சனி, 14 நவம்பர், 2009

தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்

நெடுமாறன்சிறீலங்கா இராணுவ முள்வேலி முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களை விடுதலை செய்வதற்காக தமிழின உணர்வுமிக்கவர்களை ஒன்றிணைத்து செயற்படுவதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்.

இவரது இந்த முயற்சிகள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவருதாகவும், இதனால் இவர் மீது கலைஞர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து பலவிதமான செய்திகள் உலாவருகின்றபோதும் அவர் அடுத்த கட்டப் போராட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அதே வலிமையுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று உறுதியாகக் கூறும் பழ.நெடுமாறன் அவர்கள், முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்காக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அவரை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு ஈழமுரசு தற்போதைய நிலைமை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, வழங்கிய கருத்துக்களை இங்கே தருகின்றோம்.

பழ.நெடுமாறன்: Pulikal.net

ஈழமுரசு:- இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் 58 ஆயிரம் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதாக உறுதி மொழி வழங்கியது. இதனை சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது என்று நீங்கள் கருதுகின்றீர்களா..?

பழ.நெடுமாறன்:- இலங்கையில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது முக்கியமான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ இந்த முகாம்களைச் சென்றுபார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. சர்வதேச பத்திரிகையாளர்களையும் அனுமதிக்கவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா சபை போன்றவற்றின் பிரதிநிதிகளையும் அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் இவ்வளவு பேரை அனுமதிக்க மறுத்த ராஜபக்ச, கருணாநிதி அவர்களிற்கு மட்டும் கடிதம் எழுதி ஒரு குழுவை அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறார் என்றால் அதன் மர்மமென்ன? உள்நோக்கமென்ன?

இரண்டாவதாக இந்தக்குழு அங்கே சென்று, தாங்கள் விரும்பிய இடங்களிற்குச் செல்லவேண்டுமென்று கேட்க முடியவில்லை. ராஜபக்ச அரசு எங்கே அழைத்துக்கொண்டு போனதோ அங்கே மட்டும் போனார்கள். யாரை இவர்கள் குழுவிற்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்களோ அவர்களுடன் மட்டும் பேசினார்கள். ஆக இந்தக் குழு முழு உண்மையையும் அறிந்திருக்க முடியாத குழுவாகத் திரும்பி வந்துவிட்டது. இவர்களுக்கு ராஜபக்ச அளித்த வாக்குறுதியைத்தான் கருணாநிதி திரும்பவும் சொல்லுகின்றார். 58,000 பேரை விடுதலை செய்துவிட்டார்களென்று. அது உண்மையா? இல்லையா? என்பது யார் சரிபார்ப்பது. பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகளில் அகதிகள் மீள் குடியேற்றப் பிரச்சினைகளில் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் முன்னிலையில்தான் அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னிலையில்தான் இந்த மீள்குடியேற்றம் நடைபெறும்.

எத்தனை பேர் வெளியேறினார்கள். எந்தெந்த ஊர்களிற்குப் பாதுகாப்பாகச் சென்றார்கள்? அவர்கள் வீடுகளிற்குப்போய்ச் சேர்ந்துவிட்டார்களா என்பதையெல்லாம் ஐ.நா அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் சரிபார்த்துத் தெரிவிப்பார்கள். அதுதான் வழக்கம். ராஜபக்ச சொல்லுகின்றார் 58,000 பேரை விடுதலை செய்தாகிவிட்டது என்று. அதை தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் திருப்பிச் சொல்லுகின்றார். இப்படி விடுதலை செய்யப்பட்டவர்கள், அவர்கள் ஊர்களிற்கு, வீடுகளிற்கு பத்திரமாகப் போய் சேர்ந்துவிட்டார்களா என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலைமையில் இதுபோன்ற செய்திகளை நம்புவது இயலாது.

ஈழமுரசு:- உலகத் தமிழர் மாநட்டில் பங்கேற்பவர்களை தடுப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். அதில் ‘நெடுமரங்கள்’ என அவர் குற்றம்சாட்டியுள்ளது உங்களையே எனக் கருதுகின்றோம். இந்த மாநாடு தொடர்பாகவும் இதனை நீங்கள் ஏன் தடுக்க முயல்கின்றீர்கள் என்பதையும் விளக்கமுடியுமா..?

பழ.நெடுமாறன்:- இந்த மாநாட்டைத் தடுப்பதற்கோ, இந்த மாநாட்டிற்கு வரும் தமிழ் அறிஞர்களை வரவேண்டாம் என்று சொல்வதற்கோ ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. நான் முதலமைச்சரிடம் கேட்ட கேள்வி ஒன்றுதான். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இந்த மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. மறைந்த தமிழறிஞர் தணிநாயகம் அடிகளின் பெருமையைச் சேர்ந்தவர்களால்தான் உலகத் தமிழர் ஆராய்ச்சி மன்றம் உருவாக்கப்பட்டது. அவர் எவ்வளவு பாடுபட்டு உலகத் தமிழறிஞர்களையெல்லாம் ஒன்றுகூட்டி இதை உருவாக்கினார் என்பது ஒரு வரலாறு. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில்தான் பல்வேறு நாடுகளில் இத்தகைய ஆய்வு மாநாடுகள் நடாத்தப்பட்டன.

மகாநாடு நடாத்தும் பொறுப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றைச் சேர்ந்தது. அந்தந்த நாட்டைச் சேர்ந்த அரசுகள் அந்த மாநாட்டை நடாத்துவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் ஒரு சிறிதளவுகூடக் கலந்துகொள்ளாமல் தமிழக முதலமைச்சர் திடீரென்று உலகத் தமிழ் மாநாட்டை நடாத்தப்போவதாக அறிவித்தார். அதே உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராய் இருக்கக்கூடிய ஜப்பானிய அறிஞர் ஆட்சேபித்தார். யாரைக்கேட்டுக்கொண்டு அறிவித்தீர்கள் என்று சொன்னார். பிறகு அவரை சமாதானப்படுத்தினார்கள். அப்போதும் அவர் சொன்னார் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பதற்கு பல காலமாகும். ஆகவே 2011ம் ஆண்டு ஜனவரியில் இந்த மாநாட்டை நடாத்தலாமென்று அவர் யோசனை சொன்னார்.

அதற்கு முதலமைச்சர் சொன்ன பதில் வேடிக்கையானது. எங்களிற்கு ஏப்ரல் மாதம் சட்டத் தேர்தல் இருக்கிறது. ஆகவே அந்த நேரத்தில் இதை நடாத்த முடியாதென்று சொன்னார். சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஒரு அரசியல் பிரச்சனை. அதற்கும் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அப்படி அவர் சொல்வதைச் சரியென்று வைத்துக்கொண்டாலும்கூட, இந்தத் தேர்தல் நடந்த பிற்பாடு மாநாட்டை நடத்தலாமே. அதை ஏன் இப்ப நடாத்தவேண்டுமென்று அவசரப்படுகின்றார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றைச் சிறிதும் கலந்துகொள்ளாமல் தன்னிச்சையாக ஒரு முடிவை அறிவித்து எப்படி நடத்தி முடிப்பதென்று அறிவித்து அதற்கு அவர்கள் இசைவு தராத நிலையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உடைப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகின்றார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடத்தப்போகின்றேன் என்று சொன்னதோடு சரி நடத்தட்டும். ஆனால் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில் இருக்கும் ஒன்பது நிர்வாகிகளில் ஆறுபேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்களென்று இவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அப்படியானால் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த இவர் முயற்சிசெய்கின்றார் என்று நான் குற்றம்சாட்டினேன். அதிலே அவருக்கு கோபம் வந்துவிட்டது. மாநாட்டிற்கு வருபவர்களை நான் தடுப்பதற்கு முயற்சிசெய்வதாகத் திட்டியிருக்கிறார். உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் எத்தனையோ ஆண்டு காலத்திற்கு முன்னால் அது மறைந்த தணிநாயகம் அடிகளாலே பெரும் பாடுபட்டு உருவாக்கப்பட்டதொன்று. அதைப் புறுக்கணிப்பதென்றோ, அதை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னிச்சையாகச் செயற்படுவதற்கோ அல்லது அதைப் பிளவுபடுத்துவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்பவர்கள் தமிழுக்கு நன்மை செய்யாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

ஈழமுரசு:- தமிழீழ தேசியத் தலைவர் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்தபோதும், அவரது இருப்பு குறித்து இன்னும் உறுதியாக கருத்து வெளியிட்டு வருபவர்கள் நீங்கள். தேசியத் தலைவர் மாவீரர் நாளுக்கு உரையாற்றவுள்ளதாக உங்கள் ‘தென்செய்தி’ இதழில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளீர்கள். இது எந்தளவிற்கு சாத்தியம். அவ்வாறு உரை நிகழாதுவிட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன..?

பழ.நெடுமாறன்:- அது தென்செய்தியின் கருத்தல்ல. அது இணையத்தில் வந்த ஒரு கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். அதை இணையத்தில் வந்திருக்கிறது என்பதைப் போட்டிருக்கவேண்டும். அதைப் போடுவதற்கு அவர்கள் தவறிவிட்டார்கள். அது தென்செய்தியின் கருத்தல்ல.

ஈழமுரசு:- முள்வேலி முகாம்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை தமிழ் உணர்வுமிக்க பல கட்சிகளின் ஆதரவோடு முன்னெடுத்துள்ளீர்கள். இந்தப் பிரச்சாரம் பயணத்திற்கு கிடைக்கும் ஆதரவு எவ்வாறு இருக்கின்றது..?

பழ.நெடுமாறன்:- இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களின் தலைமையில் இந்த விழிப்புணர்வுப் பரப்புரைப் பணயம் நடத்தப்பட்டது. நம்முடைய தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்தும் இந்தப் பயணம் தொடங்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் இருந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களும், இராமேஸ்வரத்திலிருந்து சகோதரர் வைகோ அவர்களும், குமரி முனையத்திலிருந்து சோழர் சா. பாண்டியன் நல்லகண்ணன் அவர்களும், கோவையிலிருந்து நானும் இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்தப் பயணம் நடந்தது.

செல்லும் வழியெல்லாம் மக்கள் பெருந்திரளாகக்கூடி ஆதரவு தந்தார்கள். முள்வேலி முகாமிற்குள் இருக்கும் 3 இலட்சம் மக்களை உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதை வலியுறுத்தித்தான் இந்தப் பயணம் நடந்தது. கட்சிவேறுபாடுகளின்றி நமது தமிழகத்து மக்கள் ஒன்று திரண்டு இந்த இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அதைப்போல இறுதி நாளன்று இருந்த மிகப்பெரிய கூட்டத்திலும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்து இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் தமிழக மக்கள் முள்வேலி முகாமிலுள்ள மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதிலே உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகத் தொடர்ந்து போராடவும் தயாராக இருக்கின்றார்கள்.

ஈழமுரசு:- இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான காத்திரமான பணிகளை ஆற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்..?

பழ.நெடுமாறன்:- இன்றைக்கு தமிழினத்திற்கே மிக நெருக்கடியான காலகட்டம். தமிழீழ மண்ணில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம், இப்போது களம்மாறி இருக்கின்றது. உலகத் தமிழர்களின் கரங்களிற்கு அது மாற்றப்பட்டுவிட்டது. எனவே உலகம்பூராகவும் இருக்கும் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எந்தெந்த வகையில் துணைநிற்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் அவர்கள் தோள்கொடுத்து, துணைநிற்கவேண்டியது அவசியமாகும். இது காலம் நமக்குக் கொடுக்கின்ற கட்டளையாகும். அந்தக் கடமையை அனைத்து நாட்டுத் தமிழர்களும் செய்யவேண்டும். அந்தந்த நாட்டு அரசுகளிற்கு அழுத்தம் கொடுத்து, இந்த மக்களைக் காப்பாற்ற என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யவேண்டுமென நான் அவர்களை வற்புறுத்தி வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி்:ஈழமுரசு

Tags: ,

தமிழ் மக்களின் தமிழீழமும், மூன்று எதிரிகளும்

s“என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று” என்றொரு வேண்டுதல் வழக்கு உண்டு, அதன் சாரம் முழுதும் தமிழீழச் சிக்கலில் குளிர்காய நினைக்கும் சில தமிழக அரசியல்வாதிகளுக்காக எழுதப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது, உலகமெங்கும் பெருகி வரும் தமிழீழ ஆதரவுக் குரலை நெறிக்கும் வகையில் இந்தியப் பேரரசால் திட்டமிடப்படும் பல்வேறு தந்திர வித்தைகளை முறியடிக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இந்த வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வி ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் உள்ளக் குமுறலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்??? என்று முடிவு செய்வதற்கு முன்னாள், நம் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசரம் மிகுந்த ஒரு தேவையாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வமான தமிழீழ எதிரிகளாக மூன்று பிரிவுகளை அடையாளம் காண இயலும், முதல் எதிரி நேரிடையான இன எதிரி, உன்னுடைய அடையாளங்களை நான் எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து கடந்த அறுபது ஆண்டுகளாக தன்னுடைய சிங்கள மேலாண்மையை நம் மீது திணிக்கும் நேரடி எதிரி, இந்த எதிரியை எதிர் கொள்வதும் அடையாளம் காணுவதும் நமக்கு அப்படி ஒன்றும் கடினமான செயலாக இல்லை, இருக்கப் போவதும் இல்லை,

இரண்டாவது எதிரி, தமிழ் இனம் என்கிற சொல்லாடலையே வெறுக்கும் அல்லது கருவறுக்க நினைக்கும் இந்திய தேசப் பார்ப்பனீயம், இந்த எதிரியை நமக்கு நீண்ட காலமாகவே தெரியும் என்றாலும், கடந்த நான்கைந்து மாதங்களில் அதன் கோர முகத்தை நம்மால் நன்றாகவே உணர முடிந்தது, இயன்ற வகைகளில் எல்லாம் தன்னுடைய பிராந்திய வல்லரசுப் போர்வையைப் போர்த்தியபடி தமிழின அழிப்பில் மறைமுகமாக ஈடுபட்ட இந்திய தேசியம் நமது இரண்டாவது எதிரி என்பதில் நமக்கு அய்யம் இல்லை. இந்த எதிரியை மேற்குலகின் ஆதரவோடுதான் நம்மால் வெல்ல முடியும், அதற்கான அனைத்து முயற்சிகளிலும் நமது புலம் பெயர்ந்த இளைஞர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது எதிரி தான் கண்டறிய முடியாத அளவிற்கு நாடகங்களையும், புனைவுகளையும் புரிந்து நம்மில் இருந்து கொண்டே நம்மைக் கருவறுக்கும் செயல்களை மிகத் தீவிரமாக இந்திய தேசியத்திற்காகச் செய்து விடத் துடிப்பவன். இந்த எதிரியை எதிர் கொள்ளத் தகுந்த மாற்று இயக்கங்களை, அரசியல் ஒருங்கிணைவுகளை நமது தமிழக மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள் உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விடுதலைப்புலிகளை ஒடுக்கி, அழித்து விட்டால் தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலை உணர்வையும், தமிழர்களின் தனி அடையாளத்தையும் அழித்து ஒழித்து விடலாம் என்கிற ராஜபக்சே சகோதரர்களின் கனவில் இடி விழுந்தாற்போல உலகெங்கும் தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள், “தமிழீழம்” என்கிற ஒரு கோட்பாட்டின் அடிப்படை எதிரியான சிங்களம், தன் மேல் குத்தப்பட்ட மனித உரிமை மீறல் அடையாளங்களை அழிக்க இயலாமல் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கும் சூழல் உருவாகி வருவதை நம்மால் காண முடிகிறது. முதல் எதிரியான சிங்களம் தலை குனியும் நேரத்தில், இரண்டாவது எதிரி அதனைச் சரி செய்யும் வேளையில் ஈடுபடுவதையும் நாம் உணர்கிறோம், ஆம், இந்திய தேசியம் வரிந்து கட்டிக் கொண்டு இலங்கைக்குத் தொடர்ந்து சரிவுகள் நிகழாமல் காக்கும் அளப்பரிய பணியைச் செய்து வருகிறது.rm

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன்னர் உலக வங்கிக்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார், உலக வங்கி இலங்கைக்குக் கடன் வழங்க மறுக்கும் சூழலில், இந்திய தேசியம் 2.6 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கும் என்பது தான் அந்த மறைமுக மிரட்டல், உலக வங்கியின் மிகப்பெரிய பயனாளரான இந்திய தேசியம் விடுக்கும் மிரட்டலுக்கு, செவி சாய்க்க வேண்டிய நிலையில் தான் உலக வங்கி இருக்கிறது, ஏனென்றால் உலக வங்கி நடைபெறுவதற்கு ஒரு மிக முக்கியக் காரணி இந்திய தேசியம் தான், அதிக அளவில் வட்டியும் முதலும் செலுத்தும் நாடாகவும், உலக வங்கியின் மிகப் பெரிய பயனாளியாகவும் இந்திய தேசியம் இருப்பது தான் இதற்குக் காரணம் (The most valuable Customer).

வல்லரசு, புல்லரசு என்றெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டு, உழைக்கும் மக்களின் பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய தேசியம் உலக வங்கியின் படியளப்பில் தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கியின் பிடியில் இருந்து விடுபட்டுத் தங்கள் பொருளாதாரத்தைச் சீரமைக்க ஆர்வம் காட்டும் நேரத்திலும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான அலுவாலியாவுடன் இணைந்து இந்திய தேசியத்தை ஒட்டு மொத்தமாக உலக வங்கியிடம் அடகு வைக்கும் ஆர்வம் இந்தியப் பிரதமரிடம் அளவற்றுக் கிடப்பது விந்தையான ஒன்றாகும்.eu

ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகைகளை இலங்கைக்குக் கொடுப்பதை நிறுத்தப் போவதாகச் சொல்லும் சூழலில், ஏனைய நாடுகள் இலங்கையுடனான தங்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியாகும் வேளையில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் போகிற பிராந்திய வல்லரசு வெறியை இந்தியப் பார்ப்பனீய தேசியம் வெளிப்படுத்தத் துடிக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுத் தான் இந்த உலக வங்கிக்கான மிரட்டல்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகாம்களைப் பார்வையிடும் நாடகம் முடிந்து இலங்கைக்கு நற்சான்று கொடுக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்து, தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான வர்த்தக உறவுகள் மலர்ந்து செழிக்கப் போவதாகச் சொன்னதும், புதிய திட்டங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்படப் போவதாகச் சொன்னதும் தான் மிகக் கொடுமையானது மட்டுமன்றி மன்னிக்க முடியாததும் ஆகும். உலகம் முழுதும் வர்த்தகத் தடையை எதிர் நோக்கும் இலங்கையுடன், தொப்புள் கொடி உறவுகளாகிய நாம் வர்த்தகம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பு எத்தனை சூழ்ச்சிகள் நிறைந்தது, எத்தனை வலியைத் தரக் கூடியது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மாநில முதல்வருக்குத் தெரியாமல் போனதும், கொஞ்சமும் நெருடாமல் இருந்ததும் வெட்கக் கேடானது. கண்டனத்திற்குரியது.mahinda_mps

தமிழக முதல்வரும் அவரது பரிவாரங்களும் தமிழீழச் சிக்கலில் என்ன செய்கிறார்கள் என்றால், கூடவே இருந்து குழி பறிக்கிறார்கள் என்பது தான் விடையாகிறது. இலங்கைக்கு உலக அரங்கில் உருவாகி இருக்கிற அவப்பெயரைத் துடைக்கும் சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரும், அவரது பரிவாரங்களும் ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்களாகி இருக்கிறார்கள், உலகம் இலங்கையைப் புறக்கணிக்கத் தயாராகி வரும் சூழலில், இலங்கையின் ஆட்சியாளர்களைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகெங்கும் வலுப்பெறும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையையே தனது கொடுங்கோன்மையின் எல்லைகளுக்குள் அனுமதிக்காத ராஜபக்சே, எப்படி தமிழக நாடாளுமன்றக் குழுவை அனுமதித்தார்???,

இது முற்றிலும் இந்திய தேசியத்தின் உளவுத் துறையினர் ஆலோசனைப்படி நடத்தப்பட்ட நாடகமாக இருக்குமோ??? என்ற மிகப் பெரிய ஐயம் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளின் அழுத்தத்தில் இருந்தும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்புகளிடமும் கொடுப்பதற்கு ஒரு நற்சான்றிதழ் தேவைப்பட்ட நேரத்தில், மிகச் சரியாகத் தனது காய்களை நகர்த்தி தமிழக நாடாளுமன்றக் குழுவை ராஜபக்சே வரவழைத்திருக்கிறார், குழுவினரும் மிகச் சிறப்பாகக் கொலைகாரர்களின் தோளுக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்தி, கட்டித் தழுவித் தங்கள் தேசிய அடையாளத்தைக் காட்டி வந்திருக்கிறார்கள்.gaza

இப்படி ஒருபுறம் நமது எதிரிகள் தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு சாதகமான விளைவுகளும் “தமிழீழம்” என்கிற கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நகர்வது ஒன்று தான் சற்று ஆறுதல் தரக்கூடியது,

அவற்றில் சில இன்றியமையாதவை:

1) அமெரிக்க வெளியுறவுத் துறையால், அமெரிக்கக் காங்கிரசுக்குக் கையளிக்கப்பட்ட 67 பக்க அறிக்கையும் அது உருவாக்கும் தாக்கமும்.

2) ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி – பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் அதன் விளைவுகளும்.

3) இலங்கையின் அரசியலில் நிகழ்ந்து வரும் குழப்ப நிலை.

4) தமிழீழம் தவிர்த்த எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல்

மேற்கண்ட யாவும் தானாக நிகழவில்லை என்பதையும், உலகெங்கும் வாழுகின்ற தமிழ்ச் சமூகம் தனது குரலை விடாமல் ஒலித்துக் கொண்டே, பல்வேறு போராட்டங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதன் விளைவுதான் இத்தகைய மாற்றங்கள் என்ற உண்மையை நாம் உணரும் போதும், நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விக்கான விடை தானாகத் கிடைக்கும்.tamil_nadu

தமிழக இளைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.இன்னும் வீரியமான அரசியல் மற்றும் ராஜதந்திர நகர்வுகளை ஒருங்கிணைந்து நாம் நிகழ்த்தினால் நமது “தமிழீழம்” என்கிற நீண்ட நெடிய பயணத்தின் தொடுபொருளை நம்மால் விரைந்து அடைய முடியும். தங்கள் அரசியல் நலன்களையும், தனி மனித வளர்வு வணிகத்தையும் ஈழத் தமிழ் மக்களின் குருதியின் ஊடாகக் காப்பாற்றிக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் கபட வேடதாரிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பதும் இன்றைய தேவையாகி இருக்கிறது. ஆழமான பயன்களைத் தரக்கூடிய ஊடகப் பரப்புரைகள், உலகளாவிய ஒருங்கிணைந்த தமிழ் இளையோர் கூட்டமைப்பு போன்ற திட்டங்களில் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். மேலும், “நாடு கடந்த தமிழீழ அரசு”, உலகத் தமிழர் பேரவை” போன்ற உலகளாவிய அமைப்புகளின் குறைபாடுகளைக் களைந்து அவற்றை மென்மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, மேற்குலக நாடுகள் தமிழீழம் தொடர்பாகத் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க அறிக்கையே கூட, தெற்காசியாவில் இலங்கை போன்ற ஒரு கடல் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்டைத் தன் கீழ்ப்படிதலுக்குக் கொண்டு வருகிற முயற்சியாக இருக்கலாம், ஆனால், இவற்றில் இருந்து நாம் பெற வேண்டியவற்றைப் பெற்று நமது இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக எப்படிப் பயணிக்கப் போகிறோம் என்பது தான் நமக்கு முன்னிருக்கிற மிகப் பெரிய கேள்வி.

எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியுடன் கூடிய வாழ்க்கை நெறிகளை நாங்கள் மேற்கொள்வதைத் தடை செய்து, இன மற்றும் மொழி ஒடுக்குமுறைகளில் நம்மைச் சிறுமைப்படுத்திய சிங்களச் சிறு நரிகளுக்கும், தமிழினத்தின் தனி அடையாளம் கண்டு எப்போதும் குலை நடுங்கித் தங்கள் “புதிய தலைமுறைகளில்” ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய இந்திய தேசத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையைக் காலம் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மொழிக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் இறந்து போன அந்த உயிர்களின் மதிப்பை தமிழ் இளைஞர்களாகிய நாம் மீட்டு எடுப்போமா? இந்தக் கேள்விக்கான காலத்தின் பதிலில் ஒளிந்து கிடக்கிறது நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும்.

pulam

வெட்ட வெட்டத் தழைப்போம்!

பிடுங்கப் பிடுங்க நடுவோம்!!

அடிக்க அடிக்க அடிப்போம்!!!

அடைக்க அடைக்க உடைப்போம்!!!!

அழிக்க அழிக்க எழுதுவோம்!!!!

விழ விழ எழுவோம்!!!!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

நன்றி: அறிவழகன்

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-165: ஆனையிறவு புலிகள் வசம்!



புத்தாயிரம்-2000-ஆவது ஆண்டில், ஜனவரி 5-ஆம் தேதி, தமிழீழத் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் குமாரர், குமார் பொன்னம்பலம் கொலையுண்டார். வழக்கறிஞரான இவர், சிங்கள ராணுவம், அதிரடிப்படை, போலீஸ் ஆகியவற்றின் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.
செம்மணி புதைகுழி போன்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும், ஐ.நா. மனித உரிமைக் கமிஷன், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று புகார்களை அளித்ததாலும் இலங்கை அதிபர்களின் கோபத்துக்கு ஆளானவர்.
இறுதியாக, 29-12-1999 அன்று தேர்தல் வெற்றிவிழா கூட்டத்தில் அதிபர் சந்திரிகா பேசிய பேச்சில் பயங்கரவாதத்தை அகற்றுவதுதான் தனது பணி என்று குறிப்பிட்ட அவர், குமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து குமார் பொன்னம்பலம் வெளிப்படையான கடிதம் ஒன்றை சந்திரிகாவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில்,
"விடுதலைப் புலிகளின் அரசியல் தத்துவத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும் அந்த ஆழமான நம்பிக்கையுடன் தெற்குப் பகுதியில் வாழ்பவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் மட்டுமல்ல; இத் தீவுக்கு வெளியேயும் இந்தக் கருத்தை எழுத்திலும், பேச்சிலும் பகிரங்கமாக வற்புறுத்த விரும்புகிறேன். உங்களுடைய பேச்சில் என்னை எச்சரித்து இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு நெடுகிலும் வெளிப்பட்ட அப்பட்டமான மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன்' என்று குறிப்பிட்ட அவர்,
"டிசம்பர் 19-ஆம் தேதி இரவு வரலாற்றில் மறக்கமுடியாத இரவாகும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருளின் கரங்கள் படிந்த இரவாகவும் வர்ணித்து இருக்கிறீர்கள். குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். தமிழீழப் பகுதியில் ஆயிரக்கணக்கான விதவைகள், சொந்த வாழ்வில் எத்தனையோ இரவுகள் இருள்பிடித்த இரவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாட்டின் ராணுவத்தின் தலைமைத் தளபதி என்கிற முறையில் உங்களுடைய இருள்படிந்த கரங்களினால் அவர்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதையும் நீங்கள் என்றாவது உணர்வீர்கள்' என்றும் உறுதிப்படக் கூறியிருந்தார்.
தொடர்ந்து அக்கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது, "விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டப்போவதாக உறுமியிருக்கிறீர்கள். உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். அத்தகைய முயற்சி நடைபெறுமானால் இந்தத் தீவில் காலாகாலத்திற்கும் அமைதி என்பதே இல்லாமல் போகும் என எச்சரிக்கிறேன்-
இந்தத் தீவில் பயங்கரவாத மரணக் கலாசாரம் பரவியது என்று சொன்னால் அதற்கு சிங்களவரே காரணமானவர்கள். 1956-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்முறைக் கலாசாரத்தைத் தொடங்கியவர்கள் அவர்களே. (சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்கு எதிரே போராடியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது.) விடுதலைப் புலிகளின் அருகே நீங்கள் செல்வதற்கு முன்னால், நீங்கள் மட்டுமல்லாமல் இந்தத் தீவில் வாழும் ஒவ்வொருவரும் முதலில் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
சிங்களவருடைய தயவில் அல்லது அவர்கள் தூக்கியெறியும் பிச்சையில் வாழ்வதற்காக நாங்கள் பிறக்கவில்லை. இந்தத் தீவின் ஒரு பகுதி நியாயமாக எங்களுக்கு உரியது. அதைப் போல மற்றொரு பகுதி நியாயமாக சிங்களவருக்குச் சொந்தமானது. இந்த உண்மையைச் சிங்களவர் ஏற்கவேண்டும்.
தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும், தங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், அந்த உரிமையை எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்நியப்படுத்த முடியாது என்பதையும், அது அவர்களின் பிறப்புரிமை என்பதையும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்குண்டான அறிவுக்கூர்மை தங்களுக்கு உண்டு என்பதையும், தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யவேண்டும் என்பதையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளிவந்த நான்கே நாளில், அதாவது ஜனவரி 5-ஆம் தேதி குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு சந்திரிகாவின் ஆள்களே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""நேர்மைத் திறமையுடன் அபாரமான துணிச்சலுடன் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. குமார் பொன்னம்பலத்தின் இனப்பற்றுக்கும், விடுதலை உணர்வுக்கும் மதிப்பளித்து அவரைக் கெüரவிக்கும் விதமாக "மாமனிதர்' என்ற விருதை வழங்குவதாக'' அறிவித்தார்.

புலிகளின் தாக்குதல் மற்றும் மீட்பு சரித்திரத்தில் ஆனையிறவுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப் பெரும் பரப்பளவில், ஏராளமான ஆயுதங்களுடன், கனரக ஆயுதங்கள் உள்பட, குவிக்கப்பட்டு, 20 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பல்வேறு முகாம்களை உள்ளடக்கியது. அந்த முகாமைத் தகர்ப்பது யாழ்ப்பாணத்துடன் இதரப் பகுதிகளை இணைப்பதற்கான முயற்சியாகும்.
இத் தாக்குதல் தொடங்கப்பட்டால் எதிரி தலையெடுக்க முடியாதபடி, ஒரேயடியில் வீழ்த்துவது என்ற சூத்திரப்படி, அதிக நாள்கள் பிடிக்காமல், பலத்தத் தாக்குதலில் வீழ்த்த வேண்டும் என்றும் புலிகள் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் ஆனையிறவு தளம் புலிகளின் வசமாயிற்று.
20 ஆயிரம் வீரர்களுடன் 4 ஆயிரம் புலிப் போராளிகள் மோதி வென்றனர். ஆயிரக்கணக்கில் சிங்கள வீரர்கள் இப் போரில் மடிந்தனர். சந்திரிகாவின் கடும் தணிக்கைக்குப் பிறகும் வெளிவந்த செய்திகள் மூலம் சிங்கள ராணுவத்துக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்தது. மூடி மறைக்கப் பார்த்தும் முடியவில்லை. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஆனையிறவுப் போர்க்காட்சிகளும், மீட்புச் செய்தியும், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகளையும் மீட்ட செய்திகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரும் இழப்பு என்பது உறுதியாயிற்று.
இதனைத் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு முல்லைத்தீவுச் சண்டையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்களை சிங்கள வீரர்கள் அல்ல என்று சொன்னதில் ஆரம்பமானது. ஆனையிறவு முகாம் தகர்ப்பில் உயிரிழந்த வீரர்களுக்கும் அதே நிலை நீடித்ததால், பல ஆயிரம் ராணுவ வீரர்கள், ராணுவத்தைவிட்டு ஓடினர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை.
விடுதலைப் புலிகள் தரப்பில் தற்கொலைப் படைப்பிரிவிலும் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்து பணியாற்றும் நிலையில், சிங்கள ராணுவ வீரர்கள், பணியிலிருந்து சொல்லாமல் ஓடுவது ஏன் என்று, சந்திரிகா யோசித்தார்.
ஒரு முடிவாக மாவீரர் தினம் போல, "போர்வீரர்கள் தினம்' கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, 7-6-2000 அன்று தேவாலய மணிகள் ஒலிக்கும் நேரத்தில் அவரவர் இருக்குமிடத்தில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார்.
போர்வீரர்கள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட அதே நாளில் அமைச்சர் சி.வி.குணரத்னே குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார். அவருடன் மேலும் 20 பேர் உயிரிழந்தனர்.

முகமலை கிளாலி பகுதியில் புலிகள் தங்களது தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மடிந்தனர். ஏராளமானோர் படுகாயமுற்றனர். இந்தத் தாக்குதல் மூலம் "ஓயாத அலைகள்-3' ஆரம்பமாகின்றது என்று புலிகள் அறிவித்தனர். புலிகளின் திருகோணமலைத் தாக்குதல் (அக்டோபர் 23) ஆரம்பமானது. இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பிரதமர் என்ற நிலையிலும், அடுத்தப் பிரதமரும் அவரே என்ற நிலையிலும் காலமானார். மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மகிந்த ராஜபட்ச மீன்வளத்துறை அமைச்சரானார்.

நாளை: நார்வேயின் சமாதான முயற்சி!

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட இலங்கை அணிக்குத் தடை கோரி மனு



மதுரை, நவ. 12: இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல்
செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஜோயல்பவுல் ஆண்டனி தாக்கல்
செய்துள்ள மனு:
இலங்கை கிரிக்கெட் அணி கலந்து கொள்ளும் 20:20 போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட் டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.
16.11.2009 முதல் 27.12.2009 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக இலங்கைத் தமி ழர்களை துன்புறுத்தி மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகள் இலங்கையைக் கண்டித்து வந்தபோதிலும் அதை அந்த நாட்டு அரசு பொருட்படுத்தவில்லை. இலங்கை ராணுவ அத்துமீறல் களால் பல லட்சம் தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். 1.5 லட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்துள்ளனர்.
இந் நிலையில், இலங்கை அணி இந்திய மண்ணில் விளையாடத் தடை விதி க்க வேண்டும் என மனு வில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துக்கள்

ஏற்கெனவே இலஙகைக்கு இந்திய அணியை அனுப்பக் கூடாது என மதுரை வழக்குரைஞர்கள் வழக்கு தொடுத்தீர்கள்! கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டு வழக்கு இருக்கும் பொழுதே அனுப்பப்பட்டு ஆடித் திரும்பியுள்ளனர். இந்த வழக்கை முன்னரே போடக் கூடாதா? இந்தியத்தின் வஞ்சகம் அறிந்தஒன்றுதானே! நீதித்துறையும் அதற்குக் கட்டுப்பட்டதுதானே! போகட்டும்! போட்டி நடைபெறும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும வழக்குகள் தொடுத்துத் தீவிரப்படுத்துங்கள்.

வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின்



தஞ்சாவூர், நவ. 13: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக்
குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்றார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றிய திமுக செயலர் கே. செல்லக்கண்ணு இல்லத் திருமணத்தையும், அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் தியாக. சுரேஷ் திருமணத்தையும் வெள்ளிக்கிழமை தலைமையேற்று நடத்தி வைத்து அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி அமைச்சர்கள் அண்மையில் ஆய்வு நடத்தினோம். அமைச்சர்களின் ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டியதைவிடக், கூடுதலாக இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்விலும் முதல்வர் அக்கறை செலுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அரிய பல திட்டங்களை நிறைவேற்றி, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாபெரும் தலைவராக முதல்வர் கருணாநிதி உயர்ந்துள்ளார்.
இந்தத் திருமணங்கள் சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு நடந்துள்ளன. 1967-க்கு முன்னர் அண்ணா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்டப்படி செல்லும் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அப்போது சீர்திருத்த திருமணங்களைக் கேலி செய்தனர். எள்ளி நகையாடினர். இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று அண்ணா முதல்வரானதும் முதல் தீர்மானமாக அதை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.
சீர்திருத்த திருமணங்கள் பல்கிப் பெருக வேண்டும் என்ற பெரியாரின் கனவையும், அண்ணாவின் எண்ணத்தையும் முதல்வர் கருணாநிதி இன்று நிறைவேற்றி வருவதைப் பார்க்கிறோம்.
பெண்களால்தான் குடும்பத்திலும், சமுதாயத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று கருதித்தான் இந்த ஆட்சியில் பெண்களுக்கு ஏற்ற நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிற இந்தத் தருணத்தில், திருமணத் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார் ஸ்டலின்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர், தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் சுற்றுலா மாளிகை அருகே கட்டப்படவுள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் இல்லம் கட்டுமானப் பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்றி வைத்தார் துணை முதல்வர் ஸ்டாலின்.

கருத்துக்கள்

காலங்கடந்து அரசியல் தேவைகளுக்காக புலம் பெயர்ந்து வந்துள்ள இலங்கைத்தமிழர்கள் பற்றிப் பேசும் அரசியல் வாதிகளே ! அவர்களை மனித நேயத்துடன் அணுகி, விரும்பியவாறு கல்வி. தொழில்.வேலைவாய்ப்பு பெற்று விருமபிய இடத்தில் உரிமையுடன் வாழ வழிவகை செய்யுங்கள் கொத்தடிமை முகாம்களில் அடைத்து வைத்து விட்டு. நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:40:00 AM

stalin and PM are trying to keep srilankan taimils as beggers in tamilnadu. before giving them citizenship think howmany percentage of job opertunaity are you going to give them. without deciding this you can not bring light in their life.

By sahai
11/14/2009 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கேரள முதல்வரின் துணிவு எனக்கு இல்லை: கருணாநிதி



சென்னை, நவ. 13: ""முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாதபடி செய்த கேரள முதல்வரைப் போன்று துணிவு எனக்கு இல்லை'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
""முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்து இருக்கிறது.
நாடு என்னவாகும்? முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னவாயிற்று? உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் எல்லாவற்றுக்கும் உச்ச கட்டம் என்று சொல்லப்படுகிறதே, அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
கேரள அரசு, அந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து, அதை முடக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அந்த மாநில சட்டப் பேரவையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இவ்வாறு புதிய சட்டத் திருத்தம் இயற்றலாமா? அது ஏற்புடையதுதானா? இதுபோன்ற பிரச்னைகளில் ஒவ்வொரு மாநிலமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்குமானால் அதை எதிர்த்து தங்கள் மாநிலச் சட்டப் பேரவைகளில் சட்டம் இயற்றிக் கொள்ள முனைந்தால் நாடு என்னவாகும்?
தான் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தை நிறைவேற்றிய மாநில அரசு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?
அவ்வாறு கேரள அரசு சட்டம் இயற்றியதைப் பற்றி இப்போது உச்ச நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை. வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, தீர்ப்பு சொன்ன காரணத்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு போன்று வேறு சில மாநிலங்களும் -நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் -என்ற எண்ணத்தோடு செயல்பட வழி வகுக்கும் அல்லவா?
வியப்பும் திகைப்பும்... ஜனநாயக நாட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், அதற்கு மாறாக ஒரு மாநில அரசே சட்டப் பேரவையைக் கூட்டி சட்டத்தை இயற்றுகிறது.
அதற்குப் பிறகும், உச்ச நீதிமன்றம் அதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றி எதுவும் கூறாமல் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கிறது என்றால், ஏன் இப்படி? என்ற திகைப்பும் "எதற்காக இப்படி?' என்ற வியப்பும் ஏற்படுமா இல்லையா?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக முதன் முதலாக உச்ச நீதிமன்றம் சென்றது டிசம்பர் 1998. 11 ஆண்டுகள் ஆகி, தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை -அதனை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள் -என்ற முடிவு, இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
தாமதிக்கப்பட்ட நீதி -மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க, யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

பின்வரும் செய்தியில் குடும்பத்தாருக்குக் கிடைக்காத பொழுது எனத் திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:32:00 AM

ஆமாம்! அதிகாரப் பதவிகள் குடும்பத்தாருக்குக் கிடைக்கும் பொழுது எதிர்க்கும் துணிவு தமிழ் நாட்டு உரிமைகளுக்காகப் போரிடும் பொழுது இருப்பதில்லை. உண்மைதான்! என் செய்வது? அப்பொழுது துணிவு இல்லாவிட்டால் அதிகாரம் கிடைக்காது. இப்பொழுது துணிவு இருந்தால் அதிகாரம் நிலைக்காது. தமிழகத்தின் முசிபூர் இரகுமான் என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! குடுமப நலம் குறுக்கே வருமபொழுது இன நலத்தை நினைக்க முடியாதே! வேதனையை உணரும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:30:00 AM

Mrs. Sonia Gandi is above suprime court of India. Mr. Sonia Gandi gave pover to Kerala CM via Mr. Anthony , Defence minister of India. TN Government cannot over rule Mrs. Sonia Gandi who is a powerful congress leader in India. Is Mr. Karunanithi knows that Sonia Gandi is above suprime court of India? Sonia Gandi appoint the suprime court judges too.

By Ramayan
11/14/2009 3:30:00 AM

Once eminent Lawer Mr.Nani Palkiwala said that in our Country justice is expessive where as judges are very cheap.

By R.Gopu
11/14/2009 1:35:00 AM

supreme court reservation 50% ceiling meerinathu yaar? Intha Karunanithi thaane? Thanakku oru niyayam marravarukku oru niyayama?

By satish
11/14/2009 1:21:00 AM

**யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை!m U N A R V U K A L . C O M

By ELLALAN
11/14/2009 1:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்



ராமேசுவரம், நவ. 13: விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் சிறையில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் நவ. 11-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக நிரபராதி மீனவர் சங்கக் கூட்டமைப்பு பிரதிநிதி யூ. அருளானந்தம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெகதாபட்டினம் கடற்கரையில் நவ. 2-ம் தேதி 4 படகுகளில் 18 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி கைதுசெய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 10 நாள்களுக்கு மேலாகியும் மீனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இதனையடுத்து, தங்களை விடுதலை செய்யக் கோரி நவ. 11-ம் தேதி காலை முதல் மீனவர்கள் 18 பேரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் அன்று மாலை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம், வடமராச்சி மீனவர் சங்கத் தலைவர் எமலியான் பிள்ளை, யாழ்ப்பாணம் மீனவர் சங்கச் செயலர் ராஜாராம் ஆகியோர் சிறைக்குள் சென்று மீனவர்களை சந்தித்து விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பின்னர், மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலச் செயலர் என்.ஜே.போஸ் வெள்ளிக்கிழமை கூறும்போது, இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து மாநில மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நவம்பர் 17ம் தேதி நூறு கார்களில் பேரணி நடத்தப்பட உள்ளது.
ராமேசுவரத்தில் தொடங்கும் இப்பேரணி ஜெகதாபட்டினம், நாகை, கடலூர் வழியாக நவ.21ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. அங்கு முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.

கருத்துக்கள்

மீனவர்களே! உங்களின் ஒன்று பட்ட போராட்டங்களால் இந்திய-சிங்களக் கொடுமைகளை உலகு புரிந்து கொண்டு தமிழ் ஈழத்தை விரைவில் ஏற்கட்டும்! உங்கள் நலன் அதன் மூலம் என்றென்றும் காக்கப்படட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள்: ராஜபட்சவுக்கு பொன்சேகா எச்சரிக்கை



கொழும்பு, நவ. 13: ""தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது; ஆனால் சகோதர குடிமக்களான தமிழர்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதில் அரசு தோற்றுவிட்டது. அத்துடன் ராணுவத்தின் மீதே சந்தேகப்பட்டு அதன் அதிகாரங்களையும் முக்கியத்துவத்தையும் குறைத்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள், அதன் விளைவை இலங்கை அனுபவிக்கப் போகிறது'' என்று ராணுவத்தின் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்திருக்கிறார்.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் மகிந்த ராஜபட்சவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுவார் என்ற பேச்சு சில நாள்களாக அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து பொன்சேகா கடிதம் எழுதியிருந்தார். அதன் மீது இதுவரை முடிவு எடுக்காத அதிபர் ராஜபட்ச, திடீரென வெள்ளிக்கிழமை அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, பதவியிலிருந்து ""உடனடியாக'' விடுவித்துவிட்டார் என்று தெரிகிறது.
இந்த நிலையில், பொன்சேகா எழுதியுள்ள கடிதம் அதிபரது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் குற்றப்பத்திரிகை போலவே இருக்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமரசிங்க ஊர்ஜிதம்: பொன்சேகா ராஜிநாமா செய்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திய மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, கடிதம் மீது அதிபர் நடவடிக்கை எடுக்கும் முன்னதாகவே அவற்றைச் செய்தி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியது தார்மிகமற்ற, நேர்மையற்ற செயல் என்று கண்டித்தார்.
அதிபர் ராஜபட்சவுக்கு, ஜெனரல் பொன்சேகா எழுதிய காட்டமான கடிதம் வருமாறு:
என்னால்தான் வெற்றி: "என்னுடைய தலைமை, தொலைநோக்குப் பார்வை, வழிநடத்தல் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றிகொள்ள முடிந்தது என்று கூறினால் அது மிகைப்படுத்தல் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். அதிபர் பதவி வகிக்கும் நீங்கள் அளித்த அரசியல் ரீதியான ஆதரவும் அந்த வெற்றிக்குக் காரணம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
"விடுதலைப் புலிகளை இந்த ஆண்டு மே மாதம் வெற்றி கண்ட பிறகு நீங்கள் பேசிய பேச்சும், நடந்துகொண்ட விதமும் ராணுவத்தின் மீதும், என் மீதும் நீங்கள் நம்பிக்கை இழந்து வருகிறீர்கள் என்பதை நன்றாகவே உணர்த்தியது.

திடீர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வேன் என்று கருதியே என்னை தரைப்படை தலைமை தளபதி பதவியிலிருந்து ஜூலை மாதம் விலக்கினீர்கள்.
தயார் நிலையில் இந்திய ராணுவம்: இலங்கை ராணுவம் திடீர் புரட்சியில் ஈடுபடும் என்று அஞ்சி, அப்படி ஏதும் நடந்தால் துணைக்கு உடனே விரைந்துவந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்குத் தூது அனுப்பி அவர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி கூறினீர்கள். இதைவிட எங்களுக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்.
மிகத் திறமைவாய்ந்த, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க ராணுவங்களில் இலங்கையும் ஒன்று என்று நாங்கள் பெற்றிருந்த புகழைச் சீர்குலைக்கும் வகையில் உங்களுடைய செயல் அமைந்துவிட்டது.
புலிகளுக்கு எதிரான போரை தீரத்துடனும் திறமையாகவும் வழிநடத்தினேன் என்பதற்காக இலங்கையின் ஒவ்வொரு ராணுவ வீரனும் என்னை, தங்களுடைய வீர தளபதியாக ஏற்றுக்கொண்டு விசுவாசம் காட்டியதால் உங்களுக்கு என் மீதும், ராணுவத்தின் மீதும் சந்தேகம் வந்தது.
ராணுவத்துக்கு வலு கூடுவது குறித்து நீங்கள் அஞ்சினீர்கள். அதை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினீர்கள். நெருக்கடியான நேரத்தில் ராணுவத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு பிறகு நம்பிக்கை இல்லாமல் பேசியது கண்டு நான் வருந்தினேன்.
என்னை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமித்தபோது மிகவும் சக்திவாய்ந்த பதவியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். முப்படைகளின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ""ஒருங்கிணைப்பாளர்''தான் நான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன்.
""மூன்று படைகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பதவி உங்களுக்கு என்றால், உங்களுடைய பதவிதான் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துவிடும்'' என்று பாதுகாப்பு அமைச்சரும், உங்களுடைய சகோதரருமான கோத்தபய ராஜபட்சவும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
எனக்கு அடுத்தபடியாக ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை ராணுவத் தளபதியாக நியமித்தீர்கள், நான் பரிந்துரைத்தவரை நிராகரித்தீர்கள். ஜகத் ஜெயசூரியா மீது விசாரணை நடைபெறும் விவகாரம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்தும் அவருக்குப் பதவி தந்தீர்கள். இதனால் ராணுவத்தில் ஒழுங்கும் நேர்மையும் சீர்குலைய ஆரம்பித்திருக்கிறது.
வெறும் சோற்றுப்பட்டாளமாக இருந்த ராணுவம், வீரம் செறிந்த போர்ப்படையாக என் தலைமையில் மாறியது. இப்போது மீண்டும் பழைய கதை ஆரம்பித்துவிட்டது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறவர்களும் விட்டு ஓடுகிறவர்களும் அதிகரித்துவிட்டார்கள். புதிதாகச் சேருகிறவர்களைவிட விட்டு ஓடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
மக்களுக்கு சமாதானத்தை அளிக்கத் தவறிவிட்டது அரசு; சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. அரசு உரிய வகையில் திட்டமிடாததால் தமிழர்கள் வாழும் சூழல் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. முகாமில் இருக்கிறவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் போய் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் பெறும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது இப்படியே தொடர்ந்தால் நமது ராணுவத்தின் வெற்றியே அடையாளம் இல்லாமல் பாழாகிவிடும். தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
உரிமைகள் மறுப்பு: போரினாலும் அதன் பிறகு அரசு காட்டும் மெத்தனமான நிர்வாகத்தாலும் மக்களுடைய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. அரசுப் பணம் கோடிக்கணக்கில் விரயமாகிறது. பத்திரிகைககளின் கருத்துச் சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் காலில்போட்டு நசுக்கப்படுகின்றன' என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் பொன்சேகா.

கருத்துக்கள்

1/2 உலகிலேயே மதுவையும் மாதுவையும் தீண்டாத ஒரே கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள படை ஈழப்படைதான். போட்டி போட்டுக் கொண்டும் இந்தியா முதலான நாடுகளின் வஞ்சகத் துணையுடனும் கொடூரமான முறைகளிலும் கூட்டம் கூட்டமாகவும் தமிழ் மக்களைக்கொன்ற விட்டு அதிகாரப் போட்டியால் விடுதலைப் புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்பது போல் எழுதியுள்ளான். ஒவ்வொரு குடும்பத்திலும் விடுதலைப்படையினர் அல்லது சிங்களக்காடையால் துன்புறுத்தப்பட்டவர்கள் இருக்கும் பொழுது எவ்வாறு வேறுபடுத்த முடியும்? சிங்களப் படையிலிருந்து எவரேனும ஒருவர் இனப்படுகொலை செய்தது தவறு என்ற மனச்சான்றின் உந்துதலைத் தெரிவித்து உண்மைகளை வெளிப்படுத்தினால் அவரை நம்பலாம். அதிகாரப் போட்டியால் எஞ்சியுள்ள தமிழர்கள் மீது பரிவும் பற்றும் உள்ளது போல் நடிக்கும் எவனையும் நம்பக் கூடாது. (தொடர்ச்சி 2/2காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:12:00 AM

(1/2 இன் தொடர்ச்சி) எனினும் அதிகாரப்போட்டியால் சிங்களப் படையும் அதிகார வெறியர்களும் இரண்டுபட்டு அடித்துக் கொண்டு சாகட்டும்! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் ஆட்சியேற்றுத் தண்டனை கொடுப்பதற்குத்தேவையின்றி அழிந்து ஒழியட்டும்! மனித நேயமுள்ள சிங்களர்களே தமிழர்களுடன் ஒருங்கிணைந்து உங்கள் தீவை மனிதநேயம் மிக்கதாக மாற்றுங்கள். தனித்தனி உரிமையுடைய தமிழ்ஈழ - இலங்கைக் கூட்டரசு நாடுகளாக நாட்டமைப்பை மாற்றுங்கள். தனித்தனி நாடாக இணைந்த தீவாக மலர்ந்து வாழ்ந்து நல்லரசுகளாக ஆக்குங்கள்! காங்கிரசுஅரசு முதலான பிற நாட்டு வஞ்சகர்களிடம் உங்கள் மக்களைக் காவு கொடுக்காதீர்கள்! வாழ்க தமிழ் ஈழம்! வாழ்க இலஙகை! ஓங்குக மனித நேயம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:11:00 AM

His Excellency the President Through the Secretary, Ministry of Defence, Public Security, Law and Order Presidential Secretariat COLOMBO 12 November 2009 Your Excellency REQUEST TO RETIRE FROM THE REGULAR FORCE OF THE SRI LANKA ARMY 1. I, General G S C Fonseka RWP RSP VSV USP rcds psc presently serving as the Chief of Defence Staff, was enlisted to the Ceylon Army on 05th Feb 1970 and was commissioned on the 01st June 1971. On the 6th Dec 2005 due to the trust and confident placed on me, Your Excellency was kind enough to promote me to the rank of Lieutenant General and appoint me as the Commander of the Sri Lanka Army in an era when the Country was embroiled with the menace of a bloody terrorism and was in a stalemate state after having toiled for a solution politically or otherwise for over 25 years without a success. 2. During my command of 3 years and 7 months, the Sri Lanka Army managed to eradicate the terrorist movement having apprehended an unbelievable stock

By Ragavachari Iyangar
11/14/2009 3:42:00 AM

You're the perpect president for all Srilankans General sarath fonseka. We all Srilankan support to you. We know that you will solve the ethnic problems in Srilanka. You will treat all srilanka Sinhalese , tamils and Muslims in the same way. We all Sinhala , Tamil and Muslum people build Srilanka number 1 country in Asia like Singapore.

By Peter
11/14/2009 3:22:00 AM

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள். -பி.கே. விஜய நிவாஷ் www.tamilspy.com

By Thamilan
11/14/2009 2:52:00 AM

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள். -பி.கே. விஜய நிவாஷ் www.tamilspy.com

By Thamilan
11/14/2009 2:52:00 AM

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்! பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார். பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார். 07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ

By Tamilan
11/14/2009 2:46:00 AM

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்! பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார். பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார். 07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ

By Tamilan
11/14/2009 2:46:00 AM

**யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை!m U N A R V U K A L . C O M

By ELLALAN
11/14/2009 1:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *