சனி, 28 மே, 2011

C.M.'s interesting story about speaker: ஸ்பீக்கர்' இனி ஓட வேண்டாம் பேரவையில் முதல்வரின் சுவையான பேச்சு

சுவையாகத்தான் உள்ளது. பேரவையில்  அவையை நடத்துநருக்கு மட்டுமே பேசும் உரிமை உள்ளது. பிறருக்கு அவர்  இசைவு அளித்தால் மட்டுமே பேசும் உரிமை உண்டு.  எனவே, அவையை நடத்துநர்
பேசுநர் (speaker)  என அழைக்கப்பட்டார். இச் சொல் கி.பி.௧௪௦௦ இல் பழக்கத்தில் வந்துள்ளது. விருப்பம் தெரிவித்துப் போட்டியிட்டு வென்றபின் ஓட வேண்டிய தேவையில்லை. எனினும் மன்னர் அல்லது அரசியிடம்  அவரது விருப்பத்தைப் பேரவை மறுத்தததைத் தெரிவிக்கும சூழலை உணர்ந்து இது போன்ற கதை வந்திருக்கும் போலும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்கள் அவைத்தலைவராக  ஏற்றுக் கொள்வதற்கு அடையாளமாகவும் யாரது ஆதரவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் அவையை நடத்த வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும் இரு கட்சியைச்  சேர்ந்தவர்களும் அவரை அழைத்து அமரச் செய்கிறார்கள்.  இங்கிலாந்தில் பல கட்சி ஆட்சி முறை கிடையாது. பல கட்சி ஆட்சி முறை  இருப்பதால் நம் நாட்டில் ஏற்கப்பட்ட முதன்மை எதிர்க்கட்சித்  தலைவர் அழைத்துச் செல்கிறார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

"ஸ்பீக்கர்' இனி ஓட வேண்டாம் பேரவையில்
முதல்வரின் சுவையான பேச்சு

First Published : 28 May 2011 02:33:05 AM IST


சென்னை, மே 27: பேரவைத் தலைவரை ஆங்கிலத்தில் அழைக்கும் "ஸ்பீக்கர்' என்கிற வார்த்தை வந்தது எப்படி என்கிற தகவலை வரலாற்றுப் பின்னணியுடன் சுவைபடக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா. இது, பேரவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர், துணைத் தலைவரை வாழ்த்தி, சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் போது இந்த சுவாரஸ்ய தகவலைக் கூறினார். அவர் பேசியது:பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படவுடன் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், பேரவைத் தலைவரின் கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று தலைவருக்கான இருக்கையில் அமர வைப்பது மரபாகும். இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை.இந்தப் பழக்கம் எப்படி வந்தது? என்பதை எடுத்துச் சொன்னால் அனைவருக்கும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த மரபுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது.இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டது தான் இந்திய நாடாளுமன்றமும், இந்திய சட்டப் பேரவைகளும். அங்கே இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றம் வந்து விட்டது. அது மன்னராட்சி இருந்த காலம். சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார். நாடாளுமன்றமும் இருக்கும்.இங்கே இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றிய போது மன்னர் இல்லை. ஜனாதிபதி இருக்கிறார். நாடாளுமன்றம் இருக்கிறது. அந்தக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார். அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர்.மரணதண்டனை கிடைக்கும்: அத்தகைய தலைவருக்கு நாடாளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள். நாடாளுமன்றத்தின் கருத்து என்னவோ அதைச் சென்று மன்னரிடம் எடுத்துக் கூறுபவர்தான் ஸ்பீக்கர். நாம்தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை அங்கே இங்கிலாந்தில் ஸ்பீக்கர் என்றுதான் அழைக்கிறார்கள்.மன்னர் விரும்பிய செயலை நாடாளுமன்றம் நிராகரிக்கும் போது அந்தச் செய்தியை ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும்போது என்ன நடக்கும்? சில காரியங்கள் செய்வதற்குத்தான் மன்னருக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.ஆகவே தான், விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைப்பார். உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி உத்தரவிடுவார். தலையை வெட்டி எடுங்கள் என்று ஆணையிடுவார்.இது பலமுறை நடந்தால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே, புதிதாக நாடாளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும் போது இன்னார்தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்துவந்த மரபு. காலப்போக்கில் அதுமாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை. ஆனால், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேரவைத் தலைவரின் கரங்களைப் பிடித்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு மட்டும் அப்படியே இருக்கிறது. நீங்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை எந்த நாளிலும் நாங்கள் (ஆளும் கட்சியினர்) உருவாக்க மாட்டோம் என முதல்வர் ஜெயலலிதா கூறிய போது பேரவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை

வியாழன், 26 மே, 2011

family members met kanimozhi: கனிமொழியுடன் தமிழரசு, செல்வி சந்திப்பு

குடும்பத்தினர் சந்திப்பை எலலாம் செய்தியாகப் போட வேண்டுமா? ஒரு புறம் பக்கத்தை வீணடிக்கிறீர்கள். மறுபுறம் சிறையில்  இருப்பதை மக்களுக்கு நினைவூட்டிப் பாதிக்கப்பட்டவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கனிமொழியுடன் தமிழரசு, செல்வி சந்திப்பு
First Published : 26 May 2011 12:39:42 AM IST

புது தில்லி, மே 25: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, மகன் மு.க. தமிழரசு உள்ளிட்ட குடும்பத்தினர் கனிமொழியை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணைக்காக வழக்கம்போல் நீதிமன்றத்தில் கனிமொழி புதன்கிழமை காலை 10.15 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.அவருடன் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஆஜராயினர்.திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.15 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்து கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.இதையடுத்து காலை 10.30 மணிக்கு நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது. செல்வி, மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மு.க.தமிழரசு, அவரது மனைவி மோகனா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தாயார் மல்லிகா ஆகியோர் நீதிமன்ற அறைக்கு வந்தனர்.கனிமொழியைப் பார்த்ததும் அவர் அருகே சென்று அனைவரும் நலம் விசாரித்தனர். இருக்கைகளில் அடுத்தடுத்து அவர்கள் அமர்ந்துகொண்டு, கனிமொழியிடம் தைரியமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களுடன் கனிமொழி சிரித்தவாறு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி நீதிமன்ற அறைக்கு வந்தார். எவருடனும் பேசாமல், தனியாக ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டார். குடும்பத்தினரின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. பிறகு கனிமொழியிடம் அவர்கள் விடைபெற்றுக்கொண்டு நீதிமன்ற அறையிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.முன்னதாக கருணாநிதியின் குடும்பத்தினர் கனிமொழியைச் சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு தில்லி வந்து சேர்ந்தனர். அங்கிருந்து நேராக நீதிமன்றத்துக்கு வந்தனர்.தமிழக முன்னாள் அமைச்சர்கள் செல்வராஜ், தமிழரசி, திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.தில்லிக்கு திங்கள்கிழமை வந்த கருணாநிதி, அன்று மாலை திகார் சிறையில் தனது மகள் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்துக்கு வந்து கனிமொழியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது நினைவுகூரத்தக்கது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள்

தேர்தல் என்று வந்தால் மட்டும்,மக்கள் ஊழலை,பார்ப்பது இங்கு கதையாய்,இருக்கு.ஊழலை பேச,அரசியல்வாதிக்கு,தகுதில்லை,எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.இப்ப தன் வாக்கு ,பணம் வாங்கும் ,வாக்காளனுக்கும்,தகுதி இல்லை.
By கலை
5/26/2011 12:10:00 PM
தேர்தல் என்று வந்தால் மட்டும்,மக்கள் ஊழலை,பார்ப்பது இங்கு கதையாய்,இருக்கு.ஊழலை பேச,அரசியல்வாதிக்கு,தகுதில்லை,எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.இப்ப தன் வாக்கு ,பணம் வாங்கும் ,வாக்காளனுக்கும்,தகுதி இல்லை.
By கலை
5/26/2011 12:10:00 PM
ஐயா தமிழ் அரசு சென்னை மாகாண நில ஆக்கிரமிப்பு சங்க தலைவர்.. உங்களுக்கு சென்னை புழல் ஜெயில் கத்துக்கிட்டு இருக்கு.
By செல்வன்
5/26/2011 12:10:00 PM
நல்ல ஊயல் பண்ண பண்ணாத எல்லாம் சாப்டு இப்ப கணிமொழிய மட்டும் மாட்டி விட்டுடிங்கள அதன் ராஜாதி அம்மா உங்க குட பேசாம கோவமா இருகாங்க மோகன் டோக்யோ
By Mohan
5/26/2011 10:17:00 AM
குற்றவாளிகள் ஜெயிலில் இருப்பதும் அதை அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதும் செய்திதானே அதுவும் கோடிகணக்கில் மோசம் செய்தவர்கள் ஜெயிலிலில் யாரை சந்தித்தாலும் அது கவனிக்கப்பட வேண்டியதே மக்கள் யாரும நிச்சயம் மறந்து விட கூடாது .மொழியை காப்போம் தப்பில்லை இதை போல் மோசம் செய்தவர்களை நாம் ஊகிவிக்க கூடாது. அதனால் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்வது தவறு
By ர.சு.மதிகுமார்
5/26/2011 7:27:00 AM
குடும்பத்தினர் சந்திப்பை எலலாம் செய்தியாகப் போட வேண்டுமா? ஒரு புறம் பக்கத்தை வீணடிக்கிறீர்கள். மறுபுறம் சிறையில் இருப்பதை மக்களுக்கு நினைவூட்டிப் பாதிக்கப்பட்டவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2011 5:12:00 AM
போங்க போங்க எல்லோரும் வரிசையா போக வேண்டிய இடத்துக்கு போங்க ! அப்படியே கனிமொழிய நலம் விசாரிக்கும் போது இடது புறம் சிறையில் கிடக்கும் பாகிஸ்தானிய உளவாளி எப்படி இருக்குறாங்க....வலது புறம் சிறையில் வாடும் அந்த டெல்லி விபச்சாரி எப்படி இருக்குறாங்க.....எதிர் புறம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி ....பின் புற சிறையில் உள்ள கொலைக்காரி எல்லாம் எப்படி இருக்குறாங்கன்னு கேட்காம விட்டுறாதீங்க ! அப்புறம் வருத்தப் படுவாங்க ! என்னத்த இருந்தாலும் நம்ப வீட்டுப் பொண்ணோட உடன்பிறவா சிறை நண்பர்கள் அல்லவா! இனி வாழ்க்கையில் எஞ்சிய காலத்தை அங்கேயே கழிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டால் என்ன செய்வது ? எதற்கும் இனி போகும் போது எல்லோருக்கும் ஆரஞ்சுப் பழம் சேர்த்து வாங்கிக் கொண்டு செல்லவும் ! திகார் கைதிகள் சங்கத் தேர்தல் எப்பொழுது வருகிறது என்று கேட்டு வாருங்கள் தி மு க சார்பாக கனிமொழியை களம் இறக்கி டெல்லியை கலக்கிப் புடுவோம் !!! @ rajasji
By rajasji
5/26/2011 1:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரு மதிகுமார் அவர்களே! முன்பு திருமண அழைப்பிதழுக்காவும் வேறு காரணங்களுக்காகவும் அப்பா மகன், அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை எனக் குடும்பத்தவர் சந்தித்ததை எல்லாம் செய்தியாகப் போட்ட பொழுதும் எதிர்த்துக் கருத்தைத் தெரிவித்து இருந்தேன். தினமணி வெளியிடவில்லை. இப்பொழுதும் அதே வகையில்தான் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன். (இக்கருத்தைத் தினமணி வெளியிடாவிட்டாலும் என் வலைப்பூவில் இடம்பெறும்.) கல்மாடி முதலான  பிற குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்திப்பவர்கள் பற்றியெல்லாம் செய்தியா வெளியிடுகிறார்கள்? புறக்கணிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு முதன்மை எதற்கு? மேலும் கனிமொழி உலகறிய தான் இன்னார் மகள் என்று சொல்லும் வாய்ப்பைப் பெறும் வரை எவ்வளவு துன்புற்றிருப்பார்? அதற்குப் பின்னரும் மூத்தார் குடும்பத்தினருடன்  இணக்கமான சூழலை உருவாக்க எவ்வளவு துன்புற்றிருப்பார்? தொடக்கத்தில் எளிமையாகத்தானே வாழ்வை நடத்தினார்? மண வாழ்க்கையும் முறிவுற்றுத் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போதைய கணவனும் பெரும்பாலும் வெளிநாடுகளில்தானே உள்ளார். இந்தச் சூழலில் அந்தக் குடும்பத்திற்கு இணையான அதிகார மையத்தை உருவாக்க வேண்டும் என்னும் அரசியல் பதவி வெறிக்குத் தள்ளப்பட்டு இப்பொழுது துன்புறுகிறார். குற்றம் செய்த யாவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் சரி. அதே நேரம் அவர்களையும் நாம் மனித நேயத்துடன்  அணுக வேண்டும் என்பது தவறா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அலைக்கற்றை வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்குக் கண்டனம்

இதில் என்ன குற்றம் உள்ளது? எல்லாமே வெளிப்படையாக நடக்கும் பொழுது அவை படமாக்கப்படும் பொழுது வரைவதில் என்ன தவறு? ஒளிப்படத்தை விடத் தன் திறமையை நம்பிய கலைஞரை ஊக்கப்படுத்தலாம்? ஒளிப்படம் அல்லது காட்சிப்படம் எடுக்கத் தடை இருப்பின் அதனையும் நீக்கலாம். மறைமுக உசாவலில் (in  கேமரா inquiry)தான் தடை விதிக்க வேண்டும்.  காலம் மாறுகிறது. நீதிமன்றம் பழமையிலேயே ஊறிக்கிடக்கிறது. புதுமை எண்ணம்  கொண்ட நீதிபதிகள் அதனை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


2ஜி வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்கு கண்டனம்

First Published : 26 May 2011 02:34:08 AM IST


புது தில்லி, மே 25: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்த பத்திரிகை வரைபடக் கலைஞருக்கு நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கனிமொழி உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிமன்றத்துக்குள் நின்றுகொண்டிருந்த பத்திரிகை கலைஞர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்து கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த நீதிமன்ற ஊழியர் ஒருவர் படம் வரைவதை நிறுத்துமாறு கூறினார். எனினும் அவர் நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து படம் வரைந்தார். இதையடுத்து நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் அந்த ஊழியர் புகார் தெரித்தார்.இதனையடுத்து அந்த கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவரை எச்சரித்தார்.அவர் வரைந்த படங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அவரது அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் நீதிமன்ற ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த அந்த நபர், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டேன் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

Kalaignar explains his non meeting of Sonia: சோனியாவை ஏன் சந்திக்கவில்லை? கருணாநிதி விளக்கம்

சந்திக்காமைக்கான காரணம்  உண்மையாகவே இவ்வாறுஆயின் தவறாகும். ஏனெனில் இது சரியெனில், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள கழகத்தவரைக் கூடச்  சந்திப்பது என்பது தவறாகும். புது தில்லியில் ஆசாத்,ப.சி. ஆகியோரைச்  சந்தித்ததும் தவறாகும்.  ஒருபுறம் சட்டம் தன் கடமையைச் செய்யும் பொழுது தந்தை தன் கடமையை ஆற்றுவது தவறல்ல. இவ்வாறு பேசுவது சட்டத்தை மீறிய உதவிக்காகத்தான் பிறரைச் சந்திக்கிறார் என்னும்  நிலைப்பாட்டை உறுதியாக்கும். வேறுகாரணத்திற்காக இப்படிப் பேசியிருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
௨.சமச்சீர் கல்வி பற்றிய கருத்து சரிதான். ௩.புலிகளைப் பற்றிக்கைக்கூலி உளறியதைப் பொருட்படுத்தாமை மிகச் சரி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சோனியாவை ஏன் சந்திக்கவில்லை? கருணாநிதி விளக்கம்

First Published : 26 May 2011 01:10:28 AM IST


சென்னை, மே 25: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்த்துவிட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:தில்லி பயணம்: திகார் சிறையில் இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரைக் காண்பதற்காகச் சென்றேன். தில்லியில் தங்கியிருந்த ஹோட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத்,புதுவை நாராயணசாமி, பரூக் அப்துல்லா மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். கனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும் நீதி கிடைக்கும் என்று நானும், கனிமொழியும் கருதுகிறோம்.சோனியாவைச் சந்திக்காததன் காரணம்: சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து: எல்லா மாணவர்களுக்கும் சமநிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உள்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் இப்போது நிறுத்தப்படுவதால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.பறிக்கப்பட்ட சொத்துகள்: திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துகள் உரிய முறையில் மீட்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி ஏதாவது இருந்தால் அதைத் திரும்பப்பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார் கருணாநிதி.தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, மேலவை என்று திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்படுவது குறித்து கேட்கப்பட்டதற்கு, "இதற்காக வருந்த வேண்டியவர்கள் வாக்களித்தவர்கள்' என்றார்.இதைப்போல "ராஜீவ்காந்தி கொலையில் திமுகவிற்கும் பங்கு உண்டு என்பதுபோல ஒருவர் (பத்மநாதன்) கூறிருக்கிறாரே' என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, "அவர் யாரென்றும், அவர் என்ன சொன்னாரென்றும் எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்.

Demanding Separate welfare board for Buddhist: பெளத்தர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

புத்தர் கருத்துகளை விரும்புபவர்கள் பின்பற்றலாம். ஆனால் தனி வாரியம் என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. புத்த சமயம் என்ற பெயரில் திருமணச் சடங்குகளைப் பலர் பாலி மொழியில் அல்லது பாலிச் சொற்களைக் கலந்து நடத்துகின்றனர். அயல்  சமயங்கள் எதுவாயினும் பின்பற்றுவோர் பின்பற்றலாம். ஆனால், அரசு ஊக்கப்படுத்தக் கூடாது. புத்த நெறியைப் போற்ற விரும்புவர்கள் முதலில் சிங்களத்தையும் சீனத்தையும் சப்பானையும் புத்த நெறிப்படி வாழ்ந்து
தமிழர் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டு அவர்கள்  வாழ்வைப்பறித்தவர்களுக்குத்தண்டனை வழங்கி, எஞ்சியவர்களுக்கு விடுதலை வழங்கித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யட்டும்! பிறகு இங்கு உரிமை கேட்கட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போ
 


பெளத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

First Published : 26 May 2011 12:12:04 AM IST


பண்ருட்டி, மே 25: பௌத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி-புத்தபூமி பாசறை கோரிக்கை விடுத்துள்ளது.இந்த அமைப்பின் சார்பில் புத்தரின் 2600-வது பிறந்த நாள் விழா கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது.புத்த பூமி பாசறை நிறுவனர் என்.வி.ஜெயசீலம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்ட எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.பெüத்தர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டுவது, மனித இனத்தை சீரழைக்கும் போதை பொருள்கள் மற்றும் மதுவை ஒழித்து தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழாவில் உலக பெüத்த சங்க செயலர் எச்.எல்.விருத்தி(லண்டன்), முன்னாள் சிறுபான்மை குழு உறுப்பினர் பிக்கு அசுவகோஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி, முன்னாள் பதிவுத் துறை அதிகாரி டி.கே.ராஜா, பிரசார செயலர் எம்.அரங்கநாதன், தலைவர் செüந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலர் எஸ்.வி.புத்தப்பிரியன் நன்றி கூறினார்.

Thamizh kadamaigal 10 - Prof.Dr.S.Ilakkuvanar : தமிழ்க்கடமைகள் 10 : தமிழன், பெயரில் கூடத் தமிழனாக இல்லை.

தமிழ்க்கடமைகள் 10
தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்
உலகத்தில் பெயரைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் உண்டா? பெயர்க்காகவே, பெயரை நிலைநிறுத்தவே உழைப்பவர்கள் பலரைக் காண்கின்றோமே. ஆதலின் உங்கள் பெயரைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாவா? தமிழராகப் பிறந்த உங்கள் பெயர் தமிழில் அல்லவா இருத்தல் வேண்டும். கிருத்துவராய் இருப்பினும், மகம்மதியராய் இருப்பினும், வேறு எச்சமயத்தினராய் இருப்பினும், தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்.
தமிழ்ப்பெயர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பெயரைக் கொண்டே பெயரையுடையவர் ஆணா பெண்ணா என்று கூறி­விடலாம். ஆடவர் பெயர் னகார ஒற்றில்(ன்)தான் முடியவேண்டும்.
சங்க இலக்கியக் காலத்தில் சாதிகள் கிடையா. சாதியைக் குறிக்கும் தேவர், நாடார், பிள்ளை, ஐயங்கார் முதலிய பட்டப் பெயர்கள் கிடையா. ன்ஓடு அர்அல்லது ஆர் விகுதி சேர்த்து அழைப்பர்; நக்கீரன்-நக்கீரர்; இறையன்- இறையனார்.
சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு தமிழர் பெயர்கள் தமிழில் இல்லாது வேறு மொழிகளில் தோன்றத் தொடங்கிவிட்டன. தமிழன், பெயரில் கூடத் தமிழனாக இல்லை. இன்று ஓர் எழுச்சி- தமிழ், தமிழ், என்ற முழக்கம். நல்ல காலம் பிறக்கின்றது. தமிழன் தமிழ்ப் பெயரை விரும்புகின்றான். அவ்விருப்பம் எங்கும் பரவுக.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்

புதன், 25 மே, 2011

thamizh kadamaigal 9 : தமிழ்க்கடமைகள் 9 அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக

தமிழ்க்கடமைகள் 9
அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக

        உலகமொழி தமிழென்று மொழிதல் மட்டும்
மாற்றுவழி யாகாது விஞ்ஞா னத்தின்
        மருந்துமொழி விருந்துமொழி தமிழ்தான் என்று
போற்றுவதும் உலகத்தார் நாட்டார் எல்லாம்
        புரிந்துகொள வைப்பதுவும் ஆகும். இந்த
மாற்றத்தை உடனேநாம் மேற்கொண் டால்தான்
        மடிநீங்கிக் களிபொங்கித் தமிழ்த்தேர் ஓடும்
- தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா:
உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக் 36



ma.po.si - handstick of rajaji : ஆச்சாரியாரின் ‘கைத்தடி’யே ம.பொ.சி.

கட்டுரைகள்

-24 05 2011

 பெரியாரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத் தோடு சில தமிழ்த் தேசிய அமைப்புகள் ம.பொ.சி. என்று அறியப்பட்ட ம.பொ.சிவஞானத்தை - தமிழ்த் தேசியத் தலைவராகஉயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில் ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியம், பார்ப்பனியம் சார்ந்தே நின்றதை ஆதாரங்களுடன் விளக்கி, ஏப்ரல் மாத சிந்தனையாளன்இதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம்.      (சென்றஇதழ் தொடர்ச்சி)

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழி - இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் மத நம்பிக்கையும் தனித் தனி. ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த மத நம்பிக்கைகளோடு வாழ முழு உரிமையுடையோர் ஆவர். ஆனால் இங்குள்ள இந்து மத வெறியர்கள் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று ஓலமிடுகிறார்கள். இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட இந்து மதமும் காக்கப்பட வேண்டும் என்று உரத்தக் குரல் எழுப்புகிறார்கள். அருமைத் தலைவர் ம.பொ.சி. அத்வானியின் குரலாகப் பின்காணுமாறு முழங்குகிறார்:

என் இந்திய நாட்டு மதம் - இந்து மதம் அழியக் கூடாது. அழிப்பாருண்டானால், உயிர் கொடுத்தும் காக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களைப் போலவே எனக்கும் உண்டு. இந்தியாவின் தேசிய ஒருமைப் பாட்டிற்கு இந்து மதம் பெருமளவுக்குப் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஆகவே இந்து மதம் அழியுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு நலிந்து போகும் என்று நம்புபவர்களில் நான் ஒருவன்’. (இந்திய இலக்கியச் சிற்பிகள், ம.பொ.சிவஞானம் - பெ.சு.மணி. பக்.113)

ம.பொ.சி.யின் இந்துமதப் பற்று சில நேரங்களில் தமிழைத் தாழ்த்தியும், ஆரிய மொழியான சமற்கிருதத்தை உயர்த்தியும் பேசுவதைக் காணும் போது அதிர்ச்சியாக உள்ளது.

               ஆலயங்களில் அருச்சனை தமிழில் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கை நமக்கு உடன்பாடே. ஆனால் இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது முற்றிலும் சமயத் தொடர்புடைய பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் வடமொழிக் காழ்ப்புக்கு (வெறுப்புக்கு) இரையாகக் கூடாது.

               சமற்கிருதம் இந்துக்களின் பொது மொழியாக இருப்பதன் காரணமாக, இம் மொழியில் அருச்சனையை விரும்புவோர்க்கும் தடை சொல்லத் தேவையில்லை. இது இந்து மதத்தவரின் ஒருமைப்பாட்டுக்கும் உதவி புரியும்.” (ம.பொ.சி.யின் நூல்: தமிழும் சமற்கிருதமும்) வழிபாட்டு மொழியாக மட்டுமல்லாமல், சமற் கிருதத்தைப் பிழையறக் கற்ற புரோகிதரைக் கொண்டு தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைப் பார்ப்பனரை வைத்தும் நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் ம.பொ.சி.யின் உள்ளக் கிடக்கையாகும்.

வல்லாண்மை கொண்ட மொழியாக இங்கே இந்தி திணிக்கப்பட்டபோது தமிழகமே கொதித்தெழுந்து போர்க்கோலம் பூண்டது. தம் தள்ளாத வயதிலும் தார் சட்டியைத் தூக்கிக் கொண்டு தந்தை பெரியார் இந்தி எழுத்துகளை அழித்தார். அப்படி அவர் இந்தியை அழித்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் ம.பொ.சி. சென்று மறுபடியும் இந்தி எழுத்துக்கள் அங்கே தோன்றச் செய்தார். (தார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தாரை அழித்தார்)

இந்திக்கும், வடமொழிக்கும் ஆதரவாக ம.பொ.சி. எடுத்த நிலைப்பாடுகள் அவரின் இந்திய - இந்துத்துவ பற்றுக் காரணமாய் வெளிப்பட்டவை. என்றாலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்என்கிற அரசியல் முழக்கத்தை அவர் தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை விடாமல் தூக்கிப் பிடித்தார். ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கைஎன்கிற அவரின் அருமையான நூலில் தாய்மொழியின் மேன்மை குறித்த மேலான கருத்துகள் மிக  சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில மோகத்தால் கொண்ட அடிமைப் புத்தியில் இங்குள்ள திராவிடக் கட்சிகள் பல இந்தித் திணிப்பை முன்நிறுத்தித் தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கேடு செய்ததை, ம.பொ.சி. அச்சமின்றி இடித்துரைத்தார்.

               பதினைந்தாண்டு காலக்கட்டத்திற்குள் ஆங்கிலத் தின் இடத்தை இந்தி அடையாதபடி தமிழராகிய நாம் தடை போட்டோம் என்பது உண்மைதான். ஆனால், நமது தடையையும் தகர்த்துக் கொண்டு இந்தி மொழி ஆங்கிலத்தின் இடத்தைப் பிடிப் பதிலே முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. (ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை, பக்.27)

               உண்மை என்னவென்றால், தமிழக அளவில் ஆட்சி மொழியாக - பல்கலைக்கழகங்களில் பாட மொழியாக - நீதிமன்றங்களில் நிர்வாக மொழியாக இனியும் ஆங்கிலமே நீடிக்குமானால் எதிர்காலத்தில் ஆங்கிலத்தை விரட்டி இந்தி மொழி அந்த இடங்களில் அழுத்தமாக அமர்ந்து விடுவது சாத்தியமாகும். அதற்காகவேனும் உடனடியாகத் தமிழக அளவில் அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழை அமர்த்தியாக வேண்டும். (மேற்படி நூல், பக்.29)

               ஆங்கில மொழியானது உலகத்தைப் பார்க்கும் சாளரமாக இருப்பதைக்கூட நான் வரவேற்பேன். உலகம் என்பது ஒரு திசை மட்டுந்தானா? எட்டுத் திசையையும் நான் பார்க்க வேண்டுமானால் ஆங்கில மொழிச் சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே சன்னல் இருப்பது வழக்கமில்லையே!

இப்படியாய் மூன்றாம் வகுப்பைக்கூட மூன்று மாதம் மட்டுமே படித்த ம.பொ.சி. ஒரு மாபெரும் அறிஞராகத் தாய்மொழியின் தேவைபற்றிச் சிந்தித்திருப்பது வியப்பைத் தருகிறது. திராவிட இயக்கத் தலைவர்கள் பெரும்பாலோர் இந்தி எப்போதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்!என்கிற சிந்தனைக்கு ஆட்பட்டுப் போனது  தமிழர்க்கு தேர்ந்த பெருங்கேடே ஆகும்.

(ஆங்கில எதிர்ப்புப் பற்றிய கட்டுரையில் மேலே கூறப்பட்டுள்ள கருத்துகள் - கட்டுரை யாளரின் கருத்துகளே. - ஆர்)

வடவெல்லைப் போராட்டம்

தமிழகத்தின் வடவெலலைப் பகுதியில் அமைந்த திருத்தணி உள்ளிட்ட ஊர்களைத் தமிழ்நாட்டோடு இணைத்ததில் ம.பொ.சி. ஆற்றிய பங்கு ஈடிணை யற்றதாகும். தமிழறிஞர் மங்கலங்கிழாரும் விநாயகம் உள்ளிட்ட மற்றவர்களும் இப்போராட்டத்தில் ம.பொ.சி.யுடன் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள் பல நடத்தி வெற்றி கண்டனர். தெலுங்கர்களின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுத் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, தப்பிச் செல்லாமல் காத்ததிலும் ம.பொ.சி.யின் பங்கு மாட்சிமை மிக்கது.

தென் தமிழ்நாட்டில் கேரளத்திற்கு இரையானது போக எஞ்சியிருந்த சில பகுதிகளை மீட்டுத் தமிழ்நாட்டோடு இணைத்ததில் நேசமணி உள்ளிட்ட பெருமக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதில் ம.பொ.சி.யின் பங்கு அளவானதே!

இன்றுள்ள எல்லாக் கேடுபாடுகளுக்கும் பெருமளவில் காரணமாய் இருப்பது இந்திய தேசியம் தான். இந்தியத் தேசியம் என்பது இந்தப் பாசிச - பார்ப்பனிய பயங்கரவாதத்தின் மீது கால்கொண்டு நிற்கிறது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தேசிய இனங்கள் யாவும் தமக்குள் முரண்பட்டு முட்டி மோதிக் கொள்வது தில்லியி லுள்ள ஓநாய்களுக்குத் தித்திப்பான செய்திதான்.

இந்தியா ஓர் ஒற்றைத் தேசமல்ல என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர் பெரியார். ஒடுக்குண்ட உழைப்புச் சாதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழு வதும் போராடியவர் பெரியார். மானிட இனத்தையே சாதியின் பேரால் வெட்டிக் கூறுபோட்ட மாபெரும் கொடுமையை எதிர்த்துச் சமரசமின்றி போர்த் தொடுத்த தன்மான வேங்கையவர். வரலாறு நெடுகிலும் பார்ப்பன பயங்கரவாதம் நிகழ்த்திய படுகொலைகள் எண்ணற்றவை. சூத்திரச் சாதி மக்களின் (சூத்திரச் சாதி என்பது தாழ்த்தப்பட் டோரையும் உள்ளடக்கியதே) துயர்நீக்கிப் பாடுபடுவதையே தன் இறுதி இலக்காகக் கொண்டு பெரியார் செயல்பட்டார். இந்தப் பணியில் ஆரியக் கொடும் பார்ப்பனர்களில் அளவிறந்த கொடுமை களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரியாரின் தமிழ்நாட்டு விடுதலைஎன்பதைப் பார்ப்பனியம் ஒழித்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்றே கொள்ளலாம்.

அரசியல் களத்தில் பெரியாரின் பார்ப்பன - பனியா ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு இராசாசி மிகப் பெரும் அறைகூவலாய் நின்றார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு என்று பேசிய ம.பொ.சி. காலமெல்லாம் இராசாசியின் மெய் காவலர் போல் பின்தொடர்ந்தார். பெரியாரின் ஆரியப் பார்ப்பன இந்துத்துவா எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறுப்புக் குரல் எழுப்ப மனுவின் மைந்தர்கள் ம.பொ.சி.யைக் கறிவேப்பிலைக் கொத்தைப் போல் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ம.பொ.சி. தனது வாழ்க்கை வரலாற்று நூலில் இராசாசியின் அடியாளாக இருந்ததைப் பற்றிப் பெருமையோடு பின்வருமாறு எழுதுகிறார்.

என் தலைமையை எதிர்ப்பவர்கள் என்னைவிட அதிகமாகக் கிராமணியாரையே தாக்குகிறார்கள். அதற்குக் காரணமுண்டு. கிராமணியார் வீர அபிமன்யு போன்றவர். என்னால் உடைக்க முடியாத எதிரிகளின் வியூகத்தை உடைத்து அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார். அதனால் என்னை எதிர்ப் பவர்கள் அவர் மீது அதிகம் ஆத்திரப்படுகிறார்கள்”. (ம.பொ.சி. எனது போராட்டம், பகுதி 1, பக்கம் 382)
திராவிடக் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்திய ம.பொ.சி. திராவிடக் கட்சிகள் ஆண்ட போதுதான் பதவிகள் பெற்றார். அண்ணா காலத்தில் உதயசூரியன்சின்னத்திலேயே வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சென்னை மாநிலம்’ ‘தமிழ்நாடுஎனப் பெயர் மாற்றம் பெற்ற விழா நாளில், அந்த விழாவிற்குத் தலைமை தாங்கும் தகுதியையும் பெருமையையும் அண்ணா ம.பொ. சி.க்கு வழங்கினார். கலைஞர் காலத்தில் மேலவைத் துணைத் தலைவராயும் எம்.ஜி.ஆர். காலத்தில் அதன் தலைவராயும் ம.பொ.சி. விளங்கினார்.

ஈழ மக்களின் துயர்களைப் பற்றி தனியே நூல் எழுதிய ம.பொ.சி. இராசிவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப் படையின் செயல்களை ஆதரித்துக் கூட்டங்களில் பேசினார். இறுதியில் தன் அரசியல் வாழ்வை மீண்டும் காங்கிரசில் சேர்ந்து கரைத்துக் கொண்டார்.

தமிழரசுக் கழகம் எந்தெந்தக் கொள்கை களுக்காகத் தோன்றியதோ, அவை ஆட்சிக்குப் போகாமலே காங்கிரசுக் கட்சியைப் பயன்படுத்தி நிறைவேற்றி விட்டதால், காந்தியடிகள் போதனைப் படி அது தேவைப்படவில்லை. காங்கிரசோடு கலந்துவிட்டதுஎன்று சொல்லித் தன் கட்சியையும் காங்கிரசில் கரைத்து விட்டார்.
ம.பொ.சி.யின் புகழுக்கு மாவிளக்கு ஏற்ற நாட்டில் சில நவீன சீடர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். சிலம்புச் செல்வரின் வரலாற்றுப் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் அவரின் புகழ் பாடும் அதே நேரத்தில் பெரியாரைக் குப்புறக் கவிழ்த்து முதுகில் குத்தும் வேலையையும் செய்கிறார்கள்.
1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழ்நாடு தமிழர்க்கேஎன்று முதன்முதலில் குரலெழுப்பியவர் தந்தை பெரியார் தான்.

சாவு தன்னை ஆரத்தழுவ வரும் இறுதிக் காலத்திலும் பெரியார் நிகழ்த்திய இறுதிப் பேருரையில் (19.12.1973) தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும் என்றே முழங்கினார்.
ஆனால் தமிழகத்தைச் சுதந்திர நாடாக்க வேண் டும் என்ற நோக்கோடு 1946 இல் தமிழரசுக் கழகம் கண்ட ம.பொ.சி. தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் காங்கிரசில் போய்க் கரைந்தார். காலங்கள் மாற லாம். கடந்த கால வரலாறு கூடவா மாறிப் போகும்?
(நிறைவு)
0 கருத்துகள்
பெயர்:

I will not meet soniya - says kalaignar: சோனியாவைச் சந்திக்க மாட்டேன்: கருணாநிதி

உண்மையாகவே இவ்வாறு கருதினால் தவறாகும். ஏனெனில் இது சரியெனில், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள கழகத்தவரைக் கூடச்  சந்திப்பது என்பது தவறாகும். புது தில்லியில் ஆசாத்,ப.சி. ஆகியோரைச்  சந்தித்ததும் தவறாகும்.  ஒருபுறம் சட்டம் தன் கடமையைச் செய்யும் பொழுது தந்தை தன் கடமையை ஆற்றுவது தவறல்ல. இவ்வாறு பேசுவது சட்டத்தை மீறிய உதவிக்காகத்தான் பிறரைச் சந்திக்கிறார் என்னும்  நிலைப்பாட்டை உறுதியாக்கும். வேறுகாரணத்திற்காக இப்படிப் பேசியிருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சோனியாவை சந்திக்க மாட்டேன்: கருணாநிதி

First Published : 25 May 2011 01:58:52 PM IST

Last Updated : 25 May 2011 02:05:20 PM IST

சென்னை, மே 25- காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்."சோனியாவே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது." என்று கருணாநிதி கூறினார்.இதனிடையே, தில்லி திகார் சிறையில் உள்ள கனிமொழியை சந்திப்பதற்காக, கருணாநிதியின் மகள் துர்கா மறறும் அவரது குடும்பத்தினர், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை 9.20 மணியளவில் தில்லி வந்து சேர்ந்தனர்.

False charge against tigers regardin jayalalitha - P.Nedumaran :செயலலிதாவுக்குப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: பழ. நெடுமாறன்

நூற்றுக்கு நூறு உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் நேரத்தில் கூறுவதே சதிச் செயலின் பின்னணி எனத் தெரிவிக்கிறது.தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இருந்த பொழுதே உள்ளூர் அரசியலில் தலையிட மாட்டோம் என ஒதுங்கியவர்கள். உறுதியாக இல்லாமல் இருக்கலாம் என்ற தொனியில்  சொல்வதும் சொல்பவர்க்கே நம்பிக்கையின்மை உள்ளதைக் காட்டுகிறது. இந்திய அரசு சிங்களத்தின் பக்கம் இருப்பதால் தமிழக அரசு அதற்கு எதிராகப் போகக்கூடாது என்பதால் பெரும் சதி  வலை பின்னி வருகின்றனர். வரலாறு பழி தூற்றுவோர் அடையப் போகும் தண்டனைகளையும் பின்னர்ச் சொல்லும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஜெயலலிதாவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: பழ. நெடுமாறன்
First Published : 25 May 2011 03:50:07 PM IST


சென்னை, மே 25- தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும்  தீங்கிழைக்க மாட்டார்கள்: பழ. நெடுமாறன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட உடனே, புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சி செய்யவில்லை.இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரசாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கான பொய்ப் பிரசாரம் ஆகும்.ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் தேர்தலில் சரியான பாடம் கற்பித்துள்ளனர். எனவே மக்களைக் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது.ஈழத் தமிழர் பிரச்னையில், முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதல்வர் எடுப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் மத்திய அரசின் உளவுத்துறை, குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது. எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை புலிகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கும் அல்லது வேறு யாருக்கும் ஒருபோதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.v

dinamalar photo news: elephant and monkeys


Senchi kottai fort: வரலாற்று சுற்றுலா: காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை!

பயனுள்ள தகவல்கள். பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
வரலாற்று சுற்றுலா: காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை!

First Published : 25 May 2011 12:00:00 AM IST


ராஜகிரி கோட்டையும், கிருஷ்ணகிரி கோட்டையும்.
செஞ்சி, மே 24: தென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.  ÷பண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம்.÷கடந்தகால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சிபுரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டு பார்த்து, மகிழந்து தெரிந்து கொள்ள முடியுமா? முடியும் என்றால், அந்த இடம் செஞ்சிக்கோட்டைதான்.  ÷செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை.  ÷காலத்தாலும், பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.  ÷வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.  ÷தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.  ÷கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.  ÷இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களை பார்ப்பதன் மூலம் வரலாற்றை படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட வரலாற்றை நேரில் பார்த்த அனுபவம் ஏற்படும்.  ÷இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.  ÷ஆனால் அதிகாரபூர்வமாக செஞ்சிக் கோட்டையை தமிழ்நாடு அரசு சுற்றுலை மையமாக அறிவிக்காததும், தமிழ்நாடு அரசு சார்பில் செஞ்சிக்கோட்டையில் எந்த ஒரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரவில்லை என்பதும் வேதனைக்குரியது.    ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்  சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.  ÷ராஜகிரி மலை மீது பல அற்புதங்களை கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்து பரவசம் அடையலாம்.    ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டை  திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்த பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் ராணிக்கோட்டையைப் பார்க்க பார்க்க அழகுதான்.  ÷இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் ராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் ஆகியன உள்ளது.  ÷வரலாற்றின் முந்தைய காலத்தையும் அவர்கள் வாழ்ந்த விதம் மற்றும் கடைசியாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரை ஆண்ட செஞ்சிக்கோட்டையை அவசியம் பார்க்க இந்த விடுமுறையை பயனுள்ளதாக்குவோம்.    எவ்வளவு தூரம்?  ÷சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை. விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையை பார்க்க வருவதற்கு பஸ்úஸ சிறந்த வசதியாகும்.

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

தடாலடியாக முடிவெடுத்தாலும் தவறெனில் அதையும் மாற்றுவார் முதல்வர் என்பர்.எனவே, கல்வியாளர்களின் கருத்தைக் கேட்டு  உடனே சமச்சீர்கல்வியை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். குறைகள் இருப்பின் அவற்றை நீக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

First Published : 25 May 2011 03:19:23 AM IST


சென்னை, மே 24: சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுதொடர்பாக, பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜு, த.பச்சையப்பன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ரஜினி உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:  பல்வேறு பாடத்திட்டங்கள் போய் பொதுப்பாடத்திட்டம் என்கிற அளவில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.  குழுக்களின் அறிக்கை அடிப்படையில் பொது விவாதத்துக்குப் பிறகே பாடத்திட்டங்களை இறுதி செய்து பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன.  இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்தை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை அரசு நிறுத்திவைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பு மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.  பொதுக்கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக்கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத்திட்டமும், பாடநூலும் அச்சிடப்பட்டன.  அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்று அமைச்சரவை எப்படி முடிவுக்கு வர முடியும்?  இந்தப் பாடத்திட்டத்தைப் பற்றி அரசுக்கு யாராவது எழுத்துப்பூர்வமாக குறை தெரிவித்தார்களா? அல்லது ஏதேனும் வல்லுநர் குழு இந்தப் பாடத்திட்டம் சரியில்லை என்று அறிக்கைச் சமர்ப்பித்ததா?  எந்த அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்ற முடிவுக்கு அரசு வந்தது என்பதை விளக்க வேண்டும்.  முந்தைய அரசுக்குக் கண்டனம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துகள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.  ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடவும், தம்மை முன்னிலைப்படுத்தவும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம்.  நெறிமுறைக்கு எதிரானது: பழைய பாடத்திட்டத்தின் படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடநூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாடநூல்களை மீண்டும் பயன்படுத்துவது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.  கவனம் செலுத்த வேண்டும்: கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களின் பங்கு குறிப்பிட்ட அளவிலானதே. இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, உள்கட்டுமான அமைப்பை உயர்த்துவது போன்ற கல்வித் தரத்தை நிர்ணயம் செய்யும் விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  முடக்கும் செயல்: முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தது என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுநர் குழு அமைக்க உள்ளதும் ஏற்கத்தக்கதே. ஆனால், எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது.  இது உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல்.  நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.  அவசியமானால் தேவையற்றப் பகுதிகளை நீக்குவதே கல்வி நலனுக்கு உகந்தது.  சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

உம்மொழி எம்மொழி பொன்மொழி

நேற்று நீ! இன்று நான்! நாளை யாரோ? புரிந்து செயல்பட்டால் நாளையும் நாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

உம்மொழி எம்மொழி பொன்மொழி
First Published : 24 May 2011 11:21:10 AM IST

மொழி மொழி என்றுதமிழ்மொழியில் தொடங்கிசெம்மொழியில் நனைந்துகனிமொழியில் கடந்து போன நிலை... நான் நீ என்றால் ஒட்டாது நாம் என்றால் ஒட்டுமே என்ற பொன்மொழிகள் எல்லாம்பஸ்ஸில் பயணித்த மாணவமணிகளுக்கு குஷியைத் தந்திருக்கலாம்...ஆட்சி மாற்றம்...இதோ காட்சி மாற்றம்!இங்கே கழிக்கப்பட்ட பொன்மொழிகளுக்கு பதிலாகஅழிக்கப்பட்ட இடத்தில் ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்லுங்கள்!வாசகரே...உங்கள் கற்பனையில் உம் மொழியை இடுங்கள்!உங்கள் பொன்மொழியைவிதையுங்கள்!
கருத்துகள்

எவ்வளவு உள்ளன? "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என படித்தவை மறந்தீரோ? உதடோடு உள்ளம் ஒட்டி, படித்தவைதானே?
By KUMAR
5/24/2011 7:05:00 PM
நீ எழுதியதை நான் அழிக்க நான் எழுதியதை நீ அழிக்க நீ சொன்னதை நான் மறுக்க நான் சொன்னதை நீ மறுக்க நீ செய்ததை நான் தடுக்க நான் செய்ததை நீ தடுக்க நீ என் சேலையைப் பிடுங்க நான் உன் வேஸ்டியை பிடுங்க இவையெல்லாம் எதனால் ஏற்பட்ட பிழையோ தமிழக மக்கள் தரணியில் இவர்கள் நல்லாட்சி செய்வார்களென்று தேர்ந்தெடுத்த பிழையோ.
By அப்துல் ரஹ்மான்
5/24/2011 6:28:00 PM
பூக்களை பார்க்க, விதைகளை விதை.! முயற்சி இல்லாமல், முன்னேற்றம் இல்லை. கற்பவன் மனிதன், கற்பித்தவன் கடவுள். உண்மையை பேசு, உலகம் உன் கையில். தாயை வணங்கு, தர்மம் விளங்கும். ஏழ்மையை போற்றிடு, எளிமையாய் வாழ்ந்திடு. நல்ல குடிமகன், நாட்டுக்கு மன்னன். பெண்ணின் பெருமை, பொன்னில் அல்ல.
By பி.டி.முருகன் திருச்சி
5/24/2011 6:12:00 PM
தயாளு, ராசாத்தி, ஸ்டாலின்,அழகிரி, தயாநிதி, கலாநிதி, என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டாது. ஆனால் கனிமொழி என்றால் ஒட்டும்.
By Nallavan
5/24/2011 3:48:00 PM
தெரியாமல் செய்தாலும் தெரிந்து செய்தாலும் புரிந்துகொள் பாவத்திற்கு தண்டனை உண்டு.
By KANNAN S S
5/24/2011 3:44:00 PM
உதட்டில் ஒன்று சொல்லி உள்ளத்தில் வேறு கொண்டு நாம் என்பது என் குடும்பம் மட்டுமே எனில் உதட்டினில் மாயம் செய்து உள்ளத்தில் உள்ளதை எந்திரத்தில் வைத்து உலகம் புகழ தமிழன் தலை நிமிர்ந்தனோ?
By ரக்
5/24/2011 3:31:00 PM
இந்த சுறுசுறுப்பு இந்த அதிகாரிகளுக்கு மற்ற வேலை செயும்போது வருவது இல்லை ஏன் முத்துக்குமார்
By Muthukumar
5/24/2011 3:29:00 PM
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் வேறொன்றும் கொண்டு நாம் என்பது குடும்பமே என்றதால் மக்கள் உடத்தளவில் ஒன்று சொல்லி எந்திரத்தில் வேறு செய்தனரோ?
By RKR
5/24/2011 3:27:00 PM
திராவிடரை முன்னேற்றுவோம் என்று துவங்கி இன்று திஹாருக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற கழகத்தின் சரித்திரம் கற்றுத் தரும் பாடம், தமிழர்கள் முற்றும் மறந்து விட்ட, மறக்கடிக்கப்பட்ட நன்னூல்கள் தரும் ஈரடி நான்கடி வாழ்க்கை தத்துவங்களை மீண்டும் படிப்போம் என்பது தான். இவற்றை பேருந்துகளில் எழுதலாம்.
By sankaran
5/24/2011 2:53:00 PM
மாற்றம் ஒன்றே மாறாதது கீதை மொழி மாற்றம் ஆயிரமாயினும் ஏற்றம் தேவை ஆட்சி மாறலாம் ஆர்ப்பாட்டம் இன்றி காட்சி மாறலாம் காட்சி பிழையின்றி உம்மொழி எம்மொழியின்றி உண்மையின் மொழி படைப்பின் உத்தமம் தாம் எம்மக்களுக்கு!!!!!!!!!
By பாலா துரைமாணிக்கம்
5/24/2011 2:34:00 PM
விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும் 2 வினை விதைத்தவன் வினியாருப்பன் 3 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தம்மக்கின்னா பிற்பகல் தானே வரும்
By அழ.lakshmanan
5/24/2011 1:42:00 PM
சிந்தனை செய்! வஞ்சனை கொள்ளாதே!
By Perumal
5/24/2011 1:02:00 PM
ஒளவையாரின் மூதுரையை விட சிறந்த பொன்மொழிகள் வேறுண்டோ ? அதையெல்லாம் எழுதலாமே.!
By barathan
5/24/2011 11:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *