சனி, 12 அக்டோபர், 2013

பாலச்சந்திரனை இலங்கைப் படை சுட்டுக் கொன்றது:இதழாளர்கள் மாநாடு

பாலச்சந்திரனை இலங்கை இராணுவம்தான் சுட்டு க் கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் சுட்டு கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
கொழும்பு, அக். 12–
சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரையாற்றும் போது கூறியதாவது:–
2009 மே மாதம் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே, படுகொலை செய்தனர்.
போர் குற்றவாளிகளான இலங்கைப் படையினர் படுகொலைகளை நிறைவேற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது.
அண்மையில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ராணுவப் புலனாய்வு பிரிவு குறித்து அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்று கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலை தீவு, நேபால் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத்தமிழ் வரலாறு

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் ச் சரித்திரம்

Comment (3)   ·   print   ·   T+  
9
  • கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.
    கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.
  • அரவிந்த்
    அரவிந்த்
சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.
இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.
‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.
மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வழியில் தரமான இலவசக் கல்விக்கூடம்

தமிழ்வழியில் தரமான இலவசக் கல்விக்கூடம்

Comment (1)   ·   print   ·   T+  
சக்தி தமிழ்ப் பள்ளி குழந்தைகளுடன் காமராஜ் - காமாட்சி தம்பதி
சக்தி தமிழ்ப் பள்ளி குழந்தைகளுடன் காமராஜ் - காமாட்சி தம்பதி
ஒன்றிரண்டு வருடங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்களே அதன் வருமானத்தை பார்த்துவிட்டு, தாங்களே மெட்ரிக் பள்ளிகளை திறந்து கல்லாக்கட்ட நினைக்கும் இந்தக் காலத்தில் காமராஜ் - காமாட்சி தம்பதியர், தமிழ்வழிக் கல்விக்காக இலவச பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூரில்தான் கேட்கக் கிடைக்காத இந்த அபூர்வம்!
கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம் இப்போது மாவட்ட அளவில் பிரபலம். இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப் போட்டிக்கு போனாலும் பரிசுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம். இதனால் இப்போது, இவர்களை மற்ற பள்ளிகள் போட்டிக்கு அழைப்பதற்கே தயங்குகின்றனவாம். இப்படிப் பொறாமைப்படும் அளவுக்கு சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய பெருமை காமராஜ்- காமாட்சி தம்பதிக்கே சேரும்.
இன்று நேற்றல்ல.. கடந்த 19 வருடங்களாக சக்தி தமிழ் பள்ளிக் கூடத்தில் தமிழால் படிக்க வைக்கிறார்கள்- அதுவும் எவ்வித கட்டணமும் இல்லாமல். இது எப்படி சாத்தியமானது?
“எங்கப்பா வெங்கடாசலம், சுதந்திர போராட்ட தியாகி. இந்த தேசத்தின் மீதும் குடிசைவாழ் மக்கள் மீதும் எனக்கும் அக்கறை வந்ததற்கு அதுதான் காரணமா இருக்கணும். நாங்களும் ஏழைக் குடும்பம்தான். அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்லை. சாயப்பட்டறையில் பங்குதாரர். பத்தாம் வகுப்பு வரை படிச்சுட்டு, அப்பாவோட சாயப்பட்டறையிலேயே பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே பிளஸ் 2 படிச்சேன். வேலையில கிடைச்ச வருமானத்தை வைச்சு என் செலவுகளை சமாளிச்சிக்கிட்டேன்.
ஆனாலும், பளஸ் 2-க்கு மேல படிக்க எங்க குடும்ப வறுமை அனுமதிக்கல. அதனால, படிப்புக்கு டாட்டா காட்டிட்டு கேமராவை தூக்கினேன். வாடகைக்கு கேமராவை எடுத்து விழாக்களுக்கு போய் படம் எடுத்துக் குடுத்தேன். அதுலயும் ரொம்பநாள் நீடிக்கமுடியல. நானும் நண்பர்களும் சேர்ந்து டியூஷன் சென்டர் ஆரம்பிச்சோம். குறைவான கட்டணத்துல பிள்ளைங்களுக்கு பாடம் போதிச்சுக்கிட்டே தபாலில் முதுகலைப் பட்டம் வரைக்கும் வந்துட்டேன்.
நண்பர்கள் சிலபேரு டியூஷன் சென்டரை விட்டு கழண்டுட்டதால தொடர்ந்து சென்டரை நடத்த முடியல. அதனால, இங்கே இருக்கிற தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். நான் இந்த சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறதுக்கு அங்க கிடைச்ச அனுபவம்தான் மூலதனம்.
பிள்ளைங்கள பெத்தவங்க தங்களோட புள்ளைங்களும் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளியில சேர்த்தா நல்லபடியா அறிவை வளர்த்துக்குவாங்கன்னு நினைக்கிறதில்ல. ஆங்கிலம்கிறது ஒரு மொழிதான். நம்மாளுங்க அதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அதனால, சொத்துக்களை அடமானம் வைச்சாவது பிள்ளைங்கள ஆங்கில வழிப் பள்ளியில கொண்டாந்து தள்ளுறாங்க. பெத்தவங்களோட கட்டாயத்தால அந்தப் பள்ளிகள்ல சேர்ந்துட்டு குழந்தைகள் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்தேன். அதனாலதான் தமிழ்வழிப் பள்ளியை தொடங்குற எண்ணத்துக்கே வந்தேன்.
யாரா இருந்தாலும் தாய்மொழியில தான் சிறப்பா சிந்திக்க முடியும். அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இதைச் சொன்னா கிறுக்கன்னு கிண்டல் பேசுவாங்க. இருந்தாலும் பரவாயில்லைன்னு அசட்டுத் துணிச்சலோட இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்குனேன். 45 சென்ட் இடத்தை குத்தகைக்கு எடுத்து, சாதாரண கூரைக் கட்டிடத்துல தொடங்குனேன். ’காசு, பணம் கட்டவேண்டாம்; இலவசமாவே தமிழ்வழிக் கல்வி சொல்லித் தர்றோம்’னு நாங்க சொன்னதை நம்பி, முதல் வருசம் மூணு பிள் ளைங்கள கொண்டாந்து சேர்த்தாங்க. இப்ப எங்க பள்ளிக்கூடத்துல 120 பிள்ளைங்க தமிழில் படிக்கிறாங்க’’ தனது சாதனையை சொல்லிமுடித்தார் காமராஜ்
மற்ற பள்ளிகளைப் போல இங்கே சாதி, மதம் கேட்பதில்லை. பில் போட வசதியாக அப்பாவின் வருமானத்தைக் கேட்பதில்லை. படிப்போடு சேர்த்து, தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் இவற்றையும் குழந்தைகளுக்கு பக்குவமாய் புகட்டுகிறார்கள். இப்போது இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும் தனித் தேர்வர்களாக பரீட்சை எழுதும் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இங்கே பாடம் நடத்துகிறார்கள்.
இதில்லாமல், ஆதரவற்ற மாணவ, மாணவியர் 25 பேரை இங்கே தங்கவைத்து அறிவை வளர்க்கும் அசத்தலான காரியத்தையும் செய்கிறார் இந்த நவீன கர்மவீரர். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகளையும் இங்கே பார்க்கமுடிகிறது புளிமூட்டை கணக்காய் அடைத்துத் திணித்து வைக்காமல், வகுப்புக்கு 15 பேர் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவது இயல்பில் இல்லாத சிறப்பு.
“பிள்ளைங்கட்ட ஃபீஸ் எதுவும் வாங்குறதில்லை. நண்பர்கள், நன்கொடையாளர்கள் குடுக்குற நிதியை வைச்சுத்தான் பள்ளிக்கூடம் நடக்குது. இங்கிருக்கிற ஆசிரியர்களுக்கு, கம்மி சம்பளம்தான். ஆனாலும், அர்ப்பணிப்பு உணர்வோட பணிக்கு வர்றாங்க. அவங்களோட குழந்தைகளையும் எங்க பள்ளிக்கூடத்துலேயே படிக்க வைச்சிருக்காங்க. இங்கிருக்கிற ஒரு ஆசிரியர் சம்பளம் வாங்காமலேயே பணி செய்கிறார். எங்க மகள் கணினி காந்தியும் இங்கேதான் படிக்கிறா’’ என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியரும் காமராஜின் மனைவியுமான எம்.ஃபில்., பி.எட்., படித்த காமாட்சி
தொடர்ந்து பேசிய காமராஜ், “கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம், கூரைக்கட்டிடத்துல பள்ளியை நடத்த முடியல. ஒருவருஷம் பக்கத்துல வாடகை கட்டிடத்துல நடத்திக்கிட்டே, பழைய ஓடுகளை நன்கொடையா கேட்டு வாங்கி கூரையை ஓட்டுக் கட்டிடமா மாத்திட்டோம். எங்க பள்ளிக்கூடம் சிறப்பா செயல்படுறத பாத்துட்டு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கிட்டு வர்றாங்க. இன்னும் ஒரே ஒரு காரியம் செய்யவேண்டி இருக்கு. இங்க வர்ற குழந்தைகளுக்கு சத்துணவு குடுக்கணும். அரசாங்கத்துலருந்து அதை மட்டும் செஞ்சு குடுத்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்’’ என்று கைகூப்பினார்.

Kidding a genocide affected nation

Kidding a genocide affected nation

[TamilNet, Friday, 11 October 2013, 20:58 GMT]
NPC Chief Minister CV Wigneswaran, who claims that he has been installed in the position by the grace of India, and the TNA Parliamentary Group Leader R. Sampanthan, were ‘crowned’ at the end of the oath-taking ceremony for the NPC members, held in Jaffna on Friday. Wigneswaran, in addition, was handed over with a spear of God Murukan. In the beginning of the ceremony, the NPC members declined to wear even traditional garlands. Tamil public in Jaffna viewed the new ‘culture’ surfacing with Wigneswaran polity as obnoxious when the solution-path he is showing is hollow, non-descript and simulated by the very forces that were in complicity with the genocide, media circles in Jaffna said.

Wigneswaran was commenting on the ‘ego’ of the LTTE just in January this year.



Wigneswaran
Sampanthan crowned


The crowning episode on Friday took place only a few minutes after the following address by Sritharan MP from Ki'linochchi:



 










Chronology:

New Delhi poses new challenge to Tamils

New Delhi poses new challenge to Tamils

[TamilNet, Friday, 11 October 2013, 18:57 GMT]
NPC Chief Minister Mr C.V. Wigneswaran has to be profusely thanked and appreciated by Tamils for his honesty in conceding that he is not a natural leader of Eezham Tamils representing their aspirations, but a planted one by New Delhi to implement the 13th Amendment. Wigneswaran’s revelation and his efforts to muffle voices in Tamil Nadu and in the diaspora have to be understood in the background of what M.K. Narayanan had told the TNA in May 2009 that, “we know better what is good for Tamils.” New Delhi simulating a leadership for the political surrender of the Tamil cause poses new challenge to Tamils all over the world, writes an activist for alternative politics in Jaffna.

Talking to Indian media in Jaffna on Tuesday, Wigneswaran said: "Not that India brought me in but India, in an indirect way, was instrumental in allowing the provincial council elections to take place after 25 years."

He also added: “I am here because India almost had a hand in the elections being held when the (Sri Lankan) government as saying we are not going to have it or we are going to crap the 13th amendment and so on."

Tamils can do well with the implementation of the 13th Amendment and the LLRC recommendations, is the position of New Delhi and Washington that were in complicity with Colombo in the genocidal war.

Both the models are just confirmation of structural genocide and annihilation of the nation of Eezham Tamils and their territoriality in the island, when vested in the hands of the historically proven genocidial State in Colombo, is the assessment of Eezham Tamils, whose experience on this matter predates the formation of the New Delhi Establishment and the emergence of Washington as a super power.

Preparing for his entry into politics designed by the powers, Wigneswaran made his maiden speech of the current series at Vaddukkoaddai YMHA on the Pongkal Day, on 14 January this year.

In his speech, comparing the law and order situation between the LTTE times and the SL occupation times, he hinted at the difference between people under their own rule and an occupation rule.

Interestingly, Wigneswaran has also said in that meeting that, “a careful scrutiny would show how some one among us was there operating and still operating, behind every wrong committed by outsiders.”

We should build unity and an internal mechanism so that our people don’t turn into pimps and servants of outsiders, Wigneswaran further said in that meeting in January this year. He was meaning the occupying forces as ‘outsiders’.

He also was talking in that meeting about ‘ego’ [he used the Saiva Siddhantha terminology Aa’navam in Tamil] and indirectly targeted his attack on the LTTE, saying that we should think of what had happened to our youth who had been so powerful just a while before, and added that “who ever dance to their ego [Aa’navam] had to reap the consequences.

How the intellectual prowess or ego of the former Justice is now used to pimp ‘outsiders’, how it is used to cowardly interpret and hijack a popular vote to surrender the cause and self-respect of a nation that had not been surrendered by the LTTE even at the point of life and death, and how the intellectual ego that looks upon the masters now overstep in an unwarranted way to the extent of ridiculing and silencing voices of the kith and kin in the diaspora and in Tamil Nadu, are well known through Mr Wigneswaran’s own words.

The attack on Tamil Nadu for supporting the cause of Eezham Tamils has first come in recent times from genocidal Sri Lanka’s former military commander Sarath Fonseksa, then from Gotabhaya and KP, and now it comes from the intellectual ego of Wigneswaran, while Indian intelligence operatives are known for their view of considering Tamil Nadu polity as an impediment to their designs.

Meanwhile, Mr. Wigneswaran’s Sampanthi (son’s father-in-law] Mr Vasudeva Nanayakara, denouncing ‘extremists’ among both the Sinhalese and Tamils, and accusing them for unknowingly contributing to each other, has been quoted by media this week with an extremist statement that if Tamils take up arms again the answer [of the Sinhala State] will be the same as what the LTTE had been served with.

Tamils in their civilization cannot stop without getting an international answer of justice for the crime committed on their nation.

The world has not so far given an answer to those who have committed the genocide, commit genocide, those who participate in such Establishments, those who don’t shun genocide for their geopolitical greed, those who have global responsibilities but back the culprits in the State Establishments, those who have the responsibility for the region of South Asia but have brought in the first ever large-scale genocide into the region and those who now try to deny everything, shield everything and try to impose a hoodwink as solution which is nothing but continuity and confirmation of the crime.

New Delhi is in the forefront in this exercise and thus poses a new challenge to Tamils all over the world.

Last time when the New Delhi hoodwink came up the LTTE was there to effectively meet the challenge.

Wigneswaran has now allowed himself to be used by those who try to pre-empt any effective challenge coming from Tamil Nadu and the diaspora.

The intellectual ego of some among Tamils, ignoring righteous sentiments and necessities of the masses, failing them is not new to Tamils.

Colombo-centric media has already started hinting at the prospects of trained elephants taming wild elephants in making Jaffna to have no qualms about becoming another Colombo and Trincomalee.

Naturally there is simmering anger on the Wigneswaran-Sampanthan-Sumanthiran trio among the Tamil public in the island, in Tamil Nadu and in the diaspora.

But, a well-known adage in Tamil says that one should not blame the arrow but the bowman.

Unless Tamils everywhere are not prepared to address the struggle directly at New Delhi and Washington, Wigneswaran & Co cannot be course-corrected. Tamils also should be careful in not allowing the sentiments of discontentment to get hijacked by unbefitting elements.

The CHOGM in Colombo and the Geneva sessions in March may be some opportunities. But people of Tamil Nadu will be getting a solid chance around next May to make it a condition that their support is for only those who could conduct an investigation within India itself against those who were responsible for the genocide committed and being committed on the nation of Eezham Tamils.

Chronology:

பார்வை இழந்தும் ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்''

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_824830.jpg

இரு கண்ணிலும் பார்வை இழந்தும் ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்''

கூடலூர்: முதுமலை முகாமில், இரு கண்ணிலும் பார்வை இழந்த, கும்கி யானை ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்'' உலா வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில், மூன்று யானைகள் சமீபத்தில் திருவண்ணாமலையில் பிடிக்கப்பட்டவை. இவைகளில், இரு கண்களிலும் தற்போது பார்வை இன்றி, "ஹாயாக' உலா வரும் கும்கி யானை இந்தர், 61, என்ற யானைக்கு பல தனித்துவமான சிறப்புகள் உண்டு. 1960 அக்டோபர் மாதம் சுமார் 8 வயது குட்டியாக பொள்ளாச்சியில் பிடிக்கப்பட்ட இந்தர், முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, கும்கி பயிற்சி வழங்கப்பட்டது. சிறந்த கும்கி யானை இந்தர், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் வரும் யானைகள் விரட்டுவதில் ஈடுபட்டுள்ளது. மற்ற யானைகளுக்கு கும்கி பயிற்சியும் அளித்துள்ளது. பல கோவில் திருவிழாக்களில் பங்கெடுத்துள்ள இந்தர், பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளது. சிறந்த கும்கியான இருந்த இந்த யானைக்கு, இரு கண்ணிலும் பார்வை போனது. இதனால் கும்கிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டது. கண்களில் பார்வை இழந்தாலும், உள்ளத்தில் நம்பிக்கை இழக்காத இந்தர், பகலில் உணவுக்காக பாகனுடன், வனப்பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட, தனக்கான அனைத்து பணிகளையும் தானே செய்து வருகிறது. அதேபோல, உணவு நேரங்களில் யாரின் துணையும் இன்றி, தனது உணவை எடுத்து உண்கிறது. எந்த சுற்றுலா பயணிகளையோ, ஆதிவாசிகளையோ தவறி கூட தாக்கியதில்லை. தனக்கே உரித்தான பாதையில் இன்றுவரை பயணிக்கிறது. இந்தரை கவனித்து வரும் பாகன்கள் கூறுகையில், "கண்ணிந்த இந்தருக்கு தெய்வம் தான் இதுவரை துணையாக நின்று வழி நடத்தி செல்கிறார்; இல்லையெனில், எல்லா பணிகளையும் சரியாக செய்ய முடியாது. அதேபோல, இந்தருக்கு முதுமலையின் அனைத்து பாதைகளும் அத்துப்படி' என, பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

திறமையை மெய்ப்பிக்க வேண்டும்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82470620131012001756.jpg
திறமையை மெய்ப்பிக்க வேண்டும்!

'நாடோடி வாழ்க்கை' எனத் தவறாக க் கிண்டலடிக்கப்படும், 'மார்க்கெட்டிங்' துறையில் சாதித்த, கீத்து வர்மா
: என் அம்மா, பள்ளி படிப்போடு நின்று விட்டதால், என்னை, 'பிசினஸ் மேனேஜ்மென்ட்' வரை படிக்க வைத்தார். எம்.பி.ஏ., முடித்திருந்தாலும், எனக்கு முதலில் கிடைத்தது, 'பீல்டு ஜாப்' எனும் களப்பணி தான். ஆனாலும், மனம் தளராமல் கடுமையாக உழைத்தேன். 'யுனிலிவர்' நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்த டீ துாளை, மக்களிடையே விளம்பரப்படுத்த, 40, 50 நபர்களுடன், ஊர் ஊராக, வீடு வீடாக சென்று, இலவச சாம்பிள் டீத்துாள் பாக்கெட்டுகளை கொடுத்தேன். பின், அடுத்த நாள் அதே வீடுகளுக்கு சென்று, 'டீத்துாள் எப்படி இருந்தது?' என, கருத்து கேட்டு, டீத்துாளை பணத்திற்கு விற்று, மார்க்கெட்டிங் செய்தேன்.
திருமணம் ஆன பின்னும், கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளை பிரிந்து, வேலை நிமித்தம் தினமும், ஊர் ஊராக அலைய வேண்டியிருந்தது. எவ்வித சொந்த ஆசாபாசங்களுக்கு இடமில்லாமல், கடுமையாக உழைத்ததால், யூனிலிவர் நிறுவனத்தின், 'எக்சிக்யூட்டிவ் டைரக்டர்' பொறுப்பு கிடைத்தது. திடீரென்று ஒரு நாள், 'பெப்சிகோ' நிறுவனத்தில், மிகப் பெரிய பொறுப்புடன், வேலை கிடைத்தது. 'உன் உயரம் உனக்கே தெரியவில்லை. உன் திறமையை நிரூபிக்க, இந்த வேலை நிச்சயம் உதவும்' என, கணவரும் ஊக்கப்படுத்தினார். ஏனெனில், முன்பு பார்த்த வேலையை விட, இங்கு பன்மடங்கு உழைக்க வேண்டியிருந்தது. என் மூத்த மகள், 10ம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை. ஒரு தாயாக, மகளின் படிப்பில் கவனம் செலுத்த, பெப்சிகோ பணியை ராஜினாமா செய்து, மகளை நன்றாக படிக்க வைத்து, வெற்றி பெற வைத்தேன். ஆண்களை விட, பெண்களுக்கு தான் குடும்பமா, வேலையா என்ற குழப்பமான சூழ்நிலை
எழுகிறது. என் திறமையை அறிந்த யூனிலிவர், மறுபடியும் பணிக்கு அழைத்தது. ஒவ்வொரு படிகளையும் தாண்டி தான், எட்ட வேண்டிய இலக்குகளை எட்டினேன். நான் முன்னேறிய ஒவ்வொரு அடியும், பல சறுக்கல்களுக்கு பின் எடுத்து வைத்த அடிகள் தான்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

தமிழில்நடைபெற்ற செம்மொழிவிருது விழா - தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு

' தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு ' என்னும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்க்காப்புக்கழகம் மூலம் செம்மொழி விருதுகள் விழா தமிழில் நடத்தப் பெற வேண்டும் எனத் 'தமிழக அரசியல்' இதழ்  முதலான ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தொடர்ந்து செம்மொழி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தமிழில் நடத்திவிட்டுப்பிற மொழியில் விழா நடத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டது.  செம்மொழி நிறுவன இயக்குநர் திருவாட்டி பூமா, பதிவாளர் முனைவர் முத்துவேல், பொறுப்பு அலுவர் முனைவர் இராமசாமி ஆகியோர் தொடர் நடவடிக்கை எடுத்தனர். குடியரசுத்தலைவர் மாளிகையிலும் வேண்டுதலின் அறநிலையைப் புரிந்து கொண்டனர். அதன்படி தமிழில் விருதுகள் குறிப்பு முதலில் தெரிவிக்கப்பட்டதும் தமிழுக்கு உரிய இடம் தந்ததும் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.  தொடர்புடைய அனைவருக்கும் செய்தியை வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.   தொடர் வேண்டுகோளின்படி மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள் விருதுகளையும்  விடுபட்ட விருதுகளையும் வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு தொல்காப்பியர் விருது









2009-10, 2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுகளை முறையே ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கெüரவித்தார். மேலும் 12 பேருக்கு செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருதுகளையும் அவர் வழங்கினார்.
மூன்று பிரிவு விருதுகள்: செம்மொழி தமிழுக்காகவும், தமிழ் இலக்கிய மேன்மைக்காகவும் பங்காற்றி வரும் அறிஞர்களுக்கு செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் தொல்காப்பியர் விருது; வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் குறள் பீட விருதுகள்; தமிழ் மொழி பயிற்சி, ஆராய்ச்சி, பதிப்புகளை வெளியிடும் இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் இளம் அறிஞர் விருதுகள் என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அறிஞர்களுக்கு கௌரவம்: இதையொட்டி, 2009-10, 2010-11-ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழா தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் "தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான "தொல்காப்பியர் விருது' வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார்.
2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெறுவதற்காக பேராசிரியர் இராம. தமிழண்ணல் பெரிய கருப்பன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அதைப் பார்த்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருக்கையில் இருந்து வந்து அவருக்கு விருதை வழங்கினார்.
இதேபோல, செக் குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசெக்குக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான குறள் பீட விருது வழங்கப்பட்டது.
தமிழ் செம்மொழிப் புலமையுடன் விளங்கி வரும் இளம் அறிஞர்களான தி. சுரேஷ், சே. கல்பனா, இரா. சந்திரசேகரன், வாணி அறிவாளன், சோ. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு 2009-10-ஆம் ஆண்டுக்கான இளம் தமிழ் அறிஞர் விருதையும், து. சங்கையா, அ. ஜெயகுமார், ஆ. மணி, சி. சிதம்பரம், க. சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு 2010-11-ஆம் ஆண்டுக்கான இளம் தமிழ் அறிஞர் விருதையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் தமிழறிஞரும் தமிழ் இணையக் கல்விக் கழகத் தலைவருமான முனைவர் வா.செ. குழந்தைசாமி, தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
"2010-11 ஆம் ஆண்டுக்கான குறள் பீட விருதுக்குத் தேர்வான இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் உடல் நலம் சரியில்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்குரிய விருது, ரொக்கப் பரிசு ஆகியவை தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்படும்' என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பூமா தெரிவித்தார்.
தமிழக அமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை
தெலங்கானா விவகாரத்தில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு உள்ளிட்ட ஆறு ஆந்திர அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியை ராஜிநாமா செய்தனர். தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை பல்லம் ராஜு புறக்கணித்தார்.
இந் நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்லம் ராஜு "மத்திய அமைச்சர்' என்ற முறையில் பங்கேற்று முதல் வரிசையில் அமர்ந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று விட்டார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், வே. நாராயணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தில்லியில் இருந்த போதும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை முறைப்படி அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழுக்காக மாற்றப்பட்ட மரபு
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதும், விருது பெறுவோர் தொடர்பான குறிப்பும் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபை மீறி தமிழில் வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடைபெற்ற அசோகா மண்டபத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்தார். அப்போது, விருதுகளின் பெருமை குறித்தும், விருது பெறும் அறிஞர்கள் குறித்தும் தமிழ் மொழியில் குறிப்பு வாசிக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பூமா இக் குறிப்பை வாசித்தார்.
வழக்கமாகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இந்தி மொழியில் தொகுத்து வழங்கப்படுவது மரபாகும். அதன்படியே, கடந்த ஆண்டு செம்மொழி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளின் குறிப்பு இந்தி மொழியில் வாசிக்கப்பட்டது. அந்த மரபு முதன்முறையாக புதன்கிழமை மாற்றப்பட்டு தமிழில் விருதுகள், விருது பெறுவோரின் குறிப்பு வாசிக்கப்பட்டது அறிஞர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. தமிழைத் தொடர்ந்து இந்தி மொழியில் அக் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அலோபதி சருக்கரை வணிகம்

1/2)" மரபு மருத்துவ முறைகளை  நெறிப்படுத்தி மக்களைக் காக்க வேண்டும்"    எனக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர் தெளிவாகவே தமிழ் மருத்துவ  முறையால் நீரிழிவு நோய் முதலான நோய்கள் நீங்குவதைக் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளதைவிடத் "தமிழ் மருத்துவப் பயன்களைப் பரப்பி" நோய்களைப்  போக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கலாம். பெரும்பாலோர் நோயை ஓரளவு கட்டுப்படுத்தும் ஆங்கில முறையை நம்பி, இறுதியில்   நோயை அடியோடு நீக்கும், தமிழ் மருந்திற்கு வருகின்றனர். அவ்வாறில்லாமல் முதலிலேயே  வந்தால் பெரும்பயன் அடையலாம்
2/2) சருக்கரைக் கொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சான்  உண்மையிலேயே சிறந்த மருந்தாகும். இதனுடன் நவாப்பழக்கொட்டை முதலான சிலவற்றைச் சேர்த்து மருந்துத் தூளாகத் தமிழ் மருந்துக் கடைகளிலும் 'காதிகிராப்ட்'  எனப்படும்  கடைகளிலும் விற்பனை செய்கின்றனர்.   இம் மருந்துத்தூளை நான் 6 வாரம் உட் கொண்ட பின் எனக்கிருந்த சருக்கரைநோய் நீங்கியது. இவ்வாறு எனக்கு அறிமுகமான பலருக்கு இதனால் பலன் ஏற்பட்டுள்ளது. தமிழ் மருத்துவர்களுக்குக் கூடுதல் ஊதியம் தருவதன் மூலம் இப்படிப்பின் மீதான ஈடுபாட்டை அரசு ஏற்படுத்தலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அலோபதி சருக்கரை வணிகம்

தமிழ் இந்து, ம. செந்தமிழன்
Comment (10)   ·   print   ·   T+  
முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற புகார்களுடன் மருத்துவர்களை அணுகினால், உடனடியாக சர்க்கரை நோய் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக, நாட்டில் சர்க்கரை நோய் தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. நல்லது. ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு ‘சர்க்கரை நோய்’இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் குணப்படுத்தும் மருந்து யாரிடம் உள்ளது? அலோபதி மருத்துவத் துறைதான், நோய்களின் பிரச்சாரத்தை உலகப் போர் நடத்துவதைப் போல் நடத்திக்கொண்டிருக்கிறது. சரி, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அலோபதியில் இருக்கிறதா? இல்லை என்பதுதான் அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்ள வேண்டிய விடை. அதுதான் உண்மையும்கூட.
இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் 1940, 1945, 1995, தனது அட்டவணை ஜெ பிரிவில் 51 நோய்களை வகைப்படுத்தியுள்ளது. ‘இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ மக்களுக்கு அளிக்கக் கூடாது’என்கிறது அச்சட்ட விதி. இந்த 51 நோய்களின் பட்டியலைப் பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்று புரிந்துவிடும். இந்தப் பட்டியலில் 14-வது நோயாக சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் சட்டம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இந்திய அரசின் பிரமாண்டமான கட்டமைப்பில் எவரும் இல்லை. மருத்துவம் என்பது ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த நோயைத் தீர்த்து, நோயாளியை முழு நலமுடைய மனிதராக வாழச் செய்ய வேண்டும். அந்தத் திறன் அலோபதிக்கு இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய் விஷயத்தில். சட்டப்படியும் நடைமுறைப்படியும் மருந்து இல்லாத நிலையில், எந்த மருத்துவராவது தம்மிடம் வரும் நோயாளியிடம், ‘எங்கள் முறையில் இதற்கு மருந்து இல்லை. ஆகவே, வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’என்று கூறுவதுண்டா? எவரேனும் இருந்தால், அவர் நேர்மையாளர். மாறாக, ‘சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்’என்றுதான் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்கிவிட்டு, இறுதியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, பரிதாபமான நிலையை அடைகிறார்கள் மக்கள். புண்கள் வந்தால் உறுப்புகளே நீக்கப்படுகின்றன.
சர்க்கரை ஒன்றும் புத்தம் புதிய நோய் அல்ல. பல காலமாக இருந்துவருவதுதான். சர்க்கரை நோயை நம்முடைய மரபு மருத்துவ முறைகள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்திலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சமீபமாகப் பரவலாகிவரும் தொடுசிகிச்சை முறையும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இவ்வளவு ஏன்? உணவுப் பழக்கத்தையும், சில வாழ்க்கை முறைகளையும் மாற்றினாலே போதும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த உண்மைகள் இப்போது மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால், பெரும் வணிக நோக்கம் இருக்கிறது.
சர்க்கரை நோயை மையமாக வைத்து எவ்வளவு பொருட்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்பதைச் சற்றே உற்றுப் பாருங்கள். மருந்து மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச் சத்துப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள், செருப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் என எல்லாமே வணிகமயம். இவ்வளவு பொருட்களும் சேர்ந்து, சர்க்கரை நோயைத் தீர்த்தால்கூடச் சகித்துக்கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் சேர்ந்து, அலோபதி மருத்துவர்கள் மொழியில் கூறுவதானால், ‘சர்க்கரையைக் கட்டுப்பாட்டில்’வைக்கின்றன.
இந்திய அரசின் சுகாதாரத் துறைக்கென என்னதான் கொள்கை இருக்கிறது என்று புரியவில்லை. ஒருபுறம் சட்டத்தில் ‘இந்த நோய்களுக்கு அலோபதியில் குணமளிக்கும், தடுக்கும் மருந்துகள் இல்லை’என்கிறது. மறுபுறம், அந்த நோய்களைத் தீர்க்கும் உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டி வைக்கிறது. மக்கள் நோயினால் நொந்து, சிகிச்சையினால் கடன்பட்டு, சொத்துகளை இழந்து, உறுப்புகளை இழந்து மாண்டுபோகட்டும் என்பதுதான் அதன் கொள்கையா?
பல கோடிகள் செலவிட்டு, நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும்போது, அந்த நோய்களை எந்த மருத்துவ முறைகளில் தீர்க்க முடியும் என்பதை ஏன் அரசு கூறுவதே இல்லை? என்ற கேள்வியைக் குடிமக்கள் கேட்க வேண்டும்.
சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டுவருகின்றனர். தமிழக அரசு 30+ விளம்பரங்களோடு கடமையை முடித்துக்கொண்டால், அதன் அறுவடையும் அலோபதி கருவூலங்களுக்குத்தான் சென்று சேரும். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சட்டப்படியும் மனித நேயப்படியும் மரபு மருத்துவ முறைகளை நெறிப்படுத்தி, சர்க்கரையை விரட்டி, மக்களைக் காக்க வேண்டும்.
செந்தமிழன், இயக்குநர். சர்க்கரை நோயை மையமாக வைத்து அவர் எடுக்கும் ‘இனிப்பு’ ஆவணப்படத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. 
தொடர்புக்கு: senthamizhan2007@gmail.com

முதல்வர் கொலை: நல்வழிக் கல்விமுறை தேவை - இராமதாசு

பொறியியல் கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறை தேவை-  இராமதாசு அறிக்கை
என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறை தேவை- ராமதாஸ் அறிக்கை
சென்னை, அக். 11–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே குழந்தை இயேசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே கல்லூரியில் பயிலும் மாணவர்களால் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும், துயரத்தையும் அளிக்கிறது.
கல்லூரியில் ஒழுங்கீனமாகவும், மாணவிகளிடம் தகாத முறையிலும் நடந்து கொண்ட ஒரு மாணவர் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தக் கொடூர செயலை நிகழ்த்தியிருக்கிறார்.
முதல்வர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட விதம் பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கும்போது, திரைப்படங்களில் வரும் வன்முறை மற்றும் கொலைக் காட்சிகள் இந்த மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களை தங்களின் கடவுளாக மாணவர்கள் மதித்து வந்த நிலை மாறி, ஆசிரியர்களையே படுகொலை செய்திருக்கும் நிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழகமும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.
நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் நோக்கம் கொண்டதாக இருந்த கல்வி முறை, அதிக மதிப்பெண்களை எடுத்தால் போதும் என்ற நோக்கம் கொண்ட எந்திரத் தனமானதாக மாறியது தான் இந்த சீரழிவுக்கு முதன்மைக் காரணமாகும்.
தற்போதுள்ள பெரும் பாலான கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்து வதில்லை. அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் ஏற்படுத்துதல், மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும், ஆறுதல்களையும் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன், மதுக்கடைகளை மூடவும், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக, தங்களின் பெற்றோர் கனவையும், நாட்டின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய கடமை தங்களுக்கு இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட மாணவர் சமுதாயம் முன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை

  கருவுற்ற பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை: அமெரிக்க மருத்துவர்கள் அருந்திறல்
கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
நியூயார்க், அக். 11–
கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன் செய்து அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். மேலும் உயிருக்கு ஆபத்து விளையும் நிலையும் இருந்தது.
எனவே, தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய ஆபரேசன் நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் வளரும் கருக்குழந்தைக்கு மிக மயிரிழையால் ஆன வயர் மற்றும் மிக மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் துல்லியமாக ஆபரேசன் நடத்தப்பட்டது. இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.