சனி, 25 செப்டம்பர், 2021

‘மகளிர் சிறப்பு’ இதழின் வெள்ளி விழா ஆண்டிற்குக் குவிகத்தின் பாராட்டு

 அகரமுதல


புரட்டாசி 10, 2052 / 26.09.2021 ஞாயிறு மாலை 6.30

‘மகளிர் சிறப்பு’ இதழின் வெள்ளி விழா ஆண்டிற்குப் பாராட்டு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  Zoom  Meeting ID: 6191579931 
கடவுச்சொல்  passcode kuvikam123 
அல்லது 
இணைப்பு    https://bit.ly/3wgJCib
youtube 
இணைப்பு
https://bit.ly/3v2Lb38

 



வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இரு நிகழ்வுகள்

 அகரமுதல




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

புரட்டாசி 09, 2052 / 25.09.2021 இரு நிகழ்வுகள்

 1. பொருநை நதி நாகரிகம் 

இந்தியத் தொல்லியல் வரலாற்றில் ஓர் எல்லைக்கல். இந்திய வரலாற்றில் 5000 ஆண்டு கால நாகரிகத்தின் தொடர்ச்சியைக் காட்டிய காலக் கண்ணாடி. அண்மையில் வெளிவந்த பொருநை நதி நாகரிகம் குறித்தும் , அதன் வரலாற்று இன்றியமையாமை குறித்தும்  தமிழகத் தொல்லியல் துறையின் கல்வி – ஆய்வு அறிவுரைஞர் பேராசிரியர் கா. இராசன் அவர்கள் விரிவாக விளக்க இருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் .

நாள்: செட்டம்பர் 25, சனிக்கிழமை காலை 10:00 மத்திய நேரம்

செட்டம்பர் 25, சனிக்கிழமை காலை 11:00 கிழக்கு நேரம்

செட்டம்பர் 25, சனிக்கிழமை காலை 8:00 மேற்கு நேரம்

செட்டம்பர் 25, சனிக்கிழமை மாலை 8:30 இந்திய நேரம்

இணைப்பு: https://www.tinyurl.com/fetna2020ik

கூட்ட எண்: 954 1812 2755

 

2. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தொன்மை – தொடக்கம்  –தொடர்ச்சி அணி

இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியின் புத்தகங்களை வாசித்து வருகிறோம். படைப்பாளிகளும், வாசகர்களும் என்ற தொடர் கூட்டங்களில் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

இம் மாதம் எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன் அவர்களின் படைப்புகளை வாசித்து வருகிறோம். வாசிப்பின் தொடர்ச்சியாக அவருடன் கலந்துரையாடலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களால் சென்ற வாரம் நடக்க இருந்த இந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்த வாரம் சனிக்கிழமை செட்டம்பர் 25 ஆம் நாளாகிய இன்று  நடக்க உள்ளது.

திரு.அழகிய பெரியவன், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளி. இவரது படைப்புகள் மிகவும் நுட்பமாக உழைக்கும் மக்களின் வாழ்வியலை முன்வைக்கின்றன. இவரது “தகப்பன் கொடி” புதினம் தமிழின் முதன்மையான புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. சிறுகதைகள், குறு ம் புதினங்கள் , கவிதைகள் எனத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் திரு. அழகிய பெரியவன் பெற்றுள்ளார்.

திரு.அழகிய பெரியவன் அவர்களின் நூல்கள் அமேசான் கிண்டில் புத்தகங்களாக கிடைக்கின்றன – https://tinyurl.com/AzhagiyaPeriyavan

அவருடன் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

அமெரிக்க நேரம்: சனிக்கிழமை, செட்டம்பர் 25, இரவு 8:30மணி EDT (கிழக்கு நேரம்)

இந்திய நேரம்: ஞாயிற்றுக்கிழமை, செட்டம்பர் 26, காலை 6மணி இந்திய நேரம்

அணுக்க(சூம்) நேரலை – Zoom Live

https://tinyurl.com/FeTNA2020ik

கூட்ட எண்  / Meeting ID : 954 1812 2755

அனைவரும் தவறாமல் இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்





வெள்ளி, 24 செப்டம்பர், 2021

கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுக உரை

 அகரமுதல

பைஃபிரான் (PhyFron) குழுவும்

கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை

 கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுகம்

 புரட்டாசி 08, 2052 வெள்ளி

24.09.2021 மாலை 5.30  – 7.00

அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a

உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும்.

 தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468

 



மின்னூல் உருவாக்குவது எப்படி? – உரை

 அகரமுதல


இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும்

கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும்இணைய உரை

 மின்னூல் உருவாக்குவது எப்படி?

புரட்டாசி 08, 2052

24.09.2021 நண்பகல் 12.15

இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt

 தொடர்புக்கு – .சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468



புதன், 22 செப்டம்பர், 2021

இரிக்கு வேதத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை! , 26.09.2021

அகரமுதல





தமிழே விழி!                                                                                        தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 10

இரிக்கு வேதத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை!

புரட்டாசி 10, 2052 / ஞாயிறு

காலை 10.00,  26.09.2021

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி சி.வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

எழுத்தாளர் அறிவுக்கரசு

புலவர் துரையரசி

நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்



 

எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’

 அகரமுதல


எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு

‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’

                 எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4,  கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித நூல் – 1, புதினம் – 2 என 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரைப்போலவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ள படைப்பாளர் கவிஞர் முருகேசன் இவரின் கணவராவார்.

அ.வெண்ணிலா குறித்து அறிய காண்க –

கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!



சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

 

அகரமுதல


 

சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவிற்குக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

கவிதைகளை அனுப்ப விரும்புவோர் கீழ்வரும் இணையத்தின் வழித் தங்களின் கவிதைகளை அனுப்பலாம்.

https://forms.gle/stabPG2ZXvJ6rphb8 

அல்லது niraikol2020@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் கவிதைகளை அனுப்பி வைக்கலாம். 

* நூலாக்கத்திற்கு 50 சிறந்த கவிதைகள் ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும்.

 * கவிதைகள் ஏ 4 தாளில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode) அமையபெற வேண்டும். 

* கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் புரட்டாசி 29, 2052 15.10.2021. 

மேலும் தொடர்புக்கு:

 முனைவர் அ. இளவரசி, 9790316763, முனைவர் இரெ. நல்லமுத்து 9445236477.