வெள்ளி, 2 செப்டம்பர், 2022

இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022

 அகரமுதல



தமிழ்க்காப்புக் கழகம்

கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்

இணைய உரையரங்கம்

Zoom Logo, symbol, meaning, history, PNG

ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

   வரவேற்புரை:       முனைவர் ப.தாமரைக்கண்ணன்,

செயலர், ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

செல்வி ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்

திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.

திரு இ.சு.அசய்சுந்தர், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.

திரு  தமிழன் கார்த்திக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

திரு  பா.கமல், இளங்கலை தமிழ்  மூன்றாம் ஆண்டு, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம், மதுரை.

திரு  ஆ. அருண்குமார், நிறை கலை ஆய்வாளர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.

திரு செ. சிவகணேசபாண்டி‌‌. வணிகவியல் இரண்டாம் ஆண்டு, அரசு கலை – அறிவியல். கல்லூரி, திருமங்கலம், (இ)கப்பலூர், மதுரை.

திரு  ச.வே.மருது பகவதி இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு, நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.  

நிறைவுரைதோழர் தியாகு

நன்றியுரை: திருவாட்டி தமிழாசிரியை (உ)ரூபி





“முத்துநகரில் இரத்தக் குளியல்” – தியாகு உரை

 அகரமுதல




பெரியார் அம்பேத்கர் மார்க்குசு சிந்தனைக் களம்
தோழர் தியாகு இணையவழி உரை
“முத்துநகரில் இரத்தக் குளியல்”

ஆவணி 17, 2053 / 02.09.2022
இரவு 7.00 – 10.00 மணி

https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

கூட்ட எண்: 864 136 8094
நுழைவு எண்: 12345

Meeting ID: 864 136 8094
Passcode: 12345

அலைபேசி வழி / One tap mobile

+16465588656,,8641368094#,,,,*12345# US (புது யார்க்கு / New York)

+13017158592,,8641368094#,,,,*12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)

இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location

+1 646 558 8656 US (புது யார்க்கு / New York)

+1 301 715 8592 US (வாசிங்கடன் கொ.மா. / Washington D.C)

+1 312 626 6799 US (சிக்காகோ /Chicago)

+1 669 900 9128 US (சான் சோசு / San Jose)

+1 253 215 8782 US (தக்கோமா / Tacoma)

+1 346 248 7799 US (ஊசுட்டன் /Houston)

உங்கள் இருப்பிட எண் அறிய / Find your local number: https://us02web.zoom.us/u/kb9tpSCitW ]

ஒருங்கிணைப்பாளர் : thozharthiagu.chennai@gmail.com

வியாழன், 1 செப்டம்பர், 2022

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்

 

அகரமுதல




இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு

“அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை.

நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன.

இந்நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கவும், மக்களும் தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாட்டை” முன்னெடுக்கிறது.

தமிழ்நாடு முழுவதிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள், பாசறைப் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி, கோவில் பொறுப்பாளர்களையும் (நிருவாகத்தையும்) பூசாரிகளையும் நடைமுறையில் தமிழ் வழிபாட்டைச் செய்ய வைக்க வேண்டும்.

இதைத் தமிழுக்காக 1965-இல் பெரும் மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான செட்டம்பர் 3-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதிலும் முன்னெடுப்போம். இதை ஒரு நாள் நிகழ்வாக மட்டுமில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்சிப் பொறுப்பாளர்கள் இணைந்து குடும்பங்களுடன் அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று தமிழில் வழிபாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.

மேலதிகச் செய்திகளுக்குக் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

தலைமை நிலையம் – 044-43804084

தமிழ் மீட்சிப் பாசறை – சௌமியா (மாநில செய்தித் தொடர்பாளர்) – 9094784074

வீரத்தமிழர் முன்னணி – செந்தில்நாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) – 7904303147

“தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு”

இது கோரிக்கையல்ல, நமது உரிமை!

அன்புடன்,

சீமான்.