்றால் அது காங்.கிற்கு மட்டுமே உரியது. அதில் பிறர் பங்கு போட இடம் தராது. காங்.கின் கட்டுப்பாட்டில் ஊழல் புரியலாமே தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை யில்லை. அன்றைக்கு நேரு முதல் இன்றைக்குச் சோனியா வரை  பெருங்கோடி ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் காங்.கினர்தானே தவிர வேறு யாரும் அல்லர் என்னும் பெருமைக்கு உரிய கட்சியைத் தன் உரிமையை அடுத்தவருக்குத்  தாரை வார்க்கும் கையாலாகத கட்சியாக விளக்குவதற்கு ஒரு போதும் இடம் தர மாட்டோம். கட்சியிலும் ஊழல் செய்தால்தான் பொறுப்புகள் பெற முடியும். உண்மையை உரைக்கும் தங்கபாலுவிற்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஊழலுக்கு காங்கிரஸ் துணை போகாது: தங்கபாலு

சென்னை, டிச. 16: ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துணை போகாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:காங்கிரஸ் ஊழலுக்கு எதிரான கட்சி. ஊழலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்டோர் ராஜிநாமா செய்துள்ளனர். அதுபோலவே 2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஆ. ராசாவும் மத்திய அமைச்சர் பதவியிவிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் தயாராக இருந்தும் பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியது கண்டிக்கத்தக்கது. எனவே எங்களுக்கு எதிராக ஊழலை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தாலும் மக்கள் மத்தியில் அது எடுபடாது.கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. மத்திய அரசு என்பது திமுகவையும் உள்ளடக்கியதுதான். மத்திய அரசுக்கு திமுக முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திரிவேதி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்தும் அதுதான் என்றார் தங்கபாலு.


jagath about raja : இராசா குற்றமற்றவர் என்று கூறவில்லை:செகத் கசுபர்


இவர் விடுதலைப்புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் வஞ்சகம்-துரோகம் செய்தவர். இப்பொழுது ஆ.இராசாவிற்கு வஞ்சகம் புரிகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய தொடர் ஓட்டம் ஒன்றில் எந்த முதலுதவியும் இல்லாமல் அதில் பங்கேற்ற ஒருவர் இறந்ததற்கே இவரைக் கொலைக்குற்றவாளியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தவறான வழிகாட்டிப் பலரைச் சிக்க வைக்கும் இவரது போக்கு நின்றிருக்கும்.  தமிழ் மைய கட்டாய நன்கொடைகளுக்காகவும் இவரைச் சிறையில் அடைக்க வேண்டும். சிறுபான்மையர் போர்வையில் சிறு நரிகள் தப்பிப்பதற்கு  உடன்படக்கூடாது. - இவ்வாறும்
ஒரு தரப்பினர் கருதுகின்றனர். 
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்




ராசா குற்றமற்றவர் என்று கூறவில்லை: ஜெகத் கஸ்பர்

சென்னை, டிச. 16: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றமற்றவர் என்று தாம் எப்போதும் கூறவில்லை என தமிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் கூறியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் இரண்டாவது முறையாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர்.சென்னையில் பத்திரிகையாளர் ஒருவருடைய வீட்டிலும், சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஜெகத் கஸ்பர் தலைமையிலான தமிழ் மையம் அலுவலகத்திலும் நேற்று சோதனை நடந்தது. இந்தச் சோதனைகள் குறித்து ஜகத் கஸ்பர் பத்திரிகையாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அதன் விவரம்ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்றோ ராசா குற்றமற்றவர் என்றோ நான் கூறவில்லை. அதைக் கூறுவதற்கான உரிமையோ அதிகாரமோ எனக்கு இல்லை. ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், அதுபற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர, விசாரணைக்கு முன்பாகவே ராசாவை குற்றவாளியைப் போல சித்தரிக்கும் ஊடகங்களின் போக்கைத்தான் நான் எதிர்த்தேன். சிறுபான்மையினருக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான சில சக்திகளின் சதியின் காரணமாகவே என்போன்றோர் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் சிபிஐ அமைப்பினர் நடத்திய சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினோம். அவர்களும் எங்களை மரியாதையுடன் நடத்தினார்கள்.தமிழ் மையம் அமைப்பு சென்னை மாரத்தான், சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றிருக்கிறது. அதன் ஒரு இயக்குனராக கனிமொழி எம்.பி. இருக்கிறார். அவருக்கும் தமிழ்மையம் அமைப்புக்கும் இடையிலான உறவு மதிப்பு மிக்கது. மற்றபடி 2ஜி விவகாரத்துக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2ஜி ஊழல் மூலம் கிடைத்த நிதி தமிழ் மையம் வழியாகத் திருப்பி விடப்பட்டது என்று கூறப்படுவதில் உண்மை இல்லை.தமிழ்மையம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான நிதி நன்கொடைகள் மூலமாகவே பெறப்படுகிறது. ரூ.1 கோடியை அடிப்படை உருவாக்க நிதியாகக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ரூ.40 லட்சம் செயல்பாட்டு நிதியாக கையிருப்பு உள்ளது. எந்தவிதமான அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி நாங்கள் நிதி திரட்டவில்லை. எங்களது கணக்கு வழக்குகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. பத்திரிகையாளர்கள் விரும்பினால், அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்

If you don't know whether Raja is corrupted or not, then you should be stand in your own leg instead of talking about religion and caste.
By Shai
12/16/2010 8:20:00 PM
Really appreciate your frank comments....
By SAM
12/16/2010 7:55:00 PM
He is conducting Tamil Centre along with Kanimoli. But his name is not in Tamil. In the name of this Centre they are earning more money by way of corruption in the 2G spectrum. They are deceiving the people of Tamil Nadu in the name of Tamil. These people should be investigated and should be given major punishment.
By M.Natrayan
12/16/2010 7:44:00 PM
HOPEFULLY JAYA ALSO CAN GIVE HER COMPLETE ACCOUNT SO AS TO PROVE THAT SHE IS INNOCENT!
By GOVIDACHARRY
12/16/2010 7:35:00 PM
இப்படித்தான் எல்லோரும் வெள்ளையாக பேசுவார்கள். இந்த பாதிரியார் ஒரு உளவாளி என்பது எல்லோருக்கும் தெரியும். திருட்டு பணத்தை யாரும் எல்லோருக்கும் தெரியவா வைத்திருப்பார்கள். உண்மைகள் உறங்குவதில்லை ஒருநாள் இந்த பாதிரியின் விளையாட்டு எல்லாம் வெளியே வரும்.
By முகேஷ் பாண்டியன்
12/16/2010 7:08:00 PM
ஜெகத் கஸ்பர் இப்போது மாற்றி சொல்லுகிறார். அன்று ராசா ஊழல் செய்யவில்லை என்ற மேடையில் பார்பனர்கள், ஆரியர்கள் ஒரு தலித்தை பற்றி புறம் பேசுகிறார்கள் என்று கூறி ஒரு ஊழலும் நடை பெற வில்லை என்றுதான் கூறினார். இப்போது ராசாவின் வீட்டில் இரு முறை ரெய்டு நடந்து, பின் இவரின் அலுவலகத்திலும் ரெய்டு நடந்தவுடன் மாற்றி பேசுகிறார். ஏன்? இவர் LTTE க்கு பொருள் திரட்டுபவராக்த்தான் இருந்தார். இப்போது பெரிய சிநேகம் கிடைத்தவுடன் தப்பிக்க வழிதேடி மாற்றி பேசுகிறார்.
By Tamilian
12/16/2010 7:05:00 PM
this guy jagat kasper broker of kottar diociese how to invested as capital 1 crore he has any source of income before starting the NGO nothing . 100% behind kanimozhi, kalaignar and stalin. withourt this people the idiot jagat kasper is zero. i know he is recommended the nursery college at chunkankadai with the help of kanimozhi anyway before 4 yrs back where is sangamam where is tamilmayam now they are developed with support of raja and kanimozhi and kalaigner. D.M.K VOLUNTER
By JOY
12/16/2010 6:22:00 PM
Excellent Statement. Any time people can verify the Accounts of this Association. I appreciate your statements. Can this type of statement give by DMK Party, Kalaizar, Stalin, Alagiri, Maran Brothers? And if media interested do they show this details of their property accounts (Atleast allow to take photo of their living place and their children's living place properties ????
By AlanMada
12/16/2010 5:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *